அய்யா, நான் அமேரிக்கவில் குப்பை கொட்டிக்கொண்டிருக்கும் ஒரு தீவட்டி தடியனுங்க. மேற்படிப்புக்காக இங்கு வந்த நான், ஆராய்ச்சி என்ற பெயரில் ஓபீ அடித்துக் கொண்டிருக்கிறேன். ஆகவே நான் 'தமிழ்மணம்' என்ற தமிழ் இணையதளத்தில் பதிவு செய்து என் கருத்துக்களை இடுகைகள் மூலம் இவ்வுலகத்துக்கு தெரிவிக்க முடிவுசெய்துள்ளேன். குறைந்த பட்சம் வாரதுக்கு ஒன்று என்ற கணக்கில் எழுத முயல்கிறேன். இது நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.