சகோதரர் செங்கிஸ் கான் அவர்கள் போட்ட பதிவின் சில வரிகள்........ அவரின் கடைசி பதிவு அவர் உட்பட யாரும் நினைத்து பார்த்து இருக்க மாட்டார்கள் இப்போது அவர் உடல் (உயிரற்ற) ஐஸ் பெட்டிக்கு உள்ளே ... விடிய விடிய பீப் பாடலோடு குத்தாட்டம் ! விடியும் வரை பீர் பாட்டிலோடு கொண்டாட்டம்! கடந்த வாரம் பீப் பாடலுக்கு கொதித்த சென்னையா இது? கடந்த வாரம் வெள்ளத்தில் தத்தளித்த சென்னையா இது? உங்களை வெள்ளத்தில் இருந்து காத்த உங்களின் பசிக்கு உணவளித்த உங்களுக்கு நிவாரப் பொருட்களை வழங்கிய உங்களின் வீதிகளில் தூய்மைப்பணி செய்த எந்த முஸ்லிமையும் இந்தப் புத்தாண்டு கொண்டாட்டங்களில் பார்க்க முடியாது ! ஏன் எனில்???? பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதையே படைத்தவன் எங்களுக்கு கொண்டாட்டமாக ஆக்கியுள்ளதை எங்களின் இரு பெருநாளிலும் நீங்கள் கண்கூடாகக் காணலாம் ! குடிப்பதும் வெடிப்பதும் குத்தாட்டம் போடுவதும் பண்டிகைகள் இல்லை! அதனால் எந்தப் பயனுமில்லை ! இல்லாதவர்க்கு வழங்குதலும் இறைவனை வணங்குதலுமே இஸ்லாம் கூறும் பண்டிகைகள் ! விழாக்களின் பெயரால் வீண்விரயமற்ற ஒழுக்கமுள்ள, மக்களுக்கு பயனுள்ள ஒரு சமூகத்தை உருவாக்க வாருங்கள் ! -செங்கிஸ்கான் இன்னாலிலாஹி வ இன்ன இலைஹி ராஜீவூன் சற்று முன் இஸ்லாமிய அழைப்பாளர் சகோதரர் செங்கிஸ்கான் அவர்கள் வபாத் ஆகிவட்டார்கள் அன்னாரின் மறுமை வாழ்விற்க்காக துஆ செய்யுங்கள். அன்புடன்.......−