என்னைப்பற்றி..

சுவிட்சர்லாந்தில் வாழ்கிறேன். குடும்பத்தலைவி, இரு குழந்தைகளின் தாய்,கவிதை கதை சிந்தனை எழுதும் ஆர்வம் அதிகம். இதுவரை... இதயத்தின் சிலிர்ப்புகள்,புல்லாங்குழலும் இருபது துளைகளும் ( தொகுப்பாசிரியருள் ஒருவர்),சூரியத்துண்டுகள் ,மகிழ்மித்திரர்,அணில் வரிகள் ஆகிய நூல்களை பதிப்பித்துள்ளேன். கவின் மின்னிதழ்,மகிழ்மித்திரன் மின்னிதழ்களின் ஆசிரியர்.

படிப்பு முதுகலை தமிழ்.


கவின் மின்னிதழ் உள்ளத்தை ஆட்டும் ஊஞ்சல்''

–சுரேகா சுஜி 

அறுந்துவிடுமோ கட்டியிருக்கும கயிறு ...!! உடைந்துவிடுமோ கயிறு போட்ட கிளை....!!

பயமிருந்தாலும் பக்கத்தில் உள்ள உறவுகளுக்காய் பயமறியாமல் ஆடுகின்றாள் ஊஞ்சல் பைங்கிளியிவள்.....!!!

பெண்களுக்கே சொந்தமான  அடக்குமுறைக் கைதியாக..!