ஈழபாரதி கவிதைகள்
மநுநீதியும் மானிடனும்.. ..
உன்னைச் சூழவும் கவனி
ஊனுண்ணிகள் கவனம்
தன்னைக் காக்க உன்னுடலைத் தின்றிடும்
தான்தான் வாழ தலைகள் கிள்ளிடும்....
மனுவுக்கே நீதி சொன்னதால் தானோ
மந்திரம் நிகழுமென்று மென்று விழுங்கினீர்
மேன்மையென்றிருப்ப மேன்மையே நம்பு!
மேதாவியாயிருந்து மேலுலகை
ஆள்பவரே நன்றி நன்றி நன்றி .....