சுஜாதா விருதுகள்


உயிர்மையும் சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து ஆண்டுதோறும் வழங்கி வரும் சுஜாதா விருதுகள்-இந்த ஆண்டிற்கன தேர்வு ஆறு பிரிவுகளில் அறிவிக்கபடுகிறது. விருதுகள் வரும் மே 3 ஆந்தேதி சென்னை புக் பாயிண் அரங்கில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் வழங்கப்பட விருக்கிறது. விருது பெற்ற படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள்.


சுஜாதா சிறுகதை விருது  : அஜயன்பாலா

நூல்  : அஜயன் பாலா சிறுகதைகள் வெளியீடு  : நாதன் பதிப்பகம்

தேர்வுக்குழு  : சுப்ரபாரதிமணியன், அழகிய பெரியவன், சுரேஷ்குமார இந்திரஜித்


சுஜாதா நாவல் விருது  : தமிழ் மகன்

நூல்  : வனசாட்சி வெளியீடு  : உயிர்மை பதிப்பகம்

தேர்வுக்குழு  : எஸ்.ராமகிருஷ்ணன், ந.முருகேச பாண்டியன், இமையம்


சுஜாதா கவிதை விருது: மனோ.மோகன்

நூல் பைத்தியக்காரியின்பட்டாம்பூச்சி வெளியீடு: புதுஎழுத்து

தேர்வுக்குழு: கலாப்ரியா,சமயவேல், இந்திரன்


சுஜாதா உடைநடைவிருது (இரு நூல்களுக்கு வழங்கப்படுகிறது):

1. பா.பிரபாகரன் நூல்  : குமரிக்கண்டமாசுமேரியமா?, வெளியீடு  : கிழக்குபதிப்பகம்

2. ராஜு முருகன் நூல்  : வட்டியும்முதலும் வெளியீடு  : ஆனந்தவிகடன்

தேர்வுக்குழு  : இரா.நடராசன், ’தீக்கதிர்’குமரேசன், பாரதி மணி


சுஜாதா சிற்றிதழ்விருது (இரு இதழ்களுக்கு வழங்கப்படுகிறது) :

1. ஞானம், தி.ஞானசேகரன் , ஆசிரியர்-ஞானம்

2. கருக்கல் எம்.எஸ்.பாண்டியன், ஆசிரியர்-கருக்கல்

தேர்வுக்குழு :தமிழவன், கழனியூரன், அ.முத்துக்கிருஷ்ணன்

சுஜாதா இணையவிருது  : வா.மணிகண்டன் வலைப்பதிவு  : http://www.nisaptham.com/

தேர்வுக்குழு :இரா.முருகன், இயக்குநர் ராம், மனோஜ்