இந்திய திருநாட்டில் உள்ள திராவிட நாடான தமிழ்நாட்டில் உள்ள தெற்கு சீமையில் விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி தாலுகா கெப்பிலிங்கம்பட்டி கிராமம் இந்த ஊரில் தேவேந்திர குலவேளாளர் மக்கள் பெரும்பான்மையாவும் மற்றும் ரெட்டியார், பிள்ளைமார், நாயக்கர்,அருந்ததியர், தேவர்,நாடார்,செட்டியார், வண்ணார் ஆகியோர் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறார்கள் இங்கு தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு செல்வகாளியம்மன் திருக்கோவில்,வடக்குவாச்சியம்மன் கொவிலும் உள்ளது மேலும் ரெட்டியார் சமுதாயத்திற்கு அருள்மிகு பெருமாள் கோவிலும்,அனைத்து சமுதாயத்திற்கும் காளியம்மன் கோவிலும்.மேலும் இங்கு விவசாயம் பிரதானமாக உள்ளது மற்றும் அருகில் உள்ள விருதுநகரும் இவ்வூர் மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. இந்த ஊரில் நடிகர் விஜயகாந்தின் தாயார் பிறந்த ஊர் மேலும் இங்கு சில காலம் விஜயகாந்தின் பெரியம்மா வீட்டில் வாழ்ந்துள்ளார்