காலச் சூழலால் பிரிய நேர்ந்த உறவுகளைத் தேடி கண்டுப்பிடித்து அவர்களை சந்திக்க வைப்பதே உறவைத் தேடி நிகழ்ச்சியின் நோக்கம். நிகழ்ச்சியின் இயக்குனர் கே.சி.பிரபாகரன் அவர்களின் நெடுநாளைய கனவின் பலனாக புதுயுகம் தொலைக்காட்சியில் உறவைத் தேடி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது. வெளிநாடு வாழ் தமிழர்களின் ஆதரவு நிகழ்ச்சிக்கு கூடுதல் பலம். உலகம் முழுவதிலும் உள்ள பார்வையாளர்கள் பல ஆண்டுகளாக விட்டுப்போன தங்களின் சொந்தங்களைத் தேடி உறவைத் தேடி குழுவினரை தொடர்புகொள்கின்றனர்.

[1]

[2]