காலையில் அழகாக சீருடை அணிந்து பாடசாலை போகிறான் மூத்த மகன் . . . . . . . .

விளையாட்டுப் பொருட்களுடன் சிறியவன் விளையாடிக் கொண்டிருக்கிறான். . . . . .

ஆனால்,

இதே நாள் இதே காலைப் பொழுது. . . . . .

என் குழந்தைகளை ஒத்த வயதுள்ள பிள்ளைகள் அகதி முகாம்களில் ஒருகையில் தேநீர்க் கோப்பை மறுகையில் பாண் துண்டுடன் . . . . .

புதிதாய் உறை போட்ட கொப்பிகள் , புத்தகப்பை , சீருடைகள் என்று பலதும் அழிக்கப்பட்டு விட்ட நிலையில் ,

குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள் கூட மிச்சமில்லை ,

கண்டிக் கலவரத்தால் பாதிக்கபட்ட நம் சிறார்களை வளப்படுத்தி இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் பாரிய பொறுப்பு நமக்குண்டு .

இவர்களுக்கான உளவியல் ஆலோசனைகள் தேவைப்படும் தருணம் இது.

சிந்திப்போம் . . . . .

முன்வாருங்கள் நம் எதிர்கால சந்ததியைப் பாதுகாக்க.

இதுவும் நிலையான தர்மமே.