தற்கொலை ஓர் அறிமுகம் edit

தற்கொலை ஓர் அறிமுகம்

சமகாலத்தில் முக்கிய சமூகச்சிக்கலாக தற்கொலை காணப்படுகிறது. பொதுவாக மனிதன் தனக்குக் கிடைக்கக் கூடிய அனைத்து வழிகளையும் பயன்படுத்தி, தன் உடல் நலத்தைக் காத்து நீண்ட ஆயுளுடன் வாழ ஆசைப்படுகிறான். எனினும் இது சாத்திய மற்றதாக இருக்கின்ற நிலை காணப்படுகின்றது.

வரலாற்றிலே மிகவும் இலகுவாக வாழ்ந்த காலமாகிய கோத்திரங்களாக மனிதன் வாழ்ந்த காலகட்டத்திலே தற்கொலை செய்து கொள்வதாவது மரபு ரீதியாக அம்மக்களிடத்தில் காணப்பட்டது. அத்துடன் உலகில் பல சமூகங்களில், பல்விதமான தன்மைகளுக்கும், வேறுபாடுகளுக்கும் ஏற்ப இப்பிரச்சினையின் பரம்பலிலும் வேறுபாடுகளைக் காணமுடிகிறது என மானுடவியலாளரான எட்வட்வெஸ்டர்மாக் குறிப்பிடுகிறார். சங்க காலத்தில் பாரம்பரியச் சமூகங்களை எடுத்து நோக்கினால் தற்கொலை செய்து கொள்வதானது சடங்கு சம்பிரதாயங்களில் நடைமுறைப்படுத்தும் ஒரு விடயமாகவே காணப்பட்டது. உதாரணமாக, இந்தியாவில் காணப்படுகின்ற உடன்கட்டை ஏறுதல் என்ற சடங்கினை கூறலாம். பண்டைய சீனாவிலும் கூட உடன்கட்டை ஏறுதல் போன்ற சடங்குகள் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. அது போலவே எஸ்கிமோ சமூகத்திலும் முதியோர்கள் அல்லது வயோதிபர்கள் மத்தியில் தன்னுயிரை மாய்த்துக்கொள்ளுகின்ற நிலை பண்டைய காலங்களில் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இதனால் முதியோர்கள் தற்கொலைச் செய்து கொள்ளுதல் வேண்டும் என்ற நிலை அச்சமூகத்தில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஏனெனில், இளையோர்களால் உற்பத்திச் செய்யும் உணவுகளை வயோதிபர்கள் எவ்வித முயற்சியுமின்றி உட்கொள்வதனால் முதியோர்கள் அச்சமூகத்தில் பயனற்றவர்கள் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் காணப்பட்டது. இவற்றை எடுத்துநோக்கும் போது பல்வேறுபட்ட சமூகங்களிலும் தற்கொலையானது பலவிதங்களிலும் காணப்பட்டதுடன் அது சமய பண்பாட்டுச் சூழ்நிலைகளின் அடிப்படையில் நிகழ்வதும் குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், தற்கொலையானது இன்று ஒரு பாரதூரமான பிரச்சினையாகவே கருதப்படுகிறது. தன்னுயிரைத் தானே போக்கிக்கொள்ள முயல்தல் குற்றமாகும். அதே சமயம,; இறைவனால் விதிக்கப்பட்ட விதியை மனிதன் எல்லை மீறிப் பிரவேசிக்கும் இடமாக தற்கொலையினை பலர் கருதுகின்றனர். ஒருவன் தன் வாழ்வில் ஏற்படும் நெருக்கடி நிலைமைகளிலிருந்து மீள்வதற்காக தற்கொலை செய்து கொள்கின்றான் எனக் கூறப்படுகின்றது. மிகவும் உன்னதமான விதத்தில் படைக்கப்பட்டுள்ள மனிதன் ஏன் தற்கொலை செய்து கொள்கின்றான்? என்ற விடயம் சமூகவியலாளர்கள் மத்தியில் அவதானத்திற்கு உள்ளானது.

நாம் அன்றாடம் புதினத்தாள்களைப் புரட்டுகின்ற போது பக்கத்துக்குப் பக்கம் தற்கொலையும், தற்கொலைத் தாக்குதல்களையும் பற்றிய செய்திகள் மலிந்து கிடப்பதை காண்கிறோம். பரீட்சையில் தோல்வி, கடும் துக்கம், வேலையின்மை, வாட்டும் கடன் பிரச்சினைகள், பணப்பிரச்சினைகள், வறுமை, பணி இடங்களில் விடுப்பு மறுப்பு, வரதட்சணைக் கொடுமை, திருமண உறவில் உள்ள சிக்கல்கள், பாலியல் காரணிகள், விரக்தி உணர்வு, தனிமைப்படுத்தல் முதலியனவே தற்கொலைக்கு காரணங்கள் என்று விபரிக்கப்படுகின்றன.

...தொன்மை கிரேக்க, ரோம சிந்தனை மரபுகளிலும் தற்கொலை நாளாந்த நிகழ்வாக இருந்ததையும் அறிய முடிகின்றது. குறிப்பாக பிளட்டோனிய வாதிகள் தற்கொலைக்கு இடமளித்துள்ளதையும் அதே சமயத்தில் பைதகரஸ், ஹிப்போகிரட்டீஸ் சத்திய பிரமாணம், அரிஸ்டோட்டிலிய எபிக்கூரிய மரபுகள் மற்றும் காண்ட்டிய ஒழுக்கவியல் மரபுகளில் தற்கொலை மறுப்பையும் காணமுடிகின்றது. எடுத்துக்காட்டாக தற்கொலை பற்றிய பைதகரசின் கருத்தானது, 'நாம் எல்லோரும் இவ்வுலகிற்கு வந்துள்ள அந்நியர்களே. எமது ஆன்மாக்கள் எமது உடல் எனும் சமாதியில் அடைக்கப்பட்டிருக்கின்றன. ஆயினும், தற்கொலை மூலம் எம்மை நாம் விடுவித்துக்கொள்ள முயலலாகாது. ஏனெனில் நாம் எல்லோரும் எமது பாதுகாவலனாகிய இறைவனின் அடிமைகள். அவன் ஆணையின்றி எம்மை விடுவித்துக் கொள்ள எமக்கு உரிமையில்லை' என்றவாறு அமைகின்றது. - நிஜத்தடன் நிலவன்

முள்ளிவாய்க்கால் இறுதிக்கணங்கள் – நிலவனுடன் நேர்காணல் edit

ஈழத்தைச் சேர்ந்த நடனக் கலைஞரும் ,கவிஞரும் ,எழுத்தாளரும், சுயாதீன ஊடகவியலாளருமா நிஜத்தடன் நிலவன் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்த அவலத்தின் சாட்சியங்களுள் ஒருவன். ஈழத்தவர் வரலாற்றில் துயர் தோய்ந்த நாளை இன்றைய தருணத்தில் மீட்டிப் பார்ப்பதில் ஒவ்வொரு ஆத்மாவும் சொல்லும் கதைகள் அதிகம். அந்தவகையில் போரின் சாட்சியமாக இறுதி யுத்த சாட்சியமாக இந்த நேர்காணலை பதிவு செய்கின்றோம். நேர் கண்டவர் யோகா பத்மன் வலி நிறைந்த இரத்தம் தோய்ந்த செல்லப்படாத சாட்சியங்களும் வெளிவராத அவலங்களும் இன்னும் அதிகம் உண்டு ஈழக்கலைஞன் நிஜத்தடன் நிலவன் (நிக்சன் சர்மா)

1) உங்கள் ஈழத்து ­வாழ்வு பற்றி சொல்லுங்கள் ?

பதில் :- எனது வாழ்வும் வளர்வும் பற்றித் தாராளமாகவே சொல்லலாம் . ஈழத்தில் இடம் பெற்ற யுத்தம் காரணமாக யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,முல்லைத்தீவு, வவுனியா ,என பல மாவட்டங்களில் என் இடம் பெயர் வாழ்வு தொடர்ந்தது. இறுதிக் கட்டமாக நடைபெற்ற நான்காம் ஈழப்போரில் சிறிலங்கா அரசினால் அறிவிக்கப் பட்டிருந்த போர் தவிர்ப்பு வலயங்களிலே அரச படையினரின் அதிகளவிலான எறிகணை வீச்சுக்களும் விமானத்தாக்குதல்களும் சர்வதேசத்தால் தடை செய்யப்பட்ட வெடி பொருட்களும் பயன்படுத்தப்பட்ட. பாரிய மனிதப் பேரவலம் அரங்கேறிய பகுதியில் நான் ஒரு மனிதநேயப் பணியாளனாக மரணத்தை எதிரே வைத்துக்கொண்டு கடமை ஆற்றினேன்.

2 ) இடப்பெயர்வும் அகதிவாழ்வும் பற்றி சொல்லுங்கள்?

பதில் :- அந்த முதலாவது இடப்பெயர்வு எனக்கு இன்னும் அரைகுறையாக ஞாபகமிருக்கிறது. 1987ன் கடைசி நாட்களிலும் 1988இன் முற்பகுதிகளிலும் இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகள் தாங்க முடியாதளவிற்கு கடுமையாகின. எங்கள் சொந்த நிலங்களில் வாழ முடியாத நிலைக்குத் தள்ளப் பட்டோம். எனது முதலாவது இடப்பெயர்வின்போது நெருங்கிய உறவுகள் உட்பட குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என 50 பேரளவில் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் வைத்து இந்திய இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன்போது பல காயங்களுடன் எனது மாமாவும் சிறுமி ஒருவரும் உயிர் தப்பினர். ஒரு வாரத்துக்கு பின் என்று நினைக்கிறேன்- அகதி வாழ்வின் இன்னொரு கட்டத்தை நோக்கி நாங்கள் நகர வேண்டியிருந்தது.இப்படி எனது சிறு பராயம் முதல் 2006 வரையில் பல இடப்பெயர்வுகளை சந்தித்தேன். இவ்வாறு 2006 முதல்2009 வரை இடம்பெற்ற நான்காவது ஈழப்போர் காலகட்டத்தில் மரணத்தில் இருந்து தப்பிப்பிழைத்த பொழுதுகளே அதிகம். அன்றைய வாழ்வு துயர் மிக்கதாகவே இருந்தது. நம்பிக்கையற்றநிலமை, கனவுகளற்ற மனிதர்கள்,வெறிச்சோடிய தெருக்கள், அலைச்சல், இடப்பெயர்வு, தூக்கமற்ற இரவுகள், உயிரழிவுகள், உடைமை இழப்புகள்,சொல்லொணாத் துயரங்கள் என போரும் மரணமும் எல்லாப் பரிமாணங்களிலும் எங்களைத் துரத்தியபடியே அவல வாழ்வு தொடர்ந்தது.

3)நான்காவது ஈழப் போர் பற்றி சொல்லுங்கள் ?

பதில் :- பேரினவாதிகளின் இனப் படுகொலையில் ஈழத் தமிழர் ஆகிய நாம் தொடர் இழப்புகளால் துவண்டு போயிருந்த காலமது. ஐ. நா. வில் உறுப்புரிமை பெற்ற இலங்கை அரசுக்கு உலகெங்கும் உள்ள நாடுகளின் ஆதரவு இருந்தது. அரச பயங்கரவாதத்தைத் தமிழர் மீது ஏவி சர்வதேசத்தின் துணையோடு இனப் படுகொலைகளை 2008 – 2009 அரங்கேற்றியமையே நான்காவது ஈழப் போர் எனலாம். அரச பயங்கரவாதத்தினால் தமிழர் தாயக பகுதிகளை ஆக்கிரமித்திட இலங்கை 2006 ம் ஆண்டு சிறு சிறு சமர்களைத் தொடக்கி பல பிரதேசங்களை ஆக்கிரமிக்கத் தொடக்கியது . 2006 ஆவணியில் யாழ் குடா நாட்டிலும், மாவிலாறு தொடர்பாகச் சம்பூரிலும், சிங்களப் படை தொடக்கிய சமர்களினால் தாக்குதல்கள் வீச்சுடன் கிளம்ப, சிங்களப் படையினை எதிர்திர்பாத்திருந்த தமிழர் தரப்பு பல முறியடிப்பு சமர்களையும் நிகழ்த்தியது. வன்னியில் பல முனைகளில் கொடும் தாக்குதல்களை, வான்வழி, கடல் வழி, தரை வழியாகத் தொடுத்து, சிங்களப் படை முன்னேற தொடங்கியது. களத்தில் வெற்றியும் தோல்வியும் இயல்பானவை. ஆங்காங்கே நடைபெறும் சமர்களில் தோல்வி என்பது ஒன்று. போராட்டத்தின் தோல்வி என்பது மற்றொன்று. போராட்டத்தில் தோல்வி என்ற பேச்சு எழ நியாயமில்லை. ஏனெனில் எதிரியின் இனப் படுகொலைக் கொள்கை அறமற்றது. தமிழரின் விடுதலைப் போர் அறம் சார்ந்தது.

4) நான்காவது ஈழப் போரின் போது நீங்கள் நேரில்கண்ட சம்பவங்கள் ?

பதில் :- நான்காவது ஈழப் போரில் அரச படையினர் நடத்திய இன அழிப்பு சம்பவங்கள் பலவற்றை பார்த்திருக்கின்றேன். அரச பயங்கரவாதம் தமிழர் தாயகப் பகுதிகளை ஆக்கிரமித்து இருந்தது. மக்கள் குடியிருப்புக்கள் மீது நடாத்திய விமான குண்டு வீச்சுகளையும், மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களையும், கொத்துக்குண்டு, பொஸ்பரஸ் குண்டு, எறிகணை,உந்துகணைத் தாக்குதல்கள் மட்டுமல்லாது சிங்களப்படைகள் கண்மூடித்தனமான நேரடித் தாக்குதலையும் மேற்கொண்டிருந்தன. கிபிர், மிக் போன்ற போர் விமானங்கள், எம்.ஐ.24 உலங்குவானூர்திகள், கனரக ஆட்டிலறிகள், பீரங்கிகள்,கடற்படையினரின் பீரங்கி மற்றும் மோட்டார் உட்பட சிங்கள காலாட் படையினரின் நீண்ட தூரவீச்சுக்கொண்ட துப்பாக்கிகளாலும் சரமாரியான தாக்குதல் நடத்தப்பட்டன. உணவு, குடிநீருக்கான பற்றாக் குறைகள், மருத்துவ நெருக்கடிகள்,இருப்பிடம் இல்லாத வீதி வாழ்வு, பதுங்குகுழி வாழ்வு, என இன்னும் பலவற்றை பட்டியல் படுத்தி சொல்லமுடியும். முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதிவரை போராடிய போராளிகளையும் பொதுமக்களையும் நச்சு குண்டுகள் மூலம் அழித்தொழித்தமையும், அங்கு பாதுகாப்பு வலயம் என கூறப்பட்ட பகுதிகளில் மக்களை வந்து தங்குமாறு கூறிய சிங்களம் அதேவேளை உலக நாடுகளினால் தடை செய்யப்பட்ட இரசாயன எறிகுண்டுகளை இரவு பகல் பராது இடைவிடாது வீசி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றழித்த நிகழ்வுகளையும் நேரில் பார்த்த காட்சிகள் என்னுள் சாட்சியாய் உள்ளன.

5) மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் பற்றி சொல்லுங்கள்?

பதில் :- அரச படையினர் கிளிநொச்சி வைத்தியசாலை மீது தாக்குதல் மேற்கொண்டிருந்த வேளையில் அங்கே நான் பணியாற்றி வந்தேன். மருத்துவமனைகளைக் குறிவைத்து தாக்குதல் நடாத்துவது சர்வதேச போர் விதிமுறைகளுக்கு முரணான செயல் என்ற போதிலும் மருத்துவமனைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதை இலங்கை இராணுவம் ஒரு போர் உத்தியாகவே கையாண்டது. வன்னியில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மக்கள் வேறிடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்ற போதெல்லாம் சிறிலங்கா சிங்கள இராணுவத்தினர் முதலில் வைத்தியசாலைகளைக் குறிவைத்தே தாக்குதல் நடத்தினர். புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை, ஆனந்தபுரம், மந்துவில், புதுமாத்தளன், இடைக்காடு, அம்பலவன் பொக்கணை,வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால், முள்ளிவாய்க்கால் கிழக்கு, முள்ளிவாய்க்கால் மேற்கு உட்பட்ட பகுதிகளில் பல்லாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர். இத்தாக்குதல்களில் மருந்துப் பொருட்களும் அழிந்தன. இதனால் காயமடைந்தவர்கள் உயிருக்காக போராடிக் கொண்டிருந்தார்கள். சிறிலங்கா இராணுவத்தினரின் தாக்குதல்களினால் மருத்துவப் பணிகள் பெருமளவு பாதிக்கப்பட்டன. மருத்துவமனையை நோக்கி தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றன. புதுக்குடியிருப்பு இரணைப்பாலை வீதியில் அமைந்திருந்த பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனையில் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி நடக்க முடியாமல் கால்களுக்கு அன்ரனா மற்றும் மண் மூட்டைகள் போடப்பட்டு படுக்கையாகக் கிடந்தவர்களின் விடுதி மீது 2009-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இரண்டாம் வார காலப்பகுதியில் கிபிர் விமானம் மேற்கொண்ட மிலேச்சத்தனமான குண்டுவீச்சுத் தாக்குதலில் விடுதி முற்றாகச் சிதைவடைந்து சுமார் எழுபதிற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியதும் அவர்களின் சிதைந்த உடலங்களை கட்டட இடிபாடுகளுக்கிடையில் நான்கு ஐந்து நாட்களாக பல சிரமங்களுக்கு மத்தியில் மீட்டெடுத்து அடக்கம் செய்ததுவும் இங்கு நினைவு கூரப்படுவது அவசியமானது.

7)பின்பு எப்படி மக்களுக்கு மருத்தவ வசதிகள் கிடைத்தன?

பதில் :- பாடசாலைகளே தற்காலிக மருத்துவ மனைகளாக மாறியிருந்தன. 2009-ம் ஆண்டு வைகாசி மாதம் முதல் வாரத்தில் முள்ளிவாய்க்கால் மத்தியில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் கனிஷ்ட வித்தியாலயத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்த பிரதான மருத்துவமனையை இலக்கு வைத்து அரச படையினர் மேற்கொண்ட சரமாரியான எறிகணைத் தாக்குதலில் ஏற்கனவே காயமடைந்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்கள் உள்ளிட்ட பல நூற்றுக்கணக்கானவர்கள் ஸ்தலத்திலேயே துடிதுடித்துப் பலியானார்கள்.

8) மருத்துவர்கள் தாதிகளின் சேவைகள் கிடைத்தனவா?

பதில் :- மருத்துவ உதவியாளர்கள் பலர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் இருந்ததாலும் பாதுகாப்பற்ற சூழ்நிலை அங்கு உருவாகி இருந்ததாலும் படுகாயம் அடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் தங்களது பாதுகாப்பையும் கருத்திற் கொள்ளாது அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர்.மருத்துவமனையை சூழவுள்ள பகுதிகளில் உடல்கள் காணப்பட்டதால் அப்பகுதி மயான பூமியாக காட்சியளித்தது அழுகும் உடல்களின் தூர்நாற்றமும் தெற்று நோய்கள் வருவதற்காண வாய்ப்புகளும் உடல்களை உண்ணவரும் மிருகங்கள் பறவைகளின் தொல்லைகளும் சமாலிக்க முடியாத நிலை காணப்பட்டது இங்கு கடமையாற்றிய வைத்தியர்கள் இயந்திர மனிதர்கள் போலவே செயற்பட்டனர். படு காயமடைந்த மக்கள் ஆகக் கூடியது ஒரு சில நிமிடங்களே சத்திரசிகிச்சை அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதன் பின்னரே காயமடைந்த பிற நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டது. அதாவது ஒரேயொரு சத்திர சிகிச்சைக் கூடமே மிகவும் குறைந்த வசதிகளுடன் செயற்பட்டுக் கொண்டிருந்தது. முள்ளிவாய்க்காலில் இயங்கிய தற்காலிக வைத்தியசாலையில் சேவை செய்துவந்த மருத்துவர்கள், தாதிகள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் உட்பட உயிர் பிழைக்க மருத்துவமனைக்கு வந்தவர்கள் உடல் சிதறிச் செத்தார்கள். எல்லோரும் நடைப்பிணங்களாக இருந்த நிலையில்… யார் யாரைப் பராமரிப்பது? கடுங்காயம் அடைந்த பலர் ஆங்காங்கே கைவிடப்பட்டு அநாதரவாகக் கிடந்ததை இப்போது நினைத்தாலும் மனம் கனக்கிறது.

9) பொஸ்பரஸ் குண்டு என்பதற்கு என்ன அடையாளம் உண்டு?

பதில் :- உடையார்கட்டு என்ற இடத்தில் தஞ்சம் புகுந்திருந்த மக்கள் மீது பொஸ்பரஸ் குண்டுகள் வீசப்பட்டன. இந்த வகை குண்டுகள் வீசப்பட்டதும் கறுப்பு நிறப் புகை வெளியேறும். அத்துடன் இந்தக் குண்டு எங்கு வீசப்படுகின்றதோ அங்கே உள்ள அனைத்தும் எரிந்து கருகிவிடும். இந்த குண்டுகள் ஒட்சிசனை கடுமையாக உள்ளேடுப்பதால் அங்குள்ள மக்களுக்கு சுவாசிக்க முடியாது மூச்சுத்திறலும் ஏற்படும் இந்த வகை குண்டு வீசப்பட்டவுடன் அதன் சுவாலை ‘தறப்பாலில்’ பற்றி அதன் பகுதிகள் மக்கள் மீது விழுந்தவுடன் மக்கள் எரிகாயங்களுக்கு உள்ளாகினர். பொஸ்பரஸ் குண்டொன்று வீசப்பட்ட போது அதன் சுவாலைகள் தற்காலிக கூடாரங்கள் மீது படர்ந்து பின் அங்கிருந்த பலரின் உடலிலும் பற்றிக் கொண்டதை நேரில் கண்டேன். பொஸ்பரஸ் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளாகி மிக மோசமான எரிகாயங்களுக்கு உள்ளாகி பலர் இறந்தார்கள். கொத்துக் குண்டுகளும் பொஸ்பரசுக் குண்டுகளும் சர்வதேச போர் விதிமுறைகளின்படி தடைசெய்யப் பட்டவையாகும்.யுத்தத்தில் தவிர்க்கப்பட வேண்டிய இரசாயனக் குண்டுகளும் பயன்படுத்தப்பட்டதை யுத்த வலயத்திற்குள் அகப்பட்டிருந்த மக்கள் நன்கறிவர்.

10) கொத்துக்குண்டுகள் தொடர்பான உங்கள் அனுபவம் என்ன?

பதில் :- கொத்துக் குண்டுகள் முதலில் பரந்தன் பகுதியிலேயே வீசப்பட்டன. பல வகையான கொத்துக் குண்டுகளை சிறிலங்கா இராணுவத்தினர் பயன்படுத்தினர். கொத்துக் குண்டொன்றின் பிரதான குண்டு வானில் வெடித்துச் சிதறி பல சிறிய துண்டுகளாக பிரிந்து அனைத்து திசைகளிலும் சீறிப்பாயும். இரணைப்பாலை என்ற பிரதேசத்தில் வீசப்பட்ட கொத்துக் குண்டொன்று பல வர்ண நாடாக்களைக் கொண்டிருந்தது. இதனால் இவ்வகைக் குண்டானது சிறுவர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துக் கொண்டது. இக் கொத்துக் குண்டின் பகுதிகள் வெடிக்காமல் ஆங்காங்கே கிடக்கும். அவற்றை தொட்ட போது அவை வெடித்துச் சிதறிய சம்பவங்களும் உண்டு. இப்படி நடந்த பல சம்பவங்களில் ஒரு விடயத்தை பகிர்ந்து கொள்ளுகின்றேன். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் 2009 சித்திரை இரண்டாவது வாரத்தில் சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதல்களில் அப்பாவி தமிழர்கள் நூற்றி ஐம்பதுக்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டதுடன் இருநூறுக்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தும் இருந்தனர் . காயமடைந்தவர்கள் மாத்தளன் மருத்துமனைக்கு கொண்டுசெல்ல முடியாதவாறு மருத்துவமனை வீதியில் தொடர்ச்சியாக எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன. காயமடைந்தவர்களை கடும் சிரமத்தின் மத்தியில் முல்லைத்தீவு பொது மருத்துவமனை சிகிச்சை நிலையத்துக்கும் நட்டாங்கண்டல் மருத்துவமனைக்கும் அனுப்பிக் கொண்டிருந்த போது பலர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முடியாத நிலையில் உயிரிழந்துள்ளனர். இதேவேளையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் கூடுதலாக நடத்தியிருந்தனர்

11) எறிகணை, உந்துகணைத் தாக்குதல்கள் பற்றி முன்பு குறிபிப்பிட்டுள்ளீர்கள் அவை பற்றி என்ன அறிந்துள்ளீர்கள்?அதன் அனுவம் என்ன?

பதில் :- வன்னியில் மக்கள் வாழ்விடங்களை நோக்கி சிறிலங்கா படையினர் நடாத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் பல நூற்றுக்கணக்கான சிறுவர்கள் உட்பட பொதுமக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள். இதில் பங்குனி மாத இறுதி வாரத்தில் வலைஞர்மடத்தில் உள்ள மக்கள் வாழ்விடங்களை நோக்கி காலை தொடக்கம் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் பலியானார்கள். இதே போன்று இரட்டைவாய்க்கால், அம்பலவன் பொக்கணை, இடைக்காடு, மாத்தளன் பகுதிகளில் எறிகணை தாங்கிகளின் கனரக துப்பாக்கிச் சூடு மற்றும் ஆர்.பி.ஜி. உந்துகணைத் தாக்குதல்கள் அகோரமாக நடத்தப்பட்டன. கடும் மழை பெய்துவந்த நிலையில் இத்தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்தமையினால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகி அவதிப்பட்டனர். முள்ளிவாய்க்கால், புது மாத்தளன் பகுதி இறுதி பாதுகாப்பு வலயம் என இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அங்கு வந்து பதுங்குகுழி அமைத்து தங்கி நின்ற மக்கள் மீது பல் குழல் எறிகணைத் தாக்குதல் மற்றும் எரிவாயு, பொஸ்பரஸ் குண்டுகளை வீசிய சிங்களம் கோர கொலை வெறித் தாண்டவத்தை ஆடியது. இதில் பல ஆயிரக் கணக்கான மக்கள் எரிந்து,அடையாளம் தெரியாத நிலையில் சாம்பலாகினர். கருகிய நிலையில், அடையாளம் காண முடியாத நிலையில் இனவெறி தாக்குதலினால் மரணித்த நூற்றுக்கணக்கான மக்களின் மனித உடலங்கள் முள்ளிவாய்க்காலில், அவர்கள் உயிர்தப்பிப் பிழைப்பதற்காக அமைத்துக்கொண்டிருந்த பதுங்கு குழிகளுக்குள்ளேயே அடக்கம் செய்யப்பட்டன. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் அப்போது பாதுகாப்பற்ற சூழ்நிலையில் அங்கு சிக்குண்டுள்ள மக்களுக்கு எந்த மனிதாபிமான நிறுவனமும் உதவ முன்வராது தங்கள் பாதுகாப்பே முக்கியம் என்பதாக ஒதுங்கிக் கொண்டார்கள். பாவம் மக்கள், தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தமக்குத் தெரிந்த வழிமுறைகளைக் கைக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

12) ஆரம்பகாலம் தொடர்பில் மக்கள் தம்மை பாதுகாக்க ப-துங்கு குழிகளை பயன்படுத்தியுள்ளனர்.அதனுள் எவ்வாறு சமாளிக்க முடிகின்றது?

ஆரம்ப கால யுத்த நேரங்களில் பதுங்குழி பாதுகாப்பானதாகவே இருந்தது. ஆனால் 2009 காலப்பகுதியில் மருந்தளவும் பாதகாப்பு இருக்கவில்லை. அத்தகைய குண்டுகளின் நெருக்கடி பதுங்குகுழிகளால் பாதுகாப்பை பெறமுடியவில்லை. பதில் :- என்னைச் சுற்றிலும் பல உடல்கள் சிதறிக் கிடந்தன. எல்லா இடங்களிலும் ரத்தமும் சதைத் துண்டுகளுமாகக் கிடந்தன.மனதைத் தைரியப்படுத்திக்கொண்டு அனைத்தையும் கடந்து எழுந்து சென்றேன். எப்படியோ பதுங்கு குழிக்குள் வந்து விட்டேன். அங்கே இருந்த எல்லோருமே காயப்பட்டு இருந்தார்கள். இன்னமும் எறிகணைகள் பதுங்கு குழிகளுக்கு உள்ளும் வெளியிலும் விழுந்து வெடித்துக்கொண்டே இருந்தன. அதற்குள் உட்கார்ந்தால் மரணம் நிச்சயம். எனவே, பதுங்கு குழியைவிட்டு வெளியேறுவதைத் தவிர, வேறு வழியே இல்லை என்ற முடிவுக்கு அனைவருமே வந்துவிட்டார்கள். நடக்க முடியாதவர்கள், நகர முடியாதவர்கள் என்று பலரும் அங்கு இருந்தனர். நான் பதுங்கு குழியைவிட்டு வெளியேறுவதா அல்லது மரணத்தை நேருக்கு நேர் சந்திக்க அங்கேயே தங்கிவிடுவதா என்ற குழப்பதில் இருந்தேன்.

13) அன்றைய நேரங்கள் உணவுப் பொருட்கள் கிடைக்கவில்லை விலைகள் அதிகம் தண்ணீர் இல்லை எப்படி உயிருடன் மீளமுடிந்தது?

பதில் :- பஞ்சத்தினால் அங்கிருந்த மக்கள் முள்ளிவாய்க்காலில் உள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தினர். தாக்குதல் கொடூரத்திலும் அதனை பொருட்படுத்தாது உணவு தேடும் பணியில் மக்கள் ஈடுபட்டிருந்தனர். இதனாலேயே பெரும்பாலான மக்கள் சிங்களப்படைகளின் செல் வீச்சுக்களில் சிக்குண்டு மாண்டனர். தென்னங்குருத்து, பனங்குருத்து, கரையோர நண்டு,பனங்கீரை, இலைகள், குழைகள், காட்டுக்காய்கள், கடற்கரை ஏரல் (சிப்பி) கடல் மற்றும் குளத்து மீன்கள், ஆலமர குருத்துகள்,ஆலங்காய், ஈச்சம் வட்டு, இளநீர், தேங்காய் என இருக்கின்ற எல்லா வகையான பொருட்களையும் தமது உணவாக்கிக் கொண்டனர். எஞ்சி இருந்த ஆடு, மாடு, கோழிகள் அனைத்தையும் உணவாக்கி இனிகால் நடைகள் இல்லை என்ற நிலைக்கே முள்ளிவாய்க்கால் வந்திருந்தது பட்டினி முள்ளிவாய்க்காலை உலுக்கி எடுக்க ஆரம்பித்தது. கர்பிணித் தாய்மார், சிறார்கள், முதியோர்கள் அனைவருமே மூன்று நான்கு நாட்களாக அசுத்த நீரினை பருகியதால் நோய்த்தாக்கத்திற்கு உள்ளாக ஆரம்பித்தனர். சிறார்கள் எலும்பும் தோலுமாக காட்சியளித்தனர். கர்பிணித் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை எவ்வாறு பெற்றெடுக்க போகின்றோம் என்ற ஏக்கத்திலேயே மயக்கமுற்று வீழ்ந்தனர். கூடுதலான முதியோர் பட்டினி நிலைமையினால் மயக்கமுற்றும், கோமா நிலையினை நோக்கியும் சென்று கொண்டிருந்தனர். முதியோர்களும் சிறார்களும் வயிற்றோட்டத்திற்கு ஆளாகி இலகுவில் பாதிக்கப்பட்டார்கள்.இதனால் பலர் இறந்து போயினர். கஞ்சிக்கு கை ஏந்தியவர்களையும் கொன்று குவித்தது சிங்களம். துப்பாக்கி ரவைகள் எல்லாத் திசைகளில் இருந்தும் இடையறாது வந்து கொண்டிருந்தன. தனியே செல்லவும் பயமாக இருந்தது. மனதைத் திடப்படுத்திக் கொண்டு சிறிய குழி ஒன்றுக்குள் இருந்த நான் கையில் ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு வெளியே ஓடினேன். அரிசிக் கஞ்சி ஊற்றுகின்ற இடத்துக்குச் சென்று வாங்கிய கஞ்சியின் சூடு ஆறுவதற்கிடையில் ஓட்டமும் நடையுமாக திரும்பி வந்தேன். ஆனால் என்னால் அந்த கஞ்சியைக்கூட பருக முடியவில்லை.பல் குழல் எறிகணை வீச்சில் வீழ்ந்த குண்டோன்று சிறுவர்களை பாதுகாத்து வைத்திருந்த பதுங்குகுழிமீது வீழ்ந்தது கையிலிருந்த கிண்ணம் தன்பாட்டிலேயே கீழே வீழ்ந்தது. ஒருவர் தூரத்தே நிற்பதை பார்க்க முடிந்தது. காயம்பட்ட காலோடு இலையான்கள் மொய்த்துக் கொண்டிருந்தது. அவர் இருந்த கிடங்கின் அருகில் சென்று பார்த்த பொழுது அது ஒரு மாபெரும் மனித படுகொலைக் கிடங்காகவே காட்சியளித்தது. சிறுவர்கள் சிதையுண்டிருந்தார்கள். காப்பாற்றுவதற்காக நிறையவே போராட வேண்டியிருந்தது.

14) இராணுவக் கட்டுப் பாட்டுக்குள் வரும் படியும். சரணடையும் படியும் அழைப்பு விடுக்கப்பட்ட போது மன ரீதியில் எப்படி உணர்ந்து கொண்டீர்கள் ?

பதில் :- இழப்புக்களை சந்திக்க முடியாத நிலையில் மக்கள் அனைவரும் படையினரிடம் சரணடைந்தனர். வட்டுவாகல் பாலத்தினை மக்கள் கடந்து சென்ற சந்தர்ப்பத்தில் படையினரிடம் மக்களிலிருந்து போராளிகளைப் பிரித்தெடுத்தனர். எல்.ரீ.ரீ.யில் இருந்தவர்கள் ஒருபுறம் வருமாறு கூறி, அவர்கள் ஒரு சின்ன விசாரணைக்குப் பிறகு குடும்பத்துடன் போகலாம் என்று பலமுறை அறிவித்தார்கள். விசாரணையின் பின் மீண்டும் பழைய வாழ்வுக்குத் திரும்பலாம் என்ற நம்பிக்கையுடன் போராளிகள் பலர் படையினரிடம் சரணடைந்தனர். சரணடைந்தவர்களைப் படையினர் வாகனங்களில் ஏற்றும் சமயம் அங்கிருந்தவர்கள் அடக்கி வைத்திருந்த அத்தனை சோகங்களோடும் பெயர் தெரியாத சிப்பாய்களின் கால்களில் விழுந்து கதறினார்கள். அவர்களின் கண்களைக்கட்டி அழைத்து சென்ற இராணுவத்தினர், பின்னர் அவர்களின் ஆடைகளைக் களைந்து சித்திரவதைகளின் பின்னர் படுகொலை செய்தார்கள். மக்களில் கதறல்களோ கெஞ்சல்களோ இராணுவத்தினரின் மனங்களைக் கொஞ்சம் கூட அசைக்கவில்லை. மீண்டும் அடிமை வாழ்வு தொடர்ந்தது. பல இடைத்தங்கல் முகாம்கள் பல நலன்புரி நிலையங்கள் ,பல தடுப்பு முகாம்களும் உருவெடுத்தது.பல்லாயிரக்கணக்கானோர் தம் உறவுகளைத் காண அலைந்து திரிந்தார்கள். இன்னும் முடிவின்றி பதிவின்றி கண்ணீருடன் அலைந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.

15) மக்களின் இடைத்தங்கல் முகாம் வாழ்வில் வசதிகள் போதுமானதாக இருந்ததா?

பதில் :- வவுனியா மாவட்டமே கேந்திர நிலையமாக இயங்கியத. அங்கு தற்காலிக வாழ்விடங்களாக பாடசாலைகள் கூட்டுறவு பயிற்சி நிலையம், ஆசிரியர் பயிற்சி கல்லூரி, பல்கலைக்கழக வளாகம், மெனிக்பாம் முகாம், மற்றும் செட்டி குளம் பகுதியில் பல வலயங்களாகப்பட்டு தற்காலிக கொட்டகைகளில் மக்கள் குடியேற்றப்பட்டு இருந்தனர். முதல் ஒரு வாரத்திற்கு குடிப்பதற்கான நீரைப் பெற முடியவில்லை. பசி போக்க உணவு கிடைக்கவில்லை. மலசலகூட வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. எமது முகாமுக்குள் வெளி ஆட்கள் வருவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை முகாமிலிருந்த மக்கள் கொலை செய்யப்படுவார்கள் என கருதப்பட்டது. எமது வாழ்வு ஆபத்தில் உள்ளதாக நாம் கருதினோம்.அந்த முகாமில் கிட்டத்தட்ட 400,000 பேர்வரை தங்கவைக்கப்பட்டனர். 16 பேர் படுத்து உறங்குவதற்காக சீனாத் தயாரிப்பான நீல நிறத் தறப்பாள் ஒன்று வழங்கப்பட்டது. இதனால் பெண்கள் கூடாரத்திற்குள்ளும், ஆண்கள் அதற்கு வெளியேயும் படுத்து உறங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். படையினர் எம்மை மிருகங்கள் போல் நடாத்தினார்கள். அடிக்கடி பல நபர்களினாலும், இராணுவத்தினாலும், போலீஸ் படையினராலும், மற்றும் அடிக்கடி பங்குகொள்ளுகின்ற அரசாங்க சார்பு துணை இராணுவக் குழுக்களினாலும் விசாரணை என்ற பெயரில் ஆண்களும், பெண்களும் உடல் உள ரீதியான சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டார்கள். சிலர் கொலை செய்யபபட்டு முகா.ம் அருகில் உள்ள ஆற்றில் வீசப்பட்டனர். சிலர் காணாமல் ஆக்கப்பட்டனர்.

16. நலன்புரிநிலைய வாழ்கையின் மக்களும் மீள்குடியேற்றி விட்டனரா ?

பதில் :- முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் சாட்சியங்களுடன் சொல்ல முடியாத அவலங்களையும், துயரங்களையும் சுமந்திருந்தனர் மக்கள். சொத்து, சுகம் என எல்லாவற்றையும் இழந்து உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு தப்பி வந்த மக்களுக்கு இந்த போலியான மனிதாபிமானப் பணிகளும் மீள்குடியேற்றங்களும் செயற்பாடுகளும் எந்தவகையிலும் போதுமானதல்ல. மீள் குடியேற்றம் என்ற பெயரில் அவர்கள் படும் இன்னல்கள் எப்பொழுது தான் வெளியுலகிற்கு தெரியவரப்போகின்றனவோ!மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் தொடர்கின்றது. விழிகளை பிதுங்க வைக்கும் அளவிற்கு அவர்களின் வாழ்வாதாரம் மிக மோசமான நிலையில் காணப்படுகின்றது போர் இடம் பெற்று காலங்கள் கடந்து சென்ற நிலையிலும் போர் தந்து விட்டுப்போன வலிகளின் வடுக்கள் இன்னமும் ஆறாமல் நெஞ்சில் நெருஞ்சியாய் குத்த நடைப்பிணங்களாய் வாழுகின்ற நிலையே தொடர்கிறது. நலன்புரி நிலையங்களில் இருந்தும் வெளிமாவட்டங்களில் இருந்தும் சொந்த இடங்களிற்கு மீள் குடியமர்த்தப்பட்ட, போர் தின்ற மக்களின் வாழ்வு இன்னமும் நிலையில்லாது தொடர்கிறது மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் வாழ்வியலின் தன்மையும் அதன் முறைமையும் எங்களை உறைய வைக்கின . இவ்வாறான ஒரு வாழ்வை நாம் வாழ்வோமா என சிந்தித்துப் பார்க்கையில் எம் மனதில் இனம்புரியாத ஒர் நெருடல் இன்று வரை தொடர்ந்தவாறே உள்ளது. சொந்த இடங்களுக்கு திரும்பாத பலர் இன்னமும் உள்ளனர். காணிகள் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ளது. ஆண்களற்ற குடும்பங்களிற்கு வீட்டுத்திட்டம் முழுமையாக கொடுக்கப்படவில்லை. முக்கால் வாசியும் வன்னி மக்களை சாட்டி அரசியல் வாதிகள் தான் பிழைப்பு நடத்துகின்றனர். அவர்கள் தான் சொகுசாக வாழ்கின்றனர் மக்கள் அவலப்படுகின்றனர்.

17) மக்களின் சமூக, பொருளாதார சவால்களை எவ்வாறு வெற்றி கொள்வது?

பதில் :- முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் சமூக, பொருளாதாரத் துறைகளில் பெரும் சவால்களை எதிர்நோக்கி இருக்கின்றார்கள். யுத்த மோதல்களின்போது, இடத்திற்கு இடம் பெயர்ந்த மக்கள், கையில் கொண்டு செல்லக்கூடிய வகையில் தம்முடன் முள்ளிவாய்க்காலுக்கு எடுத்துச் சென்ற சொத்துக்கள், வாகனங்கள் அனைத்துமே அழிக்கப்பட்டு விட்டன. வெறும் கையுடனேயே அவர்களில் பலர் மீள்குடியேற்றத்தில் தமது ஊர்களுக்குத் திரும்பி, தமது வாழ்க்கையைப் புதிதாக ஆரம்பிக்க முடியாதவர்களாக இருக்கின்றார்கள். விவசாயம், கூலித்தொழில், மற்றும் மீன்பிடியுமே மக்களின் பிரதான ஜீவனோபாயத் தொழில்களாகும். விவசாயிகளைப் பொறுத்தமட்டில் வன்னியில் உழவு இயந்திரம் இல்லாதவர்கள் கைகளை இழந்தவர்களுக்கு சமமாகவே இருக்க முடியும். ஏனெனில் விவசாயத்திற்கு அடிநாதமாக அடிப்படை உதவியாக இருப்பது உழவு இயந்திரமே. அதனை அவர்கள் பெற்றுக்கொள்வதற்கு கடனடிப்படையிலேயே அரசினால் சிலருக்கு உதவி வழங்கப்படுகின்றது. புதிய வாழ்க்கைக்கான அடிப்படை உதவிகள் எதுவுமே இல்லாதவர்கள் கடன் பெற்றே தமது வாழ்க்கையை ஆரம்பிக்கின்றார்கள். கடன் கேட்பவர்களிடமும் கடனை மீள் செலுத்த முடியாதவர்களிடமும் பாலியல் லஞ்சம் கோருகின்றார்கள். இதன் மூலம் அவர்கள் அவமானப்பட்டவர்களாகவும் கடனாளிகளாக வாழவே நிர்ப்பந்திக்கப் படுகின்றார்கள். யுத்தத்தில் அவர்கள் இழந்த முக்கிய சொத்துக்களுக்கு இழப்பீடு என்ற வகையில் எதுவுமே வழங்கப்படவில்லை. மீனவர்களின் வாழ்க்கையும் இத்தகைய ஒரு நிலையிலேயே இருக்கின்றது. வர்த்தகர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களும் இத்தகைய கடனடிப்படையிலான முறையிலேயே தமது வாழ்க்கையை ஆரம்பித்து இன்று கடனாளிகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதையும் விட முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் கணவன்மாரையும், உழைப்பாளிகளையும் இழந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்று பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன. யுத்தம் முடிவடைந்தும், இன்னும் அகற்றப்படாமல் உள்ள இராணுவச் சூழ்நிலையில் இந்தக் குடும்பங்கள் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கின்றது. தேசிய பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளவர்களும், சமூக விரோதிகள் மற்றும் சந்தர்ப்பவாதிகளும் இந்த நிலைமைக்கு முக்கிய காரணகர்த்தாக்களாக இருக்கின்றார்கள். இத்தகைய சமூக சீர்கேடு நாளுக்குநாள் அதிகரித்துச் சென்ற வண்ணம் உள்ளது. அதனைக் கட்டுப்படுத்துவதற்கும், தடுத்து நிறுத்துவதற்கும் உறுதியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பிடியில் சிக்கி மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பியுள்ள மக்கள் அரசியல் சமூக, பொருளாதார, சிக்கல்களுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்திருப்பதையே காணமுடிகின்றது. இந்தச் சவால்களுக்கு எப்போது முடிவு ஏற்படும், எப்போது உறுதியான சிறந்த தலைமைத்துவம், சட்டம் ஒழுங்குடன் கூடிய சிறப்பான சிவில் நிர்வாகச் சூழலும் இந்த மக்களுக்குக் கிடைக்கும் என்பதை முன்கூட்டியே அனுமானிப்பது இன்றைய சூழ்நிலையில் கடினமானதாகவே இருக்கின்றது. மக்கள் தான் தங்ளை தாங்கள் பார்க்கவேண்டியவர்களாக உள்ளனர்.

18) போருக்கு பின் மக்களின் உளவியல் நிலை? எவ்வாறு உள்ளது?

பதில் :- ஈழத்தில் பாரிய யுத்த அனர்த்தத்தின் பின்னர் உளவியல் ரீதியாக மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு தனிநபர் சாதாரணமாகவே உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகின்றமை நாம் அறிந்த உண்மை. அந்தவகையில் 2008- 2009 ஏற்பட்ட பாரிய யுத்த அனர்த்தத்தின் பின்னர் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்வதில் கூட பல உளவியல் ரீதியான பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. ஒரு தனிமனிதனது அறிவு அனுபவம் செயற்பாடுகளில் தாக்கத்தின் அளவு கூடுதலாக காணப்படுகின்ற போது அவன் உளவியல் பிரச்சினைகளுக்கு உட்படுத்தப்படுகின்றான் பதகளிப்பு நிலை, பயம், பதற்றம், ஏக்கம், கவலை, ஆறுதலின்மை, களைப்பு, நித்திரையின்மை, பயங்கரக் கனவுகள், எப்போதும் எரிச்சல்படுதல், அனர்த்தத்திற்கு பிற்பாடான நெருக்கீட்டு நிலை , தனிமை உணர்வு, தாழ்வு மனப்பான்மை, உடலியல் குணங்குறிகள் பல காணப்படுகின்றன. ஈழத்தில் உறவுகள் இறந்தவர்களின் உடல்களையும் காணமுடியாது போனதும் உரிய கலாச்சார விழுமியங்களுடன் இறுதிக் கிரிகைகளைசெய்ய முடியாது போன சூழலினால் இழவிரக்கத்தின் விளைவுகள் பலர் மத்தியில் காணப்படுகிறது. குழப்பநிலை, இழவிரக்கம், அறிமுகமற்ற நிலை, மறதி, நித்திரையின்மை, பசியின்மை, செவிப்புல, கற்புல மயக்கம், குற்ற உணர்வு, அதிர்ச்சி, கவலை, உயிர்பிழைத்த குற்றவுணர்வு, தனிமை, கவலை, அச்சம், வெறுப்பு, கோபம், சோர்வு, பதட்டம்,எரிச்சல், பழிவாங்கும் உணர்வு, விரக்தி, தற்கொலை எண்ணம், வெறுப்பு, ஏக்கம், ஏமாற்றம், இயலாமை, நம்பிக்கையின்மை,மனக்குழப்பம், மனச்சோர்வு, தற்கொலை உணர்வு என பல சொல்முடியாத உள நோய்களையும் கொண்டுதான் மக்கள் வாழ்கிறார்கள். தமிழினப்படுகொலைகள் நித்தம் நித்தம் ஈழத்தில் அரங்கேறி க் கொண்டுதான் இருக்கின்றன. போர்பூமியில் படுகொலைகள்,பாலியல் வன்முறைகள், ஆட்கடத்தல்கள், காணாமல்போகச் செய்தல், தாங்கொணா சித்திரவதை போன்ற கொடுமைகள் மூலம் மனிதம் கேள்வி முறையின்றி ஈழத்தில் சிதைக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. மனிதர்களிடத்தில் பலர் இறப்பின் உச்சம் வரை சென்றிருந்தார்கள். இதன் தாக்கம் ஒரு புறம் இருக்க இன்றும் தொடர்கின்றது ஆயுதமுனை இல்லாத இன அழிப்பு.இவைகளினாலும் மக்கள் உளரீதியாக பாதிக்கப்பட்டிருக் கொண்டிருக்கிறார்கள். இவற்றினால் கொலை கொள்ளை களவு போதைக்கு அடிமையாதல் என்ற நிலையில் இளம் சமூகம் படையெடுக்க தொடங்குகின்றது.

19. முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் தமிழ் அரசியற் தலைவர்களிடம் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்… ?

பதில் :- அவலங்களும் அழிவுகளுமே வாழ்வாகிப்போனாலும், நாளை நமக்குண்டு என்ற நம்பிக்கையில் எழுந்து நடக்கின்றோம். ஈழத்தமிழர் ஒரு தேசத்தினர் என்பதை தெளிவாக வெளிப்படுத்தி, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஈழத்தமிழ் மக்களுக்கான அரசியற் தீர்வுத் திட்டத்தை தெளிவாக மக்களிடம் முன்வைக்க வேண்டும். முள்ளிவாய்க்கால் யுத்த மற்றும் மானுடத்துக்கு எதிரான குற்றங்கள், இனஅழிப்புக் குறித்த விசாரணைகள் அனைத்துலக விசாரணைகளாக அமைய ஆவன செய்ய வேண்டும். யுத்தத்தால் பாதிக்கபட்ட மக்களதும் போராளிகளதும் வாழ்வாதாரங்களை உறுதிப்படுத்தவும் ஈழத் தமிழ் தேசத்தின் மேம்பாட்டை உறுதிப்படுத்தவும் தேவையான நிறுவனங்களைக் கட்டியெழுப்ப வேண்டும். தமிழக மற்றும் இந்திய மக்களுடன் நல்லுறவை வலுப்படுத்தி ஈழத் தமிழர்கள் ஒரு தேசம் என்பதற்கான அங்கீகாரத்தை இந்தியா மற்றும் அனைத்துலக நாடுகளிடம் பெற்றுக் கொள்வதற்கான செயற்திட்டங்கள் வகுத்துச் செயற்பாடுகளை விரிவு படுத்த வேண்டும். முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த நம்மவர்கள் நினைவாக ஒரு நினைவுத்தூபி அமைக்கப்பட வேண்டும். அரசியற் கட்சிகளும் தலைவர்களும் போதிய வினைத்திறனுடன் இயங்குவதனை ஊக்குவிப்பதற்கும் அவர்களை சரியான திசையில் வழிநடாத்துவதற்கு அழுத்தம் கொடுப்பதற்கும் போதிய சமூக இயக்கங்கள் ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் இல்லாதிருப்பதும் ஒரு மிகப் பெரிய போதாமையாகும். இதனால் அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாடு போன்ற தளங்களில் செயற்படுவதற்கு தேர்தல் அரசியலில் பங்கெடுக்காத சமூக இயக்கங்களை ஈழத் தமிழ் தேசம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். வலுவான சமூக இயக்கங்கள் செயற்படும் சமூகங்கள், தாம் எதிர்கொள்ளும் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளும் வலுப்பெற்றவையாக இருக்கும்.இத்தகைய சமூக இயங்கங்கள் ஈழத் தமிழர் தேசத்தின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமாக உள்ளன. இவையே முள்ளிவாய்க்கால் நினைவுடன் எம்முள் எழும் சிந்தனைகளாகும்.

படகு அகதியின் அவல நிலை -நிஜத்தடன் நிலவன் edit

இலங்கை அரசாங்கம் மற்றும் இராணுவத்தினதும் அடக்குமுறை காரணமாக உயிருக்கு பயந்து நின்மதியாக வாழலாம் என எண்ணி கப்பல் உயிரை பனயம் வைத்து

 இறக்க நேர்ந்தாள் கடலில் எதுவித சித்திரவதைகளும் இல்லாது இறப்பதாகவும் வாழ்வா சாவா என்னும் போரட்த்திற்கு மத்தியில் முன் படகு மூலமாக அவுஸ்திரேலியாவிற்குச் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான நிலையில் அவுஸ்திரேலியாவிற்கு வந்ததும்

தனது வாழ்க்கையில் இனி ஒளி வீசும் எனவும் சுதந்திரமான முறையில் எதுவித அச்சுறுத்தலும் இன்றி நின்மதியாக வாழலாம் என்றும் கூறியவாறு தனது கதையினை கூற ஆராம்பித்தர்

யாழ் மாவட்டத்திணை பிறப்பிடமாகக் கொண்ட சுதர்சனன் (வயது 30). உள் நாட்டு யுத்தம் காரணமாக முல்லைத்தீவு வவுனியா மாவட்டங்களில் வாழ்ந்து தனது ஆரம்பம் கல்வியை பல பாடசாலைகளிலும் உயர் கல்வியை மல்லாவி மத்திய கல்லூரியிலும் பட்டப் படிப்பை யாழ் பல்கலைக் கழகத்தல்; கற்று.

2009ம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்த போர் வலயப் பகுதியில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றில் ஒரு மயித நோயப் பணியாளராகவும் முள்ளிவாய்க்கால் கொடூர நிகழ்வின்போது அதில் சிக்கி தப்பியதாகவும் பின்னார் இடம்பொயர்ந்து இராணுவக் கட்டுப்பட்டு பகுதியில் இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்

அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றில் ஊடாக தனது பணியினை மக்கள் இடைத்தங்கல் முகாம்களிளும் விடுதலைப்புலிகள் தடுத்துவைக்கப்பட்ட தடுப்பு முகாம்களிலும் மயித நோயப் பணியாளராக கடமையாற்றியாதகவும் ஊடகங்களுடனும் மற்றும் மனித உரிமை செயற்பாடுகளிலும் ஈடுபட்டுவந்ததாகவும் கூறினார்

அப்போது 2010ம் ஆண்டில் ஒரு தடவை 2011ம் ஆண்டில் இரண்டு தடவைகளும் 2012ம் ஆண்டில் இரண்டு தடவைகளும் பயங்கரவாத குற்றப் பிரிவினரால் அரச படைகளால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தடுப்பு அறையில் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு சித்திரவதை செய்யப்பட்ட கொடுமை குறித்து சுதர்சனன் தெரிவிக்கையில்

23.07.2012 அன்றைய தினம் இறுதியாக யாழ்பணத்தில் உறவினர் வீட்டிலிருந்து வளமைபோல் தனது பணிக்கு பேருந்தில் கணகராயன் குளம் நோக்கி பயனம் செய்யும் போது ஆணையிறவு இராணவ சோதணைச் சாவடியில் அடையல அட்டை பரீசோதனையின் போது பேருந்தில் இருந்து இறக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டேன.;

நின்று இடத்திற்கு வந்த புலனாய்வுத்துறையினர் வாகனத்தில் ஏறுமாறு அச்சுறுத்தி பின்னர கைகளையும் கட்டிய் பலவந்தமாக இழுத்து ஏற்றிய வாகனம்

இலக்கத்தகடற்ற கறுப்புக் கண்ணாடிகளால் ஆனது, வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியாது. வாகனத்தினுல் வைத்து கண்கள் கட்டப்பட்ட நிலையில்,

வாகனம் பயணித்தவேளை பல சோதனைச் சாவடிகள் இருந்தும் எந்தச் சோதனைச் சாவடியிலும் இவர்கள் வாகனம் நிறுத்தப்பட்டு சிங்களத்தில் உரையாடினார்கள் எனக் கூறுகிறார்.

புலனாய்வுத்துறையினர், சித்திரவதை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். கட்டிடம் ஒன்றின் அடைத்து வைத்து, பல நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, எனது கைகளும், கண்களும் கட்டப்பட்டிருந்தன.உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் சித்திரவதைசெய்யப்பட்டேன்.

சித்திரவதை முகாமில் கைகள் கட்டப்பட்ட நிலையில் அவர் தொங்கவிடப்பட்டு, ஆணுறுப்பில் சரமாரியாகத் தாக்கப்பட்டுள்ளார். பின்னர் ,வரை விசாரணைசெய்ய வந்த அதிகாரிகள் விடுதலைப்புலிகளுடன் தொடர்வு இருப்பதாகவும் அவர்களின் பணிகளை நடைமுறைப்படுத்துவதாகவும் கூறி கண் கட்டப்பட்டவாறே கையப்பம் இடுமாறு வற்புறுத்தினார்கள் கலை இலக்கியப் படைப்புக்களை செய்யுமாறு

ஊடகங்களுக்கும் மற்றும் மனித உரிமை செயற்பாடுகளுக்கும் பதிவு செய்த ஆவணங்களை தங்களிடம் தருமாறு

கொடிய சிங்கள கொலைவெறியாட்டத்தால் ஒரு மனிதனாக கூட மதிக்காது மனிதனேயமற்று மிக மோசமானமுறையில் மேற்கொள்ளப்பட்ட கொடிய சிங்கள வெறியரின் கொடூரதாண்டவத்தை .

தனது  கண் கட்டப்பட்ட நிலை என்பது, தொடர்ந்து பல நாட்களாக நீடித்தது. எந்த உடுப்புகளுமற்ற நிர்வாணமான நிலை என்பது பல நாட்களாக நீடித்த நிலையில், 

தொடர் கட்டாயப் பாலியல் உறவுக்குப் உட்படுத்தினார்கள் , கம்பி போன்ற ஆயுதங்களால் சித்திரவதை, வலிமையான ஆயுதங்களால் தாக்குவது, தனிப்பட்ட அந்தரங்க பாகங்களில் துன்புறுத்துதல் மற்றும் உடம்பு மேல் சிகரெட்டால் சுட்டு சிறுநீர் கழித்தல் என்று பல்வேறு வகைகளில் சொல்லொணாத் துயரை அனுபவித்தேன் எனக் கூறியவாறு கண்களில் இருந்து கண்ணீர் சொரிய வாய்விட்டு அழுதார்

கைகளை கட்டி அவரின் முதுகில் பழுக்கக் காய்ச்சிய கம்பிகளைக் கொண்டு சூடுகாட்டியுள்ளனர் புலனாய்வுத்துறையினர். பின்னர் அப் புண் ஆறாதவாறு நீரை ஊற்றி சில நாட்கள் கழித்து ஆறாத அப் புண் மீது மிளகாய் தூளை தடவி மேலும் சித்திரவதைக்கு உள்ளாக்கியும் உள்ளனர்.

தண்ணீர் தாகம் தாங்க முடியாது தண்ணீர் கேட்டபோது அங்கிருந்தவர்கள் ஒரு போத்தலில் சிறுநீரை கழித்து அந்தச் சிறுநீரை அருந்தும்படி கட்டாயப்படுத்தி அடித்தார் என்றும் தனது அந்தரங்க உறுப்புக்களை மேலும் சேதப்படுத்தினார்கள்

அடுத்தது பல கேள்விகள் என்னிடம் கேட்டபோது தெரியுமா என்று பதில் சொன்னேன். இதை அடுத்து நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டு, ஒருவர் முன் நிறுத்தப்பட்டேன். இரும்புக் கம்பியால் தாக்கியதுடன் நெருப்பில் கம்பியை சூடாக்கி தனது முதுகு பகுதியில் சுட்டு காயப்படுத்தியதும் பொற்றேல் பொலித்தீர் பையினாலும கட்டப்படடு சரமாரிக தாக்கப்பட்தும்

இரும்புக் கம்பி, தலைக்கவசம், ரப்பர் குழாய் போன்றவற்றால் தாக்கப்பட்டது மிக கொடூரமானவையாக இருந்தது. தான் கொடூரமாக தாக்கப்பட்டதால் பல நாட்களாக சிறுநீர் கழிக்க முடியாமல் போனதாகவும் உடல் முழுவதும் கடும் வலியேற்பட்டு உபாதைக்கு உள்ளானதாகவும்; தான் கடுமையாக தாக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

சித்திரவதை முகாமில் இருக்கும்போது தனது உயிருக்கு ஆபத்து அதிகரித்து வருவதை உணந்தபோது அங்கிருந்த இராணுவ புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவருக்கு பணம்தருவாதக கூறிய கட்டளையில் அவர் 28.08.2012 தப்பி செல்லுமாறு விடப்பட்டார் அச் சமயத்தில் வதைமுகாமில் இருந்து தப்பிச் சென்றபோது, ஒரு கிழிந்து போன உள்ளடையுடன் அரை நிர்வாணமாகவே பல மைல் தூரம் ஒட்டமும் நடையுமகா மக்கள் கூடியிருப்பிணை அன்மித்தபோது வீதியில் வந்த ஒருவரின் உதவியினால் பாதுகாப்பான இடத்திற்கு வந்த பின்னார் தனது குடும்பத்துடனும் தொடர்பு கொண்டு குறித்த நபருக்காண பணத்திணை அவர் கூறியஇடத்தில் பொலித்தின் பையில் கைட்டி வீசப்பட்டது எனவும் அதைத் தொடந்து மறைந்திருந்து தொடர்து வாழ முடியாத நிலைனிடித்தது

இவ்வாறு அல்லலுற்ற சுதர்சனை மீட்க அவர் பெற்றோரும் உறவினர்களும் மனித உரிமை முறைப்பாடு செய்விடது இராணுவ புலனாய்வுத்துறை மிரட்டிணார்கள் இதையும் மீறி கூறினால் குடும்பத்படன் சுடுவாதகவும் கூறி அச்சுறு;தினார்கள் என பெற்றோரும் உறவினர்களும் தொரிவித்ததாகவும் உறவினர்கள் பெருந்தொகையான பணத்தை தனது உயிருக்கு பணயம் செலுத்திய விடயம் வெளியே தெரிந்தால் கொள்வதாக மிரட்டியதாகவும் அவர்கள் கூறினர்.

தனக்கு நடந்ததைப் போலவே பல இளைஞர்களுக்கும் இவ்வாறு நடந்து வருவதாக அவர்; தெரிவித்தார். இராணுவ தடுப்பு முகாமில் பல காணாமல் போனவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு பல சித்திரவதை சிறைச்சாலை அறைகள் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

போர் மௌனிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள். இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்பாக வாழ்கிறார்கள், அங்கு ஒரு பிரச்சனையும் இருக்கவில்லை எனப் பலர் கூறிவருகின்றபோது, தமிழ் இளைஞர்கள் நாளாந்தம் சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர் என்பதே உண்மை நிலையாகும். இதனையே சம்பவமும் நினைவுபடுத்தி நிற்கிறது.

பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களின் சொந்தப் பெயர் மற்றும் ஊர் என்பன மாற்றப்பட்டுள்ளது.

- நிஜத்தடன் நிலவன்

தற்கொலை தொடர்புடைய ஏனைய இலக்கியங்கள் பற்றியும் பார்வை-நிஜத்தடன் நிலவன் edit

Emile Durkheim (1951) “Suicide” என்னும் நூலில் தற்கொலை, தற்கொலை தொடர்பான விரிவான விளக்கங்களும் தற்கொலையின் வகைகளும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. தற்கொலை தொடர்பாக முதன்முதலில் ஆய்வினை மேற்கொண்டவாராக எமில் டூர்க்கைம் அடையாளப்படுத்தப்படுகிறார். இந்நூலானது தற்கொலை தொடர்பான ஆழ்ந்த அறிவினை தருவதாக அமைந்துள்ளது. தற்கொலை எண்ணக்கரு சமூகத்தில் எவ்வாறு காணப்படுகின்றது, சமூகத்தில் ஏற்படுத்தும் விளைவுகள், தற்கொலையின் வகைப்பாடுகள் என்பவற்றைக் கூறி தற்கொலை அதிகமாக உள்ள ஒரு சமூகத்தை ஆய்வாளன் ஆய்வு செய்யும் போது அடிப்படையாகத் தெரிந்திருக்க வேண்டிய அனைத்து விடயங்களையும் எடுத்துக்காட்டுகின்றது. இது தற்கொலை தொடர்பான எண்ணக்கருவை ஒரு சமூக ரீதியான சார்பில் மட்டுமல்லாது தனியாள் சார்பிலும் நோக்கியுள்ளதுடன் மேலைத்தேய நாடுகளை அதிகம் உதாணரமாகக் கொண்டு நோக்கப்பட்டுள்ளது. இக்கருத்துக்களை பிரதான கருப்பொருளாகக் கொண்டும் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜமாஹிர்,பீ.எம்.,(2010) 'மெய்யியல் பிரச்சினைகளும் பிரயோகங்களும்' என்னும் நூல் பிரயோக மெய்யியலும் ஒழுக்கப் பிரச்சினைகளும் என்னும் தலைப்பின் கீழே தற்கொலை பற்றியும், தற்கொலைக்கான காரணங்கள் பற்றியும், தற்கொலை செய்யும் முறை பற்றியும், தற்கொலைக்கான பொதுவான அறிகுறிகள் பற்றியும், தற்கொலையின் வகைகள் தொடர்பாகவும் தற்கொலையைத் தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நூல் தொன்மை கிரேக்க, ரோம சிந்தனை மரபுகளிலும் தற்கொலை நாளாந்த நிகழ்வாக இருந்தமை பற்றியும் குறிப்பிடுகின்றது. அத்துடன் குழந்தைகள், சிறுவர்களின் தற்கொலை பற்றியும் அதற்கான காரணங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. பரீட்சையில் தோல்வி, கடும் துக்கம், வேலையின்மை, வாட்டும் கடன் பிரச்சினைகள், பணப்பிரச்சினைகள், வறுமை, பணி இடங்களில் ஏற்படும் பிரச்சினைகள், வரதட்சணைக் கொடுமை, திருமண உறவில் உள்ள சிக்கல், பாலியல் காரணிகள், விரக்தி உணர்வு, தனிமைப்படுத்தல் முதலியன தற்கொலைக்கான பொதுவான காரணங்கள் என்றும் அதனைத் தடுப்பதற்கான வழிவகைகளையும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

பாத்திமா சிபானி,ஏ.ஜீ, (2010) 'சமூகப் பிரச்சினைகள்' என்னும் நூலிலே ஐந்தாவது அத்தியாயத்திலே தற்கொலை ஒரு பகுதியாக சமூகவியல் ரீதியாக ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றது. இந்நூலிலே தற்கொலை பற்றிய எமில் டூர்கைமின் நோக்கு, தற்கொலையின் வகைகள் மற்றும் இலங்கையில் தற்கொலை ஒரு சமூகப்பிரச்சினை, தற்கொலைக்கான காரணங்கள் போன்ற விடயங்கள் பற்றி ஆராயப்பட்டுள்ளது. இந்நூலில் சமூக ஒழுங்கின்மையாலும் தனியன்களின் மீது உறுதியான கட்டுப்பாடு நிலை இன்மையும் தற்கொலைக்கு வலிகோலுகின்றதாக டூர்கைம் கூறியதாக குறிப்பட்டிருக்கின்றது. மேலும் தற்கொலைக்கான காரணங்களை உளவியல், பொருளாதார மற்றும் சமூகக் காரணிகள் எனப் பிரித்து நோக்கமுடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நூலிலே தற்கொலையை சமூகவியல் ரீதியாக எவ்வாறு உள்ளது என்றும், இலங்கையில் எவ்வாறு தற்கொலை உள்ளது என்றும், தற்கொலை தொடர்பான பொதுவான விடயங்களை விளக்கியுள்ளதை காணமுடிகின்றது.

கோகிலா.ம,(2006) 'மனச் சோர்வு' என்னும் நூலிலே தற்கொலைக்கு பிரதான காரணம் மனச்சோர்வே என்றும், மனச்சோர்வுடையோர் தற்கொலையைப் பற்றி பேசுகின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பொதுவாக தற்கொலை முயற்சியில் ஈடுபடுதல் பெண்களில் அதிகமாக இருக்கின்ற போதும், தற்கொலையை வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொள்பவர்களிலே ஆண்களே அதிகம் உள்ளனர் என்றும் குறிப்பிடுகின்றது. வைத்திய நிபுணர்கள், சட்ட வல்லுணர்கள், பல் மருத்துவர்கள், விமான ஓட்டுணர்கள் மத்தியில் தற்கொலை நூற்று வீதம் என்றும், சமயம் சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபடுவோர் மத்தியில் தற்கொலை செய்யும் வீதம் வேகமாக அதிகரித்து வருகின்றது என்றும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கிராமப்புறங்களில் தற்கொலை வீதம் அதிகம் காணப்படுவது போல மார்கழி மாதத்திலே அது குறைவாக காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் தற்கொலைக்கான காரணங்கள் பற்றியும், தப்பிக்கும் தற்கொலை, ஆக்ரோஷத் தற்கொலை, அர்ப்பணிப்புத் தற்கொலை பற்றியும், வீரதீரத் தற்கொலை பற்றியும், தற்கொலை தொடர்பான தவறான கருத்துக்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவதாஸ்.எஸ். (2005) 'நலமுடன்' என்னும் நூலிலே 65வது பக்கத்திலே அனர்த்தங்களை தொடர்ந்து ஏற்படும் உளநெருக்கீட்டின் விளைவாகவும் ஏனைய சமூகக் காரணிகளாலும் மனச்சோர்வினாலும் தற்கொலை ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக இவர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அண்மைக்காலங்களில் தற்கொலை முயற்சியுடன் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இருந்து பலர் வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது என்றும் முல்லைத்தீவிலும் சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும் அதற்கான காரணங்களையும் குறிப்பிடுகின்றது. தயா சோமசுந்தரம், கோகிலா.ம, கடம்பநாதன், (2005) 'சின்னச் சின்னப் பிள்ளைகள்' என்னும் பாடசாலை சார் உள சமூக செயற்பாடுகளுக்கான பயிற்சிக் கைந்நூலிலே அறிவாற்றல் சார் அறிகுறிகளில் ஒன்றாக தற்கொலை எண்ணங்களைக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது மனச்சோர்வு நோய்க்கு உள்ளாகியுள்ள சிறுவர்கள் ஞாபகம் வைத்திருப்பதிலும் கிரகிப்பதிலும் சிரமங்களை எதிர்நோக்குவதுடன், தனது எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையற்ற எண்ணங்களையும் தற்கொலை எண்ணங்களையும் கொண்டிருப்பர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மயூரன்.த, (2012) 'சமூகப் பிரச்சினைகள்' என்னும் நூலில் Rdwin Shneidmen, Bessil Benzel, Emile Durheim போன்றோர் தற்கொலை தொடர்பாக முன்வைத்துள்ள கருத்துக்கள் மிகச் சுருக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு தற்கொலையினை உளவியக்கவியல் கொள்கை, உயிரியல் கொள்கை, சமூகவியல் கொள்கை என மூன்று கொள்கைகளின் அடிப்படையில் விளக்கப்பட்டுள்ளது. தற்கொலையைப் பற்றிய சமூகவியல் நோக்கில் சமூகச் சூழலே ஒருவரை தற்கொலைக்கு உட்படுத்துகின்றது என்பது அடிப்படை எண்ணக்கருவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. மேலும் அதில் தற்கொலையினை அகநிலைத் தற்கொலை (நுபழளைவiஉ ளுரiஉனைந), நியமமறுநிலை தற்கொலை (யுnழெஅiஉ ளுரiஉனைந), உன்னத தற்கொலை (யுடவசரளைவiஉ ளுரiஉனைந), விதிவசப்பட்ட தற்கொலை (குயவயடளைவiஉ ளுரiஉனைந) என 1897 இல் நுஅடைந னுரசமாநiஅ என்பவர் தனது ஆய்வினடிப்படையிலான நான்கு வகைப்பாடு விரிவாக விளக்கப்பட்டிருக்கின்றது. தற்கொலையை விளக்குவதற்கான சமூகப்பிரச்சினைகளை மையப்படுத்திய காட்டுரு ஒன்றினையும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

வசந்த தேவராஜா, ஸ்ரீஸ்கந்தராஜா.எம்.டி,...., (-------) 'மனித நடத்தையை புரிந்து கொள்ளல்' என்னும் நூலிலே தற்கொலை என்றால் என்ன, தற்கொலை என்ற சொல்லின் தோற்றுவாய், அர்த்தம் போன்றன குறிப்பிடப்பட்டிருக்கின்றது. தற்கொலை செய்வோரினை மன அழுத்தத்திற்கு அல்லது நம்பிக்கையீனத்திற்கு ஆளாவோர், தொடர்பாடல் அல்லது தம்மைக் கட்டுப்படுத்த இயலாதோர் என இருவகையினராக பிரித்து விளக்கப்பட்டுள்ளது. தற்கொலையியல் பற்றியும் இதில் கூறப்பட்டுள்ளது. அநேகமாகத் தற்கொலை செய்யக்கூடுமெனக் கருதப்படுபவர் அறுபத்தைந்தும் அதற்கு மேற்பட்ட வயதுமுடைய ஆண்களே அநேகமாகத் தற்கொலை செய்யலாமெனக் கருதப்படும் அதேவேளை, இவ்வயதினைக் கொண்ட ஆண்கள் தனிமையாயிருக்க முனைவதுடன், மனவழுத்தம், மூளைக்கோளாறு போன்ற உளவியல் நோய்களால் துன்புறுவதுடன் போதைப்பொருள் அல்லது மதுபானப் பிரச்சினைகளையும் கொண்டிருக்கின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

றிச்சேட்.அ.எ, (2006) 'சமூகப் பொருண்மைகள்' என்னும் நூலில் அனோமி விவகாரத்தின் சமூகம்சார் அடிப்படை – கோட்பாடும், பிரயோகமும் என்னும் அத்தியாயத்தில் அனோமி என்பதற்கான வரையறை, அனோமியும் அதற்கான காரணங்களும், அனோமிக்கான காரணங்கள் டூர்க்கைமின் நோக்கு, அனோமியும் தற்கொலையும், தற்கொலை மனப்பாங்கு உருவாகும் விதம், டூர்கைமின் தற்கொலைக் கோட்பாடு, தற்கொலை தொடர்பான சமூகவியல் கோட்பாடுகள் போன்ற தலைப்புக்களினூhக விளக்கப்பட்டிருப்பதனை காணமுடிகின்றது. இதில் முக்கியமாக குறிப்பிடப்பட்டிருப்பது எமில் டூர்கைகமின் என்பவரது அகநிலைத் தற்கொலை, நியமமறுநிலை தற்கொலை, உன்னத தற்கொலை, விதிவசப்பட்ட தற்கொலை என்னும் நான்கு வகை தற்கொலைகளில் ஒன்றான அனோமி தற்கொலை பற்றியே அதிகமாக விளக்கப்பட்டிருக்கின்றது. இதிலிருந்து தற்கொலை தொடர்பான அறிவினை பெற்றுக்கொள்ள முடிகின்றது.

எஸ் டேமியன்.அ.ம.தி (1993) 'உளவளத்துணை' என்னும் நூலிலே தற்கொலை முயற்சியிலிருந்து தப்பியவர்களுக்கான உளவள ஆலோசனை என்னும் அத்தியாயத்திலே தற்கொலை முயற்சிக்குரிய காரணிகள், தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களை மதிப்பிடுவதற்கான சில வழிகள் என்பன தரப்பட்டிருக்கின்றது. இதில் நமது சமுதாயத்தின் உயிரை வாங்கும் முதல் உயிர்கொல்லி எதிரியாக இருப்பது அலரி விதையாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்கொலை முயற்சிக்குரிய காரணியாக, தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்கள் இளம் வயதினை உடையவர்களாக இருக்கின்றார்கள். குறிப்பாக குமரப்பருவத்தில் இருப்பவர்கள் அவர்களின் வளர்ச்சிப் படியிலே உடலிலும் உள்ளத்திலும் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன. குமரப்பருவம் நெருக்கடியும் கொந்தளிப்பும் நிறைந்த பருவம் திடீர் மன எழுச்சிகளுக்கு ஆளாகி எதையும் செய்து விடக் கூடியவர்களாக இருக்கின்றனர். இதனால் ஏற்படும் கோபம், வெறுப்பு, ஆத்திரம் போன்றன தற்கொலையை தூண்டுவதோடு சமூக பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றங்களும், அழுத்தங்களும், தொழில் இன்மை, வறுமை, விரக்தி என்பனவும் காரணிகளாகின்றன எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது

Elliott.M.A & Merrill.F.E (1950) “Social Disorganization” என்னும் நூலில் இரண்டாம் பாகத்தில் தனியார் ஒழுங்கமைப்பின்மை என்னும் பகுதியில் 16வது அத்தியாத்தில் தற்கொலைப் பற்றி கூறப்பட்டுள்ளது. இதில் அறிமுகமாக ஒரு கதையைக் கூறி தற்கொலை சம்பந்தமான விபரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நூலில் தற்கொலையின் தன்மை பற்றிக் கூறும் பொது எமில் டூர்க்கைம் அவர்களின் பாகுபாட்டை மையமாகக் கொண்டு மூன்று வகையாகக் பிரித்துக் காட்டப்பட்டுள்ளது. இந்நூலில் தற்கொலையானது தனது சுயத்திற்கு மனிதனின் எதிரான தன்மை என்று குறிப்பிடப்படடுள்ளது. மேலும் இந்நூலின் தற்கொலைக்கான காரணங்களாக பால், வயது, குடும்ப சீர்குலைவு, தொழில் ரீதியான எதிர்பார்ப்பு என்பன காரணமாக அமையும் என்றும், சமயமானது அதிக சமூகக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தும்போது தற்கொலை நிகழும் என்று குறிப்பிடப்படுகின்றது. அத்தோடு தற்கொலையானது நகரப்பகுதிகளில், கிராமப்பகுதிகளிலும் பார்க்க அதிகமாகக் காணப்படுகின்றது என்று குறிப்பிடப்படுகின்றது. மேலும் தற்கொலைக்கான காரணங்களாக மனவழுத்தம், யுத்தம், உளவியல தாக்கம், உடல்நோய்கள் என்பவையும் குறிப்பிடப்படுகின்றது. இங்கு தற்கொலைக்கான சூழல், தற்கொலை முறைகள,; தற்கொலை மனப்பான்மையின் தன்மைகள் என்பவை ஆராயப்பட்டுள்ளது. இவ்வாய்வானது ஆய்வாளனின் ஆய்விற்கு தற்கொலை பற்றிய எண்ணக்கருக்களையும், காரணங்களையும் விளங்கிக் கொள்ள ஏதுவாக அமைந்துள்ளது.


Di Maio.J.M (1999) “Gunshot wounds” என்னும் நூலில் துப்பாக்கியால் தற்கொலை செய்து கொள்ளல் பற்றி ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் அமெரிக்காவில் 65 வீதமானோர் இவ்வாறான தற்கொலைகளால் இறப்பதாகவும், 48வீதமான பெண்கள் போதையால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நூலில் கைத்துப்பாக்கியால் தற்கொலை செய்து கொள்ளல், நீண்ட முனைகளைக் கொண்ட துப்பாக்கியால் தற்கொலை செய்து கொள்ளல், பொதுவான முறையில் தற்கொலை செய்து கொள்ளல் போன்ற தற்கொலை முறைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு தற்செயலாக துப்பாக்கிச்சூடு ஏற்படுதலையும் இவர் தற்கொலையாகக் கொள்கின்றார்.

"அரங்கத்தினுடாக ஆற்றுப்படுத்தல்"- நிஜத்தடன் நிலவன் edit

"அரங்கத்தினுடாக ஆற்றுப்படுத்தல்"

ஈழத்தில் நான்கு தாசப்த காலமாக இடம்பெற்ற யுத்தமும் 2004 இல் ஏற்பட்ட சுனாமி பேரனர்த்தமும் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பலரை உளநோயாளர்களாக உருவாக்கியுள்ளது. முப்பது ஆண்டுகளாய் போராட்ட காலத்தில் வாழ்ந்த ஈழத் தமிழர்களின் வரலாற்றில் 2007ம் ஆண்டில் முதல் மே 2009 வரை உறவுகளையும், உடைமைகளையும் ,தொலைத்து பல வித இன்னல்களையும் எதிர்நோக்கி எஞ்சிய மக்கள் முகாம் வாழ்விற்குள் உள்வாங்கப்பட்டனர்.

ஒரு இனத்தினை அழிப்பதினையே குறியாக கொண்டு இலங்கை அரசின் முப்படைகளும் இணைந்து முள்ளிகுளம் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை நடாத்திய கொடூரத் தாக்குதலிகளிலும் பாதுகாப்பு வலயம் எனப்பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் மீதும் நடாத்திய கொடூரமான தாக்குதல்களில் பல ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டும் அதேவேளை, பல ஆயிரகணக்கானோர் உடல் அங்கங்களை இழந்தும்படுகாயமுற்று பல சொல்லிட முடியாத துயரங்களையும் வேதனைகளையும் அடைந்தார்கள்.

இதில் நேரடியான பாதிப்பின் உச்சத்தில் அங்கங்களை இழந்தவர்கள் ,உறவுகளை இழந்தவர்கள் ,கண்ணெதிரே சூடுபட்டு விழுந்த உறவுகளை கைவிட்டு ஓட வேண்டிய நிலையில் ஒடியவர்கள் , ஒவ்வொருஇடங்களிலும் இருந்து தப்பி வரும்போது காயமுற்றவரைக் காப்பாற்ற முடியாமல் வந்தவர்கள், பாதி உயிருடன் பதுங்குழியில் விட்டு வந்தவர்கள், உயிருக்காக போராடிய உறவுகளுக்கு மருத்துவ உதவிகிடைக்காமல் இறந்தவர்கள் ஒருபுறம், இறந்த உறவினர்களது உடலுக்கு அருகிருந்து கதறியழ முடியாது, இறுதிக் கிரிகைகளைச் செய்ய முடியாது, யார் இறந்தார்கள் எனத் தெரியாது, நடை பிணங்களாய் இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் வந்தார்கள்

இவர்கள் சவால்களுக்கும் , பிரச்சினைகளுக்கும், நெருக்கடிகளுக்கும். கஷ்டங்களுக்கும், மனச்சிக்கல்களுக்கும், பழிவாங்கல்களுக்கும், அடக்குமுறைகளுக்கும், சித்திரவதை, கடத்தல், காணமல் ஆக்கப்படல்,இடைத்தங்கல் முகாம்கள் நீண்டகால தடுப்பு ,சிறை வாழ்வு , திறந்தவெளிசிறைச்சாலைக்குள் , இனப்படுகொலை என, பல்வேறுபட்ட அவலகரமான சம்பவங்கள், காட்சிகளையும் இனச்சுத்திகரிப்பு போன்றமனிதாபிமானமற்ற நடவடிக்கைகளில் பல இன்னல்களுக்கும் முகங்கொடுத்து வந்தவர்கள் அவற்றின் உணர்வுகளை எதிர்கொள்ள முடியாது இன்று துவண்டு போயுள்ளனர்.

இவர்கள் உடல் ரீதியாக , உளரீதியாக சமூக ,பொருளாதார ரீதியாக, போர் நடைபெற்ற இடங்களில் மீள் குடியேற்றப் பட்ட ஒவ்வொரு தனிநபரும் ஏதேவொரு வகையில் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இன்றய சூழலில் பாதிப்புக்களை சுமந்து வாழ்ந்து வரும் உறவுகளுக்கு வடுவாய், வலியாய் பதிந்து போன நினைவுகளை, மனதில் அடக்கிய அபிலாசைகளும், மக்கள் பலமும் ,புரட்சியும் , தியாகங்களின் உன்னதமும்“எல்லாம் போச்சு" என்ற உணர்வு, அவலகரமான சம்பவங்கள், காட்சிகளைக் கண்டு அனுபவித்தே வந்துள்ளனர். அவர்கள் மனதில் பதிந்த காட்சிகள் ஆழ் மனதில் பதியப்பட்டு எண்ணங்களாக தேக்கி வைக்கப்படடிருக்கின்றது தமது உள்ளத்து உணர்வுகளை வெளிக் கொணர முடியாது, அவற்றிலிருந்து விடுபட வழி தெரியாது, வழிகிடைக்காமல் பலர் வாழ்கின்றார்கள். பிறந்த மண்ணில் எத்தனை ஆயிரம் உயிர்கள் இன்னமும் அடைபட்டு கிடக்கின்றார்கள், உறவுகள் புதையுண்ட மண்ணில் இழப்புகளின் சோகத்தில் மூழ்கி அந்த இழப்புக்களின் சுமைகளைச் சுமக்க முடியாது சுமந்துதுன்புறகிறார்கள். அவர்களது துயர் துடைத்து சுமைகளை இறக்கி ,மனத்தில் நம்பிக்கை விதைகளை விதைது புத்துணர்ச்சி ஏற்படுத்துவதற்கு அவர்களின் நினைவுகளில் வெளியே கொண்டு வருவதற்கு அரங்கத்தின்ஊடான ஆற்றுப்படுத்தல் வழிவகுக்கும் மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டிய விடயங்களையும், கருத்துக்களை , செய்திகளையும், அரங்கக்கலை வடிவங்களை கொண்டு அவர்கள் வாழ்ந்த சூழல்களுக்கும், அவர்களது நம்பிக்கைகளுக்கும் ஏற்ப, வடிவங்கள்மனிதரது தேவைகளுக்கு கேற்ப செய்திகளை கொண்டு செல்லும் ஒரு ஊடகமாக இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.

அரங்கத்தின் ஊடக ஈழத்து கலைகளான. சித்திரம், சிற்பம். பாடல். ஆடல் நாடகம், வில்லுப்பாட்டு, அரங்க விளையாட்டுக்கள் , கூத்து, வீதி நாடகம் ,படக் காட்சி எழுத்தது, இலக்கியம், வடிவங்களையும் பயன்படுத்தி இம்மக்கள் மனங்களில் உறைந்து கிடக்கும் உணர்வுகளை வெளியேற்றி அவற்றிலிருந்து மீள வழி செய்யல் உகந்தது ஈழத்தில் கலைகளில் தனிச் சிறப்பு பெற்றது ஒர் கலை தான் “வீதிநாடகம்” வீதி நாடகம் என்றவுடன் நினைவுக்கு வருவது நான் நடித்த அல்லது பார்த்த வீதி நாடகங்கள் நினைவுக்கு வருகின்றது.

ஊர்ஊராய் செல்லும் அணியினர் ஒரு கிராமத்தில் மூன்று நான்கு சிறு குழுக்களாகப் பிரிந்து சந்து பொந்து மூளை முடிசு என எல்லாத்திசைகளிலும் இருந்து பறையடித்து அந்த ஊரில் மக்கள் கூடும் இடத்திற்கு ஊர்மக்களெல்லோரும் ஒன்றாகி விடுவர். வீதி நாடகத்தினை தொடங்குவதற்கு முன்னர் வந்திருப்பவர்கள் அங்கு இசைக்கப்படும் பறை மற்றும் பக்க வாத்தியங்களுன் இசைக்கேற்ப அரங்கப் பாடல்களையும் பாடி ஆடிமகிழ்வார்கள் வீதி நாடகங்கள் மக்களுக்கு விரைவாக துள்ளியமாக நேர்தியாக கருத்துக்களை கொண்டு செல்லக் கூடிய ஊடகமாகவே வீதி நாடகங்கள் இடம் பெற்று இருக்கின்றது.

நான்காம் ஈழப் போருக்கு முற்பட்ட காலப்பகுதிகளில் உளவியல் ஆரோக்கியத்தினை எங்களுடைய கலை. கலாச்சாரா. பண்பாட்டு. சமய. விழுமியங்களை நெறிப்படுத்தி ஆரோக்கியமான சமாளிப்பு ஆற்றல்களையும் நெறிமுறைக்குள்ளும் மனம் சார்ந்த உளவியல் பகுப்பாய்வு கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட தளங்களில் கருத்துப் பகிர்வு உரையாடல்கள் கேட்கவோ அல்லது உள்வாங்கும் நிலையும் காணப்பட்டு இருந்தது.

அப்போதைய சூழலில் உள நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வீதம் குறைவாகவே காணப்பட்டிருக்கின்றது நான்காம் கட்ட ஈழப் போரின் பிற் பட்ட காலப்பகுதியில் கலை, கலாச்சார ,சமய, சமூக, பண்பாட்டு,விழுமியங்கள், அதிகம் பினபற்றா நிலையும் அதனுடைய வறுமையும் இதனைப்பயன் படுத்த முடியாத ஓர் உளம் சார் இன அழிப்பினை திட்டமிட்டே நடைபெற்று வருவதை பார்க்க முடிகின்றது. இவ்வாறுபாதிப்புக்குள்ளான ,உள்ளாகி கொண்டு இருக்கின்ற, உள்ளாகக் கூடிய எமது சமூகத்தினை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரங்கத்தின் ஊடான ஆற்றுப்படுத்தலே வழி வகுக்கும். . நாளாந்தம் வாழ்கையில் நடைபெறும் எதிர்பாராத நிகழ்வுகளுக்கு துணிவோடு முகங்கொடுத்து, வாழ்க்கையை மேலும் வெற்றிகரமானதாக ஆக்கிக் கொள்ளத் தேவையான வல்லமையும் ,சக்தியையும்,தைரியத்தையும், பெற்றுக்கொள்ள முடியும். அரங்க ஆற்றப்படுத்தல் உள்வாங்கப்பட்டிருக்கும் விடயங்கள் தற்போது உளவியல் ரீதியான பாதிக்ப்பட்டவர்களுகான புனர்வாழ்வு சிகிச்சை முறைகளில் வரைதல் ,எழுதல்,பாடல்,, ஆடல், பேசுதல்,நடித்தல்,போன்றவற்றை உளவியல் சிகிச்சை முறைகளாக பயன் படுத்துகின்றார்கள். முரண்பாடுகளுக்கான அகிம்சை சார் தீர்வு, சமூக உரையாடல்,சமய மற்றும் இனப் பன்மைத்துவம் மற்றும் வன்முறையெர்திப்பு ஆகிய சிந்தனைகளை மக்கள் மயப்படுத்தி, சகல மக்களும் சமத்துவத்துடன் வாழும்ஆர்வத்தை அரங்க ஆற்றுப்படுத்தல் ஏற்படுத்தும். இந்த துன்பகரமான வாழ்வு எம் வாழ்வின் இறுதி அத்தியாயம் அல்ல. இன்னுமொரு புதிய வாழ்வு, சுபிட்சமும், மகிழ்ச்சியும் கொண்ட வாழ்வு எமக்காக் காத்திருக்கிறது என்ற நம்பிக்கையினை சமூகத்திடமும்விதைக்கப்பட்டு அவை துளிர் விட்டு வளர்வதற்கு வழி வகுக்கும். சமூக பொருளாதார அரசியல் அபிலாசைகளை உரியி முறையில் பெறுவதற்கும் இனம்,மொழி, சார்ந்த ஒற்றுமைத்தன்மையை உருவாக்கி சிறுவர் முதல் பெரியோர் வரை ஆக்க முயற்சிகளை ஆரம்பிக்கும்திறன்,பரந்த அறிவு, நடுநிலைமை, தற்துணிவு , சமூக இசைவு, ,விடா முயற்சி, தன்னம்பிக்கை, பல்துறை தேடல் , நிபுனத்துவ உருவாக்கம், முடிவெடுத்தல், நலன் விரும்பும் மனப்பான்மை, பங்களிப்பு,தன்னார்வுத்தொண்டு, தன்னலமற்ற சேவை, வெளிப்படத்தன்மை, ஒத்துழைப்பு, மன தைரியம் ,தலைமைத்துவம் என ஒரு ஆளுமையுள்ள சமூகத்தினை. அரங்கத்தின் ஊடான ஆற்றுப்படுத்தல் ஏற்படுத்திடும். - பாலா சுதர்சன்

பாடசாலைகளில் பாலியல் கல்வி தேவையான ஒன்றா ? edit

பாலியல் என்பது வெறுமனே பால் உறுப்புக்களையும் பாலியல் நடத்தைகளையும் கொண்டதல்ல. எமது கலாச்சாரத்திலும்,பண்பாட்டிலும் பாலியல் என்றவுடன் உடலுறவு என்பது மட்டும் தான் என்னும் சிந்தனை நமக்குள்எப்போதுமே உள்ளது . பாலியல் விருத்தி என்பது ஒரு மனிதனின் ஆளுமையின் கூறு என்றால் மிகையாகாது. அது அவனுடைய எண்ணங்கள், நடத்தைகள் என்பனவற்றுடன் அவனது உடல், உள நலத்தினையும் பிரதிபலிக்கின்றது.

பாலியல் என்றவுடன் பேசக்கூடாது அல்லது பேசப்படாத விடயமாகும். இச் சூழ்நிலையில் சிறுவர்கள்முதல், பருவமடைந்தவர்கள் தொடக்கம் வயதானவர்கள் வரை பலவிதமான பாலியல் பிரச்சினைகளுக்கு அன்றாடம்முகம் கொடுக்கின்றனர். இன்றைய சூழலில் சிறுவர், சிறுமியர் பெண் மாணவிகள் பாலியல் பலாத்காரங்களும், வன்முறைகளும்,துன்புறுத்தல்களும், வன்புணர்ச்சியும் என பல துஷ்பிரயோகங்களுக்கும் உட்படுத்தப்படுகின்றனர்.

மனிதனின் பாலியல் நடத்தைகள் மிகவும் வேறுபட்டவை.இது தனியே உயிரியல் ரீதியாக மட்டும் நிர்ணயிக்கப்படுவதில்லை. அது சமூகச் சூழல் காரணிகளினால் தீர்மானிக்கப்படுகிறது. இலங்கையில் நிகழும் பாலியல் கொடுமைகளை தினம் தோறும் பத்திரிகைகளின் ஊடகவும் ,இணையங்கள் வாயிலாகவும், சமூக வலைதளங்களின் பதிவுகள் ஊடாகவும் வரும் செய்திகளை வாசிக்கும் போது பாடசாலை மாணவர்களும் எயிட்ஸ் நோயாளிகளாக அதிகரித்து கொண்ட வரும் நாடு எனும் பட்டியலில் இடம்பிடித்து வருகின்றமை மிகவும் மன வேதனையினை தரும் செய்தியாக இருக்கின்றது மனிதன் தனது பிறப்பு முதல் இறப்பு வரை வளர்ச்சி மற்றும் விருத்தி அடைகின்றான். இவ்விருத்தியை விஞ்ஞானிகள் பல பருவங்களாகப் பிரிக்கின்றனர். அதாவது குழந்தை பருவம்,பிள்ளைப் பருவம், கட்டிளமைப் பருவம்,வயது வந்தோர் பருவம்,முதுமைப் பருவம் என்று முக்கியமாக ஐந்து வகைகளில் பிரித்துள்ளனர். மேலும் இதில் பாலியல் சார்ந்த வளர்ச்சி மற்றும் விருத்தியினையும் வளர்ச்சிகாலத்தில் அடைகின்றார்கள். குழந்தை பருவம் பிறப்பு முதல் 12 வயது வரை ஒரு குழந்தையின் பாலியல் நிர்ணயம் அக் குழந்தையின் பிறப்பிற்கு முன்பே பரம்பரை அலகுகளினால் தீர்மானிக்கப்படுகின்றது. உடலுறுப்புக்கள் அத்தகைய அடையாளத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றன. குழந்தைப் பிறப்பின் பிற்பட்ட காலப்பகுதிகளின் சூழல் காரணிகளும் அதில் செல்வாக்குப் பெறுகின்றன. நிறை,உயரம்,எடை என்பனவும்வேறுபடுகின்றன. பெரும்பாலும் இரண்டு அல்லது இரண்டரை வயதுகளின் பாலியல் அடையாளத்தை குழந்தை அறிந்துக் கொள்கின்றது.

ஆண் குழந்தை தான் தந்தையின் பாலியல் அடையாளத்தை பெற்றுள்ளதாகவும் தாயின் பாலியல் அடையாளத்தில் எதிரானவை என்பதை அறிந்து கொள்கின்றமை இயல்பானதே. பெண் குழந்தைகளும் அவர்களின் பாலுறுப்புக்களின் வேறுபாடுகளை அறிந்து கொள்கின்றன. அத்துடன் பாலுறுப்புக்களை கையாள்வதிலும் ஈடுபடுகின்றார்கள். நான்கு அல்லது ஐந்து வயதுகளின் அவர்கள் திருமணம் பற்றிய கருதுகோளினை அறிந்துக் கொள்கின்றார்கள். அப்பொழுதே அம்மா,அப்பா போன்ற பாவனை விளையாட்டுக்களை விளையாடுகின்றார்கள். இத்தகையகாலங்களின் பாலியல் சுய தூண்டல்களையும் சில சந்தர்ப்பங்களின் சுய புணர்ச்சிகளையும் அவர்கள் மேற்கொள்கின்றார்கள்.

இதற்கு பிற்பட்ட வயதுகளின் அவர்கள் மாதவிடாய் பற்றியும் கர்ப்பம், குழந்தைப்பேறு போன்ற விடயங்கள் பற்றியும் விவாதிக்கின்றார்கள். அவர்கள் எதிர்பாலார் மீது ஈர்ப்புடையதாகவும் உடல் கவர்ச்சியில் நாட்டம் கொண்டவர்களாகவும் இருப்பர். பத்து முதல் பன்னிரண்டு வயது காலங்களின் பூப்பெய்தலை ஒட்டிய மாற்றங்களும் அது தொடர்பான உணர்வுகளும் எதிர்பாலார் மீது காதல்மயப்படுகிற உணர்வுகளையும் காட்டுவார்கள். ஆண் குழந்தைகள் சுய புணர்ச்சிகளின் ஈடுபடுவதை காணக்கூடியதாக இருக்கலாம். இத்தகைய மாற்றங்கள் சாதாரணமாக இத்தகைய வயதுகளின் ஏற்படுகின்றன. இவற்றை சில பெற்றோர் அசாதாரண நடத்தைகளாக எண்ணிகுழப்பம் அடைகின்றார்கள். இத்தகைய காரணத்தினாலேயே இதனை சற்று விபரமாக தந்துள்ளேன். கட்டிளமைப்பருவம் உடல்,உள வளர்ச்சிகளுடன் பாலியல் ரீதியான வளர்ச்சி நடைபெறுவது இந்தக்காலப் பகுதிகளிலே ஆகும். உடலில் கோமோன் சுரப்புக்களின் அளவு அதிகமாவதுடன் உடல் மாற்றங்களையும் இந்தக்காலப்பகுதிகளின் அதிகமாக அவதானிக்கக் கூடியதாக இருக்கும். பருவமடையும் போது ஆண்களிலும் பெண்களிலும் ஏற்படுகின்ற உடல், உருவ மாற்றங்களினால் முகப்பருக்கள், உடல்மணம், உடல் உரோமங்கள்,குரல் மாற்றங்கள், பிறப்புறுப்பின் அளவு, மார்பகங்களின் வளர்ச்சியில் ஏற்படும் வேறுபாடுகள் போன்ற பல்வேறு விடயங்கள் பற்றியும் அவர்களுடைய சமூகக் கட்டுப்பாடுகளும் அவற்றை தீர்மானிக்கின்ற களமாக அமைந்துவிடுகின்றது. பால் உறுப்புக்களின் திடீர் வளர்ச்சியும் அதனை ஒட்டிய உடல் மாற்றங்களினாலும் நிகழ்கின்றன. சுயஇன்பம் என்பது ஒரு ஏற்புடைய நிகழ்வாக இக்காலத்தில் இருபாலாரிடத்திலும் காணப்படுகிறது .

இவை தவிர பாலியல் உணர்வுகள், காதல்,முத்தம்,உடலுறவு ஆகியவை பற்றி வெளிப்படையாகவும் ஆபாசமின்றி மாணவர்கள் மத்தியில் காதல் பற்றி சிறு வயதிலேயே அறிந்துவிடுகின்றனர். அந்தச்சொல்லின் முழு அர்த்தம் தெரியாவிட்டாலும் எதிர் பாலிடை கவர்சியின் வளர்ச்சிகாலத்தினை படி நிலைகளை அடைந்து காலத்தில் தவறான அல்லது முறைகேடாக பாலியல் பற்றி அறிய முற்படல் ,தவறான பாலியல் நடத்தை படங்களை பார்தல்,பாலியல் காட்சிகளை பார்த்தல் ,பாலியல் கதைகளை படித்தல், போன்ற விடயங்களில் அதிகம் ஈடுபடுகின்றார்கள்.

தற்போது கையடக்க தொலைபேசி அல்லது இணையத்தினை பாவிக்காத அல்லது பாவிக்க தெரியாத மாணவர்கள் என்றால் என்கேனும் சிலர்தான் இருப்பார்கள் இன்றைய கற்றல் செயற்பாட்டின் போது இணைய ஊடகங்களின் பங்கு அதிகரித்து காணப்படுகின்றது இது பயனுள்ளதாகிருக்கும் அதே நேரத்தில் பிள்ளைகள் அதிக தேடல்களில் இருக்கும் இந்த பாலியல் சார்ந்த விடயங்கள் பற்றிய தவறான அல்லது முறைகேட்டான விடயங்களைகற்றுக்கொள்கின்றார்கள். பிள்ளைகள் பாவிக்கின்ற கைபேசி அல்லது இணையங்கள் என்ன விடயத்தில் பிள்ளைகள் நேரத்தினை செலவிடுகின்றார்கள் என பெற்றோர்களும்,ஆசிரியர்களுக்கும் , கண்காணித்திட வேண்டும்.

யுத்தத்தின் விளைவாக. இடப்பெயர்வுகளும்,இடைத்தங்கல் முகாம் வாழ்க்கையும் ,மீழ்குடியேற்றங்களின் போதும் பெற்றோர் இரவில் பிள்ளைகளுடன் ஒரே அறையில் படுத்துறங்கும் போது அவர்கள் தூங்குவதாக எண்ணிதாய் தந்தை தமது உறவில் ஈடுபட்டிருத்தல், பிள்ளைகளை காம இச்சையுடன் அந்தரங்கப் பகுதிகளைக் பிள்ளைகளிடத்தில் காட்டுதல் அல்லது பிள்ளைகளைகளின் தனிப்பட்ட மறைவான பகுதிகளை தொடுதல் ஆகியவற்றின் மூலமாகவே பாலியல் மனக் குழப்பங்களுக்கு பிள்ளைகள் ஆளாகிறார்கள். இதனால் சாதாரண குழந்தைகளைப் போல் உற்சாகத்துடன் படிக்கவோ,விளையாடவோ இயலாமல் குழப்பத்துடன் காணப்படுகிறார்கள். பெற்றோரை இழந்த பிள்ளைகள் அல்லது குடும்ப வறுமை காரணமாக நெருங்கிய உறவினர்களுடன் வாழும், வளரும் பிள்ளைகளுக்கு நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருப்பது போல் நடித்து அவர்களின் அன்பைப் பெற்று அந்தஉரிமையில் தவறாகவும் பிள்ளைகளை வழிநடத்துகின்றார்கள்.

இத்தகைய கொடுமைகள் பரவலாக ஏழை, பணக்காரர் ,படித்தவர்,பாமரர்கள் என்ற எந்த வித்தியாசமின்றி பாதிக்கப்படுகின்றார்கள் இவர்களில் பாதிப்புக்கு உள்ளான அல்லது உள்ளாகிக்கொண்டிருக்கின்ற அல்லது உள்ளாகக்கூடிய பிள்ளைகளுக்கு உளச்சமூக சிகிச்சை ,உளச்சமூக தலையீடு ,அளிக்க வேண்டியது மிக முக்கிய பங்கினை பாடசாலைச் சமூகம் கொண்டிருக்கின்றது. பாடசாலையில் உள்ள உள வளத்துணை ஆசிரியரின்கடமை பொறுப்பாகவும் இருக்கின்றது மாணவர்கள் மேல் சிறப்பு கவனம் தேவை. மாணவர்கள் பெற்றோரினை விட பாடசாலை ஆசிரியர்களிடம் தான் பொதுவாக அதிக நேரத்தைச் செலவிடுகின்றார்கள் ஆகவே இவர்களை காக்கும் அறிவூட்டவுமான தார்மீகப்பொறுப்பு ஆசியர்களிடம் உள்ளது.

பாடசாலைக்குப் பெற்றோர்கள் மிகுந்த அக்கறையுடன் பிள்ளைகளை ஆசிரியர்கள் பொறுப்புடன் கவனித்துக் கொள்வார்கள் என நம்புகின்றார்கள். பொதுவாக பிள்ளைகள் பாடசாலையில் என்ன செய்கிறார்கள் என்று பெற்றோர்களின் வேலைப்பழு காரணங்களினால் கவனிப்பதில்லை. பிள்ளை நன்றாகப் படிக்க வேண்டும். அதற்கான நாளாந்த வருமானத்தினை பற்றி மட்டுமே சிந்தனையுள்ளாவர்களாக இருக்கின்றார்கள்.

இதில் மிக வேதனை தரும் விடயம் என்னவென்றால் மாத,பிதா,குரு,தெய்வம்,இதில் ஆசிரியர்களை குரு கடவுளாகவே மதிக்க வேண்டும் என்று எமது சமூகம் கற்று கொடுத்திருக்கின்றது.இதில் சில புல்லுருவி ஆசிரியர்களின் விசித்திரமான நடத்தைகள் இருப்பது மிகவும் கவலைதரும் விடயம் ( எல்லா ஆசிரியர்களையும் சொல்லவில்லை ) அண்மைக் காலமாக பத்திரிக்கைகளில் ஒரு நாளைக்கு ஒரு செய்தி எனிலும் வருகின்றது பாடசாலையில் ஆசிரியர்கள் ஆண் பிள்ளைகளை ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதும் , மாணவிகளைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதற்காகக் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார், அல்லது ஆசிரியரைக் கைது செய்யக் கோரி மாணவர்கள் ,பெற்றோர்கள், ஆர்ப்பாட்டம் என்று தினமும் நாம் பத்திரிக்கைகளில் படிக்கும் செய்திகள் மிகவும் வேதனையுற்று கவலை தருவதாக இருக்கின்றது

யுத்த அனர்த்தத்தினால் மனநிலை பாதிக்கப்பட்ட பிள்ளைகள், மாற்றுத் திறனாளிகளாக இருக்கும் பிள்ளைகள், போர் விளைவின் தாய் அல்லது தந்தையை இழந்தவர்கள் அல்லது இருவரையும் இழந்தவர்கள் ,குடும்ப உறவுகளை இழந்த பிள்ளைகள்,பாலியல் கொடுமைகளுக்கும் உள்ளாகிறார்கள். பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவது என்பது, பாலினம்,சமூகநிலை, இனம், மத வேறு பாடுகள் இன்றி நகரங்கள், கிராமப் பகுதிகள் என்ற எல்லா இடங்களிலும் நடைபெற்று வரும் ஒரு நோயாகவேகாண முடிகின்றது. இந்த நிலையில் தான் பாலியல் கல்வி பற்றிய விழிப்புணர்வினை பாடசாலைகளிலும் ஊடகங்கள் வாயிலாகவம் கற்றுக் கொடுக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது. பாலியல் கல்வி பற்றி சரியான அணுகு முறையுடனும், தெளிவான பார்வையுடனும், உறுதியான வரை முறையுடன் கூடிய பாடத்திட்டங்களை வயது,வகுப்புகள் வாரியாக என்ன என்பதையும் கல்வி அமைச்சு முடிவு செய்து ஆசிரியர்களுக்கு கற்றல் கற்பித்தல் என தெளிவான வரையறையையுடன் கூடிய பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். பெற்றோர் விழிப்புணர்வு செயற்பாடுகள் மூலம் பிள்ளைகள் பாடசாலையில் பாலியல் கல்வியில் என்ன விடயங்களைப் கற்றுக்கொள்கிறார்கள் என்பதை தெரியப்படுத்தப்பட வேண்டும். பிள்ளைகள் சரியானவிடயங்களைத்தான் கற்றுக் கொள்கிறதா, தேவையானவை மட்டும் தான் கற்றுக் கொடுக்கப்படுகிறதா என்பதை பெற்றோரும் கவனிக்க வேண்டும்.

பால்வினை நோய்கள், அதுகுறித்த விழிப்புணர்வு பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இருத்தல் மிக மிக அவசியம். மேலும் வாழ்க்கை முறை பாலியல் வளர்ச்சியில் ஏற்படுத்தக் கூடிய மாற்றங்களை பற்றிய விளக்கமும்அவசியம். பிள்ளைகள் புகை பிடித்தல், மது அருந்துதல் தவறான பாலியல் ஈடுபாடுகள் போன்ற தீய பழக்கங்களில் இருந்து மீள்வதற்கான அல்லது வாய்ப்புகளை உருவாக்கிட ஆசிரியர்களும் பெற்றோர்களும் பிள்ளைகள் மனம் திறந்துபேசுவதற்கான தளத்தினை உருவாக்க வேண்டும். பாடசாலைகளில் உள்ள உளவளத்துணை ஆசிரியர்களிடம் பிள்ளைகள் தமது தாம் எதிர் கொள்ளுகின்ற பிரச்சினைகளையும் சவால்களையும் மனம் திறந்து பேசுவதற்கான உறவு நிலையை பிள்ளைகளுடன் வைத்திருத்தல்வேண்டும்.பாலியல் சீரழிவுகளிலிருந்து சமூகத்தை மீட்டு பாதுகாக்கவும் தொடர்ச்சியான முயற்சிகளில் அரச திட்டங்களும் கல்வி நடமுறைகளும் விழிப்புணர்வுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளரும் சுயாதீன ஊடகவியலாளருமாவார். ஈழத்தின் வடபகுதியான யாழ்மாவட்டத்தில் பிறந்து வன்னி மண்ணில் வளர்ந்தவரும், வாழ்ந்தவரும் ஈழத்தின் நான்காம்கட்டத்தில் இடம் பெற்றபோர், போர்க்கால மக்களின் உண்மைக் கதைகள் ஈழத்தின் நிலவரங்கள் போன்றவற்றைக் கட்டுரைகளின்வாயிலாக தொடர்ச்சியாக பல்வேறு ஊடகங்களில் எழுதி வருகின்ற இவர், நடனம், நாடகம், வானொலி நிகழ்ச்சித்தொகுப்பு மற்றும் புகைப்படம், ஆவணப்படம் முதலிய துறைகளிலும் மிக இளம் வயதிலேயே பரவலாக அறியப்பட்டவர். சமகாலத்தின் மிகவலிமையுடைய குரலாக கருதப்படுபவர். கவிதைகளிலும் கட்டுரைகளிலும் மக்களின் வாழ்வை அழுத்தமாகப் பதிவு செய்வதுடன் நேர்காணல்களின் ஊடாகவும் ஈழத்து மக்களின் உளவியல்நோக்கில்தனது குரலினை பதிவு செய்திருக்கின்றார். ஈழத்தில் 2006ஆம் ஆண்டின் சிறந்த ஆடல் செல்வன் என்னும் விருது இவருக்கு தமிழீழத் தேசியத் தலைவரினால்வழங்கப்பட்டிருந்தது.பரிசுகள் விருதுகள்,பாராட்டுக்கள், கௌரவங்கள் என்றெல்லாம்,அவருக்குக் கிடைத்த தேசியஅங்கீகாரங்கள் பல. அனைத்தையும் மௌனமாக ஏற்றுக்கொண்டு அமைதியாக தன்னியல்வு மாறாத கலைஞராகவும் ஊடகவியலாளராகவும் உள்ள யாழ் பல்கலைக்கழக பட்டதாரியான நிஜத்தடன் நிலவனுடன் ஒருநேர்காணல்

கேள்வி :- உங்கள் பல்துறைசார் நிபுணத்துவ உருவாக்கத்தில் உங்கள்இளமைக்காலச் சூழல் செலுத்தியதாக்கம் பற்றி சொல்லுங்கள்?

பதில் :- எனது வாழ்வும் வளர்ப்பும் பற்றித் தாராளமாகவே சொல்லலாம். கலையும் எழுத்தும் சார்ந்த ஒருகிராமத்தில் பிறந்தேன். நாட்டு யுத்தம் காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா என இலக்கியமும் கலையும் சார்ந்த ஒரு சூழலில் தான் நான் சிறு வயதில் வளர்ந்தேன். தாயகம் சிறுவர் இல்லத்தில் வளரும்போதுஅங்கிருந்த சூழல் பல்துறை சார்ந்த வீரர்களின் அனுபவங்களும் பயிற்சிகளும் பல்துறை சார் விடயங்களில்என்னை வளர்த்துக் கொள்ள வழி செய்தன. எனது அதிகாலைகள் புலிகளின் குரல் வானொலியில் தான் விடிந்தன. மாவீரர் பாடல் இசையால் கவரப்பட்டு,சிறுவயதில் நடனம் நாடகம் என எனக்கிருந்த ஆர்வத்தில் வீதி நாடக அணியுடன்இணைந்து பயின்றேன்.இவ்வாறு எனது பல்துறைசார் திறமைகள் வெளிப்பட்டதற்கான ஆரம்பச் சூழல் விடுதலைப் போரட்டத்தின் வீதிநாடகங்களாகத்தான் அமைந்திருந்தது.

கேள்வி :- நாடகத்துறையில் நீங்கள் நுழைவதற்கு ஏதுவான காரணிகள்எவை ?

பதில் :- 1992களில் நான் நாடகத்துறையிலும் விடுதலைப் போராட்டத்தில் கலைவடிவங்களிலும் என்னையும்இணைத்து வீதி நாடகங்களைத்தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் கிராமம்கிரமமாக சைக்கிளில்சென்று நடித்தது தான் எனக்கு அதிக பாடங்களைத் தந்தது என்று சொல்லலாம் . என்னை சைக்கிளில்ஏற்றிக்கொண்டு செல்லும் பொழுது பல களச்சமர் கதைகளைசொல்லிக்கொண்டு மூத்த பேராளிகள் வருவார்கள்.இவைகளே எனது சிறு வயதில் இருந்து இன்று வரை அரங்கத்தினூடக எமது போராட்டத்தின் பதிவுகளைவெளிப்படுத்த முடியும் என்றநம்பிக்கையைத் தந்திருக்கிறன

கேள்வி :- வீதி நாடகம் பற்றி சொல்ல முடியுமா ?

பதில் :- நான் பல வீதி நாடகத்தில் நேரடியாக வீதியில் இறங்கி எங்கள் செய்திகளைச் சனங்களுக்குச்சொல்லுவோம். அதை, நவீன முறையாகவோ, இசை வடிவாகவோ, ஆடல் பாடல் மூலமாகவோ, சிலைபோல்நிற்றல் , காட்சிப்படுத்தல் மூலமாகவோ நாங்கள் பல வடிவங்களினாலும் சொல்லியிருக்கின்றோம். அடிப்படைச்செய்தி என்னவென்றால், சனங்களுக்கு ஒரு விழிப்புணர்வை அல்லதுஎச்சரிக்கையைக் கொடுப்பதாகும். இதைநாங்கள் சந்திகள்,விளையாட்டு மைதானங்கள் எனச் சனங்கள் கூடும் இடங்களில் உணர்வு, உடல், மொழி எனஇலகுவில் புரிந்து கொள்ளும் வகையில் உரியசெய்தியினை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதாகஅமைத்திருந்தோம்.. கேள்வி :- நீங்கள் எழுதவந்த பின்புலத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்?

பதில் :- பாரம்பரியங்களும் பண்பாடுகளும் மாறாமல் இருந்த எனது போர் வாழ்வும் இடப்பெயர்வுகளும் உயிர்கள் மற்றும் உடமைகள் இழப்புக்கள், கல்வியின் இழப்பு என்பவற்றோடு என்னைச் சூழ்ந்த தனிமைஅச்சம்,கவலை,வீரம், கோபம் என என்னுள் எழுந்த உணர்வுகளில் இருந்தும் தப்பிப்பிழைத்த என் உள்ளக்கிடக்கைகளை பலபுனைபெயர்களில் கவிதை,கட்டுரை,நேர்காணல் என எழுத ஆரம்பித்தேன். ஒருவிதமான நெருக்கடி, வெறுமை போர் எம்மைச் சூழும் பொழுது எம்மவர்களின் தியாகங்களை வெளிப்படுத்திட கலை,இலக்கியத்தின் மீதான தேடல் என் மனதில் உதித்தது. ஈழத்தின்போர்ச்சூழலில் வாழ்ந்து கொண்டு அந்தவாழ்வை அந்த மண்ணோடு மண்ணாக அனுபவித்து பதிவாக்கி எங்கள் தியாகங்களையும் போர் வாழ்வுவிடுதலையினையும்ஆவணப்படுத்துவதற்காகவே எழுத்துத் துறையில் பிரவேசிக்க நேர்ந்தது

கேள்வி :- உங்கள் கவிதை பயணத்தின் ஆரம்ப காலகட்டம் அதன்வளர்ச்சி பற்றிக் குறிப்பிடுங்கள்?

பதில் :- நான் முன்னர் கூறியதுபோல் தாயகம் சிறுவர் இல்லத்தில் படித்துக்கொண்டிருக்கும் போது கவிதை எனத்தெரியாது பல வசனங்கள் கொண்ட சிறிய பந்திகளை எனது பாடக் கொப்பியின் பின் பகுதியில் எழுதி மறைத்துவைத்திருக்கிற காலத்தில், நான் அன்பாக அண்ணா என்றழைக்கும் சாதா தாடி மதன் தர்மேந்திரா ஆகியோர் எனதுகவிதைகளை பத்திரிகைக்கு அனுப்பியிருந்தார்கள் அந்தக்கவிதைகளும் பிரசுரமாயின.. பின்னர் தொடர்ந்துஎழுதவேண்டும் என்ற ஊக்கம் தந்தார்கள். இரத்தமும் சதையுமாக எனது வாழ்வினைப் பதிவுசெய்த என் நாட்குறிப்பேடு காலப்போக்கில் பத்திரிகைசஞ்சிகைஎன கவிதைப் பயணம் ஆரம்பமாகியது. மக்களின் அடையாள அழிப்புகளும் , திறந்தவெளிச்சிறைச்சாலையில்வாழும் மக்களின் அச்சமும் காணாமல் ஆக்கப்பட்டு அறியப்படாதகொலைகளும் அடிமைகளாக வாழமாட்டோம் என்றுரைத்து நின்று பின்னர் வீதியோரங்களிலும் பற்றைகளிற்குள்ளும் புதையுண்டுபோன எம் சக தோழர் தோழியரின் வாழ்வும் விடுதலைப்பற்றுத்தியாகங்களும் போர் அவலம், மண்ணின் மகிமை ,சமூகப்பிரச்சனைமற்றும் பண்பாடு பற்றி எல்லாம் புதுக்கவிதைகளில் பல வருடங்களாக எழுதி வருகின்றேன். முதல்கவிதைதொகுதியானச(ன்)னத்தின் சுவடுகள் என்ற நூல் யுத்தம் பற்றியும் அதனால் அல்லல் படும் மக்கள்பற்றியுமே வெளிவந்திருக்கின்றது .

கேள்வி :-விடுதலைப் போராட்டத்தில் கலைவடிவங்களின் பங்கு எந்தஅளவில் இருந்துள்ளது?

பதில் :- எங்களின் விடுதலைப் போராட்டத்தில் கலை வடிவங்களுக்குள் வாழ்ந்தவன் என்ற வகையில் விடுதலைப் போராட்டத்தில் கலைவடிவங்கள் பங்காற்றி வந்தன என்பதை உறுதியாகச்சொல்வேன்! எல்லாக் கலைகளும் ஆக்கபூர்வமாக இன விடுதலை சமூகமாற்றம் விழிப்புணர்வு அரசியல் பிரச்சார என பல பரிமாணங்களைக் கொண்டு கலைப் படைப்புகள்மேலோங்கி இருந்திருக்கிறன. எல்லாக் கலைச்சாதனங்களுமே மிகவும் வலுவான முறையில் முன்னெடுக்கபட்டிருந்தன. இயல் இசை நாடகம் என்று பார்த்தாலும் சரி, கூத்து பாட்டு என்று பார்த்தாலும்சரி, அரங்கு வலுவான கலையாக முன்னெடுக்கப்பட்டு வந்திருந்தது.இந்தக் கலைவடிவங்களில் எங்களுடைய பாரம்பரியக்கலையம்சங்கள் பல்வேறு வழிவகைகளில் எடுத்துக்கையாளப்பட்டிருக்கின்றன. அதில் சிற்பம், ஓவியம், கவிதை, ஆடல்கள், படங்கள் குறும்படங்கள் வாத்தியங்கள், பாடல்கள், நாடகங்கள் என எல்லா வடிவங்களும் அடங்கியுள்ளன. மக்கள் மத்தியில் தொடர்பு கொள்வதற்கு ஒரு வலுவான வழிமுறையாக இவை இனங்காணப்பட்டு அதனூடாக மக்களை ஆற்றுப்படுத்துவதில் பெரும் பங்கினைக் கலைவடிவங்கள் கொண்டிருந்தன. இவைகள் அனைத்தும்பாரப்பரியம் கலாசாரம் என எமது பண்பாட்டு விழுமியங்களும் மக்களை நெறிப்படுத்தி இருக்கின்றன என்றே சொல்லமுடியும்.


கேள்வி :- யுத்தத்தினால் மக்கள் எவ்வாறான அவலங்களைஎதிர்கொள்கிறார்கள் ?

பதில் :- போர்க்கால வாழ்வில் அமிழ்ந்திருக்கும் அவலமும் அழிவும் நிறைந்த வாழ்வைப் பல ஆண்டு காலம் மக்கள் வாழ்ந்து வந்த போதிலும், 2008 , 2009 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் திட்டமிடப்பட்டுபோர் தவிர்ப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட இடங்களில் தமிழினப்படுகொலைகளை முள்ளிவாய்க்கால் வரை அரங்கேற்றி இருந்தார்கள். . சிங்கள அரசு இறுதிக்கட்ட யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பல ஆயிரக்கணக்கான மக்களை ஈழ நிலத்தில் விதைத்தது . ஈழ மண்ணில் துடிதுடித்து வீழ்ந்திட்ட அந்த மகத்தான மனிதர்களின் உயிர் உறையும் கதைகள் ஏராளம் ஏராளம். இன்று எத்தனையோ பேர் எங்கள் தேசத்தின் இருட்டு மூலைகளுக்குள் முடமாகிப் போயிருக்கின்றார்கள். அடிமைகளாக வாழமாட்டோம் என்றுரைத்தவர்கள் வீதியோரங்களிலும் பற்றைகளிற்குள்ளும்புதையுண்டுபோனார்கள். கைதானோர், சரணடைந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர், தடுப்பு சிறைவாழ்வு என உலகத்தில் நடந்திராத கொடுமையான போர் நடந்தேறி இருந்தது தமிழ் மக்கள் சொற்களால் எழுத முடியாத துயரங்களைச் சுமந்தார்கள் – இன்னமும் சுமக்கிறார்கள்.

கேள்வி :- இவை பற்றி உங்கள் உணர்வுகள் எவ்வாறானவை?

பதில் :- எமது உரிமைக்காக எமது வாழ்வியலுக்காக சுயநிர்ணய உரிமைப்போரை ஈழத்தில் தமிழர்கள் நடத்தினார்கள். அதனால்தான் எமது உரிமைப்போராட்டத்தில் நாம் நிம்மதியாக வாழவேண்டும் என்ற ஒரு சிந்தனையை மட்டும் மனதில் சுமந்தவர்களாய் எதையும் எதிர்பார்க்காத மனிதர்களாய் பல ஆயிரக்கணக்கான மக்கள் ஈழ மண்ணில் துடிதுடித்து வீழ்ந்தார்கள். போராளிகளின் தாக்குதல்களின்பின்னால் நிம்மதியை தேடுகிற வாழ்வுக்காக ஏங்குகிற உணர்வு இருக்கிறது. சனங்களின் ஏக்கம் இருக்கிறது. வாழ்வுக்கான பெரும் கனவு இருக்கிறது. எங்களை அடிமையாக்கி எங்கள் வாழ்வை அழித்து வாழ்விடத்தை அழித்து மண்ணை அள்ளுகிற கனவுடன் இலங்கை அரசு இருக்கிறதால் இப்படியான பல உணர்வுகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.

கேள்வி :- போர்த்தவிர்ப்பு வலய மனிதநேயப் பணி பற்றிக் கூற முடியுமா?

பதில் :- நிச்சயமாகக் கூற முடியும் ஈழத்தில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்த போர்த்தவிர்ப்பு வலயப் பகுதியில் நான் ஒரு மனிதநேயப் பணியாளர் பணியில் இருந்தேன். உண்மையில் சிறிலங்கா அரசினால் அறிவிக்கப்பட்டிருந்த போர்த்தவிர்ப்பு வலயங்களிலேயே அரச படையினரின் அதிகளவிலான எறிகணை வீச்சுக்களும் விமானத் தாக்குதல்களும் இடம்பெற்றன.பாரிய மனிதப் பேரவலம் அரங்கேறியதும் இங்குதான். சிறிலங்கா அரசினால் முதலில் அறிவிக்கப்பட்டிருந்த போர்த்தவிர்ப்பு வலயமாக உடையார்கட்டு சுதந்திரபுரம், வள்ளிபுனம், தேவிபுரம் ஆகிய பிரதேசங்கள் அடங்குகின . இந்தப் பிரதேசங்களில்படையினர் அகோரமான எறிகணை வீச்சுக்களை மேற்கொண்டனர். இவ்வாறு பல சம்பவங்களில் ஒரு விடயத்தினை பதிவு செய்கின்றேன் சுதந்திரபுரம் விளையாட்டு மைதானத்தில் அரசசார்பற்ற நிறுவனத்தினர் வழங்கிக்கொண்டிருந்த உணவுப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காகக் கூடி நின்ற பல நூற்றுக்கணக்கான மக்களை இலக்குவைத்துப் படையினர் மேற்கொண்ட எறிகணை வீச்சில் பல பொதுமக்கள் அவ்விடத்திலேயே கோரமாகப் பலியாகியமை இங்கு குறிப்பிடத்தக்கது. அதேபோல இரண்டாவது தடவையாக அரசு அறிவித்த போர்த்தவிர்ப்பு வலயமான மாத்தளன் பொக்கணை வலைஞர்மடம் முள்ளிவாய்க்கால் பிரதேசத்திலேயே உலகத்தின் மனச்சாட்சியை உலுக்கக்கூடிய தமிழினப் படுகொலையை அரச படையினர் மேற்கொண்டனர். பதுங்குழிகள் சவக்கிடங்குகளாகிட, பாதி முடியும் சிதறுண்ட உடலங்களை அள்ளிக்குவித்தும் அரை உயிருடன் அந்தரிக்கவிட்ட நிலைமையும் தண்ணீர் உணவு மருந்து என அடிப்படை வசதிகள் கூடஇல்லாது துடிதுடித்து வீழ்ந்தவர்களுடன் பயணித்த சாட்சிகளில் நானும் ஒருவன் வாழ்நிலம் எல்லாவற்றையும் இழந்து அரசின் பயங்கர ஆயுதங்களுக்கு அஞ்சியபடி ஒரு வாழ்க்கை. குழந்தைகள் பெண்கள் மாணவர்கள் எல்லோரதும் கனவையும் விடுதலை உணர்வையும் அழிக்கிறதிட்டத்துடன் போர் தந்த அவலங்களுக்குடன் இராணுவத்திடம் சரணடைந்தேன்.

கேள்வி :- போரின் பின்னர் சமூக பண்பாட்டு பொருளாதாரம் பற்றிஉங்கள் கருத்து ?

பதில் :- நாங்கள் பலமான சமூகமாக வாழ்வதற்கான ஆதாரங்களைச் சிங்கள அரசு அழித்துவரும் சூழல் காணப்படுகின்றது. இன்றைய இன அழிப்பின் யுத்தமும், அதனால் ஏற்பட்டிருக்கின்ற இடம்பெயர்வுகளும் மக்களை பாரம்பரிய அறிவுசார் முறையிலிருந்து அன்னியப் படுத்தியிருக்கின்றன அப்புறப்படுத்தியிருக்கின்றன. உள்ளூர் அறிவுத்திறனை கொண்ட ஒரு சமூக பொருளாதார கட்டமைப்புநோக்கில் பார்க்கும்போது, இதை ஒரு மிக மோசமான இழப்பாக பார்க்கிறோம். சமூக பண்பாட்டு பொருளாதார ரீதியாக பொதுத்தன்மைகளும் வித்தியாசங்களும் கொண்டவை. அதே நேரம் எல்லாசமூகங்களுக்கும் உள்ளது போல் அந்தப் பிராந்தியங்களில், பிராந்தியங்களுக்கிடையில் காணப்படுகின்ற ஆதிக்க நிலைமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியத் தேவையாக இருக்கிறது. எம் இனத்தின் கலை கலாசாரம் பண்பாட்டு பொருளாதாரம் என 2008/2009இல் ஏற்பட்ட பாரிய யுத்த அனர்த்தத்தின் பின்னர் உளவியல் ரீதியாக மக்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு தனிநபர் சாதாரணமாகவே உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகின்றமை நாம் அறிந்த உண்மை. அந்தவகையில் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்வதில் கூட பல உடல் உளவியல் ரீதியானபின்னடைவுகள் எற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது சமூக பண்பாட்டு பொருளாதாரம் பற்றி பார்க்கும் போது பாரிய வீழ்ச்சி காணப்படுகிறது என்றுதான் கூறமுடியும் தமது சொந்த இடங்களில் தத்தமது மத அனுஷ்டானங்களையும் அது சார்ந்த நிகழ்வுகளையும் முறையாகப் பின்பற்றி வந்த மக்கள் யுத்தத்தின் பின்னர் மத நெறிமுறைகளிலிருந்து விடுபட்டவர்களாகக்காணப்படுகின்றனர். அது அவர்களுக்கு ஒரு வெறுமை உணர்வைக் கொடுப்பதும் உண்மையே. நெறி பிறழ்வான பாலியல் நடத்தை, இளவயதுத் திருமணம்,ஆழமான காதல் உறவுகள், குடும்ப வன்முறைகள், வீட்டு வன்முறை, ஒருவர் பல திருமணங்களைச் செய்தல், பலருடன் இணைந்துவாழுதல், போதைப்பொருள், பாவனை பெற்றோர்களின் செயற்பாடுகளினால் சிறுவர்கள் பாதிப்படைதல், புதிய புதிய நோய்கள் உருவாகுதல், நபர்களுக்கிடையிலான கருத்து முரண்பாடு ஏற்படுதல், தீயபழக்க வழக்கங்கள் ஏற்படுதல் (களவு), பாலியல் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை, சிறியவர்கள் பெரியோர்களை மதிக்காமை, நாளாந்த செயற்பாடுகளை ஒழுங்காக மேற்கொள்ளமுடியாமை, புதிய கலாசார முறைகள் உருவாகுதல், குடும்பம் சார் விடங்களில் இராணுவத்தின் தலையீடு,என ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. இடப்பெயர்வும் எம்மக்களின் வாழ்விடங்களை வாழ்வாதரங்களை எல்லாம் தொலைத்துவிட்டு ஒரு அன்னியப்படுத்தப்பட்ட நிலையில் தங்கி வாழ்கின்ற சூழலை ஏற்படுத்தியிருக்கின்றது. இதுஎங்களை மிக ஆபத்தான ஒரு சமூக, பொருளாதார நிலைக்கு இட்டுச்செல்கிறது. மேலும், தாராளமயம் மிகத்தீவிரமாக நடைமுறைபடுத்தப்படுவதற்கு, உள்ளூர் முரண்பாடும், அதன் காரணமாக எழுந்தபோரும் பயன்படுத்தப்படுகிறது என்றுதான் சொல்லவேண்டும். மேலும் இந்த இடப்பெயர்வு என்பது, உற்பத்தி சக்தியாக இருந்த எங்களை தங்கிவாழும் ஒரு சமூகமாக மாற்றி, குறைந்த ஊதியத்தொழிலாளர்களாக மாற்றும் நிலைமைளையும், வெறும் நுகர்வு சக்திகளாக வாழுகின்ற நிலைகளையுமே ஏற்படுத்தியிருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்.

கேள்வி :- இன்றைய நிலையில் பெண்கள் எத்தைகய பிரச்சனைகளைசந்திக்கிறார்கள்?

பதில் :- போரில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பல பிரச்சனைகளை பெண்கள் சந்திக்கிறார்கள். மிக்க உக்கிரமமான பாதிப்புக்களில் யுத்தம் காரணமாக இடப்பெயர்வு நிகழும் நிலையில் அவர்கள் உடல்ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பாதிப்புள்ளாகியும் கணவனை இராணுவத்தின் கைகளில் ஒப்படைத்து விட்டுத் தனித்து நின்று குடும்பத்தை நடத்த வேண்டிய சூழலுக்குள் தள்ளப்படுகின்றனர். இது ஒன்றே, இந்தப் போரில் பெண்கள் நிலையைப் புரிந்துகொள்ளப் பொருத்தமாக இருக்கும். அம்பலத்தில் குடும்பத்தை நடத்துவது என்பது பெண்களுக்கு எத்தைகயதொரு மோசமான சூழல் என்பது சிந்திக்க தெரிந்த எவருக்கும் விளங்கும். போர் நடைபெறும்போது பெண்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவது ஒரு வெளிப்படையான உரையாடலுக்குரியதாகவும், எதிர்ப்புக்குரியதாகவும் இருப்பது என்பதைக் காணமுடிகிறது. இதுமட்டுமில்லாமல் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயமும் உள்ளது. போர்சார்ந்த நடவடிக்கையால் பெண்கள் வன்முறைக்கு உட்படுத்தப்படுவது முக்கியத்துவம் பெறுகின்ற அதே நேரம், சமூகத்தில் பெண்கள் அவர்கள் வாழ்கிற குடும்பத்துள் வன்முறைக்குஉட்படுத்தப்படுவது என்கிற விஷயம் பேசாப்பொருளாக அல்லது மறந்து போகிற விடயமாக ஆகியிருப்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டும், அது குறித்து ஒரு உரையாடல்முன்னெடுக்கப்படவேண்டும் என்பதும் மிகவும் அவசியமாகும். இது பற்றிய சிந்தனைகளில் அடிப்படை மாற்றம் தேவை என்பது மிக முக்கியமாகும். ஒரு சமூக விடுதலை என்பது அனைத்து வகையான ஒடுக்குமுறைகளையும் வன்முறைகளையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி எதிர்கொள்ள வேண்டிய செயற்பாடாகவே பார்க்கப்படவேண்டும்.ஒவ்வொன்றாக தனித்தனியாக அல்லது ஒன்று முந்தியது, மற்றது பிந்தியது என்று பார்ப்பதென்பது பொருந்தாது. ஏனெனில், இத்தகைய நிலைகள் என்பது சமூகத்தில் ஒன்றுடன் ஒன்று இணைந்ததாகவும்,சிக்கல்கள் நிறைந்ததாகவும் காணப்படுகின்ற சூழலில், சமூகங்களால் புறத்திருந்தும்அகத்திருந்தும் நிகழ்த்தப்படுகின்ற வன்முறைகள் பற்றி ஒரே நேரத்தில், ஒரே தளத்தில் நாங்கள் எதிர்கொள்ளவேண்டியது என்பதுதான் யதார்த்தமானதும் இயல்பானதும் பொருத்தமானதும் என்பதை நாங்கள் சிந்தித்துச் செயற்படவேண்டியுள்ளது. இந்த வகையில் ஈழத்தில் பெண்கள் அமைப்புகள் போரினால் ஏற்படும் வன்முறைகளை எதிர்கொண்டும், குடும்ப சமூக வன்முறைகளை எதிர்கொண்டும், சமூகத்தின் உள்ளிருந்தும், வெளியிருந்தும்தடைகளையும் சவால்களையும் கடந்து செயற்பட்டு வருவது சாதகமானதொரு நிலைமையாகும்.

கேள்வி :- அரங்க செயற்பாட்டுகளின் முக்கியத்துவம் பற்றி உங்கள்கருத்து ?

பதில் :- எமது சமூகத்தில் மக்கள் தமக்கு வசதியான, வாய்ப்புள்ள இடங்களான கோயில், வீதி, தெருச்சந்திப்ப, வீட்டு முற்றம், மரநிழல்களில் கூடிக்கதைக்கும் மரபு இருந்தது. இந்தச்சமயங்களில்பல்வேறு செய்திகளையும், சம்பவங்களையும் தலைப்புகளையும் அதன் சாதக பாதகங்களுடன் அலசி ஆராயும் நிலை இருந்தது. ஆனால் இன்று இனப்பிரச்சனையும் இராணுவ நடவடிக்கைகளும்கூர்மையடைந்துள்ள நிலையில் பொதுமக்களால் கூடிக்கதைக்கும் நிலை இல்லாமல் போனது. மக்களை ஒன்று சேர்க்கவும் தங்களுக்குள் உரையாடிகொள்ளவும் தங்களது தேவைகளை தாங்களே அறிந்துகொள்ளவும் அவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் வழிவகைகளைதீர்மானித்துக்கொள்ளவும் தங்களது ஆற்றல்களை அடையாளம் காணவும், வெளிபடுத்திக் கொண்டாடவும் தாழ்வுச்சிக்கல்களில் இருந்து விடுபட்டுக்கொள்ளவும் படைப்பாற்றல்கள் வெளிபடவும்கூடியகல்வியை, சமூகத்தை, பண்பாட்டை அறிவுத்தளத்தை உருவாக்குவதனுடாக யதார்த்தின் குரூரத்தை விளங்கி கொள்ளாவிட்டாலும்; அதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான வழியினைஅமைத்து இத்தகைய மாய வாழ்கையில் இருந்து எம்மை விடுவித்துக்கொண்டு, எங்களை நாங்கள் புரிந்துகொண்டு பொதுமக்கள் மத்தியில் விவாதங்களை தூண்டவல்ல அரங்குகளின் தேவைஅவசியமாகிறது. அப்பொழுதுதான் எமக்குப் பொருத்தமான மக்கள் மையப்பட்ட விவாதக் களங்களை அரங்க அறிவுடனும்பாரம்பரிய உரையாடல் களங்களின் அனுபவத்துடனும்அறிவுத்தளத்தில்நிகழ்த்துவது முக்கியம் என்கிற உரத்த சிந்தனையும் செயற்பாடும் இன்று அவசியத் தேவையான நிலை உள்ளது என்பது எனது கருத்து

கேள்வி :- இப்பொழுது உள்ள அரசியல் சூழலில் தமிழர்களுக்கு தீர்வுகிடைக்கும் என நம்புகின்றீர்களா ?

பதில் :- தமிழர்களுக்கு ஓர் நிரந்தரமான தீர்வு இப்போதுள்ள அரசியல் சூழலில் கிடைக்கும் என்று நான் நிச்சயமாக நம்பவில்லை. வெளிப்படையாகச் சொன்னால் நம்பிக்கை இல்லாத அரசியல்கள் தான்இப்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்த அரசியலை முன்னெடுப்பவர்களால் தமிழர்களுக்கு எந்தவிதத்திலும் ஓர் தீர்வை ஏற்படுத்தித் தரமுடியாது. அப்படி ஓர் தீர்வைஏற்படுத்திக்கொடுத்தால் அது அவர்களுக்கான அரசியல் இருப்புகளை இருட்டடிப்பு செய்துவிடும் என்பதே உண்மையானது. இதனால் பாதிக்கப்படுவது அடக்கப்படும் அல்லது நசுக்கப்படும் எமது தேசிய இனம் தான். இத்தகைய நிலையில் இருப்பினைஉறிதிசெய்வதற்கு போர்க் குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என் நாம் அனைவரும் ஒன்றினைந்து மேலும் வலியுறுத்த வேண்டும் .

கேள்வி :- அடுத்த கட்டமாக ஏதேனும் எழுத முயற்ச்சியில்ஈடுபடவுள்ளீர்களா?

பதில் :- மக்களின் அபிவிருத்தித்தேவையை பூர்த்திசெய்ய பற்றியும் போர் கால இலக்கியங்களையும் யுத்தத்தின் விழுமியங்களையும், அதனால் வருகின்ற சோகங்களையும், அது கூறும் இலட்சியத்தையும் எழுதுகிற சூழல் நேரம் இடம் என் உளநிலை என்பவைதான் அவற்றை தீர்மானக்கிறது. மனம் குழம்பாத சூழலில் ஒன்றிவிடத் துடிக்கிறது. நாங்கள் இயற்கையின் அசைவுகளைக் கண்டு எழுதுகிற சூழல் எங்கே இருக்கிறது நாம் இழந்து விட்ட தேசம் பற்றியும் மனிதப் பேரவலத்தின் போது அணுபவித்தவைகளையும் என் முன் நடந்தேறிய இணப்படுகொவையின் சாட்சியாக அதனுடன் வாழுகிறபோதுஅவற்றினையும் அதன் உளவியல் நிலைப்பாட்டினையும் பதிவு செய்கின்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். வாழ்த்துகள் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு மாவீரர்கள் என்றும் துணையிருப்பார்கள்.

நிஜத்தடன் நிலவனுடன் ஒருநேர்காணல் edit

ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளரும் சுயாதீன ஊடகவியலாளருமாவார். ஈழத்தின் வடபகுதியான யாழ்மாவட்டத்தில் பிறந்து வன்னி மண்ணில் வளர்ந்தவரும், வாழ்ந்தவரும் ஈழத்தின் நான்காம்கட்டத்தில் இடம் பெற்றபோர், போர்க்கால மக்களின் உண்மைக் கதைகள் ஈழத்தின் நிலவரங்கள் போன்றவற்றைக் கட்டுரைகளின்வாயிலாக தொடர்ச்சியாக பல்வேறு ஊடகங்களில் எழுதி வருகின்ற இவர், நடனம், நாடகம், வானொலி நிகழ்ச்சித்தொகுப்பு மற்றும் புகைப்படம், ஆவணப்படம் முதலிய துறைகளிலும் மிக இளம் வயதிலேயே பரவலாக அறியப்பட்டவர். சமகாலத்தின் மிகவலிமையுடைய குரலாக கருதப்படுபவர். கவிதைகளிலும் கட்டுரைகளிலும் மக்களின் வாழ்வை அழுத்தமாகப் பதிவு செய்வதுடன் நேர்காணல்களின் ஊடாகவும் ஈழத்து மக்களின் உளவியல்நோக்கில்தனது குரலினை பதிவு செய்திருக்கின்றார். ஈழத்தில் 2006ஆம் ஆண்டின் சிறந்த ஆடல் செல்வன் என்னும் விருது இவருக்கு தமிழீழத் தேசியத் தலைவரினால்வழங்கப்பட்டிருந்தது.பரிசுகள் விருதுகள்,பாராட்டுக்கள், கௌரவங்கள் என்றெல்லாம்,அவருக்குக் கிடைத்த தேசியஅங்கீகாரங்கள் பல. அனைத்தையும் மௌனமாக ஏற்றுக்கொண்டு அமைதியாக தன்னியல்வு மாறாத கலைஞராகவும் ஊடகவியலாளராகவும் உள்ள யாழ் பல்கலைக்கழக பட்டதாரியான நிஜத்தடன் நிலவனுடன் ஒருநேர்காணல்

கேள்வி :- உங்கள் பல்துறைசார் நிபுணத்துவ உருவாக்கத்தில் உங்கள்இளமைக்காலச் சூழல் செலுத்தியதாக்கம் பற்றி சொல்லுங்கள்?

பதில் :- எனது வாழ்வும் வளர்ப்பும் பற்றித் தாராளமாகவே சொல்லலாம். கலையும் எழுத்தும் சார்ந்த ஒருகிராமத்தில் பிறந்தேன். நாட்டு யுத்தம் காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா என இலக்கியமும் கலையும் சார்ந்த ஒரு சூழலில் தான் நான் சிறு வயதில் வளர்ந்தேன். தாயகம் சிறுவர் இல்லத்தில் வளரும்போதுஅங்கிருந்த சூழல் பல்துறை சார்ந்த வீரர்களின் அனுபவங்களும் பயிற்சிகளும் பல்துறை சார் விடயங்களில்என்னை வளர்த்துக் கொள்ள வழி செய்தன. எனது அதிகாலைகள் புலிகளின் குரல் வானொலியில் தான் விடிந்தன. மாவீரர் பாடல் இசையால் கவரப்பட்டு,சிறுவயதில் நடனம் நாடகம் என எனக்கிருந்த ஆர்வத்தில் வீதி நாடக அணியுடன்இணைந்து பயின்றேன்.இவ்வாறு எனது பல்துறைசார் திறமைகள் வெளிப்பட்டதற்கான ஆரம்பச் சூழல் விடுதலைப் போரட்டத்தின் வீதிநாடகங்களாகத்தான் அமைந்திருந்தது.

கேள்வி :- நாடகத்துறையில் நீங்கள் நுழைவதற்கு ஏதுவான காரணிகள்எவை ?

பதில் :- 1992களில் நான் நாடகத்துறையிலும் விடுதலைப் போராட்டத்தில் கலைவடிவங்களிலும் என்னையும்இணைத்து வீதி நாடகங்களைத்தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் கிராமம்கிரமமாக சைக்கிளில்சென்று நடித்தது தான் எனக்கு அதிக பாடங்களைத் தந்தது என்று சொல்லலாம் . என்னை சைக்கிளில்ஏற்றிக்கொண்டு செல்லும் பொழுது பல களச்சமர் கதைகளைசொல்லிக்கொண்டு மூத்த பேராளிகள் வருவார்கள்.இவைகளே எனது சிறு வயதில் இருந்து இன்று வரை அரங்கத்தினூடக எமது போராட்டத்தின் பதிவுகளைவெளிப்படுத்த முடியும் என்றநம்பிக்கையைத் தந்திருக்கிறன

கேள்வி :- வீதி நாடகம் பற்றி சொல்ல முடியுமா ?

பதில் :- நான் பல வீதி நாடகத்தில் நேரடியாக வீதியில் இறங்கி எங்கள் செய்திகளைச் சனங்களுக்குச்சொல்லுவோம். அதை, நவீன முறையாகவோ, இசை வடிவாகவோ, ஆடல் பாடல் மூலமாகவோ, சிலைபோல்நிற்றல் , காட்சிப்படுத்தல் மூலமாகவோ நாங்கள் பல வடிவங்களினாலும் சொல்லியிருக்கின்றோம். அடிப்படைச்செய்தி என்னவென்றால், சனங்களுக்கு ஒரு விழிப்புணர்வை அல்லதுஎச்சரிக்கையைக் கொடுப்பதாகும். இதைநாங்கள் சந்திகள்,விளையாட்டு மைதானங்கள் எனச் சனங்கள் கூடும் இடங்களில் உணர்வு, உடல், மொழி எனஇலகுவில் புரிந்து கொள்ளும் வகையில் உரியசெய்தியினை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதாகஅமைத்திருந்தோம்.. கேள்வி :- நீங்கள் எழுதவந்த பின்புலத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்?

பதில் :- பாரம்பரியங்களும் பண்பாடுகளும் மாறாமல் இருந்த எனது போர் வாழ்வும் இடப்பெயர்வுகளும் உயிர்கள் மற்றும் உடமைகள் இழப்புக்கள், கல்வியின் இழப்பு என்பவற்றோடு என்னைச் சூழ்ந்த தனிமைஅச்சம்,கவலை,வீரம், கோபம் என என்னுள் எழுந்த உணர்வுகளில் இருந்தும் தப்பிப்பிழைத்த என் உள்ளக்கிடக்கைகளை பலபுனைபெயர்களில் கவிதை,கட்டுரை,நேர்காணல் என எழுத ஆரம்பித்தேன். ஒருவிதமான நெருக்கடி, வெறுமை போர் எம்மைச் சூழும் பொழுது எம்மவர்களின் தியாகங்களை வெளிப்படுத்திட கலை,இலக்கியத்தின் மீதான தேடல் என் மனதில் உதித்தது. ஈழத்தின்போர்ச்சூழலில் வாழ்ந்து கொண்டு அந்தவாழ்வை அந்த மண்ணோடு மண்ணாக அனுபவித்து பதிவாக்கி எங்கள் தியாகங்களையும் போர் வாழ்வுவிடுதலையினையும்ஆவணப்படுத்துவதற்காகவே எழுத்துத் துறையில் பிரவேசிக்க நேர்ந்தது

கேள்வி :- உங்கள் கவிதை பயணத்தின் ஆரம்ப காலகட்டம் அதன்வளர்ச்சி பற்றிக் குறிப்பிடுங்கள்?

பதில் :- நான் முன்னர் கூறியதுபோல் தாயகம் சிறுவர் இல்லத்தில் படித்துக்கொண்டிருக்கும் போது கவிதை எனத்தெரியாது பல வசனங்கள் கொண்ட சிறிய பந்திகளை எனது பாடக் கொப்பியின் பின் பகுதியில் எழுதி மறைத்துவைத்திருக்கிற காலத்தில், நான் அன்பாக அண்ணா என்றழைக்கும் சாதா தாடி மதன் தர்மேந்திரா ஆகியோர் எனதுகவிதைகளை பத்திரிகைக்கு அனுப்பியிருந்தார்கள் அந்தக்கவிதைகளும் பிரசுரமாயின.. பின்னர் தொடர்ந்துஎழுதவேண்டும் என்ற ஊக்கம் தந்தார்கள். இரத்தமும் சதையுமாக எனது வாழ்வினைப் பதிவுசெய்த என் நாட்குறிப்பேடு காலப்போக்கில் பத்திரிகைசஞ்சிகைஎன கவிதைப் பயணம் ஆரம்பமாகியது. மக்களின் அடையாள அழிப்புகளும் , திறந்தவெளிச்சிறைச்சாலையில்வாழும் மக்களின் அச்சமும் காணாமல் ஆக்கப்பட்டு அறியப்படாதகொலைகளும் அடிமைகளாக வாழமாட்டோம் என்றுரைத்து நின்று பின்னர் வீதியோரங்களிலும் பற்றைகளிற்குள்ளும் புதையுண்டுபோன எம் சக தோழர் தோழியரின் வாழ்வும் விடுதலைப்பற்றுத்தியாகங்களும் போர் அவலம், மண்ணின் மகிமை ,சமூகப்பிரச்சனைமற்றும் பண்பாடு பற்றி எல்லாம் புதுக்கவிதைகளில் பல வருடங்களாக எழுதி வருகின்றேன். முதல்கவிதைதொகுதியானச(ன்)னத்தின் சுவடுகள் என்ற நூல் யுத்தம் பற்றியும் அதனால் அல்லல் படும் மக்கள்பற்றியுமே வெளிவந்திருக்கின்றது .

கேள்வி :-விடுதலைப் போராட்டத்தில் கலைவடிவங்களின் பங்கு எந்தஅளவில் இருந்துள்ளது?

பதில் :- எங்களின் விடுதலைப் போராட்டத்தில் கலை வடிவங்களுக்குள் வாழ்ந்தவன் என்ற வகையில் விடுதலைப் போராட்டத்தில் கலைவடிவங்கள் பங்காற்றி வந்தன என்பதை உறுதியாகச்சொல்வேன்! எல்லாக் கலைகளும் ஆக்கபூர்வமாக இன விடுதலை சமூகமாற்றம் விழிப்புணர்வு அரசியல் பிரச்சார என பல பரிமாணங்களைக் கொண்டு கலைப் படைப்புகள்மேலோங்கி இருந்திருக்கிறன. எல்லாக் கலைச்சாதனங்களுமே மிகவும் வலுவான முறையில் முன்னெடுக்கபட்டிருந்தன. இயல் இசை நாடகம் என்று பார்த்தாலும் சரி, கூத்து பாட்டு என்று பார்த்தாலும்சரி, அரங்கு வலுவான கலையாக முன்னெடுக்கப்பட்டு வந்திருந்தது.இந்தக் கலைவடிவங்களில் எங்களுடைய பாரம்பரியக்கலையம்சங்கள் பல்வேறு வழிவகைகளில் எடுத்துக்கையாளப்பட்டிருக்கின்றன. அதில் சிற்பம், ஓவியம், கவிதை, ஆடல்கள், படங்கள் குறும்படங்கள் வாத்தியங்கள், பாடல்கள், நாடகங்கள் என எல்லா வடிவங்களும் அடங்கியுள்ளன. மக்கள் மத்தியில் தொடர்பு கொள்வதற்கு ஒரு வலுவான வழிமுறையாக இவை இனங்காணப்பட்டு அதனூடாக மக்களை ஆற்றுப்படுத்துவதில் பெரும் பங்கினைக் கலைவடிவங்கள் கொண்டிருந்தன. இவைகள் அனைத்தும்பாரப்பரியம் கலாசாரம் என எமது பண்பாட்டு விழுமியங்களும் மக்களை நெறிப்படுத்தி இருக்கின்றன என்றே சொல்லமுடியும்.


கேள்வி :- யுத்தத்தினால் மக்கள் எவ்வாறான அவலங்களைஎதிர்கொள்கிறார்கள் ?

பதில் :- போர்க்கால வாழ்வில் அமிழ்ந்திருக்கும் அவலமும் அழிவும் நிறைந்த வாழ்வைப் பல ஆண்டு காலம் மக்கள் வாழ்ந்து வந்த போதிலும், 2008 , 2009 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் திட்டமிடப்பட்டுபோர் தவிர்ப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட இடங்களில் தமிழினப்படுகொலைகளை முள்ளிவாய்க்கால் வரை அரங்கேற்றி இருந்தார்கள். . சிங்கள அரசு இறுதிக்கட்ட யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பல ஆயிரக்கணக்கான மக்களை ஈழ நிலத்தில் விதைத்தது . ஈழ மண்ணில் துடிதுடித்து வீழ்ந்திட்ட அந்த மகத்தான மனிதர்களின் உயிர் உறையும் கதைகள் ஏராளம் ஏராளம். இன்று எத்தனையோ பேர் எங்கள் தேசத்தின் இருட்டு மூலைகளுக்குள் முடமாகிப் போயிருக்கின்றார்கள். அடிமைகளாக வாழமாட்டோம் என்றுரைத்தவர்கள் வீதியோரங்களிலும் பற்றைகளிற்குள்ளும்புதையுண்டுபோனார்கள். கைதானோர், சரணடைந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர், தடுப்பு சிறைவாழ்வு என உலகத்தில் நடந்திராத கொடுமையான போர் நடந்தேறி இருந்தது தமிழ் மக்கள் சொற்களால் எழுத முடியாத துயரங்களைச் சுமந்தார்கள் – இன்னமும் சுமக்கிறார்கள்.

கேள்வி :- இவை பற்றி உங்கள் உணர்வுகள் எவ்வாறானவை?

பதில் :- எமது உரிமைக்காக எமது வாழ்வியலுக்காக சுயநிர்ணய உரிமைப்போரை ஈழத்தில் தமிழர்கள் நடத்தினார்கள். அதனால்தான் எமது உரிமைப்போராட்டத்தில் நாம் நிம்மதியாக வாழவேண்டும் என்ற ஒரு சிந்தனையை மட்டும் மனதில் சுமந்தவர்களாய் எதையும் எதிர்பார்க்காத மனிதர்களாய் பல ஆயிரக்கணக்கான மக்கள் ஈழ மண்ணில் துடிதுடித்து வீழ்ந்தார்கள். போராளிகளின் தாக்குதல்களின்பின்னால் நிம்மதியை தேடுகிற வாழ்வுக்காக ஏங்குகிற உணர்வு இருக்கிறது. சனங்களின் ஏக்கம் இருக்கிறது. வாழ்வுக்கான பெரும் கனவு இருக்கிறது. எங்களை அடிமையாக்கி எங்கள் வாழ்வை அழித்து வாழ்விடத்தை அழித்து மண்ணை அள்ளுகிற கனவுடன் இலங்கை அரசு இருக்கிறதால் இப்படியான பல உணர்வுகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.

கேள்வி :- போர்த்தவிர்ப்பு வலய மனிதநேயப் பணி பற்றிக் கூற முடியுமா?

பதில் :- நிச்சயமாகக் கூற முடியும் ஈழத்தில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்த போர்த்தவிர்ப்பு வலயப் பகுதியில் நான் ஒரு மனிதநேயப் பணியாளர் பணியில் இருந்தேன். உண்மையில் சிறிலங்கா அரசினால் அறிவிக்கப்பட்டிருந்த போர்த்தவிர்ப்பு வலயங்களிலேயே அரச படையினரின் அதிகளவிலான எறிகணை வீச்சுக்களும் விமானத் தாக்குதல்களும் இடம்பெற்றன.பாரிய மனிதப் பேரவலம் அரங்கேறியதும் இங்குதான். சிறிலங்கா அரசினால் முதலில் அறிவிக்கப்பட்டிருந்த போர்த்தவிர்ப்பு வலயமாக உடையார்கட்டு சுதந்திரபுரம், வள்ளிபுனம், தேவிபுரம் ஆகிய பிரதேசங்கள் அடங்குகின . இந்தப் பிரதேசங்களில்படையினர் அகோரமான எறிகணை வீச்சுக்களை மேற்கொண்டனர். இவ்வாறு பல சம்பவங்களில் ஒரு விடயத்தினை பதிவு செய்கின்றேன் சுதந்திரபுரம் விளையாட்டு மைதானத்தில் அரசசார்பற்ற நிறுவனத்தினர் வழங்கிக்கொண்டிருந்த உணவுப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காகக் கூடி நின்ற பல நூற்றுக்கணக்கான மக்களை இலக்குவைத்துப் படையினர் மேற்கொண்ட எறிகணை வீச்சில் பல பொதுமக்கள் அவ்விடத்திலேயே கோரமாகப் பலியாகியமை இங்கு குறிப்பிடத்தக்கது. அதேபோல இரண்டாவது தடவையாக அரசு அறிவித்த போர்த்தவிர்ப்பு வலயமான மாத்தளன் பொக்கணை வலைஞர்மடம் முள்ளிவாய்க்கால் பிரதேசத்திலேயே உலகத்தின் மனச்சாட்சியை உலுக்கக்கூடிய தமிழினப் படுகொலையை அரச படையினர் மேற்கொண்டனர். பதுங்குழிகள் சவக்கிடங்குகளாகிட, பாதி முடியும் சிதறுண்ட உடலங்களை அள்ளிக்குவித்தும் அரை உயிருடன் அந்தரிக்கவிட்ட நிலைமையும் தண்ணீர் உணவு மருந்து என அடிப்படை வசதிகள் கூடஇல்லாது துடிதுடித்து வீழ்ந்தவர்களுடன் பயணித்த சாட்சிகளில் நானும் ஒருவன் வாழ்நிலம் எல்லாவற்றையும் இழந்து அரசின் பயங்கர ஆயுதங்களுக்கு அஞ்சியபடி ஒரு வாழ்க்கை. குழந்தைகள் பெண்கள் மாணவர்கள் எல்லோரதும் கனவையும் விடுதலை உணர்வையும் அழிக்கிறதிட்டத்துடன் போர் தந்த அவலங்களுக்குடன் இராணுவத்திடம் சரணடைந்தேன்.

கேள்வி :- போரின் பின்னர் சமூக பண்பாட்டு பொருளாதாரம் பற்றிஉங்கள் கருத்து ?

பதில் :- நாங்கள் பலமான சமூகமாக வாழ்வதற்கான ஆதாரங்களைச் சிங்கள அரசு அழித்துவரும் சூழல் காணப்படுகின்றது. இன்றைய இன அழிப்பின் யுத்தமும், அதனால் ஏற்பட்டிருக்கின்ற இடம்பெயர்வுகளும் மக்களை பாரம்பரிய அறிவுசார் முறையிலிருந்து அன்னியப் படுத்தியிருக்கின்றன அப்புறப்படுத்தியிருக்கின்றன. உள்ளூர் அறிவுத்திறனை கொண்ட ஒரு சமூக பொருளாதார கட்டமைப்புநோக்கில் பார்க்கும்போது, இதை ஒரு மிக மோசமான இழப்பாக பார்க்கிறோம். சமூக பண்பாட்டு பொருளாதார ரீதியாக பொதுத்தன்மைகளும் வித்தியாசங்களும் கொண்டவை. அதே நேரம் எல்லாசமூகங்களுக்கும் உள்ளது போல் அந்தப் பிராந்தியங்களில், பிராந்தியங்களுக்கிடையில் காணப்படுகின்ற ஆதிக்க நிலைமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியத் தேவையாக இருக்கிறது. எம் இனத்தின் கலை கலாசாரம் பண்பாட்டு பொருளாதாரம் என 2008/2009இல் ஏற்பட்ட பாரிய யுத்த அனர்த்தத்தின் பின்னர் உளவியல் ரீதியாக மக்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு தனிநபர் சாதாரணமாகவே உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகின்றமை நாம் அறிந்த உண்மை. அந்தவகையில் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்வதில் கூட பல உடல் உளவியல் ரீதியானபின்னடைவுகள் எற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது சமூக பண்பாட்டு பொருளாதாரம் பற்றி பார்க்கும் போது பாரிய வீழ்ச்சி காணப்படுகிறது என்றுதான் கூறமுடியும் தமது சொந்த இடங்களில் தத்தமது மத அனுஷ்டானங்களையும் அது சார்ந்த நிகழ்வுகளையும் முறையாகப் பின்பற்றி வந்த மக்கள் யுத்தத்தின் பின்னர் மத நெறிமுறைகளிலிருந்து விடுபட்டவர்களாகக்காணப்படுகின்றனர். அது அவர்களுக்கு ஒரு வெறுமை உணர்வைக் கொடுப்பதும் உண்மையே. நெறி பிறழ்வான பாலியல் நடத்தை, இளவயதுத் திருமணம்,ஆழமான காதல் உறவுகள், குடும்ப வன்முறைகள், வீட்டு வன்முறை, ஒருவர் பல திருமணங்களைச் செய்தல், பலருடன் இணைந்துவாழுதல், போதைப்பொருள், பாவனை பெற்றோர்களின் செயற்பாடுகளினால் சிறுவர்கள் பாதிப்படைதல், புதிய புதிய நோய்கள் உருவாகுதல், நபர்களுக்கிடையிலான கருத்து முரண்பாடு ஏற்படுதல், தீயபழக்க வழக்கங்கள் ஏற்படுதல் (களவு), பாலியல் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை, சிறியவர்கள் பெரியோர்களை மதிக்காமை, நாளாந்த செயற்பாடுகளை ஒழுங்காக மேற்கொள்ளமுடியாமை, புதிய கலாசார முறைகள் உருவாகுதல், குடும்பம் சார் விடங்களில் இராணுவத்தின் தலையீடு,என ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. இடப்பெயர்வும் எம்மக்களின் வாழ்விடங்களை வாழ்வாதரங்களை எல்லாம் தொலைத்துவிட்டு ஒரு அன்னியப்படுத்தப்பட்ட நிலையில் தங்கி வாழ்கின்ற சூழலை ஏற்படுத்தியிருக்கின்றது. இதுஎங்களை மிக ஆபத்தான ஒரு சமூக, பொருளாதார நிலைக்கு இட்டுச்செல்கிறது. மேலும், தாராளமயம் மிகத்தீவிரமாக நடைமுறைபடுத்தப்படுவதற்கு, உள்ளூர் முரண்பாடும், அதன் காரணமாக எழுந்தபோரும் பயன்படுத்தப்படுகிறது என்றுதான் சொல்லவேண்டும். மேலும் இந்த இடப்பெயர்வு என்பது, உற்பத்தி சக்தியாக இருந்த எங்களை தங்கிவாழும் ஒரு சமூகமாக மாற்றி, குறைந்த ஊதியத்தொழிலாளர்களாக மாற்றும் நிலைமைளையும், வெறும் நுகர்வு சக்திகளாக வாழுகின்ற நிலைகளையுமே ஏற்படுத்தியிருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்.

கேள்வி :- இன்றைய நிலையில் பெண்கள் எத்தைகய பிரச்சனைகளைசந்திக்கிறார்கள்?

பதில் :- போரில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பல பிரச்சனைகளை பெண்கள் சந்திக்கிறார்கள். மிக்க உக்கிரமமான பாதிப்புக்களில் யுத்தம் காரணமாக இடப்பெயர்வு நிகழும் நிலையில் அவர்கள் உடல்ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பாதிப்புள்ளாகியும் கணவனை இராணுவத்தின் கைகளில் ஒப்படைத்து விட்டுத் தனித்து நின்று குடும்பத்தை நடத்த வேண்டிய சூழலுக்குள் தள்ளப்படுகின்றனர். இது ஒன்றே, இந்தப் போரில் பெண்கள் நிலையைப் புரிந்துகொள்ளப் பொருத்தமாக இருக்கும். அம்பலத்தில் குடும்பத்தை நடத்துவது என்பது பெண்களுக்கு எத்தைகயதொரு மோசமான சூழல் என்பது சிந்திக்க தெரிந்த எவருக்கும் விளங்கும். போர் நடைபெறும்போது பெண்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவது ஒரு வெளிப்படையான உரையாடலுக்குரியதாகவும், எதிர்ப்புக்குரியதாகவும் இருப்பது என்பதைக் காணமுடிகிறது. இதுமட்டுமில்லாமல் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயமும் உள்ளது. போர்சார்ந்த நடவடிக்கையால் பெண்கள் வன்முறைக்கு உட்படுத்தப்படுவது முக்கியத்துவம் பெறுகின்ற அதே நேரம், சமூகத்தில் பெண்கள் அவர்கள் வாழ்கிற குடும்பத்துள் வன்முறைக்குஉட்படுத்தப்படுவது என்கிற விஷயம் பேசாப்பொருளாக அல்லது மறந்து போகிற விடயமாக ஆகியிருப்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டும், அது குறித்து ஒரு உரையாடல்முன்னெடுக்கப்படவேண்டும் என்பதும் மிகவும் அவசியமாகும். இது பற்றிய சிந்தனைகளில் அடிப்படை மாற்றம் தேவை என்பது மிக முக்கியமாகும். ஒரு சமூக விடுதலை என்பது அனைத்து வகையான ஒடுக்குமுறைகளையும் வன்முறைகளையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி எதிர்கொள்ள வேண்டிய செயற்பாடாகவே பார்க்கப்படவேண்டும்.ஒவ்வொன்றாக தனித்தனியாக அல்லது ஒன்று முந்தியது, மற்றது பிந்தியது என்று பார்ப்பதென்பது பொருந்தாது. ஏனெனில், இத்தகைய நிலைகள் என்பது சமூகத்தில் ஒன்றுடன் ஒன்று இணைந்ததாகவும்,சிக்கல்கள் நிறைந்ததாகவும் காணப்படுகின்ற சூழலில், சமூகங்களால் புறத்திருந்தும்அகத்திருந்தும் நிகழ்த்தப்படுகின்ற வன்முறைகள் பற்றி ஒரே நேரத்தில், ஒரே தளத்தில் நாங்கள் எதிர்கொள்ளவேண்டியது என்பதுதான் யதார்த்தமானதும் இயல்பானதும் பொருத்தமானதும் என்பதை நாங்கள் சிந்தித்துச் செயற்படவேண்டியுள்ளது. இந்த வகையில் ஈழத்தில் பெண்கள் அமைப்புகள் போரினால் ஏற்படும் வன்முறைகளை எதிர்கொண்டும், குடும்ப சமூக வன்முறைகளை எதிர்கொண்டும், சமூகத்தின் உள்ளிருந்தும், வெளியிருந்தும்தடைகளையும் சவால்களையும் கடந்து செயற்பட்டு வருவது சாதகமானதொரு நிலைமையாகும்.

கேள்வி :- அரங்க செயற்பாட்டுகளின் முக்கியத்துவம் பற்றி உங்கள்கருத்து ?

பதில் :- எமது சமூகத்தில் மக்கள் தமக்கு வசதியான, வாய்ப்புள்ள இடங்களான கோயில், வீதி, தெருச்சந்திப்ப, வீட்டு முற்றம், மரநிழல்களில் கூடிக்கதைக்கும் மரபு இருந்தது. இந்தச்சமயங்களில்பல்வேறு செய்திகளையும், சம்பவங்களையும் தலைப்புகளையும் அதன் சாதக பாதகங்களுடன் அலசி ஆராயும் நிலை இருந்தது. ஆனால் இன்று இனப்பிரச்சனையும் இராணுவ நடவடிக்கைகளும்கூர்மையடைந்துள்ள நிலையில் பொதுமக்களால் கூடிக்கதைக்கும் நிலை இல்லாமல் போனது. மக்களை ஒன்று சேர்க்கவும் தங்களுக்குள் உரையாடிகொள்ளவும் தங்களது தேவைகளை தாங்களே அறிந்துகொள்ளவும் அவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் வழிவகைகளைதீர்மானித்துக்கொள்ளவும் தங்களது ஆற்றல்களை அடையாளம் காணவும், வெளிபடுத்திக் கொண்டாடவும் தாழ்வுச்சிக்கல்களில் இருந்து விடுபட்டுக்கொள்ளவும் படைப்பாற்றல்கள் வெளிபடவும்கூடியகல்வியை, சமூகத்தை, பண்பாட்டை அறிவுத்தளத்தை உருவாக்குவதனுடாக யதார்த்தின் குரூரத்தை விளங்கி கொள்ளாவிட்டாலும்; அதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான வழியினைஅமைத்து இத்தகைய மாய வாழ்கையில் இருந்து எம்மை விடுவித்துக்கொண்டு, எங்களை நாங்கள் புரிந்துகொண்டு பொதுமக்கள் மத்தியில் விவாதங்களை தூண்டவல்ல அரங்குகளின் தேவைஅவசியமாகிறது. அப்பொழுதுதான் எமக்குப் பொருத்தமான மக்கள் மையப்பட்ட விவாதக் களங்களை அரங்க அறிவுடனும்பாரம்பரிய உரையாடல் களங்களின் அனுபவத்துடனும்அறிவுத்தளத்தில்நிகழ்த்துவது முக்கியம் என்கிற உரத்த சிந்தனையும் செயற்பாடும் இன்று அவசியத் தேவையான நிலை உள்ளது என்பது எனது கருத்து

கேள்வி :- இப்பொழுது உள்ள அரசியல் சூழலில் தமிழர்களுக்கு தீர்வுகிடைக்கும் என நம்புகின்றீர்களா ?

பதில் :- தமிழர்களுக்கு ஓர் நிரந்தரமான தீர்வு இப்போதுள்ள அரசியல் சூழலில் கிடைக்கும் என்று நான் நிச்சயமாக நம்பவில்லை. வெளிப்படையாகச் சொன்னால் நம்பிக்கை இல்லாத அரசியல்கள் தான்இப்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்த அரசியலை முன்னெடுப்பவர்களால் தமிழர்களுக்கு எந்தவிதத்திலும் ஓர் தீர்வை ஏற்படுத்தித் தரமுடியாது. அப்படி ஓர் தீர்வைஏற்படுத்திக்கொடுத்தால் அது அவர்களுக்கான அரசியல் இருப்புகளை இருட்டடிப்பு செய்துவிடும் என்பதே உண்மையானது. இதனால் பாதிக்கப்படுவது அடக்கப்படும் அல்லது நசுக்கப்படும் எமது தேசிய இனம் தான். இத்தகைய நிலையில் இருப்பினைஉறிதிசெய்வதற்கு போர்க் குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என் நாம் அனைவரும் ஒன்றினைந்து மேலும் வலியுறுத்த வேண்டும் .

கேள்வி :- அடுத்த கட்டமாக ஏதேனும் எழுத முயற்ச்சியில்ஈடுபடவுள்ளீர்களா?

பதில் :- மக்களின் அபிவிருத்தித்தேவையை பூர்த்திசெய்ய பற்றியும் போர் கால இலக்கியங்களையும் யுத்தத்தின் விழுமியங்களையும், அதனால் வருகின்ற சோகங்களையும், அது கூறும் இலட்சியத்தையும் எழுதுகிற சூழல் நேரம் இடம் என் உளநிலை என்பவைதான் அவற்றை தீர்மானக்கிறது. மனம் குழம்பாத சூழலில் ஒன்றிவிடத் துடிக்கிறது. நாங்கள் இயற்கையின் அசைவுகளைக் கண்டு எழுதுகிற சூழல் எங்கே இருக்கிறது நாம் இழந்து விட்ட தேசம் பற்றியும் மனிதப் பேரவலத்தின் போது அணுபவித்தவைகளையும் என் முன் நடந்தேறிய இணப்படுகொவையின் சாட்சியாக அதனுடன் வாழுகிறபோதுஅவற்றினையும் அதன் உளவியல் நிலைப்பாட்டினையும் பதிவு செய்கின்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். வாழ்த்துகள் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு மாவீரர்கள் என்றும் துணையிருப்பார்கள்.

வாக்கு மூலம் - மனித நேய போராளியின் சாட்சியம் இதற்கு மூலம் -நிஜத்தடன் நிலவன் edit

வாக்கு மூலம்!- முள்ளிவாய்க்காலை முழுமையாக அனுபவித்த மனித நேய போராளியின் சாட்சியம் இதற்கு மூலம்

2009 ம் ஆண்டு காலப்பகுதியில் திட்டமிடப்பட்ட தமிழினப் படுகொலையே முள்ளிவாய்க்காலில் அரங்கேறியுள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பல ஆயிரக்கணக்கானமக்கள் ஈழ நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள்.

எமது உரிமைக்காக எமது வாழ்வியலுக்காக சுயநிர்ணய உரிமைப் போரை ஈழத்தில் தமிழர்கள் நடத்தினார்கள். அதனால்தான் எமது உரிமைப் போராட்டத்தில் நாம் நிம்மதியாக வாழவேண்டும் என்ற ஒரு சிந்தனையை மட்டும் மனதில் சுமந்தவர்களாய் எதையும் எதிர்பார்க்காத மனிதர்களாய் பல ஆயிரக்கணக்கான மக்கள் ஈழ மண்ணில் துடிதுடித்து வீழ்ந்தார்கள்.

அந்த மகத்தான மனிதர்களின் உயிர் உறையும் கதைகள் ஏராளம் ஏராளம்.

இன்று எத்தனையோ பேர் எங்கள் தேசத்தின் இருட்டு மூலைகளுக்குள் முடமாகிப் போயிருக்கின்றார்கள். அடிமைகளாக வாழமாட்டோம் என்றுரைத்தவர்கள் வீதியோரங்களிலும் பற்றைகளிற்குள்ளும் புதையுண்டு போனார்கள். எங்கள் புறநானூற்றுச் சான்றுகள் இடித்து வீசப்பட்டன.

முள்ளிவாய்க்கால் கொடூர நிகழ்வின் போது அதில் சிக்கி தப்பித்து வாழும் எனது உண்மைக் கதை இது.

ஈழத்தில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்த போர்த் தவிர்ப்பு வலயப் பகுதியில் நான் ஒரு மனிதநேயப் பணியாளர் ஆவேன்.

உண்மையில் சிறிலங்கா அரசினால் அறிவிக்கப்பட்டிருந்த போர்த்தவிர்ப்பு வலயங்களிலேயே அரச படையினரின் அதிகளவிலான எறிகணை வீச்சுக்களும் விமானத்தாக்குதல்களும் இடம்பெற்றன. பாரிய மனிதப் பேரவலம் அரங்கேறியதும் இங்குதான்.

சிறிலங்கா அரசினால் முதலில் அறிவிக்கப்பட்டிருந்த போர்த்தவிர்ப்பு வலயமாக உடையார்கட்டு, சுதந்திரபுரம், வள்ளிபுனம், தேவிபுரம், ஆகிய பிரதேசங்கள் அடங்குகின்றன. இந்தப் பிரதேசங்களில் படையினர் அகோரமான எறிகணை வீச்சுக்களை மேற்கொண்டனர்.

இதில் சுதந்திரபுரம் விளையாட்டு மைதானத்தில் அரசசார்பற்ற நிறுவனத்தினர் வழங்கிக் கொண்டிருந்த உணவுப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக கூடி நின்ற பல நூற்றுக்கணக்கான மக்களை இலக்குவைத்து படையினர் மேற்கொண்ட எறிகணை வீச்சில் பல பொதுமக்கள் அவ்விடத்திலேயே கோரமாகப் பலியாகியது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதேபோல இரண்டாவது தடவையாக அரசு அறிவித்த போர்த்தவிர்ப்பு வலயமான மாத்தளன், பொக்கணை, வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் பிரதேசத்திலேயே உலகத்தின் மனச்சாட்சியை உலுக்கக்கூடிய தமிழினப் படுகொலையை அரச படையினர் மேற்கொண்டனர்.

மருத்துவமனைகள் மீது தாக்குதல்கள்.

அரச படையினர் கிளிநொச்சி வைத்தியசாலை மீது தாக்குதல் மேற்கொண்டிருந்த வேளையில் அங்கே நான் பணியாற்றி வந்தேன். மருத்துவமனைகளைக் குறிவைத்து தாக்குதல் நடாத்துவது சர்வதேச போர் விதிமுறைகளுக்கு எதிரான செயல் என்ற போதிலும் மருத்துவமனைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதை இலங்கை இராணுவம் ஒரு போர் உத்தியாகவே கையாண்டது.

வன்னியில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மக்கள் வேறிடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்ற

போதெல்லாம் சிறிலங்கா சிங்கள இராணுவத்தினர் முதலில் வைத்தியசாலைகளைக் குறிவைத்தே தாக்குதல் நடத்தினர்.

புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை, ஆனந்தபுரம், மந்துவில், புதுமாத்தளன், இடைக்காடு, அம்பலவன் பொக்கணை, வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால், முள்ளிவாய்க்கால் கிழக்கு, முள்ளிவாய்க்கால் மேற்கு உட்பட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.

இத்தாக்குதல்களில் மருந்துப் பொருட்களும் அழிந்தன. இதனால் காயமடைந்தவர்கள் உயிருக்காக போராடிக் கொண்டிருந்தார்கள். சிறிலங்கா இராணுவத்தினரின் தாக்குதல்களினால் மருத்துவப் பணிகள் பாதிக்கப்பட்டன.

மருத்துவமனையை நோக்கி தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றன.

புதுக்குடியிருப்பு இரணைப்பாலை வீதியில் அமைந்திருந்த பொன்னம்பலம் மருத்துவமனையில் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி நடக்க முடியாமல் கால்களுக்கு அன்ரனா மற்றும் மண்மூட்டைகள் போடப்பட்டு படுக்கையாகக் கிடந்தவர்களின் விடுதி மீது 2009-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இரண்டாம்வார காலப்பகுதியில் கிபிர் விமானம் மேற்கொண்ட மிலேச்சத்தனமான குண்டுவீச்சுத் தாக்குதலில் விடுதி முற்றாகச் சிதைவடைந்து சுமார் எழுபதிற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியதும் அவர்களின் சிதைந்த உடலங்களை கட்டட இடிபாடுகளுக்கிடையில் நான்கு ஐந்து நாட்களாக பல சிரமங்களுக்கு மத்தியில் மீட்டெடுத்து அடக்கம் செய்ததுவும் இங்கு நினைவுகூரப்படுவது அவசியமானது.

இதேபோன்று 2009-ம் ஆண்டு வைகாசி மாதம் முதல் வாரத்தில் முள்ளிவாய்க்கால் மத்தியில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் கனிஷ்ட வித்தியாலயத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்த பிரதான மருத்துவமனையை இலக்கு வைத்து அரச படையினர் மேற்கொண்ட சரமாரியான எறிகணைத் தாக்குதலில் ஏற்கனவே காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்கள் உள்ளிட்ட பல நூற்றுக்கணக்கானவர்கள் ஸ்தலத்திலேயே துடிதுடித்துப் பலியான துயர்நிறைந்த சம்பவங்களையும் எவரும் எளிதில் மறந்திடமுடியாது.

மருத்துவ உதவியாளர்கள் பலர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் இருந்ததாலும் பாதுகாப்பற்ற சூழ்நிலை அங்கு உருவாகியிருந்ததாலும் படுகாயமடைந்தவர்களுக்குச் சிகிச்சையளிப்பதில் பெரும் சிரமம் எதிர்நோக்கப்பட்டது. மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் தங்களது பாதுகாப்பையும் கருத்திற்கொள்ளாது அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர்.

மருத்துவமனையை சூழவுள்ள பகுதிகளில் உடல்கள் காணப்பட்டதால் அப்பகுதி மயான பூமியாக காட்சியளித்தது. இங்கு கடமையாற்றிய வைத்தியர்கள்' இயந்திர மனிதர்கள் போலவே செயற்பட்டனர். காயமடைந்த மக்கள் ஆகக் கூடியது ஒரு சில நிமிடங்களே சத்திரசிகிச்சை அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இதன் பின்னர் காயமடைந்த பிற நோயாளிகளுக்கு தொடர்ந்து சத்திரசிகிச்சை வழங்கப்பட்டது. அதாவது ஒரேயொரு சத்திரசிகிச்சைக் கூடமே மிகவும் குறைந்த வசதிகளுடன் செயற்பட்டுக் கொண்டிருந்தது.

கொத்துக்குண்டுகள்

கொத்துக் குண்டுகள் முதலில் பரந்தன் பகுதியிலேயே வீசப்பட்டன. பல வகையான கொத்துக் குண்டுகளை சிறிலங்கா இராணுவத்தினர் பயன்படுத்தினர். கொத்துக்குண்டொன்றின் பிரதான குண்டு வானில் வெடித்துச் சிதறி பல சிறிய துண்டுகளாக உடைந்து அனைத்து திசைகளிலும் சீறிபாயும்.

இரணைப்பாலை என்ற பிரதேசத்தில் வீசப்பட்ட கொத்துக் குண்டொன்று பல வர்ண நாடாக்களைக் கொண்டிருந்தது. இதனால் இவ்வகைக் குண்டானது சிறுவர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துக் கொண்டது.சிறுவர்கள் பல வர்ண நிறங்களால் கவர்ச்சிமிக்க வகையில் உருவாக்கப்பட்டிருந்த இக் கொத்துக் குண்டின் பகுதிகளை தொட்ட போது அவை வெடித்துச் சிதறிய சம்பவங்களும் உண்டு.

பொஸ்பரஸ் குண்டு

உடையார்கட்டு என்ற இடத்தில் தஞ்சம் புகுந்திருந்த மக்கள் மீது பொஸ்பரஸ் குண்டுகள் வீசப்பட்டன. இந்த வகைக்குண்டுகள் வீசப்பட்டதும் கறுப்பு நிறப் புகை வெளியேறும். அத்துடன் இந்தக் குண்டு எங்கு வீசப்படுகின்றதோ அங்கே உள்ள அனைத்தும் எரிந்து கருகிவிடும்.

இந்த வகைக் குண்டுவீசப்பட்டவுடன் அதன் சுவாலை 'தறப்பாலில்' பற்றி அதன் பகுதிகள் மக்கள் மீது விழுந்தவுடன் மக்கள் எரிகாயங்களுக்கு உள்ளாயினர். பொஸ்பரஸ் குண்டொன்று வீசப்பட்ட போது அதன் சுவாலைகள் தற்காலிக கூடாரங்கள் மீது படர்ந்து பின் அங்கிருந்த பலரின் உடலிலும் பற்றிக் கொண்டது.

இதனால் மிக மோசமான முறையில் எரிகாயங்களுக்கு உள்ளாகினார். இதனை நான் நேரில் பார்த்தேன். பொஸ்பரஸ் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளாகி மிக மோசமான எரிகாயங்களுக்கு உள்ளாகி பலர் இறந்தார்கள்.

மேற்குறித்த கொத்துக் குண்டுகளும் பொஸ்பரசுக் குண்டுகளும் சர்வதேச போர் விதிமுறைகளின்படி தடைசெய்யப்பட்டவையாகும். அத்துடன் யுத்தத்தில் தவிர்க்கப்பட வேண்டிய இரசாயனக் குண்டுகளும் பயன்படுத்தப்பட்டதை யுத்த வலயத்திற்குள் அகப்பட்டிருந்த மக்கள் நன்கறிவர்.

எறிகணை, உந்துகணைத் தாக்குதல்கள்

இரட்டைவாய்க்கால், அம்பலவன் பொக்கணை, இடைக்காடு, மாத்தளன் பகுதிகளில் எறிகணை தாங்கிகளின் கனரக துப்பாக்கிச் சூடு மற்றும் ஆர்பிஜி உந்துகணைத் தாக்குதல்கள் அகோரமாக நடத்தப்பட்டன. கடும் மழை பெய்துவந்த நிலையில் இத்தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்தமையினால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகி அவதிப்பட்டனர்.

முள்ளிவாய்க்கால், புது மாத்தளன் பகுதி இறுதி பாதுகாப்புவலயம் என இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அங்கு வந்து பதுங்கு குழி அமைத்து தங்கி நின்ற மக்கள் மீது பல் குழல் எறிகணைத் தாக்குதல் மற்றும் எரிவாயு பொஸ்பரஸ் குண்டுகளை வீசிய சிங்களம் கோர கொலை தாண்டவத்தை ஆடியது. இதில் பல நூற்றுகணக்கான மக்கள் எரிந்து அடையாளம் தெரியாத நிலையில் சாம்பலாகினர்.

கருகிய நிலையில் அடையாளம் காண முடியாத நிலையில் இனவெறி தாக்குதலினால் மரணித்த நூற்றுக்கணக்கான மக்களின் மனித உடலங்கள் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டிருந்த பதுங்கு குழிகளுக்குள் அடக்கம் செய்யப்பட்டன.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் அப்போது பாதுகாப்பற்ற சூழ்நிலையில் அங்கு சிக்குண்டுள்ள மக்களுக்கு எந்த மனிதாபிமான நிறுவனமும் உதவ முன்வராது தங்கள் பாதுகாப்பே முக்கியம் என்பதாக ஒதுங்கிக் கொண்டார்கள். பாவம் மக்கள், தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தமக்குத் தெரிந்த வழிமுறைகளைக் கைக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

உணவு, குடிநீருக்கு நெருக்கடி

கற்பனையும் செய்ய முடியாத அளவிலான மனிதப் பேரவலத்தைக் காண நேர்ந்தது. எந்த மனிதாபிமான தொண்டு நிறுவனமும் அங்குள்ள மக்களுக்கு உதவ முடியாத பாதகமான பாதுகாப்புச் சூழலே உருவாகி இருந்தது. குறுகிய நிலப்பரப்பில் சிக்குண்டுள்ள மக்கள் தமது கைகளாலேயே பதுங்கு குழிகளைத் தோண்டி அவற்றுக்குள் பாதுகாப்புத் தேடிக் கொண்டிருக்கின்றனர். அதனால் குடிநீருக்கும் உணவுக்கும் பெரியளவில் தட்டுப்பாடு ஏற்பட்டது.

அந்த மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு சமூகப் பணியாளர்களுக்குப் போதிய பாதுகாப்பும் தடைப்படாத போக்குவரத்து வசதியும் இல்லை. இப்போதைய நிலைமையிலும் மக்களுக்கு தொண்டாற்ற முனைந்த சமூகப் பணியாளர்கள் என்ற வகையில் சாவின் விளிம்பில் இருந்தும் பல உயிர்களைக் காப்பாற்ற முடிந்தது.

யுத்தம், ஈவு இரக்கமில்லாது கோரப் பசியோடு தமிழ் உறவுகளின் உயிர்களை விழுங்கி ஏப்பம் விட்டுக் கொண்டிருந்த காலமது. பட்டினியால் எல்லோரது வயிறுகளும் ஒட்டியிருந்தன. கண்ணீரோடு பதுங்கு குழிக்குள் வேதனை ஒருபுறம், ஆனால் குழந்தைகள் பசி பசி என கதறிய அழுகைக் குரல் தான் என்னுள் பெரிதும் வலியை ஏற்படுத்தியிருந்தது.

கஞ்சிக்கு கை ஏந்தியவர்களையும் கொன்று குவித்தது சிங்களம்

துப்பாக்கி ரவைகள் எல்லாத் திசைகளில் இருந்தும் இடையறாது வந்து கொண்டிருந்தன. தனியே செல்லவும் பயமாக இருந்தது. மனதைத் திடப்படுத்திக் கொண்டு சிறிய குழி ஒன்றுக்குள் கையில் ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு வெளியே ஓடினேன். அரிசிக் கஞ்சி ஊற்றுகின்ற இடத்துக்குச் சென்று வாங்கிய கஞ்சியின் சூடு ஆறுவதற்கிடையில் ஓட்டமும் நடையுமாக கூடாரத்துக்கு திரும்பி வந்தேன்.

பல் குழல் எறிகணை வீச்சில் சிறுவர்கள் சிதையுண்டிருந்தார்கள். காப்பாற்றுவதற்காக நிறையவே போராட வேண்டியிருந்தது. கையிலிருந்த கிண்ணம் தன்பாட்டிலேயே கீழே வீழ்ந்தது. ஒருவர் தூரத்தே நிற்பதை பார்க்க முடிந்தது. காயம்பட்ட காலோடு இலையான்கள் மொய்த்துக் கொண்டிருக்க ஏக்கப் பார்வையோடு அவர் இருந்த கிடங்கின் அருகில் சென்று பார்த்த பொழுது அதுஒரு மாபெரும் மனித படுகொலைக் கிடங்காகவே காட்சியளித்தது.

ஆங்காங்கே மனிதச் சடலங்கள் குவிக்கப்பட்டு இருந்தமையினால் நாம் காலடி வைக்கும் பொழுது கால்கள் இலகுவில் மண்ணுள் புதையுண்டன. சில கிடங்குகளில் மனிதச் சடலங்கள் அரைகுறையாக எரியூட்டப்பட்டுக் காட்சியளித்தன. உக்கிரத் தாக்குதலின் போது தம்மைப் பாதுகாக்க வேண்டி மக்களால் அவசரமாகத் தோண்டப்பட்ட பாதுகாப்புக் கிடங்குகளினுள் அத்தாக்குதலில் கொல்லப்பட்ட பல நூற்றுக்கணக்கான மக்களின் சடலங்கள் அங்கேயே புதைக்கப்பட்டன.

தொடர்ந்தும் இழப்புக்களை சந்திக்க முடியாத நிலையில் மக்கள் அனைவரும் படையினரிடம் சரணடைந்தனர். வெட்டுவாய்க்கால் (வட்டுவாகல்) பாலத்தினைச் சரணடைந்த மக்கள் கடந்து சென்ற சந்தர்ப்பத்தில் மக்களிலிருந்து போராளிகளைப் பிரித்தெடுத்தனர்.

எல்.ரீ.ரீ.யில் இருந்தவர்கள் ஒருபுறம் வருமாறு கூறி, அவர்கள் ஒரு சின்ன விசாரணைக்குப் பிறகு குடும்பத்துடன் போகலாம் என்று பலமுறை அறிவித்த பின்பு, விசாரணையின் பின் மீண்டும் பழைய வாழ்வுக்குத் திரும்பலாம் என்ற நம்பிக்கையுடன் போராளிகள் பலர் படையினரிடம் சரணடைந்தனர்.

சரணடைந்தவர்களைப் படையினர் வாகனத்தில் ஏற்றும் சமயம் அங்கிருந்தவர்கள் அடக்கி வைத்திருந்த அத்தனை சோகங்களோடும் பெயர் தெரியாத சிப்பாய்களின் கால்களில் விழுந்து கதறினார்கள். அவர்களின் கண்களைக்கட்டி அழைத்து சென்ற இராணுவத்தினர், பின்னர் அவர்களின் ஆடைகளைக் களைந்து சித்திரவதைகளின் பின்னர் படுக்கொலை செய்தார்கள்.

மக்களில் கதறல்கள் மற்றும் கெஞ்சல்கள் இராணுவத்தினரின் மனங்களைக் கொஞ்சம் கூட அசைக்கவில்லை. மீண்டும் அடிமை வாழ்வு தொடர்ந்தது. பல இடைத்தங்கல் முகாம்கள் பல நலன்புரி நிலையங்கள் பல தடுப்பு முகாம்களும் உருவெடுத்தது. பல்லாயிரக்கணக்கானோர் தம் உறவுகளைத் காண அலைந்து திரிந்தார்கள்.
உடற்காயங்கள், உளக்காயங்கள் என்பவற்றுடன், அன்புக்குரியவர்களைக் காணவில்லை என்பது அச்சுறுத்தல்களுக்குக் கீழான அடிமை வாழ்வும் மக்களை மேலும் உறுத்தின.

தமிழர்களின் பாரம்பரிய பூமியை அபகரித்து அங்கு வாழ்ந்த பூர்விகக் குடிகளை அகதிகளாய் துரத்தி இன்று திறந்த வெளிச்சிறைக்குள் பணயக் கைதிகளாய் தமிழர்களை சிங்களம் இன்னமும் நலன்புரி நிலையங்களில் தடுத்து வைத்திருப்பதும் தமிழர்கள் சொந்த இடங்களிற்கு மீள் திரும்பி சென்று குடியேற முடியாத சூழ்நிலை உள்ளது குறிப்பிடதக்கது.

உறவில்லா உரையாடல்கள் - நிஜத்தடன் நிலவன் edit

புரட்சிகரமான முன்னேற்றங்களை கண்டு வருகின்ற நவீன காலமிது. இந்த முன்னேற்றங்களை பார்த்து எம்மால் புளகாங்கிதம் அடையாமலிருக்க முடியாது. ஆனாலும் கண்ணோடு கண்ணோக்கி ஆளோடு ஆள் உரையாடுவதென்பது எவ்வளவு மகிழ்ச்சியான அனுபவம்! அதில் உருவாகும் உறவிற்கு இணையேது?

அன்று நீண்ட காலத்திற்குப் பின் சந்தித்த என் நண்பனும் நானும் அந்தப் பூங்காவில் உலாவந்து கொண்டிருந்தோம். கதைக்க எவ்வளவோ விடயங்கள் இருந்தன. ஆனால் செல்போனைக் காதில் வைத்து உரையாடிக் கொண்டிருந்த நண்பனது செய்கை என்னைக் குழப்பியது!

நண்பன் உரையாடலை செல் போனுக்குள்ளால் நகர்த்திக் கொண்டு போனதினால் நான் பக்கத்திலிருந்தும் இல்லாதவனாய்ப் போனேன்!அந்தி மாலைவேளையில் அழகான பூங்காவில் மக்கள் நிறைந்திருந்தனர். பலர் காதில் செல்போனை வைத்து பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தனர். மற்றவர்களைப் பார்த்து 'ஹாய்' சொல்லக்கூட அவர்களுக்கு நேரமிருக்கவில்லை! பூங்காவில் பிள்ளைகள் குதூகலமாக விளையாடித்திரிந்தனர். அங்கு பல வர்ணப்பூக்கள் பூத்துக்குலுங்கியிருந்தன. இப்படி எத்தனை கோடி இன்பங்கள் கொட்டிக்கிடந்தும்.
எதையுமே மக்கள் ரசிப்பதாக இல்லை! ஏலெக்ரோனிக்குரல் மனித நேரடி உரையாடலை விட அற்பமானதாகிவிட்டது! பக்கத்தில் இல்லாவதவரோடு பேசுவதற்கு தொலைபேசி வந்தது. ஆனால் இப்போ பக்கத்திலிருப்பவரே இல்லாமல் போகின்ற நிலை!

அண்மையில் நான்கு நண்பர்களோடு காரில் பயணம் செய்து கொண்டிருந்தேன். உரையாடிக் கொண்டிருந்த எங்களை நண்பர்களில் ஒருவன் தன் வாயில் விரலை வைத்து மௌனமாயிருக்கும்படி சைகை காட்டினார்! ஏனெனில் மறுமுனையிலிருந்து செல்போனில் கதைப்பவருடைய கதை அவருக்கு கேட்கவில்லையாம்! நாங்கள் மூவரும் மௌனமாயிருந்தோம். தொடர்பாடலை இலகு படுத்தக்கண்டு பிடிக்கப் பட்ட கருவியினால் உரையாட முடியாமல் மூவரும் அமர்ந்திருந்தோம்.

நவீன தொடர்புகள் அதிகமதிகமாக எம்மை இணைக்க அதிகமதிகமாக தொடர்பறுந்த உணர்வு ஏற்படுவது ஏன்?

ஓவ்வொரு தொடர்பும் அந்நியோன்யத்தை பின்னைடயச் செய்கின்றது. மின் அஞ்சல், இணையம் (Email,Internet) போன்ற வசதிகளால் ஓருவரை ஒருவர் பார்க்காமலும் பேசாமலும் செய்திகளைப் பரிமாறலாம். குரல் அஞ்சல் (Voice Email) முறையில் முழு உரையாலையும் யாரையும் போய்ச் சேராமல் குரல் அஞ்சலில் நிகழ்த்தலாம். அதில் உங்கள் பதிலை விட்டுச் செல்லலாம். உதாரணத்திற்கு என் நண்பனுக்கு ஏதாவது ஒரு விடயம்பற்றிய விளக்கம் தேவைப்பாட்டால் அவனுக்கு குரல்அஞ்சலில் உங்கள் பதிலை விட்டுச் செல்லலாம். மனிதர்களுக்கிடையிலான தொடர்பாடல் தானியங்கும்-இயந்திரயமாக்கப்பட்டு, அந்நியப்படுத்தப் பட்டுள்ளோம்.

நிலையத்தில் பெற்றோல் நிரப்பப் போகின்றோமா? அங்கு நிற்பவரைப் பார்த்து புன்னகைத்து காலை வந்தனம் கூற வேண்டிய அவசியமில்லை, வங்கியில் வைப்புச் செய்ய வேண்டுமா? அல்லது பணத்தைப் பெறவேண்டுமா? யாருடனும் 'கதைத்து' நோத்தைப் போக்கத் தேவையில்லை. ஒரு வேளை வங்கியில் இதற்குப் பொறுப்பாயிருப்பவர் உங்களது அயலில் வாழும் நண்பராயிருக்கலாம். கதைப்பானேன்? 'ATM மெஷினிற்குள்' 'கார்ட்டை' செலுத்திக் கருமங்களை முடித்து விடலாம்! சுப்பர் மார்க்கூட்டில்' பொருட்களை வாங்கப் போகின்றீர்களா? 'ஸ்கானர்' கருவி விலைப் பட்டியிலைத்தந்து வேலைகளை இலகு படுத்திவிடும்.

மனிதத் தொடர்புகளில் ஏன் சிரத்தை காட்ட வேண்டும்?

புரட்சிகரமான தொழில் நுட்பயுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். உறவுகள் தொடர்புகள் என்று கூறி நேரத்தை ' வீணடிப்பது' 'பழமை' வாதமாகத் தென்படலாம். செல்போன் மின்னஞ்சல், இணையம், வங்கிக் கார்ட் எல்லாம் இன்று இன்றியமையாதவைகளாகிவிட்டன! அவற்றின் பயன்பாடுகள் மறுப்பதற்கில்லை. எந்த நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டதோ அந்த வகையில் பிரயோசனமானவையே. ஆனால் அந்த நோக்கங்களையும் விஞ்சிச் செயல் படுவதால் வரும் விளைவுகள் தான் சிந்திக்க வைக்கின்றன!

உரையாடி ஆற்ற வேண்டிய வேலைக்கு மின்னஞ்சலின் பின்னால் அமர்ந்திருப்பது எத்தகைய சலிப்பை தருகின்றது! மனித இணைப்புக்களை தொடர்புகளை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட இத்தொழில்துறை எம்மை தனிமைப்படுத்துகின்றது! சமூக ஊடாட்டத்தில் எதிரிடையான உணர்வுகளை வளர்க்கின்றது. உயிருள்ள உறவுத்தொடர்புகளை கட்டியெழுப்ப சுயகட்டுப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்வது ஆரோக்கியமானதாகும். அண்டையிலிருப்பவரோடு செல்போனில் தொடர்பெதற்கு? வீட்டிற்கு வரும் உறவுகள், நண்பர்களோடு உரையாடுதலைக் குழப்பித் தொல்லை தரும் தொலைபேசி அழைப்புக்களை தணித்துவிடலாம் தானே?

வீடுகள் தோறும் தொலைக்காட்சிப் பெட்டிகள் மலிந்தியங்கும் காலமிது. குடும்ப அங்கத்தவர்களோடு தொடர்பாடும் நேரத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது. இல்லங்கள் தோறும், நாடகங்கள், சினிமாக்காட்சிகளுக்கு முன்னால் 'ஒட்டிக்' கொண்டிருப்பதை தவிர்த்து செவிமடுத்து உரையாடினால் உறவுகள் சிறக்கும். மனிதர்களை பார்த்து அவர்கள் குரலைக்கேட்டு அந்நியோன்னியத்தை நெருகத்தை வளர்ப்போமா?

முதியோர்களின் உளவியல் பிரச்சனைகள் -நிஜத்தடன் நிலவன் edit

முதியோர் உளவியல்

முதியோரின் நடவடிக்கையில் மற்றும் மனநிலையில் ஏற்படும் பிரச்னைகளைப் பற்றி ஆராயும் அறிவியல் துறையே முதியோர் உளவியல் ஆகும். முதியோரின் வயது அதிகரிக்க அதிகரிக்க, அத்தோடு நிகழும் உடல்நிலை மாற்றம், உணர்ச்சிகள் மாற்றம், சமூக சூழல் மாற்றம் போன்றவை அவர்களுக்கு உளவியல் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். முதியோருக்கு ஏற்படக்கூடிய பொதுவான உளவியல் பிரச்சனைகள்


மனச்சோர்வு


மனச்சோர்வு என்பது ஒரு உணர்வுபூர்வமான மனநிலை. அதன் வெளிப்பாடாக வருத்தம், வெறுப்புற்ற மனநிலை, நம்பிக்கையிழந்த நிலை ஆகியவை ஒருவரிடம் காணப்படும். இளைஞர்களோடு ஒப்பிடும்போது, பொதுவாக முதியோர்களிடம் மனச்சோர்வும் தற்கொலை மனப்பான்மையும் அதிக அளவில் காணப்படுகிறது. இதற்குக் காரணம், முதியோரின் வாழ்நாளின் பிற்பகுதியில் ஏற்படும் கடுமையான இழப்பே ஆகும். உதாரணமாக, உடல்நலம் குன்றுதல், உடல்நிலையில் மாற்றம், பணி ஓய்வுக்குப் பின் ஏற்படும் வருமான இழப்பு, உறவினர்கள் மற்றும் நண்பர்களை இழத்தல், வாழ்க்கைத் துணைவரை இழந்துவிடுதல், தற்காலிக இடமாற்றம் போன்றவற்றைச் சொல்லாம்.

முதியோருக்கு ஏற்படும் மனச்சோர்வை குடும்பத்தினர் கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். இல்லையென்றல் முதுமையின் இயல்பு என்று ஒதுக்கிவிடுகிறார்கள். ஆரம்ப நிலையிலேயே முதியோருக்கு ஏற்படும் மனச்சோர்வை இனங்கண்டு, உடனடியாகச் சிகிச்சை அளிக்கத் தவறினால் தேவையற்ற சிரமங்களை அவர்கள் பட நேரிடும்.


மனநிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள், தீயது ஏதோ நடக்கப்போகிறது என்ற பயம், எப்போதும் சோகமாகக் காணப்படுதல், உற்சாகமின்மை ஆகியவற்றை மனச்சோர்வின் பொதுவான அறிகுறிகளாகக் கூறலாம். ஒன்றில் கவனம் செலுத்த இயலாமை, சோம்பேறித்தனம், எதிலும் ஆர்வமின்மை, குற்றவுணர்வு, ஒழுங்கற்ற பசி மற்றும் தூக்கம் ஆகியவையும் மனச்சோர்வின் வெளிப்பாடுகள்தான். அத்தோடு வழக்கத்துக்கு மாறான மன உளைச்சல், உடல் கோளாறுகள் ஆகியவையும் மனச்சோர்வினால் ஏற்படுகின்றன. மனச்சோர்வினால் பாதிக்கப்பட்ட முதியோர், சிறிய விஷயத்திற்கும் அதீதமாகக் கவலைப்படுவார்கள்; தொடர்ந்து உடலில் ஏதோ பிரச்சனை இருப்பதாகக் கூறுவார்கள்; சில சமயம், மனச்சோர்வு ஞாபகச் சக்தியை குறைத்துவிடும்.

பித்து நிலை:

ஒருவரின் நடவடிக்கையில் ஏற்படும் திடீர் மாற்றம், எதிர்ப்புணர்வு, கவனமின்மை, ஞாபகச்கக்திக் குறைவு, ஒழுங்கற்ற சிந்தனை ஆகியவற்றைப் 'பித்து பிடித்த நிலை' என்று கூறலாம். இந்த நிலை, ஒரு நாளின் பொழுதில் மாறிக்கொண்டே இருக்கும். பாதிக்கப்பட்டவர் ஏதோ குழப்ப நிலையில் இருப்பதாக குடும்பத்தினர் நினைப்பார்கள். உதாரணத்திற்கு சுதந்திரமாகவும், நல்ல உடல் நலத்தோடும் இருப்பவர் திடீரென்று குழம்பியவராகவும் அமைதியற்றும் காணப்படுவார். சிறிது நேரத்திற்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவார். மீண்டும் பழைய நிலைக்குப் போய்விடுவார். சில சமயம் அரை மயக்கத்தில் இருப்பார். தூங்கும் வழக்கத்தில் மாற்றம் ஏற்படும். குறிப்பாக இரவு நேரத்தில் தூக்கமின்றித் தவித்துவிட்டுப் பகலில் தூங்குவார். ஒட்டுமொத்தமாகச் சொல்லப்போனால், பித்து நிலையில் இருப்பவரின் நடவடிக்கையில் தாறுமாறான மாற்றங்கள் இருக்கும்.

இந்தப் பித்து நிலைக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். உடனடிக் கவனம் செலுத்தாவிட்டால், அதுவே வேறு பல உடல்நலக் கோளாறுகள் வருவதற்குக் காரணமாகிவிடும். இதற்குக் காரணமாக நோய்த் தொற்று, பக்கவாதம், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றைச் சொல்லலாம். வேறு நோயைக் குணப்படுத்தச் சாப்பிடும் மருந்துகளின் பின்விளைவாகவும் பித்துநிலை முதியோருக்கு ஏற்படலாம். முதல் முறையாகப் பித்து நிலையால் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துச் சிகிச்சை அளிப்பதன் மூலம் நோயின் தன்மை சரியாகக் கண்டுபிடிக்கப்படுகிறது. பெரும்பாலான நோயாளிகள் சிகிச்சைக்குப் பிறகு பூரணமாகக் குணமாகிவிடுகிறார்கள். அப்படி உரிய சிகிச்சை அளிக்காத பட்சத்தில், அதுவே டிமெனிஷயரிவுக்கு அல்லது இறப்புக்கோ வழிவகுத்துவிடும்.


ஒருவர் தன் இயல்பான செயல்களைச் செய்ய முடியாத அளவுக்குச் மூளைத் திறனை இழந்துவிடும் நிலை 'டிமெனிஷயரி' என்று அழைக்கப்படுகிறது. பித்து நிலையைப் போல் அல்லாமல், டிமெனிஷயரிவின் பாதிப்புகள் ஒருவரிடம் கொஞ்சம் கொஞ்சம் ஏற்படுகிறது. மூளை செயல்பாட்டுத் திறனை இழப்பதால் ஞாபகச்சக்தி, தெளிவான சிந்தனை, தீர்வு காணும் திறன், கணிக்கும் திறன், படிக்கும் மற்றும் எழுதும் திறன் பேச்சு ஆகியவற்றில் கோளாறுகள் ஏற்படுகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட முதியவருக்குக் குறைந்த ஞாபகச்சக்தியே இருக்கும்; சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி கூட நினைவில் இருக்காது; பேசும்போது தகுந்த சொற்கள் கிடைக்காமல் திண்டாடுவார்கள்; வழி கண்டுபிடிப்பதில் சிரமம் இருக்கும்.

முதியவர்களுக்கு டிமெனிஷயரி நோய் முற்றத்தொடங்கினால், அன்றாட செயல்பாடுகளான சாப்பிடுதல், உடை உடுத்துதல், காலைக்கடனிகள் முடித்தல், குளித்தல் போன்றவற்றைச் செய்வதற்குக் கூட மற்றவர்களின் உதவி தேவைப்படும். பெரும்பாலானவர்களின் நடவடிக்கைகளில் மாற்றம் அதிகம் இருக்காது. அப்படியே இருந்தாலும், அது திசைதெரியாமல் சுற்றுதல், சமூக பழக்கவழக்கத்தல் மாறுதல், மனநிலையில் திடீர் மாற்றம் போன்றவைகளாக இருக்கும்.

ஒருவருடைய நடவடிக்ககளிலும் ஆறுமையிலும் டிமெனிஷயரி பல மாற்றங்களை ஏற்படுத்தும். உதாரணத்திற்கு, தங்களுடைய உடமைகளை யாரோ திருடிவிடுவார்கள் போன்ற தவறான எண்ணங்கள், இவர்களின் மனத்தில் இருக்கும். சில மாற்றங்கள் பித்துநிலையாலும் ஏற்படலாம். ஆரம்ப நிலையிலேயே டிமெனிஷியாவைக் கண்டுபிடித்துவிட்டால், அதை எளிதாகக் குணப்படுத்திவிடலாம். இந்த நோய்க்கான அறிகுறி மெதுவாகத் தோன்றும் என்பதால், ஆறுமாதவரை குடும்பத்தினர் கூட இதைக் கண்டுபிடிக்க முடியாது.

டிமெனிஷயரிவின் இரண்டு வகைகளாக 'அல்செய்மர் நோய்', 'வாய்குலர் டிமெனிஷியா' ஆகியவற்றைச் சொல்லலாம். அல்செய்மர் நோய் உள்ளவர்களின் மூளைச் செல்கள் விரைவாக இறந்துவிடுவதால், மூளையின் செயல்பாடு மற்றும் செயல்திறன் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைப்படுவதாலோ அல்லது மூளையின் நரம்புகள் பாதிக்கப்படுவதாலோ 'வாஸ்குலார் டிமெனிஷியா' ஏற்படுகிறது. இந்த நோய் வந்தவர்களுக்குப் பெரும்பாலும் சர்க்கரை நோயோ அல்லது உயர் இரத்த அழுத்தமோ இருப்பது பின்னால்தான் தெரியவரும். இவையே 'வாஸ்குலார் டிமெனிஷயரி' வரக் காரணமாக அமைந்துவிடுகின்றன.

மேலே குறிப்பிட்ட காரணங்களைத் தவிர வேறு காரணங்களாலும் 'டிமெனிஷயரி' வரலாம். நோய்க்கான சரியான காரணத்தைக் கண்டுபிடிக்க முழுமையான மருத்துவப் பரிசோதனை செய்யப்பட வேண்டும்; மூளையை ஸ்கேன் செய்யும் சோதனையும் அவசியம் செய்ய வேண்டும்.

முதியோர்களிடம் காணப்படும் மனநலக் கோளாறுகள்:

சிந்தனைத் திறனில் ஏற்படும் பாதிப்பை 'மனநலக் கோளாறு' என்று கூறலாம். சிந்திக்கும் திறன் பாதிக்கப்படும்போது, தர்க்கரீதியாக யோசிப்பதும் நிதர்சனத்தை அறிந்துகொள்வதும் பாதிக்கப்படுகிறது. மாயத்தோற்றம், பொய்யானவற்றை நம்புவது, கூர்ந்து ஆராயும் திறனை இழந்துவிடுவது ஆகியவற்றை மனநலக் கோளாறுகளுக்கான அறிகுறிகளாகக் கொள்ளலாம். கண்ணுக்கு முன் இல்லாத ஒன்று, இருப்பது போன்ற பிரமை ஏற்படும்போது மாயத்தோற்றம் உருவாகிறது. எந்த ஒலியும் உண்மையில் ஒலிக்காதபோது ஏதோ சப்தம் கேட்பதாக ஒருவர் நினைப்பதும் உடம்பில் ஏதோ பூச்சி ஊர்வதாக ஒருவர் நம்புவதும் மாயத்தோற்றத்திற்கு உதாரணமாகும். ஒருவர் படித்தவராகவும் பக்தியுடையவராகவும் இருந்தும் அதற்கு நேர்மாறான கருத்துகளை கூறத் தொடங்கினால் 'பொய்யானவற்றை நம்பும்' கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது பொருள். இப்படிப்பட்டவர் தன் மனைவி தமக்கு நம்பிக்கைத் துரோகம் செய்வதாகவும், தனக்கு ஏதேதோ நோய் இருப்பதாகவும், தன்னை ஏதோ ஆபத்து துரத்துவதாகவும் கூறுவார்.

முதிர்ச்சி, காது கேளாமை, கண் பார்வை மங்குதல், சமூகத்தின் புறக்கணிப்பு போன்றவை முதியவர்களிடம் மனநலக் கோளாறுகள் வருவதற்குக் காரணமாக அமைகின்றன. எதிர்ப்புணர்வும் மனச்சோர்வும் முதியோரின் நிலையை மேலும் மோசமாக்கலாம். மனநலக் கோளாறுகளை நீக்க குறைந்த அளவு மாத்திரை தரும் மருத்துவ சிகிச்சையே மேற்கொள்ளப்படுகிறது.

முதியோர் உளவியல் சிகிச்சை திட்டம்

பொதுமருத்துவமனையில், உளவியல் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு உளவியல் சிகிச்சை அளிப்பதற்கென்றே தனி சிகிச்சைப் பிரிவு உள்ளது. இங்கு சேரும் ஒவ்வொரு முதியவரின் உடல்நிலையும் முழுமையாகப் பரிசோதிக்கப்படுகிறது. பின்னர் நோயாளியின் உடல்நிலை, மனநிலை, சமூக மற்றும் சூழல் பின்புலம் போன்றவையும் மதிப்பிடப்படுகிறது. எந்தப் பிரச்சனையால் முதியவர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று ஆராயப்படுகிறது. எங்கள் மருத்துவக் குழுவில் முதுமையியல் மருத்துவர், முதுமையியல் சார்ந்த உளவியல் மருத்துவர், உளவியலாளர், உளவியல் பயிற்சிபெற்ற செவிலியர், தொழில்துறை உளவியல் சிகிச்சை அளிப்போர், சமூகப் பணியாளர்கள் ஆகியோர் உள்ளனர். நோயாளியை முழுமையாகப் பரிசோதித்து மதிப்பீடு செய்த பின்னர், நோயாளிக்கு ஏற்ற சிகிச்சைத் திட்டம் வகுக்கப்படுகிறது. தேவைப்படும்போது நோயாளியின் குடும்பதினரையும் சிகிச்சையில் பங்கு பெறச் செய்கிறோம். நோயாளிக்கு இருக்கும் பலம், திறன் ஆகியவற்றைக் கொண்டே, அவருக்கு உகந்த சூழலை உருவாக்குவதே எங்கள் லட்சியம் ஆகும்.

மருத்துவமனையில் கிடைக்கும் கசிகிச்சை முறைகள்:

தனிப்பட்ட உளவியல் சிகிச்சை குடும்ப ஆலோசனை மருத்துவம் திறமையை மேம்படுத்துதல் புலன்களைத் தூண்டிச் செயல்படவைத்தல் அமைதிக்கான மற்றும் உடற்பயிற்சி சிகிச்சை

முதியோருக்கு ஏற்படும் பல மனநலக் கோளாறுகளை வெற்றிகரமாகக் குணப்படுத்திவிடலாம். உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதன் மூலம் நோயாளியின் மன அழுத்ததைக் குறைத்து, வாழ்க்கை நிலையை மேம்படுத்தலாம். செங்கி பொது மருத்துவமனை அகநோயாளிகளுக்கும் புறநோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கிறது. முதுமையியல் பகல்நேர மருத்துவமனை ஒன்று தேவை கருதி தனியே இயங்கிவருகிறது. நோயாளி குணமாகி வீட்டுக்கு அனுப்பப்பட்டாலும், அதன் பிறகும் எங்கள் மருத்துவர்கள் நோயாளியின் குடும்பத்தாரோடு தொடர்பு வைத்துக்கொண்டு தொடர்ச்சியான சேவையை அளிக்கிறார்கள். தொழில்முறை மற்றும் சமூக சேவை நிறுவனங்கள் நோயளியுடன் தொடர்புவைத்துக்கொள்ளவும் உதவுகிறார்கள். N.BA.நிக்சன்

ஈழ நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் இந்த மகத்தான வித்துக்கள். உரிமைக்காக எமக்காக போராடி வீழ்ந் edit

ஈழ நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் இந்த மகத்தான வித்துக்கள். உரிமைக்காக எமக்காக போராடி வீழ்ந்தவர்களின் கதைகள்

போரையும் போர்சார் விழுமியங்களையும் மதித்து தம் வாழ்வியலுக்கான உரிமைப்போரை ஈழத்தமிழர்கள் நடத்தினார்கள். அதனால்தான் உரிமைப்போரில் ஆகுதியானவர்களின் கல்லறைகளுக்கும் கூட சிங்கள் தேசம் பயப்படுகின்றது.

எதிரி என்பவன் தன்னைக் கொல்லும் ஆயுதத்தை அவன் தாங்கிய படி உயிரோடிருக்கும் வரைக்கும்தான். இறந்தபின்னர் அவனொரு வீரன் அல்லது மனிதன் என்றுதான் எதிரியாலும் பார்க்கப்படவேண்டும்.

ஆனால் ஈழத்தில் இந்தக்கதை வேறாகத்தானிருக்கின்றது. நாம் நிம்மதியாக வாழவேண்டும் என்ற ஒரு சிந்தனையை மட்டும் மனதில் சுமந்தவர்களாய் எதையும் எதிர்பார்க்காத மனிதர்களாய் பல ஆயிரக்கணக்கான மாவீரர்கள் ஈழ மண்ணில் துடிதுடித்து வீழ்ந்தார்கள். அந்த மகத்தான மனிதர்களின் உயிர் உறையும் கதைகள் ஏராளம் ஏராளம்.

இன்று அந்த மாவீரர்களைப் பெற்றவர்கள் எத்தனையோ பேர் எங்கள் தேசத்தின் இருட்டு மூலைகளுக்குள் முடமாகிப் போயிருக்கின்றார்கள். அதில் பலர் களையிழந்து எருக்கலைப் பற்றைகளாகிக் கிடக்கும் மாவீரர் மயானங்களை அடிக்கடி யாரோ ஒருவர்போல் போய் பார்த்து வருகின்றார்கள். கண்ணீரும் செந்நீரும் சிந்திப் பதப்படுத்திய ஈழ நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் இந்த மகத்தான வித்துக்கள்.

சுதந்திரத் தமிழீழத்திற்கான இலட்சியம் வகுக்கப்பட்டு அதற்கான பயணம் 30வருடம் ஜனநாயக வழியில் நகர்ந்தது. அடுத்த 30வருடம் ஆயுதப்போராட்டமாக நகர்ந்தது. இன்றைக்கு இரண்டும் இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால் அன்று தீர்மானித்துக் கொண்ட அல்லது வகுத்துக் கொண்ட இலட்சியம் இன்னமும் அடையப்படாமல்தான் இருக்கின்றது. அந்த இலட்சியத்தை நோக்கிய எங்கள் எதிர்காலப் பயணங்களிற்கு வழிகாட்டிகளாக இருக்கப்போகிறவர்கள் இந்த மாவீரர்கள்தான். அதாவது அறுபது வருட போராட்டத்தில் ஆகுதியான மாவீரர்கள்தான்.

ஆனால் ஜனநாயக வழியிலான போராட்டத்தில் மாண்டுபோனவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற அங்கீகாரம் ஆயுதப்போரில் ஆகுதியானவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. கொடுப்பதற்கு தமிழர்களும் தயங்கினார்கள் என்றே கூறவேண்டும். இன்று ஈழத்திலிருந்த மாவீரர் மயானங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டன. அவற்றில் பல வனாந்தரங்களாக்கப்பட்டு விட்டன. சிலவற்றில் படைமுகாம்களும் அமைக்கப்பட்டு விட்டன. இதற்காக ஈழத்திலும் சர்வதேச மட்டத்திலும் எதிர்ப்புக் குரல் எழுப்பப்படவில்லை. அல்லது எழுப்பப்பட்டும் வெளிவரவில்லை.

ஈழத்தைப் பொறுத்தவரைக்கும் போரில் இறந்துபோன மாவீரர்களின் பெற்றோர் இன்றைக்கும் தங்கள் பிள்ளைகளின் கல்லறைகளை அடர்ந்த பற்றைகளுக்கிடையால் பார்த்துவிட வேண்டுமென்று துடித்துக் கொண்டுதானிருக்கின்றார்கள். உதாரணத்திற்கு கடந்தாண்டு மாவீரர் நாளன்று நவம்பர் 27ம் திகதி கிளிநொச்சி மாவீரர் மயானத்திற்கு அஞ்சலி செய்ய முல்லைத்தீவிலிருந்து வந்த பெற்றோர் இராணுவத்தினரால் திருப்பியனுப்பப்பட்டனர். அந்த நாளில் வீடுகளிற்குள்ளிருந்து அழுது புலம்பிய பெற்றோர் ஆயிரமாயிரம். இவையெல்லாம் அர்த்தமற்றதாகிப் போய்விடுமோ என்ற எண்ணம் எனக்கு அண்மையில் எழுந்தது.

முழங்காவில் வீதியூடாக நாச்சிக்குடா பிரதேசத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தேன். பல்லவராயன்கட்டு பிரதேசத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கும்போது நாச்சிக்குடா சந்திக்கு அருகில் உள்ள தெருக்கரைக் கோவிலுக்கருகில் வீதியில் இடது கரையில் சீமெந்து தூண்கள் போன்ற சிலவற்றைக் கண்டேன். மிக அண்மையில் சென்றபோதுதான் தெரிந்தது அவை மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து பெயர்த்து வரப்பட்ட கல்லறைகளென்று. இடித்து வீசப்பட்ட கட்டிடங்களைப்போல் வீதியின் ஓரத்தில் இடித்து வீசப்பட்டுக் கிடக்கக்கண்டோம்.

பயணித்த வாகனத்தை நிறுத்தி விட்டு தொலைபேசியில் அவற்றைப் படமாக்கியும் கொண்டேன். மிக நெருக்கத்தில் சில நூறு மீற்றர்கள் தொலைவில் காவலரண்கள் அமைக்கப்பட்டிருந்தது. ஊடனடியாக அங்கிருந்து வெளியேறவேண்டும் என என்னுடன் பயணித்தவர்கள் கூறிக்கொண்டிருந்தார்கள். அதற்கிணங்க எல்லோரும் கனத்த மனதோடு அங்கிருந்து சென்றோம். இதுதான் இன்றைக்கு ஈழத்திலுள்ள துயரம் நிறைந்த கதை. உரிமைக்காக எமக்காக போராடி வீழ்ந்தவர்களின் கதைகள் இதுதான்.

அண்மையில் மல்லாவியில் புனரமைக்கப்பட்ட உள்ளக வீதியொன்றிற்கு கொட்டப்பட்ட மண்ணில் விடுதலைப்புலிகளின் சீருடைத் துணியின் துண்டுகளையும் சடல எச்சங்களையும் கூட மக்கள் கண்டுள்ளனராம். ஏன் எங்கள் உணர்வுகள் அவ்வளவு ஏளனத்திற்குரியவையா? அபிவிருத்தி, அமைதியான வாழ்க்கை, போர் மறந்த சூழல் எல்லாவற்றின் வெளிப்பாடும் இதுவாகத்தானிருக்க முடியும்.

ஈழத்தில் தமிழருக்கு அமைதியான சூழலை அரசாங்கம் பெற்றுத் தந்திருக்கின்றதா என்ற கேள்விக்குப் பின்னால் தமிழரின் உணர்வுகளை ஏளனம் செய்து அவர்தம் உரிமைகளை உதாசீனம் செய்து இழிகுலம் போல் நடத்துகின்றது என்ற விடைதான் வரக்காத்திருக்கின்றது.

அடிமைகாளாக வாழோம் என்று புறப்பட்டவர்கள் இன்று எங்கள் வீதியோரங்களிலும் பற்றைகளிற்குள்ளும் புதையுண்டுபோனார்கள். எங்கள் தியாகங்கள் மலிவாகிப்போனது. எங்கள் புறநானூற்றுச் சான்றுகள் இடித்து வீசப்பட்டன. அமைதியாக அடிமையாக பார்த்துக் கொண்டிருக்க போகிறோமா? புலம்பெயர் உறவுகளே குரல் கொடுங்கள். எங்கள் தியாகங்கள் வாழ்ந்து கொண்டிருப்பவை நாம் சிந்திய இரத்தங்கள் நித்தியமானவை, உயிர்கள் நித்தியமானவை அடைவோம் ஒரு நாளில் நிம்மதியான வாழ்வு, அதற்காக எங்கள் மான மாந்தரை போற்றிடக் குரல் கொடுங்கள்….-நிஜத்தடன் நிலவன்

எப்ப விடுதலை? edit

யுத்தம் ஈவு, இரக்கமில்லாது கோரப்பசியோடு வன்னியை விழுங்கி ஏப்பம் விட்டுக் கொண் டிருந்த காலமது. பட்டினியால் எல்லோரது வயிறுகளும் ஒட்டியிருந்தன. கண்ணீரோடு பதுங்கு குழிக்குள் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தாள் ஒருதாய். தன்னுடைய பசியை விடவும் தன் 16 வயது மகனின் பசியே அந்தத்தாய்க்கு பெரிதும் வலியை ஏற்படுத்தியிருந்தது.

இனியும் பொறுக்கமுடியாது. துப்பாக்கிரவைகள் எல்லாத்திசைகளில் இருந்தும் நினைத்த நேரங்களில் வந்து கொண்டிருந்தன. மகனைத் தனியே விட்டுவிட்டுச் செல்லவும் பயமாக இருந்தது. மனதைத் திடப்படுத்திக் கொண்டு, சிறிய குழி ஒன்றுக்குள் மகனை இருத்தி விட்டு , அதன் மேல் வீட் டுப் பாவனைபொருள்களைப் பரப்பி உருமறைப்புச் செய்து விட்டு கையில் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொண்டு வெளியே ஓடினாள். அரிசிக் கஞ்சி ஊற்றுகின்ற இடத்துக்குச் சென்று, வாங்கிய கஞ்சியின் சூடு ஆறு வதற்கிடையில் ஓட்டமும் நடையுமாக தன் கூடாரத்துக்கு திரும்பி வந்த தாயின் கையிலிருந்த கிண்ணம் தன் பாட்டிலேயே கீழே வீழ்ந்தது. அவளது மகன் அந்தச் சிறுஇடைவெளிக்குள் பல வந்தமாக ஆயுதப்போராட்டத்துக்காக கொண்டுசெல்லப்பட்டிருந்தான். தாய்மார் எல்லோருமே குண்டுகளிடமிருந்தும், பலவந்த ஆள்சேர்ப்பிலிருந்தும் தம் பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்காக நிறையவே போராடவேண்டியிருந்தது.அதன் பிறகு அவளது நாள்கள் ஒவ்வொரு பயிற்சி முகாம்களுக்கும் முன்னால் நின்று கண்ணீரோடு மகனைத் தேடியலைவதாகவே கழிந்தது. இறுதியில் ஒருநாள் அவள் தன் மகனைக் காணநேர்ந்தது. அது கந்த கப்புகை அடங்கத்தொடங்கியிருந்த பொழுது. ஊழி முடிந்து போய்விட்டதாக அறிவிக்கப்பட்ட நாளில் அனல்கொட்டும் வெளியில் அமர்த்தப்பட்டிருந்தவர்களில் அவளது மகனும் ஒருவன். தூரத்தே நின்று தான் அவனைப்பார்க்க முடிந்தது. காயம்பட்ட காலோடு இலையான்கள் மொய்த்துக் கொண்டிருக்க ஏக்கப்பார்வையோடு அவனும் தாயைப்பார்த்தபடியிருந்தான்.

எல்.ரீ.ரீ.யில் இருந்த ஆக்கள் இந்தப் பக்கம் வாங்க. ஒரு சின்ன விசாரணைக்குப் பிறகு நீங்கள் உங்கட குடும்பத்தோட போகலாம். பலமுறை அறிவித்த பின்பு விசாரணையின் பின் மீண்டும் பழைய வாழ்வுக்குத் திரும்பலாம் என்ற நம்பிக்கையுடன் ஏராளமானோர் படையினரிடம் சரணடைந்தனர். அந்தத்தா யின் பிள்ளையும் சரணடைந்தவர்களில் ஒருவன். அவனைப் படையினர் வாகனத்தில் ஏற்றும் சமயம் தாய் அடக்கி வைத்திருந்த அத்தனை சோகங்களோடும் பெயர் தெரியாத சிப்பாய்களின் கால்களில் விழுந்து கதறினாள்.ஐயோ! என்ர ஒரேயொரு பிள்ளை! அவனுக்கு ஒண்டும் தெரியாதையா. அவங்கள்தான் வைபோஸா கொண்டு போனவங்கள். அவனை விட்டிடுங்கோ!

அந்தக்கதறல்கள் அவர்களின் மனதைக் கொஞ்சம் கூட அசைக்கவில்லை.மீண்டும் அவளது தேடுகை வாழ்வு தொடர்ந்தது. எல்லாத் தடுப்பு முகாம்களுக்கும் அலைந்து கடைசியாக தன் மகனை அவள் கண்டுபிடித்தாள். ஆனாலும் எப்போதாவது தான் அவனைப் பார்க்கமுடியும்,. அதுவும் சில மணித்தியாலங்கள் மட்டுமே. இது போல இன்னும் பலர்ஆயிரக்கணக் கானோர் தம் உறவுகளைத் தடுப்பில் காண அலைந்து திரி கின்றனர்.

அதேவேளை தடுப்பில் இருப்பவர்களின் நிலையும் இன்னும் மோசமானது. அவர்களில் பெரும்பாலானோர் பல வந்தமாகவே ஆயுதப்போராட்டத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டவர்கள். ஒருநாள் போராளியாக இருந்தவர்கள் கூட வருடக் கணக்கில் தடுப்பில் வாட வேண்டிய கட்டாயம். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மாத்திரமல்லாது நலன்புரி நிலையங்களிலும் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் விசார ணைக்கெனக் கூட்டிச் செல்லப்பட்டனர். இன்னும் சிலர் சரணடைந்திருந்தனர். அவர்களில் பலருக்கு என்ன நடந்ததென்றே தெரியாத நிலை. எஞ்சியோர் இப்படிப்பட்ட தடுப்பு முகாம் களில் அடைக்கப்பட்டனர். சென்ற வருட இறுதிக்குள் தடுப்பு முகாம்களில் இருப்பவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுவிடுவர் என்று அரசு கூறியபோதும் அது இதுவரை நிறைவேறவேயில்லை. கட்டம் கட்டமாக சிலர் விடுவிக்கப்பட்டாலும் இன்னும் ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகள் தடுப்பில் தான்.

எல்லாச் சித்திரவதைகளையும் விட அதிகவலியை உண்டாக்கக்கூடியது விடுதலைக் கான நாள் எப்போதெனச் சொல்லாது சிறையிலேயே காத்திருக்கவைத்தல்தான். மனதளவில் ஏற்கனவே பெரும் காயங்களை சுமந்தவர்களாகச் சரணடைந்தவர்கள், எப்போது மீண்டும் தம் குடும்பத்துடன் இணைவது என்ற கனவுடன் தான் தடுப்பில் ஒவ்வொரு நாளையும் போக்காட்டுகின்றனர். எப்போதும் தம் வீடு, குடும்பம், பிள்ளைகள், மனைவி மற்றும் உறவுகள் பற்றிய சிந்தனைகளே அவர்களது எண்ணங்களை இடைவிடாது ஆக்கிரமித்து நிற்கின்றன.இதன் விளைவுகள் விஸ்வரூபம் எடுக்கும் போது அவை பயங்கரமானவையாக அமைந்து விடுகின்றன. அண்மையில்அடுத்தடுத்து இரு வேறு தடுப்பு முகாம்களில் நிகழ்ந்த முன்னாள் போராளிகள் இருவரின் மரணங்களும் இத்தகைய மன உளைச்சல் காரணமாகவே ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. வவுனியா தொழினுட்பக்கல்லூரியில் உள்ள தடுப்பு முகாமில் தற்கொலை செய்து கொண்ட ஆசிர்வாதம் நியூஸ்டன் தினமும் முகாம் பொறுப் பதிகாரியைச் சந்தித்து எப்ப என்னை வீட்டை விடு வீங்கள்? எனத் தவறாது கேட்டு வந்திருக்கிறார். விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்று சொல்லப்பட்டதே தவிர அவர் விடுதலையாவதற்கான அறிகுறிகளே இல்லை. இந்நிலையில்தான் அங்குள்ள கிணற்றில் வீழ்ந்து அவர் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

தடுப்பில் இருந்து வெளியே வந்தாலும் எப்படி தம் வாழ்வைக் கொண்டு செல்வது என்ற கேள்வியும் இவர்களுக்கு இல்லாமலில்லை. புனர்வாழ்வு என்ற பெயரில் அவர்களுக்கு சில தொழிற்பயிற்சிகளை வழங்கி தொழில் வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்கப்போவதாகவும் அரசு பீற்றிக்கொண்டாலும் அதுவும் உருப்படியாக நடக்கவில்லை. ஏற்கனவே விடுவிக்கப்பட்ட வர்களுக்கே இன்னமும் உரிய தொழில்வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கமுடியாத நிலையில் இப்போதும் உள்ளே இருப் பவர்களுக்கு மட்டும் எப்படி வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என நம்ப முடியும்?

சரி, அரசை நம்பாது தமது சொந்தக்காலில் நிற்க முன்னாள் போராளிகள் நினைத் தாலும் கூட அவர்கள் மீதான சந்தேகப் பார்வையை சமூகம் அகற்றுவதாக இல்லை. முன்னாள் போராளிகள் என்ற காரணத்தைக்காட்டியே அவர்களுக்கான வேலைகளை வழங்கவோ கடன் கொடுக்கவோ பலரும் தயங்குவதாகவும் கூறப்படுகின்றது. ஏனெனில் அவர்களைத் தம் தொழில் ஸ்தாபனங்களில் வைத்திருப்பதன் மூலம் பின்னாள்களில் ஏதேனும் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடுமோ என்ற பயம்தான் இதற்குக்காரணம்.

அதை விடத் தடுப்பில் இருந்து விடுவிக்கப்படுபவர்களில் அநேகர் சிலநாள்களின் பின் மீண்டும் கைதாவதும் தொடர்கதையான விடயம். அவ்வாறு கைது செய்யப்படு பவர்களின் கதி என்னவென்றும் தெரியவில்லை. எனவே தடுப்பில் இருப்பதும் இயலாத விடயம்; வெளியே சென்று வாழ்வதும் சவாலான சங்கதி. தடுப்பு முகாம் எண்ணெய்ச்சட்டி என்றால் வெளியே பற்றியெரியும் நெருப்பு. அங்கும் செல்ல முடியாமல் உள்ளேயும் இருக்கமுடியாத இருதலைக் கொள்ளி எறும்பின் நிலைமை தடுப்புமுகாமில் இருப்பவர்களுக்கு . எனவேதான் இவை எல்லாவற்றையும் யோசித்து மன அழுத்தத்துக்கு உள்ளாகும் முன்னாள் போராளிகள் விரக்தியின் விளிம்பில் தற்கொலையே ஒரேயொரு தீர்வென தவறான முடிவை எடுத்து விடுகிறார்கள்.

தடுப்பில் உள்ளவர்களை அவர்களது உறவுகள் சென்று பார்வையிடுவதும் அடிக்கடி நடைபெறக்கூடிய ஒன்றல்ல. பெரும் பணச்செலவு, நேரச் செலவு, பாதுகாப்புக் கெடுபிடி கள் என்பவற்றைக் கடந்தே அவர்கள் தம் உறவுகளைச் சந்திக்கவேண்டியுள்ளது. (தடுப் பில் உள்ளவர்களைச் சந்திக்கவெனச் செல்பவர்களுக்கு குறிப்பிட்ட சிறு தொகையை வழங்கி வந்த சர்வதேசச் செஞ்சிலுவைக் குழுவின் அலுவலகங்களும் மூடு விழாக் கண்டுவருகின்றன.) நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் அண்மையில் வன்னி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற போது,ஏராளமானோரின் சாட்சியங்கள் கண்ணீராலேயே பதிவு செய்யப்பட்டன. அவர்களின் உறவுகள் காணாமல்போன தாகக் கருதப்படுபவர்கள்; அல்லது கைதானவர்கள்; அல்லது இறுதி யுத்தத்தின் போது சரணடைந்தவர்கள். தமது உறவுகள் எங்கிருக்கிறார்கள் என்பதே தெரியாமல் அல்லும் பகலும் அவர்களைத் தேடி அலைதலையே தம் வாழ்வியலாகக் கொண்டிருப்பவர்கள். காணாமல் போன வர்கள் எங்கிருக்கிருக்கிறார்கள் எனக் கண்டு பிடித்துத் தரும்படியும், தடுப்பு முகாம்களில் இருப்பவர்களை மீட்டுத்தரும்படியும், விழிநீரால் இவர்கள் பதிவு செய்த சாட்சியங்கள் போர் நிகழ்ந்து முடிந்த பின்னரும் நீள் கின்ற அவலத்தைச் சொல்லி நின்றன. இது தொடர்பில் எவ் விதத் தட்டிக்கழிப்புகளும் சொல்லமுடியாததால், தடுப்பு முகாம்களுக்கும், கைதானவர் கள் தடுத்து வைக்கப்பட்டிருக் கும் ஏனைய இடங்களுக்கும் நேரடியாகச்சென்று காணாமல் போனோர் பற்றிய தகவல்களை அறிந்து சொல்வதாகவும், தடுப் பில் உள்ளவர்களை விரைவில் விடுவிக்கவோ அல்லது அவர்கள் மீதான சட்டநடவடிக் கைகளைத் துரிதப்படுத்துவதன் மூலம் விடுதலையை விரைவாக்குவதாகவும் தேர்தல்கால அரசியல்வாதிகளைப் போல நல்லிணக்க ஆணைக்குழுவினர் வாக்குறுதிகளை அள்ளிவிட்டனர். இப்போது ஆணைக்குழுவின் ஆயுள் இன்னும் ஒருவருடத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையிலும் காணாமல்போனோர் மற்றும் தடுப்பில் உள்ளவர்களின் நிலை மையில் எவ்விதமுன்னேற்றமும் ஏற்படவேயில்லை.

இனியாவது தடுப்பு முகாம் களில் உள்ளவர்களின் விடுதலையை அரசு துரிதப்படுத்துவ துடன், அவர்களுக்கான வாழ் வாதாரத்தொழில் வாய்ப்புகளை யும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அத்துடன் சமூகத்தவர்களும் முன்னாள் போராளிகளின் சமூக ஒன்றிணைதலை சிதைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத்தவிர்க்க வேண் டும். ஏனெனில் தடுப்பில் உள் ளவர்கள் எல்லோரும் விடிந்த தும் கேட்கின்ற கேள்வி எங்களுக்கு எப்ப விடுதலை? என்பதுதான். அவர்களது வாழ்வும் நாளும் வீணடிக்கப்படுமானால் ஏற்கனவே நிகழ்ந்தது போன்ற தடுப்புமுகாம் தற்கொலைகள் அதிகரிக்கவே செய்யும். வெளியே வரத்துடிக்கின்ற முன்னாள் போராளிகளின் வாழ்வு மீதான நம்பிக்கையைக்காக்கவேண்டியது அரசினதும் , நம்மவர்களினதும் கடமை. — Preceding unsigned comment added by 122.107.102.68 (talk) 09:37, 13 August 2016 (UTC)Reply

உன்னிப்பாக செவிமடுத்தல் edit

செவிமடுத்தல்

எந்த ஒரு மனிதனதும் செயற்பாடுகளும், பேச்சுக்களும் வித்தியாசமானவை. இவை ஒவ்வொரு மனிதனதும் எண்ணங்களிற்கு ஏற்ப வேறுபடும் தன்மையினைக் காணலாம்.பேசும் விதம்,பேசும் விடயம், நடை, தலையசைவு, கைகட்டியிருக்கும் முறை, இருக்கும் பாங்கு, சிரிக்கும் விதம், இதனைவிட உடலின் அங்க அமைப்புக்கள் ஆகியவற்றைக் கொண்டு ஒரு மனிதனைப் பற்றிக் கூற முடியும். இதனைக்கொண்டே முன்னைய காரத்தில் ஞானிகள் மனிதர்களுடைய குணப்பன்புகளினைக் கூறியருந்தனர். ஆந்தவகையில் உளவத்துணை சார்ந்த செயற்பாடுகளிற்கும் இவற்றின் தேவையினை நோக்கவேண்டிய தேவையுண்டு.

புறச் சூழலில் நடைபெறும் விடயங்களை ஜம்புலன்கள் மூலம் அவதானிப்பதாகும். இச்செவிமடுத்தல் உளவளத்துணைக்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. முதலில் துணையாளர் காதுகொடுத்து உண்ணிப்பாகக் கேட்பவராக இரு;தல் வேண்டும். துணைநாடி வருபாவர் வாய்மொழியாகவோ, வாய்மொழியில்லாமலோ, அல்லது தெளிவில்லாமல் சொல்லும் செய்திகளை புரிந்து கொண்டு கேட்கும் திறனாகும். இது மட்டுமல்லாது, உடல் அசைவுகளையும், பெருமூச்சு, மௌனம், பேச எடுக்கும் நேரம், வார்த்தையின் தொனியின் ஏற்ற இறக்கங்கள், அவரது தோற்றத்தினையும், இருக்கும் விதத்தினையும் அவதானக்க வேண்டும். இவை ஆலோசனை நாடினைனுடைய வாய் மொழி வரும் மூலம் வரும் தகவல்களை விட மேலதிகமான தகவல்களைத் தரும் வாய்மொழித் தகவல்கள் பொய்யாக இருந்தாலும் உடல் அசைவுகள் மூலம் கிடைக்கும் தகவல்கள் பூரணமானவையாக இருக்கும். ஆகவே செவிமடுப்பவர் கேட்கும் துணைநாடி வந்தவர் சொல்லாதவற்றிற்கும் இதைத்தான் சொல்லப் போகிறார், சொல்லத்தான் நினைக்கிறார் என்பவற்றிற்கும் செவிமடுக்க வேண்டும். இவை துணைநாடியின் அக உலகத்திற்குள் செல்வதற்கு வழிகாட்டியாக அமையும். மேலும் மொழின் உபயோகங்கள் அல்லாத குறியீடுகள் 'அங்கமொழிகளாகும்' (ழேn ஏநசடியட) முகபாவனைகள், மெய்ப்பாட்டு நிலைமைகள், உதவியாளருடன் கொண்டுள்ள இருக்கை இடைவெளி போன்றவை உதவி நாடியின் மனநிலையை எடுத்துக்காட்டுவதாக அமையும். ஆகவே, செவிமடுக்கும் போது உண்மைகளை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இல்லாமல், பேசுபவருடைய கருத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமென்ற நோக்குமும் வார்த்தைகளுக்கு மட்டுமல்லாமல், சொல்பவரின் உணர்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும் என்ற ஆர்வமும் அடிமனதில் ஆழமாய் இருக்க வேண்டும்


உளவளத்துணைச் செயற்பாட்டின் உயிர் நாடியாக விளங்குவது செவிமடுத்தலாகும் செவிமடுத்தல் என்பது ஒருவர் கூறுவதைக் கேட்பதோடு மட்டுமல்லாமல் அதில் அடங்கியுள்ள எல் அம்சங்களையும் கருத்ததில் கொள்வதாகும். செவிமடுத்தலில் பல அம்சங்களை அவதானிக்கலாம். உதவி நாடி தன்னுடைய உணர்வுகளை வெளிப்படத்த உபயோகிக்கும் நோரடி வார்த்தைகள்அவர்கள் தெரிவு செய்யும் தொடர் மொழிகள்உடல்சார்ந்த வெளிப்பாடுகள் அவர்கள் பேசுவதற்கு எடுக்கும் நேரம் தொனியின் ஏற்ற இறக்கங்கள் போன்ற அம்சங்கள் அனைத்தும் செவிமடுத்தலில் அடங்கியுள்ளது. இவையாவும் உதவிநாடியின் மன உலகிற்குள் செல்வதற்கு வழிகாட்டியாக அமைந்துள்ளன. எனவே உளவளத்துணையின் அடுத்த கட்டங்களிற்கு செல்வதற்கு செவிமடுத்தல் மிகப் பிரதான பாகத்தை வகிக்கின்றது.


செவிமடுத்தலின் வகைகள் ஆற்றுப்படுத்தும் கலைத்திறனைச் சார்ந்த உளவியலாளர்கள் இக்கலைக்குத் தகுந்தாற்போல் செவிமடுத்தலைப் பல வகைகளாகப் பிரிக்கின்றனர்.

செவிமடுப்பதாக நடித்தல் A என்பவர்; உளவளத்துணையாளர் பயிற்சிப் பெற்றுக் கொண்டிருப்பவர். இவரது உடலியல் கவனிப்புகள் மிகச்சிறந்ததாக இருப்பதாக இவருடைய தோழர்கள் கூறினார்கள். ஆனால் யு துணைநாடி பேச ஆரம்பித்தவுடன் செவிமடுத்தலை நிறுத்திவிடும் பழக்கத்தை உடையவர். இதனால் துணைநாடிக்கு பதிலிருக்கும் போது சரியாகத் திருப்பிச் சொல்ல தடுமாறுகின்றார். ஆனால் தொடர் சொல் வாக்கியங்களான 'நான் புரிந்து கொள்கின்றேன்', 'மிகவும் ஆர்வமுள்ளதாகவுள்ளது' போன்ற தூண்டுதல்களைக் கொடுத்து கொண்டே இருக்கின்றார். இதனால் துணைநாடி தனது உரையாடலைத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றார். இப்படிப்பட்ட செயற்பாட்டுக்குத்தான் செவிமடுப்பதாக நடித்தல் என்று பெயர். இங்குப் பெட்டி நன்கு செவிமடுப்பதாக நடித்தாரேயொழிய உண்மையிலேயே செவிமடுக்கவில்லை. இவ்வாறு செவிமடுப்பதாக நடித்தல் துணைநாடிக்கு நாம் செய்யும் அற்பமான சேவையாகும்.

அரைகுறையாக செவிமடுத்தல் B என்பவர் சிறந்த செவிமடுப்பவரும் உளவியலாளரும் ஆவார். தாஸ் சில சமயங்களிலே அவ்வப்போது கண்ணயர்ந்து விடுகின்றார். ஆனால் துணைநாடி, உளவியலாளரின் கண்ணயர்தலைக்கண்டு கொள்ளாமல் பகிர்ந்து கொண்டே இருக்கின்றார். முடிவில் டி முற்றிலும் கேட்காத குறைவினால் துணைநாடி கூறிய சாராம்சத்தைக் கண்டு கொள்ள முடியவில்லை. இதற்குத் தான் பகுதிச் செவிமடுத்தல் என்று பொருள். பிரச்சனையை முழுவதுமாகக் கேட்காத போது உளவளத்துணையாளர் முழுமையாக வருபவருக்கு உதவி செய்ய முடியாது.

தெரிந்தெடுக்கிற செவிமடுத்தல் C அனுபவமிக்க உளவளத்துணையாளர். இவர் கல்லூரியில் பணி புரிகின்றார். வழக்கமாக மாணவர்கள் பலப்பிரச்சனைகளையும் அதோடு தொடர்பானவற்றையும் கூறுவது வழக்கம். ஆனால் உ ஒரு சிறந்த உளவளத்துணையாளராக இருப்பதால் பிரச்சனைக்குத் தொடர்பானவற்றை மட்டுமே தேர்ந்தெடுத்துக் கொண்டு மற்றவைவையனைத்தையும் விட்டுவிடுவார். இது சிறந்த உளவளத்துணையாளருக்கு தேவையான சிறந்த யுக்தியே. அதேசமயத்தில் தெரிந்தெடுத்துச் செவிமடுப்பதால் சில சமயங்களில் முக்கியமானச் செய்திகளை உளவளத்துணையாளர் விட்டு;விடக் கூடாது.

கருத்துக்குப்புறவுருக் கொடுக்கிற செவிமடுத்தல் துணைநாடி பகிர்ந்து கொண்டிருக்கும் போது உளவளத்துணையாளர் தன்னுடைய சிந்தனையில் உள்ளவற்றை வருகின்ற நபர்மேல் சாற்றி வந்தவர் கூறுவது பேல கேட்பதே பிறர்மேல் சாற்றுகின்ற செவிமடுத்தலாகும். உதாரணமாக கார்ல் என்பவர் சமூகப் பணியாளர். இவர் பெரும் தன்மையுடன் மக்களுக்குப் பணிபுரியும் மருத்துவ மனையில் முழு நேரப்பணியாளர்.

பலப்பிரச்சனைகளுடன் வருபவர்களுக்கு உதவுதுடன் நிதியுதவியும் செய்பவர். இந்நிலையில் ஒரு நடுத்தர வயதுள்ள மனிதர் அவரிடம் வந்து தனது நோயைப்பற்றி குறைகூறிக் கொண்டிருந்தார். ஆனால் கார்ல் தனது சிந்தனையில் உள்ளவையான நிதியுதவிப் பிரச்சனைகள் பற்றி தான் வந்தவர் பேசுகின்றார் என்று நினைத்து பதிலளிக்க ஆரம்பித்தார். வந்த நபர் நிதியுதவிக்காக வராவிட்டாலும் தனது சிந்தனையில் உள்ளதை வந்த நபரின் மேல் சாற்றிப் பதிலளிக்கிறார். இதற்குத்தான் பிறர்மேல் சாற்றுகின்ற செவிமடுத்தல் என்று பொருள்.

வடிகட்டியச் செவிமடுத்தல் D என்பவர் நன்குப்படித்தவர். இவருக்கு ஆளுமைப்பற்றியக் கோட்பாடுகளும், சிறந்த உளவியல் பின்னனியுமுண்டு. நான்சி என்ற பெண் ஒரு நாள் உளவளத்துணைக்கு இவரிடம் வந்தபோது நன்முறையில் ஆய்ந்து தெளிந்து பிரச்சனைகளைப் புரிந்துக் கொண்டு உதவிச் செய்தார். ஆனால் நான்சியைக் கடைசியில் கேட்டபோது அவர் சிறிதளவும் திருப்தியடையவில்லை. காரணம் என்னவெனில் ன ஒரு கோணத்தில்தான் அந்தப் பெண்ணின் பிரச்சனையைத் தேர்ந்து தெளிந்தார். எனவே ஒரு நபருக்கே உரிய முன்சார்பு எண்ணங்கள், தனிப்பட்ட சமூதாய கலாச்சார விருப்பு வெறுப்புகள் முழுமையான செவிமடுத்தலுக்குத் தடையாக அமைவதே வடிகட்டியச் செவிமடுத்தல் என்று கூறலாம். மேற்கண்ட உதாரணத்தில் ன என்பவருக்குத் தெரிந்த ஆளுமைப்பற்றிய கோட்பாடுகளே அவர் கண்களை மறைக்கும் தடைகளாக மாறின.

முழுமையானச் செவிமடுத்தல் எனக்குத் தெரிந்த ஒரு நபர் பலமணி நேரம் அமர்ந்து மக்களின் பிரச்சனைகளைக் கூர்மையாகக் கேட்டுக் கொண்டே இருப்பார். ஆனால் உளவளத்துணைப்படுத்தும் கலையிலே பயிற்சிப் பெற்றவர் அல்ல. இருந்தாலும் மக்கள் கூட்டம் குறைந்தபாடில்லை. காரணமென்னவெனில் அவர் மக்கள் கூறும் பிரச்சனையை கவனமாகவும், முழுமையாகவும் கேட்டு அதற்குச் செவிமடுத்தும் வருகின்றார். அவர் மக்கள் கூறும் பிரச்சனைகளை அப்படியே குறைக்காமல், கூட்டாமல், பிரச்சனையோடு வருகின்ற மக்களின் இடத்தில் தான் நின்று எடுத்துக் கூறுவதால்தான் மக்கள் கூட்டம் அவரிடம் மலையாகக்குவிகிறது. எனவே முழுமையாகச் செவிமடுத்தல் என்பது துணைநாடியின்; பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு தான் புரிந்து கொண்டதை துணைநாடிக்கு புரியவைப்பதேயாகும்.

நல்ல முறையில் செவிமடுக்க:  பேசுபவருக்க நேர்முகமாக அமர்தல் வேண்டும். அவர் கண்களையும், முகபாவங்களையும் நாம் பார்க்க ஏதுவாக அமர்ந்து இருக்க வேண்டும்.

 பிறரது இடையூறு இல்லதாவண்ணம் தனிமையான இடமாக இருப்பது விரும்பதக்கது.

 பிற வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு நன்றாக கவனிக்கும் வண்ணம் நேராக நிமிர்ந்து அமர்ந்து கொள்ள வேண்டு;ம். (ஓய்வாகச் சாய்ந்து அமரக்கூடாது)

 ரேடியோ, டேப்ரிக்காடர், போன்ற ஒலிக்கருவிகளை நிறுத்திவிட வேண்டும். இவை வெளியிலிருந்து வரும் தடைகள்.


 உள்ளார்ந்த தடைகளான எண்ணங்கள், கவலைகள், வேலைகள் பற்றிய நினைவுகள் இவற்றை ஒதுக்கி வைத்துவிட வேண்டும். பகிர்ந்து கொள்பவரின் பிரச்சனைக்கு உடனே தீர்வு சொல்லிவிட வேண்டும் என்ற ஆசையை அறவே விட்டுவிட வேண்டும்.

 பகிர்ந்து கொள்பவர் பயன்படுத்தும் உணர்ச்சிமிக்க வார்த்தைகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். பல்லைக் கடிப்பது, கண்ணீர் விடுவது, பெருமூச்சு விடுவது, மௌனமாக இருப்பது போன்ற சொல்லாத சொற்களை கூர்ந்து கவனிக்க வேண்டும்.

 அவர் உடலில் ஏற்படும் மாற்றங்களையும் கவனிக்க வேண்டும். (உ-ம்: தோளைக் குலுக்குதல், முகம் சிவத்தல்...) தெளிவில்லாதவற்றைப்பற்றி விளக்கம் கேளுங்கள். தேவைப்பட்டால் சில அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

செய்யக்கூடியவை:

 நீங்கள் நீங்களாகவே இருங்கள். முக முடிகள் வேண்டாம். 'எல்லாம் தெரிந்தவர்' என்ற நினைப்பு வேண்டாம். கேட்கும் போது உங்களுக்கு ஏற்படும் உணர்ச்சிகளை உதவி பெறுபவருக்கு நலம் பயக்குமெனில் இயற்கையாக வெளிப்படுத்துங்கள்.

 முழுமையான செய்தியையும், உணர்ச்சிகளையும் கவனியுங்கள். பகிர்ந்து கொள்பவரின் மையப் பிரச்சனை இறுதி நேரத்தில் கூட வெளிப்படலாம். ஆகவே, சிறிது நேரம் உன்னிப்பாகக் கவனித்து விட்டு பிறகு தளர்ந்துவிடாதீர்கள்.

 தேவைக்கு தகுந்தவாறும், புத்திசாலித்தனமாகவும் பதில் கூறுங்கள். அதிகம் பேசாதீர்கள். தவறான வழிகளைக் கூறாதீர்கள்.

 ஆர்வத்தையும் அன்பையும் வெளிக்காட்டுங்கள். வந்திருப்பவருடைய பிரச்சனைகளைக் காது கொடுத்து கேட்க நீங்கள் தயாராக இருப்பதாகவும் அவருடைய பிரச்சனையில் உங்களுக்கு அக்கறை உண்டென்றும் உங்கள் சொல், முகபாவம் என்பவற்றால் வெளிப்படுத்துங்கள்.

 வருபவரை மதியுங்கள். எல்லாரும் மதிக்கப்பட விரும்புகின்றனர். எல்லா மனிதரும் மதிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். பிரச்சனைகளோடு வருபவர்களை மதித்து ஏற்றுக் கொள்ளும் போது அவர் தன்னுடைய ஆளுமை வளர்வதாக கருதி தன்னை மதிப்பவரிடம் மனம் திறந்து பகிர்ந்து கொள்கிறார்.

 தேவையான போது பொறுப்போடு;ம் அன்போடும் ஆறுதல் அளியுங்கள். ஆறுதல் வார்த்தைகள் சில வேளைகளில் பகிர்வை அதிகரிக்க உதவும்.

 பிரச்சனையை அடையாளம் கண்டு கொள்ளவும், தீர்வு காணவும் உதவுங்கள்.

 எளிமையான, இனிமையான, நேரான வார்த்தைகளை உபயோகிங்கள்.  பிரச்சனையோடு வருபவர் தன்னுடைய பிரச்சனைக்குரிய பொறுப்பை ஏற்றுக் கொள்ள உதவுங்கள்.

 இறைவன் அவனை அல்லது அவளை அன்பு செய்கிறார் என்பதை உறுதிப்படுத்துங்கள்.

செய்யக் கூடாதவை:

 தீர்ப்பிடாதீர்கள்:

 பேசுபவரின் சொல், செயலைக் கண்டு தீர்;மானமாக எதுவும் சொல்லாதீர்கள். அவரின் நோக்கம் நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. அவர் கோபப்படுகிறார் என்றால் சுயநலவாதி என்று அர்த்தமில்லை. திரும்பிப் பார்க்கிறார் என்றால் ஆர்வமாக இல்லை என்று பொருளில்லை.

 கிளறாதீர்கள் பேசுபவர் சொல்வதைத் தவிர அவரிடம் வேறெதுவும் கேட்காதீர்கள். உங்கள் கவனத்தை அவர் விரும்புகிறாரேயொழிய அனாவசிய கிளறலை அல்ல. அனாவசியமாகக் கிளறும் போது அவர் உளவளத்துணருடைய அக்கறையைச் சந்தேகிக்கத் தோன்றும்.

 அறிவுரை கூறாதீர்கள்

 புத்திமதி கூறுவது எல்லோருக்கும் எளிது. உங்கள் புத்திமதி அவரைக் குற்றப்படுத்தலாமேயொழிய அவருக்கு உதவி செய்ய முடியாது. புத்திமதியைக் கேட்கும் நபர் தன்னை உளவளத்துணையாளர் பரிந்து கொள்ளவில்லையே என்றுதான் அதிக ஆதங்கம் கொள்ளலாம்.

 சீக்கிரமாக முடிவுக்கு வந்துவிடாதீர்கள்

 அவரை முழுமையாகப் புரிந்து கொள்ள நிறைய நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். குறுக்கீடு செய்யாமல் அவரை மனந்திறந்து உரையாட அனுமதியுங்கள்.

 பிரச்சனைகளைக் பொதுவாக்காதீர்கள்

 ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மை வாய்ந்தவன். ஆகவே ஒவ்வொருவருடைய பிரச்சனையும் தனித்தன்மையுடையது. ஒருவருடைய பிரச்சனையை இன்னொருவருடைய பிரச்சனையோடு பொருத்திப் பார்க்காது தனிப்பட்டதாக பாருங்கள்.

 அதிகமாகப் பேசாதீர்கள்

 பிரச்சனையோடு வருபவர் பேச அனுமதியுங்கள். நீங்கள் பேசத் தொடங்கி விட்டால் பிரச்சனையோடு வந்தவர் தன் பிரச்சனையை மறந்துவிட வாய்ப்புண்டு. பிரச்சனை உங்களுக்கா அவருக்கா என்ற சந்தேகம் வந்துவிடும்.

 பிறருடைய மனநிலையை மதிப்படாதீர்கள்

 எண்ணங்களின் தொகுப்பு மனநிலையாகின்றது. நீங்கள் பிரச்சனையோடு வருவோரைக் குறித்து கொண்டிருக்கும் எண்ணங்கள் அவர் அவரது பிரச்சனையை இன்னொருவருடைய பிரச்சனையோடு பொருத்திப பார்க்காது தனிப்பட்டதாக பாருங்கள்.

 பெரிய பெரிய வார்த்தைகளை தவிர்த்து விடுங்கள்

 பேசுபவர் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் எளிய வார்த்தைகளை உபயோகிங்கள். கடினமான சொற்களைப் பயன்படுத்தும் போது கேட்பவருக்கு உங்கள் கருத்து புரியாமற் போகலாம். அதற்கு விளக்கம் கொடுக்கும் போது உங்கள் பேச்சு திசை திரும்பி விடலாம்.

 பிரச்சனைகளுக்கு நீங்களே தீர்வு கொடுக்காதிருங்கள்

 பிரச்சனைகளுக்கு நீங்களே தீர்வு கொடுக்க முற்பட்டால் நீங்கள் பிரச்சனையோடு வந்தவரின் திறமையில் நம்பிக்கை வைக்கவில்லை என்றே பொருள். பிரச்சனையின் தீர்வை பிரச்சனையோடு வந்தவரே கண்டு கொள்ள உதவுங்கள்.

அதிர்ச்சி அடையாதிருங்கள்:

 பேசுபவர் எவ்வளவு பெரிய பிரச்சனையைச் சொன்னாலும் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். வாயைப் பிளக்காதீர்கள். உலகத்தில் எதுவும் நடக்கலாம். நாம் அதிர்ச்சி அடையும் போது வந்தவர் பகிர்ந்து கொள்ளாமலே பயந்து போக வாய்ப்புகள் அதிகம்.

விவாதிக்க வேண்டாம்:

 வந்திருப்பவர் உங்களோடு பட்டிமன்றம் நடத்த வரவில்லை ஆகவே எதிர் கேள்விகள் கேட்டு, குறுக்கு விசாரணை செய்யாதீர்கள்.

கதையளப்பதல்ல:

 பிரச்சனையைத்த தவிர வேறு எந்த காரியத்தைப் பற்றியும் பேசாமல் இருப்பது நல்லது. இல்லையேல் நேரம் விரயமாவதுடன், பிரச்சனையைப் பற்றிய ஆழமான பகிர்வு இல்லாமற் போகும்.

தவறான முறையில் உறுதி கூறாதிருத்தல்:

 உங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட உதவிகளைச் செய்வதாக வாக்குறுதி அளிக்காமல் அவருக்குத் தகுந்த பாதையைக் காட்டுங்கள்.

சிரிக்காதீர்கள்:

 உங்கள் சிரிப்பை அவரை கேவலப்படுத்துவது போன்று அமைந்து விடலாம். வெட்கத்தால் அவர் உள்ளம் அடைபட்டு போய் விடலாம்.

குறைபாடுள்ள செவிமடுத்தலுக்கான காரணங்கள்

முழுமையாகச் செவிமடுத்தல் என்பது ஒரு அரிதான கொடையே. ஒரு சிலர் இதை இயற்கையாகவே பெற்று இருக்கலாம். மற்றவர்கள் இதைப் பயிற்சிகள் மூலம் பெற வேண்டும். குறிப்பாக நோக்கமும், முயற்சியும்,தொடர்ந்து பயிற்சியும் இருந்தால் ஒருவர் எளிதாக இந்தக் யுக்தியைக் கற்றுக்கொள்ளலாம். இப்படிப்பட்ட முழுமையான செவிமடுத்தலுக்கு ஏற்படும் தடைகளைக் கீழே காண்போம்.

 உடல் களைப்பு அமல் என்பவர் அவர் தங்கி இருக்கும் இடத்தில் உளவளத்துணை கொடுப்பதில்சிறந்தவர். மக்கள் அவரிடம் உளநல உதவிக்காக வருவது வழக்கம். இவர் முயற்சி செய்து அனைவரையும் திருப்திபடுத்த முயலுவார். இவர் இவ்வாறு சோர்வடைந்து விடுவதால் மற்றவரைக் கவனிக்க முடிவதில்லை. உடல் உறுப்புக்களின் களைப்பினால் ஒருமுகப்படுத்த முடிவதில்லை. எனவே பொதுவாகச் சோர்வடைந்த உளவளத்துணையாளர் எழுச்சியற்ற உளவளத்துணையாளரே. ஆற்றுப்படுத்தும் கலையைப்பற்றி அறிவும், யுக்திகளும் அவருக்கு இருந்தும் அளவுக்கு அதிகமான களைப்பினால், வருகின்ற நபருக்கு வளமாக உளவளத்துணை கொடுக்க முடிவதில்லை.

 முன்னீடுபாடு ஒருவருக்கு மிகவும் வருத்தமான செய்தியோ, அல்லது நல்ல செய்தியோ வந்தால் அந்நிலையில் உளவளத்துணையில் அமைதியாக ஈடுபட முடியாது. காரணமென்னவெனில் எந்த ஒரு செய்தியோ அல்லது செயற்பாடோ அசாதாரணமாக இருக்கும் போது சிறிது நேரம் எடுத்துதான் அது அமைதியடையும். இதை ஆழ்மனதிற்கு அழுத்தித் தள்ளினாலும் தன்னிச்சையாக வெளிமனதானது அந்த செய்திக்கே திரும்ப செல்கிறது. இந்நிலையால் எந்த ஒரு வருத்தமான செய்தியையும் ஒரு சில மணித்துளிகள் வருத்தப்படவும், மகிழ்ச்சியான செய்தியை ஒரு சில மணித்துளிகள் திளைக்கவும் வேண்டியுள்ளது.

இப்படிச் செய்யப்படவில்லையென்றால் செவிமடுத்தலுக்கு இதுவே தடையாகிவிடும். உதாரணமாக நீங்கள் உங்களது வேலையிலிருந்து நீக்கப்பட்டுவிட்ட அனுபவத்துடன் முமுமையாகப் பிறருக்குச் செவிமடுக்க முடியாது. எனவே எப்போது ஒருவர் மிக்க மகிழ்ச்சியிலோ அல்லது மிக்க வருத்தத்திலோ இருக்கின்றாரோ அப்பொழுது வருகின்ற நபர்களுக்குச் சிறந்த முறையில் செவிமடுத்தல் மிகவும் கடினம். 

கவர்ச்சி துணைநாடி மிகவும் கவர்ச்சியாக இருந்தால் உளவளத்துணையாளர் அவரை அதிகம் கவனிக்கலாம். அதேசமயத்தில் கவர்ச்சியற்றவராக இருந்தால் அதிகக் கவனம் செலுத்தாமல் இருக்கலாம். இந்நிலையில் கவர்ச்சியால் கவரப்படலும், கவர்ச்சியற்ற தன்மையால் தள்ளப்படலும்; உளவளத்துணையாளரின் உள்ளத்தைக் கொள்ளையடித்து விடுகின்றன. அச்சமயங்களில்; உளவளத்துணையாளர் தான் அனுபவிக்கும் உணர்ச்சிகளின் மேல் கவனம் செலுத்துகிறாரேயன்றி துணைநாடியின் பகிர்வில் அல்ல. இதைப் போல்; உளவளத்துணையாளர் வருகின்ற நபருக்கு எதிராகச் சக்திவாய்ந்த எதிர்மறை உணர்ச்சிகளை வைத்திருந்தாரென்றால் முழுமையான செவிமடுத்தல் கொடுக்க முடியாது

 ஒரே மாதியானப் பிரச்சனை கமலா என்பவர் திருமண அறிவிப்புமையத்தில் உளவளத்துணையாளராக இருக்கின்றார். இவர் நடுத்தர வயதைத் தாண்டிய ஒருகைம்பெண். அதே வயதையொத்த எஸ்தர் என்ற கைம்பெண் கமலாவிடம் உளவளத்துணைக்காக வந்த தனது குழந்தைகளின் படிப்பிற்கான நிதிப்பிரச்சனைகளைப் பகிர்ந்து கொண்டார். இதைப்போன்ற பிரச்சனையைத்தான் கமலாவும் அனுபவித்துக் கொண்டிருந்தார். எனவே எஸ்தர் தனது பிரச்சனையைச் சொல்ல ஆரம்பித்தவுடன் கமலா தன்னுடைய பிரச்சனையை நினைக்க ஆரம்பித்துவிட்டார். இதனால் எஸ்தருக்குச் சிறந்த முறையில் செவிமடுக்க இயலாமல் போயிற்று. இவ்வாறு ஒத்தப்பிரச்சனைகளால் சிறந்த முறையில் செவிமடுத்தலுக்குத் தடையாக மாறிவிடலாம்.
   
      மாறுப்பட்ட பிரச்சினை இன்பன் என்பவர் ஐரோப்பிய நாட்டைச் சார்ந்தவர். அவர் அனுபவத்திற்காக இந்திய நாட்டிற்கு வந்திருந்தார். அவர் தங்கி இருந்த பகுதித் தாய்மொழியில் புலமை பெற்றார். உளவளத்துணை கலைப்பயிற்சிக்குச் சென்றபோது களப்பணிக்காக மருத்துவமனைக்குச் சென்று பல மக்களை சந்தித்தார். அவ்வாறு சந்தித்த நேரத்தில் மக்கள் அவர்களுக்கே உரித்தான சில பிரச்சனைகளான, திருமணத்திற்கு அழைப்பு விடுக்காமை பற்றியும் அதைச்சரி செய்யும் விதம் பற்றியும் கூறினர். ஆனால் அதைக்கேட்ட இன்பன் பிரமித்து போய் நின்றார். காரணம் என்னவெனில் அந்தப்பிரச்சனையானது அந்தக் கலாச்சாரத்தைச் சார்ந்ததாக இருந்தால் அதைக் கவனிக்கவோ புரிந்து கொள்ளவோ வேறு கலாச்சாரத்திலிருந்து வந்த ஆக்னஸ்ஸால் முடியவில்லை. ஆகையால் இப்படிப்பட்ட மாறுப்பட்ட பிரச்சனைகள் கூட சிறந்த முழுமையான செவிமடுத்தலுக்குத் தடையாக மாறிவிடலாம்.
அளவுக்கு மீறிய ஆர்வம் உளவளத்துணை கலையைப் பயில்பவர்கள் சில சமயங்களில் தங்களது பயிற்சியிலே முழுமையாக செவிமடுக்க மாட்டார்கள். காரணமென்னவெனில் சரியாகப் பதிலளிக்க வேண்டும் என்ற அளவுக்குமீறிய ஆர்வத்தால்; துணைநாடி கூறுவதை சரிவர கவனிப்பதில்லை. தொடக்கத்திலே சரியாகப் பதிலளிக்க முடியாவிட்டாலும் செவிமடுத்தலிலே ஆர்வத்தை அதிகமாக்க வேண்டும். அளவுக்கு மீறிய ஆர்வமும், பதட்டமும் நாம் சாதிக்க வேண்டியதற்கு எதிராகவே செயல்படுகின்றன. இதிலிருந்து செவிமடுத்தலிலும் பதிலளித்தலிலும் அளவுக்கு மீறிய  ஆர்வத்தைப்பற்றி விழிப்பாய் இருத்தல் நல்லது என்பது தெளிவாகிறது.
   
    கவனமாற்றம் சில சமயங்களில் திருமணதம்பதியினர்கள், அல்லது தனிநபர்களோ உளவளத்துணைக்கு வரும் போது குழந்தைகளுடன் வரலாம். அப்படிப்பட்ட நேரத்தில் குழந்தைகள் பல குறும்புத்தனங்களைச் செய்யலாம். இதனால் உங்களது செவிமடுத்தல் சிதறடிக்கப்படலாம். முடிந்தவரை உளவளத்துணையாளரை தனியாகச் வரச்சொல்லுதல் நல்லது. அப்படி அவர்கள் குழந்தைகளுடன் வந்தால் உளவளத்துணையாளர் அதிக முயற்சி எடுத்து செவிமடுக்க வேண்டும். சப்தமான இடங்கள், சிதறடிக்கும் காட்சிகள், படபடவென்று பேசும் நபர்கள் ஆகியவை உளவளத்துணை இடத்திற்கு அருகில் விடாமல் தவிர்த்தல் நல்லது.  
      செவிமடுத்தலானது வினைத்திறனான உளவளத்துணை செயற்பாட்டிற்கு மிகவும் பயனுடையதொரு நுட்பமாகும். உதவி நாடியினுடைய பிரச்சனைகளை பொறுமையாகவும், உன்னிப்பாகவும் செவிமடுப்பதன் மூலம் விளங்கிக் கொண்டு அதற்கு ஏற்ப உளவளத்துணை செயற்பாட்டினை மேற்கொள்ள முடியும்.  வினைத்திறனான செவிமடுத்தலின் ஊடாக உதவி நாடியும் திருப்தி அடைவதுடன் உளவளத்துணை செயற்பாடும் வெற்றி பெறுகின்றது. 

ஆக்கம் N.BA.நிக்சன் உளவளத்துணையாளர் மற்றும் உளச்சமுகப் பணியாளர். — Preceding unsigned comment added by 122.107.102.68 (talk) 09:40, 13 August 2016 (UTC)Reply