Archive 1 Archive 2 Archive 3 Archive 4

w m branham books in tamil 47-04-12 விசுவாசமானது சாரம்சமாயிருக்கிறது

Text in Tamil

விசுவாசமானது சாரம்சமாயிருக்கிறது

1947 ஏப்ரல் மாதம், 12-ம் தேதி, ஒக்லேன்ட்


1. ஒலிப்பதிவிற்காக சில புதிய மின்னணுக் கருவிகளை நாம் பெற்றுக் கொண்டிருக்கிறோம். 2. ஒவ்வொரு இரவும் நாங்கள் எவ்விடத்தில் இருக்கப்போகிறோம் என்பதை நாங்கள் அரிதாகவே அறிந்தோம். அந்தக் கடைசி நான்கு இரவுகளில் அந்த மூன்றாவது அசைவைக் குறித்து சற்றே நான் எண்ணினேன். ஆகையால் நாம் வேறொரு அசைவைப் பெற்றுள்ளோம், அது இரவு என நான் எண்ணுகிறேன். எனவே இவ்வாறான வகையில் சுற்றிலும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாறுவதுதான் பயங்கர மோசமானதை ஏற்படுத்தியது, பின்பு நீங்கள் அரிதாக... அது இவ்விதமானதை ஒவ்வொரு இரவும் புதிய இடத்தைப் போன்றே இருந்தது, மேலும் - மேலும் அது மிகுந்த கஷ்டத்தை உண்டாக்கியது. 3. சிலசமயத்தில் நான் மறுபடியும் ஓக்லேன்டுக்கு திரும்பவும் வரும்போது, ஏன், அந்த மண்டபத்தைப் போன்று ஏதோ ஒன்றை இங்கே ஒன்று அல்லது இரண்டு வாரத்திற்கு நம்மால் பெறக்கூடுமென நான் நம்புகிறேன். அப்பொழுது ஒரு உண்மையான எழுப்புதலையும் மேலும் ஒரு உண்மையான கூட்டத்தையும் நாம் பெற்றிருக்க முடியும். அதை நீங்கள் விசுவாசிப்பதில்லையா? ஆம், நம்மாலும் கூட அது முடியுமென நான் விசுவாசிக்கிறேன். 4. அது இவ்விதமாக, நமது கால அட்டவணையானது மிகவும் ஒழங்கற்றுள்ளது. நல்லது, நான் இதைக் கூற விரும்புகிறேன். நாம் இவ்விதமாக ஒன்று அல்லது இரண்டு இரவு இங்கிருந்துவிட்டு மேலும் அதன் பிறகு ஒரு நூறு மைல் தொலைவில் இருக்கின்றோம். இவ்வாறாக, காலத்தைச் சுற்றியே நாம் காரியங்களைப் பெறுகிறோம், இயற்கைக்கு மேம்பட்ட தேவனுடைய அந்த அசைவை அவர்கள் எங்கே பார்க்க ஆரம்பிக்க முடிகிறதோ, அங்கே ஜனங்கள் நிலை கொண்டு விடுகின்றனர். பிறகு அது, அவர்கள் கூட்டத்தைப் பிரித்து ஏதோ ஒரு இடத்திற்கு இருநூறு, முன்னூறு, நானூறு மைல் தொலைவில் சென்று திரும்பவும் ஆரம்பிக்கின்றனர், மேலும் இவ்வாறாக ஜனங்கள் எழுப்புதல் நிலையை அடையும்போது அங்கே அவர்கள் சுகமாக முடியும். மேலும் அனேக காரியங்களைச் செய்ய முடியும்... 5. எனவே நான் நினைக்கிறேன், கனடாவிலிருந்து இப்பொழுது நான் திரும்பி வந்த பிறகு, நல்லது, மெக்ஸிக்கோவுக்கோ அல்லது எந்த இடத்திற்கோ நாம் செல்லும் முன், இவ்வாறாக நாம் எழுப்புதல் கூட்ட இடங்களை ஏற்படுத்தி, ஒரே இடத்தில் ஒரே நகரத்தில் ஏறக்குறைய ஒரு மாதம் தங்குவது அல்லது அதைப்போல ஒன்று, ஆகையால் நாம் உண்மையாகவே ஜனங்களை அப்படியே பெறமுடியும் என்று நான் நினைக்கிறேன். சில ஜனங்களுக்காக ஜெபிக்கப்படும்வரை போதுமான காலம் அவர்கள் தங்க இயலும்போது, சுகமானேன், சுகமானேன் என்று அதைப்போன்ற, சென்று கொண்டிருக்கும் சாட்சிகள் இருக்கும். உள்ளே வர ஆரம்பிக்கும், மேலும் தகவல்கள் உள்ளே வந்து கொண்டிருக்கும். 6. எனது சொந்த நகரமான இந்தியானாவிலுள்ள ஜெபர்ஸன் வில்லைப்போல. ஏன், அங்கே ஒன்றுமில்லாதிருக்கிறது. என்னே, அப்படியே நகரத்திற்குள் நாங்கள் வந்த உடன் எல்லா இடங்களிலுமிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் மந்தையாக, வரக்காரணமென்னவென்றால், அவர்களுக்கு இருக்கிறது - அவர்கள் இருக்கிறார்கள்... நீங்கள் ஒரு இடத்தில் நிலைகொண்டு விட்டீர்கள்; இதைப் போன்று நீங்கள் அந்த அசைவிலே இல்லை. 7. அதன் பின்பு, நண்பர்களே, ஏறக்குறைய இது சம்பந்தமாக அப்படியே இரவு பகலாக நான் சென்று கொண்டிருக்கிறேன். 8. இன்று எனக்கு தேவனோடு கூட தனித்து ஒரு அற்புதமான நாளாக இருந்தது. ஆனால் சற்றே என்னையும் தேவனையும் தவிர அங்கே வேறு ஒருவரும் இல்லை. மேலும் நான் தனித்திருந்தபோது, அதிகமாக என்னை உணர்ந்து அமர்ந்துவிட்டேன். இப்பொழுது, எனக்கு எந்த ஓய்வும் வருவதற்கு முன் இன்னும் ஐந்து கூட்டங்கள் எனக்குக் கிடைத்திருக்கிறது; இன்னும் ஐந்து கூட்டங்கள். அதன் பிறகு மே மாதத்தில், முழு மாதத்தையுமே நான் எடுத்துக்கொண்டு பாறைகளிலான மலைகளுக்கு மேல் சென்று அங்கே, என்னுடைய, தனிமையில் இருக்கும்போது பார்ப்பதற்கு ஒருவிதம் இதைப் போன்றதைப் பெறலாம். தேவனோடு தனிமையில் இருப்பதை நான் விரும்புகிறேன். எனக்கு மிகவும் அன்பானவரை; நான் அவரைக் கண்டுபிடிக்க அதுதான் வழி. அதன்பின்பு திரும்பவும் வந்து பிறகு கனடாவில் தொடங்குவேன்... 9. இப்பொழுது, நமக்கு அதிக சமயமில்லை. மண்டபத்தை நீங்கள் எத்தனை மணிக்கு மூடவேண்டும்? பதினொரு மணிக்கா? பதினொரு மணிக்கு அவர்கள் கூறியவாறே அரங்கம் மூடப்படும் என நான் நினைக்கிறேன். 10. ஆகையால் இன்றிரவு உங்களிடம் இவ்வாறாகக் கொஞ்சம் குறைந்த நேரமே எடுத்துக்கொண்டு நீங்கள் தேவனை எவ்வாறு அணுகவேண்டும் என்று அறிந்துகொள்ள விசுவாசத்தின் வார்த்தையைப் போதித்து நான் பேச விரும்புகிறேன். 11. மக்கள் தாங்கள் அதிகமாக அறிந்துள்ளனர் என்று உரிமைகோருகிற பெரியதும் ஆழமுமான இந்த பொருள்கள் அங்கே நிறையவே இருக்கின்றன. மேலும் அது இறுதி பலப்பரிட்சைக்கு வரும்போது அவர்கள் அதில் குறைவாகவே அறிந்திருக்கின்றனர். இப்பொழுது அது உண்மையாய் இருக்கிறது. மேலும் இன்றிரவில் அவைகளில் சில காரியங்களை நாம் கண்டுபிடிக்கப்போகிறோம். 12. மேலும் அந்த விதமாகவே மற்றொரு மண்டபத்தில் நாளை மறுநாள் இரவில் என்னுடைய வாழ்க்கைக் கதையின் ஒரு சிறு சுருக்கத்தை நீங்கள் கேட்க விரும்புவீர்களானால் அதை நான் தருவேன், நீங்கள் அதைக் கேட்க விரும்புகின்றீர்களா? உங்களுடைய கரங்களை நாங்கள் பார்க்கட்டும். அது - அது சற்றே நன்றாய் இருக்கிறது. அரங்கம் எங்குள்ளது என்று நீங்கள் அறிவிப்பு கொடுத்துவிட்டீர்களா? 13. (ஒலிப்பதிவு முடிவடைகிறது - ஆசி...) ... அளவிற்கு ஏற்புடைய எண்ணம், காரணமென்னவென்றால் நீங்கள் சுகமடைவதையே நான் விரும்புகிறேன். அதற்காகவே நான் இங்கு இருக்கிறேன். நான்... இங்கே நான் இருப்பது, ஒரு பெரிய தியாகமாக இருக்கிறது. நண்பர்களே, எனக்கு ஒரு வீடும், ஒரு குடும்பமும் இருக்கிறது. மேலும் நான் புதியவனாய் இருக்கிறேன்; இந்த வேலையில் நான் அப்படியே ஒரு - ஒரு குழந்தையாக இருக்கிறேன். சுகமாக்கும் வரம் என்னிடத்தில் வந்து ஒரு சில மாதங்களே ஆகின்றது. 14. எனக்கு சொந்தமான வீட்டை..? நான் கொண்டிருக்கவில்லை. நான் கொண்டிருக்கவில்லை. நான் இவ்வாறாக இரண்டு அறைகள் கொண்ட ஒரு சிறிய “எல்” குடிலில் வசிக்கிறேன். என் மனைவி தண்ணீர் சிறிதளவு எடுத்துவர், ஏறத்தாழ நகர அடுக்குமாடி குடியிருப்பின் பாதி தூரம் சென்று அதை எடுத்துக் கொண்டு திரும்ப வீட்டிற்கு வருவாள். எனக்கு அற்புதமான வீடுகள் வெவ்வேறு நகரங்களில் கொடுக்க முன்வந்து, “ஐந்தாயிரம் அமெரிக்க நாணய மதிப்பில் - நான் ஒரு வீட்டைக்கட்டி அப்படியே உனக்குக் கொடுப்பேன்” என்று அங்கே அவர்கள் என்னிடம் கூறினார்கள். 15. நண்பர்களே, அது என்னுடன் இருக்கும் பணம் அல்ல. நான் - நான்- நான் விரும்பவோ நான் அதைப்பற்றி ஒருபோதும் நினைக்கவும் கூட இல்லை. மேலும் அதன் காரணமாகத்தான் உங்களில் அனேகர் உங்களுடைய பரிசுகளை நீங்கள் அனுப்பி, நீங்கள் எனக்கு அளிக்க முன்வருகின்றீர்கள்; நான் - நான் அவைகளை எடுத்துக் கொள்வதில்லை. காரணமென்னவென்றால் அது உங்களுடைய - உங்களுடைய பணத்தில் இல்லை; நான் விரும்புவது உங்கள் நம்பிக்கையைத்தான். நான் - நான் உங்களுடைய சுகத்துக்காகவே இங்கே இருக்கிறேன். 16. மேலும் அந்த சிறிய குடும்பம் மனைவி மற்றும் இரு குழந்தைகளைக் குறித்தும் நான் கூறினபடியே இன்றிரவு அவர்களோடு இருப்பதற்கு நான் - நான் விரும்புகிறேன். இவ்வாறாக இப்பொழுதும், அது பதினொரு மணி ஆகிறது. அந்த உண்மையான சிறியவர்கள் அவளுடைய முழங்கால்களில் நின்று இப்பொழுது எனக்காக ஜெபித்துக்கொண்டிருப்பார்கள். இந்த ஆராதனையில் இதுதான் துவங்கும் நேரம் என்று அவள் அதை அப்படியே அறிந்திருக்கிறாள். அன்புள்ள வயதான தாயார், அவள் எனக்காக ஜெபித்துக்கொண்டிருப்பார்கள். அந்த சிறிய பையன், அதாவது அவனுடைய அம்மா அவனுக்கு இரண்டே வயதான போது, மரித்து விட்டாள், அவன் எனக்காக ஜெபித்துக்கொண்டிருப்பான். மேலும் எவ்வாறேனும் நான் பிரசங்க பீடத்திற்கு வரும்போது அவர்களுடைய ஜெபங்கள் பதிலளிக்கப்படும் என்று நான் இவ்வாறாக உணர்வேன். மேலும் அவர் என் அருகாமையில் இருக்கிறதை நான் அறிந்துள்ளேன். 17. இன்றிரவு நான் அவர்களை எவ்வளவாகப் பார்க்க விரும்புகிறேன் என்று நீங்கள் அறியீர்கள். ஒரு சில மாதங்களுக்கு முன்பு நான் அவர்களை விமான நிலையத்தில் விட்டுவிட்டு வந்தபோது, அவர்கள் என்னுடைய மேல் சட்டையை பிடித்துக்கொண்டு அழுதனர். ஆனால் நான் ஒரு வருடத்திற்கும் அதிகமாக ஜீவிக்க மாட்டேன் என்று என்னுடைய சபையில் இருக்கும் அந்த மருத்துவர் கூறினார்; நான் செல்லுகிற இந்த வேகத்தில் ஏதோவொரு இரவில் பிரசங்க பீடத்தில் ஒரு மாரடைப்பினால் நான் விழுந்துவிடலாம் என்றும் கூறினார். மேலும் என் சிறு பையன் அதற்கு பயந்துக்கொண்டிருக்கிறான், எனவே இவ்வாறாக அவன் அழுதுகொண்டு “அப்பா போகவேண்டாம்” என்று கூறிக்கொண்டிருக்கிறான். 18. ஆனால் வியாதியஸ்தருக்கும், துன்பப்படுவோருக்கும் அங்கே ஏதோ ஒன்று என்னை வெளியில் அழைக்கிறது. மேலும் நண்பர்களே நீங்கள் என்னை விசுவாசித்தால் மாத்திரமே நான் உங்களுக்கு உதவ முடியும். அந்த ஒரு வழியில் மாத்திரமே நான் எப்பொழுதும் எதையும் உங்களுக்காக செய்யமுடியும். 19. மேலும் இன்றிரவு நான் அங்கே இருக்க விரும்புகிறேன். நான் எவ்வாறு விரும்புகிறேன் என்று உங்களுக்கு தெரியாது... வீட்டை விட்டுத் தூரமாக இருப்பது என்ன என்று உங்களில் அனேகர் அறிவீர்கள், நீங்கள் அறியீர்களா? ஆனால் நான்... அது இருக்கிறது... அது அப்படியே ஒரு குடிசை என்று நான் கூறுகிறேன். ஆனால் ஒரு இல்லத்தை உருவாக்க அது ஒரு பெரிய வீட்டை எடுத்துக்கொள்வதில்லை. அதற்குள் இருக்கும் அந்த சுபாவம் தான் இல்லத்தை உருவாக்குகிறது. மேலும் ஒரு இல்லத்திற்காக நான் நன்றியுடையவனாய் இருக்கிறேன். 20. ஆகையால் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! மேலும் எனக்காக நீங்கள் ஜெபியுங்கள். மேலும் நாளை மறுநாள் இரவில் அதைப் பற்றி நான் அதிகமாகக் கூறுகிறேன். 21. மேலும் இப்பொழுது, இன்றிரவு நண்பர்களே, கூடுமானால் நீங்கள் சிறுவர்களை உங்களால் இயன்றவரை பொறுமையாக அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். மேலும் நீங்களும் அந்தவிதமாவே இருங்கள். மேலும் ஒரு கொஞ்ச நேரத்திற்கு உங்களுடைய சிதறாத கவனத்தை அப்படியே எனக்குக் கொடுங்கள். மேலும் உங்களுடைய சுகத்தைப் பெற்றுக்கொள்வதற்கு நீங்கள் எவ்விதமாக தேவனை அணுகவேண்டும் என்று என் அறிவுக்கு எட்டியவரை நான் விவரிக்க முயற்சி செய்கிறேன். அந்த காரணத்தினால்தான் இன்றிரவு நான் இங்குள்ளேன். 22. நான் அதிகமாக துன்பப்பட்டிருக்கிறேன். மேலும் வியாதியாக இருப்பது என்னவென்றால் என்ன என்று நான் அறிந்துள்ளேன். மேலும் நான் - நான் உங்களுக்கு உதவ விரும்புகிறேன். மேலும் நீங்கள் அப்படியே விசுவாசிப்பீர்களானால் என்னால் கூடும். 23. இந்த சந்தர்ப்பத்தை நான் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். சற்றே இப்பொழுது... எனது சிந்தையில் அனேக காரியங்கள் இருக்கிறது. மேலும் களைப்பாகவும் சோர்வுற்றும் இருக்கிறேன். ஆனால் அந்த ஊழியக்காரருக்கு நான் நன்றி சொல்லவேண்டும்; நான் சற்று அவரது பெயரை மறந்துவிட்டேன், இன்றிரவு இந்த மண்டபத்தை நமக்குக் கொடுத்தவர், அவருடைய ஆராதனையை விட்டுக்கொடுத்தவர் என்று நான் நினைக்கிறேன்; சங்கை.ஜாக் வாக்கர், அவர் பார்வையாளர்களுக்குள் இருப்பாரானால் சகோதரன் வாக்கர், என் சகோதரனே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, நீங்களும் உங்களுடைய... நீங்கள்...(ஒலிப்பதிவு முடிவடைகிறது - ஆசி) 24. ....பிதாவே, நாங்கள் வாழ்கின்ற நாளையும் மணிவேளையையும் சம்பந்தமாக உமது அன்பின் மக்களிடம் நின்று பேசுவதற்கும், ஒரு சபையை எடுத்துக்கொண்டு போக உம்முடைய பிரியமான குமாரனுடைய வருகைக்கு சற்று முன்பாகவும், இரத்தத்தினால் கழுவப்பட்ட, ஒரு வெளியே அழைக்கப்பட்ட ஜனமாகவும், இரண்டாம் விசை பிறந்தவர்களாகவும், ஒரு பரிசுத்த தேவனை, சென்று சந்திக்க ஆயத்தமுள்ளவர்களாகவும், பரிசுத்த தேவனுடைய கிறிஸ்துவின் இரத்தத்தினால் அவர்களுக்காக ஒரு பாதையை இணைத்ததாலும் இன்றிரவு மற்றும் ஒரு சந்தர்ப்பத்திற்காக நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். 25. இன்று இரவில் நாங்கள் ஒன்றுகூடி உம்முடைய திவ்ய பிரசன்னத்திற்காய்க் காத்துக்கொண்டிருக்கிறபடியால் எங்களை ஆசீர்வதியும். மேலும் அந்த இரவில் அறைக்குள்ளாக நீர் அனுப்பின தூதனானவர் உம்முடைய ஊழியக்காரனோடு பேசுவாராக, மேலும் அந்தக் காரணத்தினால்தான் இன்றிரவு இங்கே இருக்கின்றோம், அவர்தாமே இன்றிரவு பிரசங்க பீடத்தில் உமது தாழ்மையுள்ள ஊழியக்காரன் அருகில் நின்று பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையையும் உறுதிப்படுத்துவாராக. மேலும் பெரிய அடையாளங்களும் அற்புதங்களும் தொடர்வதாக!. 26. பிதாவே, இன்றிரவு, இந்த மண்டபத்தை எங்களுக்கு கொடுத்த ஊழியர் சகோதரன் வாக்கரை ஆசீர்வதியும். அவரும் அவர்களுடையவர்களும், ஆசீர்வதிக்கப் படுவார்களாக. ஒரு கனி நிறைந்த கிளையாக உம்முடைய ஊழியத்தில் அவரை வெற்றியடையச் செய்யும். மேலும் அந்த மகத்தான நாளிலே அனேக பதக்கங்களை உம்முடைய பாதத்தில் அவர் வைப்பாராக. இங்கே பட்டணத்தில் இந்த நிகழ்ச்சிக்குப் பண உதவிகளைச் செய்த சகோதரன் மோர்ஸ் மற்ற ஊழியர் அனைவரையும் உடன் ஊழியர்களையும் ஆசீர்வதியும். ஓ, தேவனே நீதிபரருடைய வருகைக்குச் சற்று முன்னதாக நாங்கள் ஜீவிக்கிறதான இந்தக் கடைசி பொல்லாத நாட்களின் நிழல்களில், அவர்களுடைய சபைகள் அக்கினி ஜுவாலைகளாகவும் தேவனுடைய மகிமைக்காக சாட்சிகளாகவும் இருக்கட்டும். 27. ஓ, பிதாவே இன்றிரவில் மகத்தானதொரு வழியில் ஜனங்களிடம் பேசும். மேலும் அங்கே விசுவாசம் இருப்பதாக, மேலும் பரிசுத்த ஆவியானவர்தாமே இந்த அரங்கம் முழுவதையும் இன்றிரவில் அவருடைய சிறகுகளினால் மூடுவாராக. மேலும் வல்லமையானது அப்படிப்பட்ட வழியில் வந்து, அந்த அனேக அனேக மகத்தான அற்புத சுகங்கள் செய்யப்படட்டும். அந்த அவருடைய புகழ் இந்த எல்லாப் பகுதிகளிலும் மேற்குக் கரையின் அரைக்கோளத்தில் மேலும் கீழுமாக எல்லா பிரதேசங்களிலும் பரவிச் செல்லட்டும். அவரது மகிமைக்காக நாங்கள் அவருடைய நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 28. இப்பொழுது, நண்பர்களே! நான் கூறினபடியே அனேகமுறை நாங்கள் மாற்றப்பட்டோம். இங்கிருக்கும் உங்களில் அனேகர் தெய்வீக சுகத்தின் வரம் எவ்வாறு வருகிறது என்று ஒருபோதும் கேட்டிருக்கக்கூட மாட்டீர்கள் என்று நான் ஊகிக்கிறேன். ஆனால் இன்றிரவு நீங்கள் செய்யவேண்டிய காரியம் என நான் விரும்புவது, நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டும் என்பதே. நீங்கள் விசுவாசிப்பீர்களானால், நீங்கள் தேவனுடைய மகிமையைக் காண்பீர்கள்; என நான் நிச்சயித்திருக்கிறேன். ஊனமுற்றோர்கள், துன்ப்பப்படுவோர், செவிடு, ஊமை, முடவர் என்ற போதிலும், அந்த வெற்றியானது இருக்கலாம் என்று நான் நம்பியபடியே கடந்த சில இரவுகளில் இல்லாதிருந்தது... மேற்குக் கரையை நாம் தொட்டது முதல் அது பார்ப்பதற்கு, அது மிகவும் மெதுவாகவே இருந்தது. 29. நாங்கள் கீழே லாங் கடற்கரையில் இருந்தபோது, சகோதரன்.சார்லஸ் ஃபுல்லர் என்னிடம் பேசிக்கொண்டிருக்கையில் அவர் என்னிடம் கூறினார், "சகோதரன்.பிரன்ஹாம்” என்று கூறி, “அந்தக் காரணம்” என்று கூறினார், இங்கு இந்த மேற்குக் கரையில் சகலமும் தெய்வீக சுகம் என்ற பெயரின் கீழ்தான் இருக்கிறது” என்று கூறினார். “நீல ஜூவாலை ஆராதனை செய்பவர்கள் இன்னும் அனைத்தும், ஒவ்வொன்றும் தெய்வீக சுகம் என்ற பெயரின் கீழ்தான் இருக்கிறது” என்று கூறினார். அது அப்பேர்ப்பட்ட ஒரு தடையாய் இருக்கிறது என்று கூறினார்.” நல்லது, அது... அது அவ்விதம் இருக்கலாம், நண்பர்களே; எனக்குத் தெரியாது; ஆனால் அது தேவனுடைய சுகமாக்கும் வல்லமைக்கு எதிர்க் கிரியையாக இருக்காது. 30. (ஒலிப்பதிவு முடிவடைகிறது - ஆசி) ...மற்றும் தெய்வீக சுகமளிப்பவர். மேலும் இப்பொழுது, அவரை சுலபமாக அல்லது மேலோட்டமாக பேசுபவனெவனும் ஒரு அற்புதத்தையும் அவருடைய நாமத்தில் செய்யமுடியாது. அதைத்தான் அவர் கூறியிருக்கிறார். ஆகையால் யாராவது ஒருவர் ஜனங்களை சுகமடையச் செய்கின்றனர் என்றால் நான் அதற்காக நன்றியுடையவனாக இருக்கிறேன். ஆனால், நாம் இன்றிரவு பாடத்துக்குள்ளாகச் செல்லும் போது, அதாவது நீங்கள் ஒருவேளை தேவன் நமக்கு சற்று உதவி செய்வாரானால், அதாவது நாம், எந்த நாள் மற்றும் மணிவேளையில் ஜீவிக்கின்றோம் என்றும், நீங்கள் ஒரு தரிசனத்தைப் பெற்று மேலும் பார்க்கமுடியும், என்று நான் உண்மையாகவே என் முழு இருதயம்தோடும் விசுவாசிக்கிறேன், அதன் பின்பு நீங்கள் கண்டு விசுவாசிக்கமுடியும். 31. இப்பொழுது, சில வேதவசனங்களை நான் வாசிக்கையில் தேவன் நமக்கு ஒத்தாசை செய்வாராக. எபிரேயருடைய புத்தகத்தில் பதினோராவது அதிகாரத்தில் நாம் தொடங்கி முதல் மூன்று வசனங்களை நாம் வாசிப்போம். மிகவும் கூர்ந்து கவனியுங்கள்! ஏனென்றால் என்னுடைய வார்த்தைகள் அப்படியே அழிந்து போகக்கூடியவைகள். அவைகள் தோல்வியடையும். ஆனால் தேவனுடைய வார்த்தையோ ஒருபோதும் தோல்வியடையாது. அது எப்பொழுதுமே உண்மையாய் இருக்கிறது. விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படா தவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. அதினாலே முன்னோர்கள் நற்சாட்சிபெற்றார்கள். விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்ட தென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படு கிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம். விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமானென்று சாட்சி பெற்றான்; அவனுடைய காணிக்கைகளைக் குறித்து தேவனே சாட்சி கொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான். (எபி 11:1-4) 32. ஒலி பெருக்கி அமைப்பானது கொஞ்சம் சிறிதளவு உரத்த சத்தமாக இருக்கிறது. ஆகையால்... (ஒலி நாடாவில் வெற்றிடம் - ஆசி) எல்லாம் சரிதானே. இப்பொழுது சற்றே சிறிது - சிறிது நன்றாக இருக்கலாம் என நான் நினைக்கிறேன்; எதிரொலிப்பதிலிருந்து ஒரு வித காரணம்... எல்லாம் சரி. 33. இப்பொழுது, மூன்றாவது அதிகாரம் - அல்லது மூன்றாவது வசனத்திலிருந்தே, மேலும் “தேவன் தம்முடைய வரங்கள் குறித்து சாட்சி பகரும்” அந்தக் கடைசி - கடைசிப் பகுதியில் இருக்கும் ஒன்றிலிருந்தே எனது பாடத்தை எடுக்க நான் விரும்புகிறேன். மேலும் இப்பொழுது என்னுடைய பொருளுக்காக, முதலாவது அதிகாரம் முதலாவது வசனத்திலேயே அது காணப்படுகிறது. சரியாகக் கூறவேண்டுமானால், (என்னை மன்னிக்கவும்) அந்த முதல் வசனமே. “விசுவாசமானது, நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது” என்பதாய் உள்ளது. 34. நாம் வாழ்கின்ற இந்த நாளானது, எல்லா இடங்களிலும் நிர்ணயிக்கப்படாத சமாதானம் மற்றும் நிர்ணயிக்கப்படாத இளைப்பாறுதலும் உள்ள அப்படிப்பட்ட ஒரு நாளாக இது இருக்கிறது. ஜனங்கள் அவர்களால் எதை எல்லாம் தேடக் கூடுமோ, தேடி இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருக்கின்றார்கள். அதிகபட்சமாக யாராவது ஒருவரை ஒரு பின்பற்றுதலாகப் பெறமுடியும். அவர்கள் என்ன போதிக்கின்றனர் அல்லது நினைக்கின்றனர் என்று பிரச்சனையில்லை. சிலர் அவைகளைக் கவனிப்பார்கள். மேலும் இந்த நாளைத்தான் அத்தீர்க்கதரிசிகள் பேசினார்கள். 35. ஜனங்கள் பசியாய் இருக்கும்போது, அவர்கள் எவ்விடத்திலிருந்தாவது புசிப்பார்கள். பிள்ளைகளும் மற்றும் ஜனங்களும் பட்டினியாக வாடும்போது ஒருகாலத்தில் அருமையான மேஜையிலிருந்து சாப்பிட்ட அவர்கள் ஒரு குப்பைத் தொட்டியிலிருந்து சாப்பிடுவார்கள், ஆனால் அவர்கள் பசியாய் இருப்பார்களானால், அவர்கள் ஏதோ ஓரிடத்தில் அவர்கள் சாப்பிடுகிறார்கள். ஆகையால் மெய்யான உண்மையான சுவிசேஷ ஊழியர்கள் முன்னேறிப் போகவேண்டும், சரியான காரியங்களை ஜனங்களுக்கு ஏற்ற காலத்தின் ஆகாரத்தைக் கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். 36. இப்பொழுது, என்னுடைய இந்தப் பொருளானது... நான் உங்களிடம் சாட்சி கொடுத்தபடியே, நான் ஒரு பிரசங்கி இல்லை. தேவனுடைய தெய்வீக சுகமளிக்கும் வரத்தை மாத்திரம் அப்படியே நான் கொண்டிருக்கிறேன் என்றும், அது தேவனிடமிருந்து வருகிறது என்றும் அதை நான் தாழ்மையுடன் கூறுகிறேன். வருகின்ற அதனிடம் நான் ஒன்றும் செய்ய முடியாது. ஆண்டாண்டுகளுக்கு முன்னமே நான் - அது தேவனால் முன்குறிக்கப்பட்டது. நான் ஒன்றும் செய்ய முடியாது... (ஒலிநாடாவில் வெற்றிடம் - ஆசி) . பூமியானது அதைக் கொண்டுவந்தது. (ஒலிநாடாவில் வெற்றிடம் - ஆசி). 37. இது வேதவசனங்களின் மைய உண்மையாக இருக்கிறது. விசுவாசமானது தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைக் கருத்தாய் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும். விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம். (எபி 11;6) 38. இந்த உலகம் விசுவாசத்தினால் உண்டாயிருக்கிறது. விசுவாசத்தினாலே பொருள்கள் உருவேற்றப்பட்டு இருக்கின்றன. அங்கே காற்றில் பனித்துளியானது தொங்கிக்கொண்டிருப்பதை தேவன் அப்படியே பார்த்தார். நீ அதை என்னவென்றாவது அழைக்க விரும்பலாம், மேலும் அவர் அப்படியே உரைத்து, "வெளிச்சம் உண்டாகக்கடவது” என்று கூறினார். அங்கே வெளிச்சம் உண்டாயிற்று. அதன்பிறகு அவர் நிலத்தை கொண்டுவந்து அப்பால் அதை உலரச் செய்து மேலும் அதேவிதமான அதிகமானவைகளைச் செய்தார். அவைகள் எல்லாமே தேவனுடனான ஒரு விசுவாசத்தின் கிரியையினால் செய்யப்பட்டது. அந்த முழு உலகமுமே விசுவாசத்தினால் உண்டாக்கப்பட்டது. 39. விசுவாசத்தினாலே இன்றிரவு நீங்கள் இங்கே இருக்கின்றீர்கள். உங்களில் அனேகர் உங்களுக்கு வேலை தருபவரிடம் நாளைக்கு நீங்கள் வேலைக்கு திரும்பிவிடுவதாக கூறியிருப்பீர்கள். நீங்கள் இருப்பீர்கள் என்று நீங்கள் எப்படி அறிவீர்கள்? “ஆராதனை முடிந்த பிறகு நான் வீட்டில் இருப்பேன்,” என்று உங்கள் மனைவியிடம் கூறியிருப்பீர்கள். நீங்கள் இருப்பீர்கள் என்று நீங்கள் எப்படி அறிவீர்கள். நீங்கள் கூறியிருந்த அந்த நபர் ஒரு வாடகை வண்டியில் ஒருவேளை வந்து உங்களை பதினொரு மணிக்கு அழைத்துச் செல்லலாம். இங்கே இருப்பீர்கள் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? ஒருவேளை இன்றிரவு பதினொரு மணிக்கு முன்பே நீங்கள் நித்தியத்தில் இருக்கலாம். பாருங்கள், ஆனால் இவைகள் அனைத்துமே விசுவாசத்தினாலேயே இருக்கிறது. சகலமும் விசுவாசத்தினாலேயே. 40. இப்பொழுது, இந்த விசுவாசம் என்ற பொருளை அனேகர் பேசுகின்றனர். மேலும் அதை குறைவாகவே அறிந்திருக்கின்றனர். இப்பொழுது கவனியுங்கள் நண்பர்களே; நான் - நான் உங்களை நேசிக்கிறேன் மேலும் நீங்கள் இதைப் பார்க்க நான் விரும்புகின்றேன். ஒரு அடிப்படை விதியை அறியாமல் அங்கே விசுவாசத்தை பேசக்கூடிய அனேகர் இருக்கின்றனர். இப்பொழுது, நீங்கள்: ஒன்று கூடி இருக்கின்றீர்கள், மேலும் நான் - நாம் அனைவருமே நித்தியத்தின் இந்தப்பக்கத்தில் உள்ளோம். ஒருவேளை ஒருபோதும், நாம் சந்திக்காமலேயே போகலாம். ஆனால் நான்... நாமனைவரும் ஒன்று கூடி இருக்கக்கூடிய ஒரு இடம் எனக்கு இருக்குமானால், மேலும் நான் அந்த காரியத்தைப் படிப்படியாக கொண்டுவந்தால், இப்பொழுது நீங்கள் என்னவாக இருப்பீர்கள் என்பதைப் பார்க்கிலும், அங்கே நீங்கள் அதை எளிதாகக் காணமுடியும், காரணம் என்னவென்றால் உங்களில் அனேகர் நினைக்கப் போகின்றீர்கள். மேலும் இன்றிரவில் நீங்கள் – அனேகமாக அனேகருக்கு என்னைக் குறித்துத் தவறான அபிப்பிராயம் ஏற்படும். இதை நீங்கள் அடைய நான் என்னால் சிறந்ததை முயற்சிக்கையில், இது தன்னைத்தான் உயர்த்துவதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது அப்படி அல்ல, என்னுடைய அன்பான நண்பர்களே, உங்களுக்காக தேவன் செய்துள்ளது என்ன - என்ன என்று உங்களை அப்படியே பார்க்க வைக்க என்னால் கூடுமானால் அது உங்களுடைய நன்மைக்காகத்தான். 41. இப்பொழுது, சிலர், அனேக ஜனங்கள் அந்த வரிசையின் வழியாக வந்து, “ஓ சுகமடைவதற்கு எனக்கு விசுவாசம் இருக்கிறது” என்று அவர்கள் சொல்லுகிறார்கள். 42. மேலும் நண்பர்களே, அவர்கள் கடந்து செல்லும் போது, அவர்களுக்கு ஒரு பல்வலியை சுகமாகக்கூடிய அளவு போதுமான விசுவாசம் இல்லை என்பதை நான் அறிவேன். அது சரியாய் இருக்கிறது. மேலும் அவர்களில் சிலர் புற்றுநோயுடன் ஊடாக வந்து, “சுகமடைவதற்கு எனக்கு விசுவாசம் இருக்கிறது என்று சொல்லுவார்கள்.” அவர்களிடம் விசுவாசம் இருக்காது. 43. “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது” என்பதே இன்று என்னுடைய வேதவசனப் பாடம் கூறுகிறது. பாருங்கள், அது ஒரு சாரமாயிருக்கிறது. அது நேரடியான ஏதோ ஒன்றாக இருக்கிறது. அது உண்மையாகவே நீங்கள் பெற்றிருக்கும் ஏதோ ஒன்று, நீங்கள் கற்பனை செய்து கொள்ளுகின்ற ஏதோ ஒன்றோ, அது நீங்கள் நினைக்கிற உங்களிடம் இருக்கின்ற ஏதோ ஒன்றோ அல்ல. ஆனால், அது உங்களிடம் இருக்கும் நேரடியான நேர் மறை செயலாக அது இருக்கிறது. நான் என்ன பொருளில் கூறுகின்றேன் என்று நீங்கள் பாருங்கள். 44. இப்பொழுது இங்கே சமீபத்தில்... வந்திருக்கின்ற யாரோ ஒருவரைப்பற்றி ஒரு சிறு கதையை நான் உங்களிடம் தருகின்றேன். எனவே நீங்கள் விசுவாசமானது என்னவாக இருக்கிறது என்று பார்க்கமுடியும். விசுவாசமானது தானே ஒரு வரமாயிருக்கிறது. அதின் ஒரு பகுதியை நீங்கள் உடையவர்களாக இருக்கலாம், ஆனால் அங்கே அது ஒரு விசுவாசத்தின் வரமாயிருக்கிறது. 45. உங்களில் சில ஜனங்கள் வியாதியஸ்தருக்கு எண்ணெய் பூசி அவர்களுக்கு ஜெபித்து நீங்கள் ஒரு விளைவை உடையவர்களாக இருப்பதைப் போன்றது. அது ஒரு சுகமாக்கும் வரம் அல்ல; அது விசுவாசத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. ஆனால் அது நேரடியான சுகமாக்கும் வரம் அல்ல. அங்கே ஒரே ஒரு நேரடியான சுகமாக்கும் வரம் மட்டுமே இருக்கிறது. அங்கே ஒரேயொரு நேரடியான விசுவாச வரம் மட்டுமே இருக்கிறது; அங்கே ஒரேயொரு நேரடியான அற்புதங்களின் வரம் மற்றும் அதேவிதமான மற்றவைகளாக இருக்கிறது. அங்கே வேதவசனங்களில் இருக்கிறது, அந்த அப்போஸ்தலர்களிடம் அது இருந்தது. மேலும் அனேகர் - அவர்கள் பலத்த கிரியைகளை செய்தனர். பிலிப்பும் மற்ற அனைவரும்... ஆனால் அது ஒரு சுகமாக்கும் வரமாக இருந்தது. 46. நாங்கள் நகரத்தை விட்டுச் சென்றபோது, அனேக மக்கள் கூறினவிதம் போன்று... சில இடங்களை விட்டு நான் சென்ற பிறகு, அவர்களில் சிலர், அனேகமாக பதினைந்து அல்லது இருபது பேர் “கர்த்தர் சுகமாக்கும் வரத்தை எனக்கும் கொடுத்தார்,” என்று கூறுவதை நான் கவனித்தேன். நல்லது, தேவன் அவர்களுடைய இருதயங்களை ஆசீர்வதிப்பாராக! 47. “சகோதரன் பிரன்ஹாம் நான் சுகமாக்கும் வரத்தை பெற்றுக்கொள்ளும்படியாக நீர் உம்முடைய கரங்களை என்மேல் வைப்பீர்களா” என்று சிலர் கூறினார்கள். 48. என்னால் இயன்றால் எனக்கு விருப்பம்தான். இன்றிரவு இங்கே இந்த வரிசையில் நீங்கள் ஒவ்வொருவரும் சரியாகக் கடந்துவர நான் விரும்புகிறேன். மேலும் இந்த நேரம் முதல் இன்னும் சில வாரங்களில் ஓக்லேண்டில் வியாதியஸ்தராக விடப்பட்ட ஒரு நபர் கூட அங்கே இருக்கமாட்டார்கள் என்று கூற நான் விரும்புகிறேன். அது சரியே. ஆனால், கொடுப்பதற்கு அது என்னுடையது அல்ல. அது.. (ஒலிப்பதிவு முடிவடைகிறது -ஆசி). 49. "...நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.” “நம்பப்படுகிறவைகளின் உறுதியாயிருக்கிறது” என்ற வேதவசனத்தின் பகுதியை நாம் எடுத்துக்கொள்வோம். 50. நம்பிக்கை, அன்பு மற்றும் விசுவாசம் என அங்கே மூன்று, காரியங்கள் இருக்கின்றன. அது சரியாய் இருக்கின்றதா? இப்பொழுது நம்பிக்கை ஒரு மூலக்கூறாக இருக்கிறது; விசுவாசம் வேறொரு மூலக்கூறாக இருக்கிறது; அன்பு மற்றுமொரு மூலக்கூறாக இருக்கிறது. கருணை என்பது அன்பாக இருக்கிறது. 51. அனேக ஜனங்கள், அன்பான ஜனங்களாகவும், உண்மையான கிறிஸ்தவர்களாகவும் வருகிறார்கள். ஆனால் சுகமடைவதற்குப் போதுமான விசுவாசம் இல்லாதவர்களாகவும், நான் பார்த்திருக்கிறேன், மேலும் சிலர் பாவிகளாகக் கடந்து செல்லும்போது சுகமடைவதற்கு ஏற்ற விசுவாசத்தை உடையவர்களாக இருக்கின்றனர், என்பதை நான் பார்த்திருக்கிறேன். பார்த்தீர்களா? 52. அது முற்றிலுமாக வேறொரு மூலக்கூறாய் இருக்கிறது. அது தேவனுக்கு எவ்வளவு நன்றாக நீங்கள் ஊழியம் செய்கின்றீர்கள் என்பதல்ல; அது ஒரு - நீங்கள் பெற்றுள்ள ஒரு மூலக்கூறு. இப்பொழுது, இதை நீங்கள் காண நான் விரும்புகிறேன், காரணம் என்னவென்றால் அது உங்களுடைய நன்மைக்காகத்தான். 53. சில வாரங்களுக்கு முன்பு, இங்கே ஒரு சில மாதங்களுக்கு முன்பு அது இருந்தது, ஒரு சில இரவுகள் நான் வீட்டில் இருந்தேன். மேலும் நான், அந்த நாளில் ஏறக்குறைய முந்நூறு மக்கள் அந்த வீட்டிலும் அதைச் சுற்றியுள்ள இடத்திலும் அங்கே கூடினார்கள். ஏறத்தாழ காலை இரண்டு மணிக்கு மனைவி என்னை படுக்கைக்கு அனுப்பினாள். நான் படுக்கையின் மறுபக்கத்தில் படுத்துக் கொண்டிருக்கையில் என்னுடைய, எனது கால்கள் இழுத்துக்கொண்டு வலித்தது... 54. அங்கே கீழே நான் படுத்துக்கிடந்தேன், ஒரு இயந்திரம் வெளியில் முன்பகுதியில் வந்து கொண்டிருக்கிற சத்தத்தைக் கேட்டேன் - மேலும், “ஓ, என்னே, அங்கே யாரோ ஒருவர் வருகின்றார்” என்று நான் கூறினேன். மேலும், “நல்லது, கவனியுங்கள். நான் வாசலுக்குச் செல்கிறேன்” என்று அவள் கூறினாள். வாசலுக்குப் போகும் அவளுடைய வழியில் அவள் இருக்கையில் நான் உறங்கச் சென்று விட்டேன். 55. “நல்லது, அந்தக் குழந்தையானது நீண்டகாலமாக வியாதியாக இருக்கிறது” என்று யாரோ ஒருவர் கூறுகிறதை நான் கேட்க முடிகிறது. அது ஒரு மனித சத்தம் போன்று இல்லாமல் ஏதோ ஒன்றைப்போல அந்த ஒரு சிறு குழந்தையானது அழுத்து, "அந்த பரம் தரிசனம்” என்ற என்னுடைய அந்த சிறிய புத்தகத்தில் நீங்கள் வாசிக்கையில்... பார்வையாளர்களில் எத்தனை பேர் அதை வாசித்திருக்கின்றீர்கள்... என்று நாம் பார்க்கலாம், “பரம தரிசனம்?” நீங்கள் பாருங்கள், அந்த ஒழுங்கின்படி ஏதோ ஒன்று. 56. அந்த மிகவும் சிறியவன், அது ஏறக்குறைய எட்டு அல்லது பத்தே வாரங்களாகியிருந்தது. மேலும் அது - அது அழுகையை நிறுத்தவேயில்லை. நல்லது, நான் - நான் நாங்கள் இந்த இடத்தை அடைவதற்குப் பகல் முழுவதும் இராமுழுவதும் பயணம் செய்தோம் என்று அந்தத் தாய் கூறினாள். “அவள் எங்கிருக்கிறார் என்று நாங்கள் பார்த்தோம் - சகோதரன் பிரன்ஹாம் வீட்டில் இருக்கவேண்டும் நாங்கள் குழந்தையைக் கொண்டு வந்தோம்” என்று கூறினாள். 57. என்னே, அந்த எளிய சிறிய காரியம், என்னால் உறங்க முடியவில்லை . நான் அங்கே வெளியில் சென்று அந்த சிறு குழந்தைக்காக ஜெபித்தேன். மேலும் அங்கிருந்த நாற்காலியில் கொஞ்ச நேரம் அமர்ந்து அந்தத் தாயாரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர்கள் தெற்கு ஓஹியோவிலிருந்து வருகின்றார்கள். நாங்கள் அங்கே அமர்ந்து கொண்டிருக்கையில், நண்பர்களே அந்த சிறிய குழந்தை அழுவதை நிறுத்திவிட்டது. அது இரவும் பகலுமாக அழுது கொண்டே இருந்திருக்கும். ஓ, அது இந்த உலகத்திலுள்ள எல்லாப் பணத்தைப் பார்க்கிலும் எனக்கு அதிக மதிப்புடையதாக இருக்கிறது. 58. மேலும் அங்கே, நான் பார்த்தேன், அந்தத் தாய் அழ ஆரம்பித்தாள். மிகப்பெரும் கண்ணீர்த்துளிகள் சொட்டி, அந்த சிறிய போர்வையின் மேல் விழுந்தது, அந்த வயதான தகப்பன், ஆடையின் மேல் அணியும் ஒரு ஜோடு உடையுடன் அங்கு அமர்ந்துகொண்டிருந்தார், அனேகமாக ஒரு நல்ல பகுதியை அவனுடைய ஜீவன் வருவதற்காக செலவழித்திருக்கின்றார்கள். அங்கே வந்து அவருடைய கரத்தை என் மேல் போட்டு “சகோதரன்.பிரன்ஹாமே நான் உங்களை நேசிக்கிறேன்” என்று கூறினார். என்னே, சில சிறந்த இருதயங்கள் ஒரு பழைய நீல சட்டையின் உள்ளே எப்போதும் துடித்துக் கொண்டே இருக்கும். அது சரியாய் இருக்கிறது. 59. அது நீங்கள் உடை அணியும் விதத்தில் இல்லை. அது உங்களுக்குள் என்ன இருக்கிறது என்பதைப் பொறுத்திருக்கிறது (அது சரியே) அங்கே, அவர் அதைத்தான் கருத்தில் கொண்டார், என்று நான் அறிவேன் அது மாய்மாலமாக இருக்கவில்லை . அவர் தனது இருதயத்திலிருந்தே அதை எண்ணினார்; அவர் என்னை நேசித்தார். நான் அவள் இருந்த மற்றொரு அறைக்குச் சென்ற போது அச்சிறு குழந்தையையும் அந்தத் தாயையும் நான் பார்த்தேன்... (ஒலிநாடாவில் வெற்றிடம் - ஆசி) அது எங்களைப் பார்த்து அப்படியே புன்னகைத்தது. நண்பர்களே, அதன் ஒவ்வொரு செய்கையும் - மதிப்புமிகுந்ததாய் இருக்கிறது, அது அப்படி இல்லையா? அது சரியே. அது எல்லாமே மதிப்பு மிகுந்ததாய் இருக்கிறது. அதன் பிறகு அவர்கள் கூறினார்கள். “நல்லது நீங்கள் விரும்பினால் காப்பியையோ அல்லது ஏதோ ஒன்றை உங்களுக்காக நான் வைக்கிறேன்” என்று என் மனைவி கூறினாள். மேலும், “நல்லது நாங்கள் அப்படியே சிறிது நேரம் காத்திருக்கின்றோம்” என்று அவர்கள் கூறினார்கள். மேலும் “நல்லது, இப்பொழுது...” என்று என் மனைவி கூறினாள், “நான் இந்த நாற்காலியின் மேல் படுத்துக்கொள்கிறேன், நீயும், தாயும் மற்றும் அவர்களும் படுக்கைக்குச் சென்று கொஞ்ச நேரம் உறங்குங்கள்” என்று நான் கூறினேன். 60. மேலும் அவர்களை ஒரு படுக்கையில் போட்டோம், நான் நாற்காலியிலேயே அமர்ந்துகொண்டு விடியும்வரை ஓய்வெடுக்க முயற்சித்தேன். சற்று பின்பு வேறொரு வாகனம் வந்தது. ஒரு வாலிப மனிதன் வாசல் வரை வந்தார். அவர் “சகோதரன்.பிரன்ஹாம்” என்று கூறினார். “ஆம்” என்று நான் கூறி விழித்தெழ முயற்சித்தேன். “நீங்கள் மிகவும் தூக்கமாக இருக்கின்றீர்கள் என அறிகிறேன்” என்று அவர் கூறினார், “ஆம் ஐயா” என்று நான் கூறினேன். அவர் என்னிடம், “நான் இந்தியானா மாரென்கோவிலிருந்து வருகிறேன்.” என்றார். “என்னுடைய சிறிய சகோதரி குடல்வால் நோயோடு மரித்துக்கொண்டிருக்கிறாள். அவளுக்கு இந்தக் காலையில் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று அவர் கூறினார். “நீங்கள் அவளிடத்திற்கு வருவீர்களா?” என்று கூறினார். 61. நல்லது. அது... (ஒலிநாடாவில் வெற்றிடம் - ஆசி) .... எனக்காக மறுபக்கத்தில் ஹூஸ்டனில் காத்துக்கொண்டிருக்கும் என்னுடைய பழைய ஜாலோபி.ஃபோர்டு வாகனத்தில் அதனுடைய எல்லா பக்கங்களுமே என்னுடைய முழங்காலால் அடிபட்டு வியாதியாய் உள்ள மக்களுக்கு ஜெபிப்பதற்காக நான் செல்லும்போது, விழித்துக்கொண்டிருக்கும்படியாக முயற்சி செய்து, அங்கு நான் எனது முழங்கால்களை இடித்துக்கொள்வதைப் போன்று, நான் ஒரு கூட்டத்தை விட்டு மற்றொன்றிற்குமாக சென்று, மேலும் நான் வாகனத்தின் கதவுக்கு வெளியே என் கையை நீட்டி "கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!, சரி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!” என்று ஆழ்ந்த உறக்கத்தில் கூறியதோடேயே வெளியில் ஊழியத்திற்குச் சென்றேன். 62. ஹூஸ்டனிலிருந்து ஒரு நாள் வந்து கொண்டிருந்ததை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். நான்... அங்கே இருந்தேன் ஒரு வாகனம் ஒலி எழுப்பிக் கொண்டிருப்பதை நான் கேட்டேன். மேலும் நான், சாலையின் தவறான பக்கத்தில் இருந்ததை நான் அறிந்தேன். என்னால் மாத்திரம் விழித்தெழவே முடியவில்லை. நீங்கள் பார்த்தீர்களா? 63 பதினைந்து நாட்கள் இரவு பகலாக நான் அங்கு அமர்ந்து வியாதியஸ்தருக்காக ஜெபித்துக்கொண்டிருந்தேன். மேலும் அற்புதமான காரியங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் ஓ, என்னே! நண்பர்களே, என் வாழ்க்கையானது குறுகியிருக்குமானால், நான் போகின்றபடியால் ஒருவேளை வேறுயாராவது நிற்கமுடியும். 64. மேலும் இந்த மனிதன் கூறினார், வாலிப நபர்; அவர் கூறினார், “என்னுடைய சிறிய சகோதரி... அவள் ஒரு சபையைச் சேர்ந்தவள் என்று அவர் என்னிடம் கூறினார். இங்கு நான் அதன் பெயரை அழைக்கப் போவதில்லை. காரணம் என்னவென்றால் அது தகுந்ததாய் இருக்காது; மேலும் நான் யாருடைய மதத்தையும் விமர்சிப்பதில்லை, எப்படியோ இந்த சபையானது என்னுடைய பிரதான எதிரியாய் இருக்கிறது. அங்கே தெய்வீக சுகமாக்குதல் இன்னும் மற்றவைகள், அது போன்ற ஒரு காரியமே இல்லை என்று அவர்கள் உரிமை கோருகின்றனர் என்று கூறினான். 65. நான் மில்டவுன் பாப்டிஸ்டு சபை என்ற என்னுடைய சபையில் இருந்தேன். அங்கே நான் ஒரு எழுப்புதல் கூட்டத்தை வைக்கச் சென்றேன். “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்று அழைக்கப்படுகிற அந்த சிறிய புஸ்தகத்தில் உங்களில் அனேகர் பார்த்திருப்பீர்கள். 66. நாற்பத்தி ஏழு பவுண்டு எடையை உடைய இருபத்தேழு வயதுடைய, ஒரு சிறு பெண் அங்கே இருந்தாள். காசநோயுடன் நாற்பத்தேழு பவுண்டு எடையை உடைய ஜார்ஜ் கார்ட்டர் என்ற பெயரில் இருந்தாள். அவள் அதே சபையை சேர்ந்தவள். அவள் அயலகத்தார் மூலமாக ஜனங்களுக்குக் கூறியிருந்தாள் “...” அவளுடைய பின்பாகத்திலேயே படுத்தபடி ஒன்பது வருடங்களும் ஆறு மாதங்களாய்க் கிடந்தாள். "அவள் நலம் பெறட்டும் மேலும் நாம் அதை விசுவாசிக்கலாம்” என்று கூறியிருந்தார்கள். 67. ஆனால், நண்பர்களே, இன்றிரவில் மில்டவுன் பாப்டிஸ்டு சபையில் அவள் என்னுடைய பியானோ இசைக்கருவியை வாசிப்பவள். ஆனால் அவர்கள் அதை விசுவாசிப்பார்களா? இல்லை மரித்தோரிலிருந்து ஒருவன் உயிர்த்தெழுந்து வந்தாலும் அதில் அவர்களுக்கு விசுவாசம் இல்லை . 68. அந்தவிதமாகவே, ஒரு மனிதன் மூன்று மருத்துவர்களால், மரித்துவிட்டான் என்று தெரிவிக்கப்பட்டு சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்தான், அவன் இருந்த இடத்திற்குள் நான் சென்றிருந்தேன், இன்றிரவு அவன் ஒரு பென்சில்வேனிலியா இரயில் இன்ஜினை இயக்கிக் கொண்டிருக்கிறான். அப்படி, இருந்தும் அவர்கள் விசுவாசிப்பதில்லை, அது உண்மையாய் இருக்கிறது. அது உண்மையாயிருக்கிறது. அவர்கள் விசுவாசிக்கமாட்டார்கள். 69. இந்த மணி வேளையானது இங்கே, உலகக் கவலைகள் மற்றும் மற்ற கவலைகளோடு, அங்கே ஜனங்களுடைய கண்கள், அவர்கள் தேவனை காணக்கூடாதபடி மிகவும் குருடாக இருக்கிறது. அவர் சரியாக அவர்கள் மத்தியில் அனேக தடவை இருந்துள்ளார். மேலும் கிறிஸ்துவின் நாட்களில் அது இருந்தது போலவே அவர்கள் கடந்து சென்றனர், அவர்கள் அவரைக் காணத்தவறினர். 70. இப்பொழுது, இந்தப் பெண் - அல்லது இந்த மனிதன் சரியாகக் கூறினார், “நீங்கள் போவீர்களா?” என்று அவர் கூறினார். “ஆம்” என்று நான் கூறினேன். "அனேகமாக நான் உங்களை கூட்டிக்கொண்டு செல்வது நல்லது” என்று அவர் கூறினார். “இல்லை, நான் விழித்திருக்க முயற்சி செய்கிறேன்” என்று நான் கூறினேன். மேலும் என் மனைவி அழ ஆரம்பித்துவிட்டாள், "இப்பொழுது, அன்பே, நீங்கள் எங்கேயாவது தூங்கி விழுந்து விடுவீர்கள்” என்று அவள் கூறினாள். 71. “இல்லை , இனிய இதயமே எனக்கு எல்லாமே சரியாகத்தான் இருக்கும்” என்று நான் கூறினேன். நான் எனது பழைய வாகனத்தில் ஏறி கீழே பின்னால் செல்ல ஆரம்பித்தேன். “நான் அவரை கவனிப்பேன்” என்று நான் கூறினேன். கீழே செல்கையில் விழித்திருப்பதற்கு, நான் கிள்ளிக்கொண்டும் எனது விரல்களை கடித்துக்கொண்டும் நான் துப்பி எடுத்து, என் கண்களைத் துடைத்தும், மற்ற ஒவ்வொன்றையும் செய்தேன். அது ஒரு மிகவும் மோசமான சுகாதாரமற்றது என்று எனக்குத் தெரியும். ஆனால் அந்தக் குழந்தையைக் காப்பாற்ற முயற்சித்து நான் - நான் எதையும் செய்தேன். 72. அந்த கிராமிய மாவட்டத்திற்குள் செல்லும் வழியில் ஒரு பழைய சாலையினூடாக ஏறத்தாழ எட்டு மைல்கள் நாங்கள் ஓட்டிச்சென்றோம். அங்கே கொஞ்சம் ஏறக்குறைய எட்டு - பதினேழு அல்லது பதினெட்டு வயதுடைய ஒரு வாலிபப் பெண் படுத்திருந்தாள். மோசமான நிலைமையில் அவள் அங்கே படுத்திருந்தாள். நான் அந்த அறைக்குள் நடந்து சென்றபோது, அவள் உண்மையிலேயே அச்ச உணர்வடைந்தாள். அவள், "ஓ, நீங்கள் சகோதரன் பிரன்ஹாம் தானா?” என்று அவள் கேட்டாள். “சகோதரியே நீ விசுவாசிக்கின்றாயா?” என்று நான் கேட்டேன். 73. “ஓ, ஆம் நான் விசுவாசிக்கிறேன்” என்று கூறினாள். “நான் - நான் - நான் விசுவாசிக்கிறேன்” என்று கூறினாள். “என் சபை என்ன கூறுகிறது என்று எனக்குக் கவலையில்லை” இந்த ஜார்ஜ் கார்ட்டர்ருடைய அதே சபையைச் சேர்ந்தவள். அவள், “என் சபை என்ன கூறுகிறது என்று எனக்குக் கவலையில்லை” என்றாள். நான் விசுவாசிக்கிறேன். நான் விசுவாசிக்கிறேன். 74. ஆகவே அவர்கள், அந்த மனிதன் அந்த தகப்பனார் வந்தார். என்னைச் சந்தித்து என் கையை குலுக்கினார். அவர் - அவர் அந்த படுக்கைக்கு என்னை அழைத்துச் சென்றார். “ஐயா” என்று அவர் கூறினார். இந்தக் காலையில் அவளுக்கு அறுவை சிகிச்சை நடைபெறப் போகிறது” என்றார். “அவள்... அவளால் பயணம் செய்ய இயலாது என்று நாங்கள் பயமாயிருக்கிறோம்” என்றார். நாங்கள் அவளை வழி முழுவதுமாக எடுத்துக்கொண்டு இந்தியானா, நியூ ஆல்பெனிக்குச் செல்லவேண்டும். 75. அந்த முதல் மருத்துவமனைக்கு ஏறக்குறைய நெருக்கமாக நாற்பது மைல்கள் இருக்கிறது. ஏறத்தாழ கிராமங்களினூடாக அவளுக்கு எட்டு மைல்கள் இருந்தது. அப்படியாக, ஓ, என்னே, அப்படியே ஒரு வேலி வரிசை, அதைப்போன்று, கீழாக வருகிறது, அங்கேதான் வலுவான சாமான்களை ஏற்றிச்செல்லும் வண்டிகள் - பயணித்து ஏறக்குறைய கீழே வருகின்றன. நல்லது, நான் - நான் அந்த அறுவை சிகிச்சையில் உதவி செய்து உபகாரம் செய்தேன் மேலும்... 76. (ஒலிநாடாவில் வெற்றிடம் - ஆசி)... மேலும் அது இருந்தது... அந்தக் குழந்தையால் மருத்துவமனைக்குச் செல்ல முடியாததை நான் அறிந்தே இருந்தேன். அங்கு செல்லும் முன்பு அவள் மரித்துவிடுவாள். அங்கே மருத்துவ வைத்தியர்கள் இப்போது, அமர்ந்து கொண்டிருக்கலாம். வழக்கமாக ஆராதனையில் அங்கே வைத்தியர்கள் வந்து கவனிப்பார்கள். மேலும் அவளது பக்கமானது விழுங்கப்பட்டு அது சிவப்பாக மாறியிருக்கிறது. அந்த குடல்வால் வியாதியானது கிழிந்து எந்த நேரத்திலும் வெடிக்க ஆயத்தமாக இருந்தது. 77. இப்பொழுது நம்முடைய நகரின் மருத்துவர், என்னுடைய சபைக்கு வருபவர், மருத்துவர் அடேயர், அவர்களுடன் நான் அனேக தருணங்களில் சென்றிருக்கிறேன். மேலும் நாங்கள் அறுவை சிகிச்சை செய்து அதை வெட்டி அதை ஆழமாக வெட்டித் திறந்தோம். அவைகள் மேசையின் மேல் வெடிக்கும்போது, மேலும் சில வேளைகளில் குடல்களை வெளியில் எடுத்து அவைகளைப் பிரித்து விலக்கி அவைகளைக் கழுவி அவைகள் அடிவயிற்றுக் குழியில் கோடுகளாக மெல்லிய வெளியில் தெரியக்கூடிய, அடிவயிற்று மற்றும் அடிவயிற்று எலும்பினுடைய உறுப்புகளுக்கு மேல் மடிந்து உட்புறமாக இருக்கும் சவ்வுலிருந்தும், உள்ளே அமைந்திருக்கும் இடத்திலிருந்தும், மேலும் ஒருவிதமான V-வடிவத்தில் அதை வெட்டி ஒரு குழாயை அவ்விடம் வைத்து வடிய விட்டனர். சிலவேளைகளில் அவைகள் சுகம் பெறலாம். 78. ஆனால் அக்குழந்தையால் முடியாது... அந்த குடல்வாலானது வெடிக்கலாம். மேலும் முப்பது மைல் அல்லது அதற்கு மேலாக அவள் பயணிக்கவேண்டும். மேலும் அவள் அங்கே சென்று அடைவதற்கு முன்பே மரித்துப்போவாள். 79. இப்பொழுது நண்பர்களே, அந்தப் பெண்; என்னைப் பார்த்துக்கொண்டு இருந்தாள். “ஓ, சகோதரன்.பிரன்ஹாம், நான் பிழைப்பேன் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?” என்று கேட்டாள். 80. “நீ பிழைப்பாய் என்று நான் விசுவாசிக்கிறேன்”, என்று நான் கூறினேன். ஆகையால் அவள் கூறினாள். “இப்பொழுது நீ விசுவாசிக்கின்றாயா?” என்று நான் கேட்டேன். 81. “ஓ, ஆம், ஆம் நான் விசுவாசிக்கிறேன், நிச்சயமாக. என் சபை என்ன கூறுகிறது என்று எனக்குக் கவலையில்லை. ஜார்ஜ் கார்ட்டர் சுகமடைந்ததை நான் - நான் விசுவாசிக்கிறேன்” என்று கூறினாள். “நானும் கூட சுகமடைவேன்” என்றாள். “அறுவை சிகிச்சையை குறித்து நான் பயமுறுகிறேன்” (பார்த்தீர்களா?), அப்படியே அதைப்போன்றே. 82. அயலகத்தார்களில் சிலர் உள்ளே கூடியிருந்தனர். 83. இப்பொழுது பாருங்கள். இங்கே தான் ஜனங்களாகிய நீங்கள் இப்பொழுது, இதிலிருந்து விளங்கிக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்களில் அனேகர் இன்றிரவில் இந்த ஜெபவரிசைக்கு அப்படியே வருவதைப் போன்றே அவள் விசுவாசிப்பதாக அந்த பெண் நினைத்தாள். நீ விசுவாசிப்பதாக நீ நினைக்கின்றாய், ஆனால் அவள் விசுவாசிக்கவில்லை . 84. இப்பொழுது உங்களில் அனேகருக்கு பெண்மை தொந்தரவு இருக்கிறது. மேலும் அது அப்படியாக ஏதோ வேறு ஒன்றாகவும் இருக்கலாம். அது - வயிற்றுப் புண்ணாக இருக்கக்கூடும், நீ - நீ உன்னுடையதை எடுக்க வேண்டும்... உனக்கு ஒரு சிறு நேரம் இருக்கமுடியும். 85. ஆனால் அந்த சிறுமிக்கோ , அது ஒரு அவசர நிலையாக இருந்திருக்கிறது. அவளது வாழ்க்கையானது ஆபத்தில் இருந்திருக்கிறது. ஏதோ ஒன்று செய்யப்பட்டே ஆகவேண்டும். எனவே “சகோதரியே, உன்னுடைய உணர்வுகளை நான் புண்படுத்துவதாகக் கருதவில்லை, ஆனால் நீ - நீ விசுவாசிக்கவில்லை” என்று கூறினேன். 86. இப்பொழுது, அது அப்படியே அந்த சகோதரன் இங்கே கூறியதைப் போல இருக்கிறது. உங்கள் தலைகளை உயர்த்தி இருக்கும் போது, கட்டிடத்தினுள் நீங்கள் எங்கு இருக்கின்றீர்கள் என்பது முக்கியமல்ல. இதை இவ்விதமாக நான் கூறவில்லை, நண்பர்களே. நான் இதை அப்படியே உங்களுடைய நன்மைக்காகவே உங்களுக்குக் கூறுகிறேன் என்று நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். அது நான் அல்ல, ஆனால் அது தேவனே. நீங்கள் உங்கள் தலையை உயர்த்தியிருக்கும் போது நான் அறிவேன், அதை நான் உணர்கிறேன். எனக்குப் பின்புறமாக நீங்கள் இருக்கின்றீர்களோ, நீங்கள் எங்கு இருந்தாலும்... கடந்த ஒரு இரவில் எனக்கு பின்புறத்தில் அவளுடைய தலையை உயர்த்தியபடி அமர்ந்திருந்ததைப் போன்று. எல்லா நேரங்களிலும் அதை நான் அறிந்தே இருக்கிறேன். அவ்விதமாகவே, அது தேவனுக்கும் தனிப்பட்ட நபருக்கும் இடையே இருக்கிறது. நீங்கள் பார்த்தீர்களா? என்னால் அதற்கு உதவ முடியாது. அவைகள் - அவைகள் அந்த மக்களை பாதிக்கின்றன. அனேகமுறை காரியங்கள் தடங்கல் செய்யப்படுகின்றன. . , 87. எனவே பிறகு இந்தப் பெண், "ஓ, நான் விசுவாசிக்கிறேன் நான் விசுவாசிக்கிறேன் சகோதரன் பிரன்ஹாம்” என்று கூறினாள். நல்லது, அவள் விசுவாசிப்பதாக அவள் எண்ணிக்கொண்டாள். 88. இப்பொழுது பாருங்கள், அவளுக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. நான் என்ன எண்ணுகிறேன் என்று நீங்கள் காண்கிறீர்கள்? 89. இப்பொழுது, “சகோதரியே, ஓர் சாதாரண நிகழ்வு என்று நான் கூறினேன். எனக்கு ஒரு கொஞ்சம் நேரமே இருக்கலாம். ஒரு வேளை, ஏறக்குறைய, அந்த மிகுதியான விசுவாசத்தை எடுத்துக்கொள்வதற்கும் மேலும் அதனோடே வெளியில் செல்லவும் உங்களுக்கு நேரமும் இருக்கலாம். ஆனால் உனக்கோ உடனடியாக கவனம் எடுக்கப்பட வேண்டியிருக்கிறது, சரியாக இப்பொழுதே. நான் உன்னுடன் நேர்மையாகவே இருக்கப் போகின்றேன். அந்த மருத்துவமனையைப் பார்ப்பதற்கு நீ உயிரோடு இருக்கமாட்டாய்” என்று நான் கூறினேன். 90. இப்பொழுது அந்தப் பெற்றோர்கள் அச்சமயத்தில் வெகு அதிகமாக அதை மெச்சிக்கொள்ளவில்லை. ஆனால் நான் உங்களுடன் நேர்மையாகவே இருக்கவேண்டும். நீங்கள் சத்தியத்தை அறிவீர்களாக... நான் உங்களுடன் நேர்மையாக இருப்பதை நீங்கள் விரும்பவில்லையா? மேலும் நினைவில் கொள்ளுங்கள், நண்பர்களே, நான் மாமிசத்தோடும், இரத்தத்தோடும் போராடிக்கொண்டிருக்கவில்லை. அது ஆவிக்குரிய வல்லமையாய் இருக்கிறது. சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு முன்பாக நான் நேர்மையுள்ளவனாக இருக்கவேண்டும். பாருங்கள். மேலும் காரணமென்னவென்றால் நான் என் சொந்த ஜீவனின் ஆபத்தை உணர்ந்திருக்கிறேன். என்னுடையதை மாத்திரமல்ல ஆனால் உன்னுடையதையும் தான். அவ்வாறே அவள் - அவள் விசுவாசித்தாள். ஆனால் அவளால் முடியவில்லை . 91. “நல்லது” என்று நான் கூறினேன். “இப்பொழுது பாருங்கள்.” இப்பொழுது நீங்கள் இதைக் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இப்பொழுது நீங்கள் உண்மையான கவனத்தோடு இருக்கவேண்டும் என நான் விரும்புகிறேன். ஒவ்வொரு வார்த்தையும் அவ்வாறே நீங்கள் அதைப் பகுத்து, அங்கே தேவன் அனுமதிக்கும் ஏதேனும் ஒன்றின் சிறியதை எடுத்துக்கொள்ளுங்கள். மேலும் நீங்கள் விசுவாசத்தை பெற்றிருப்பீர்களா? என்று நான் - நான் பார்ப்பேன். “சகோதரியே உன்னிடம் விசுவாசம் இல்லை ” என்று நான் கூறினேன். 92. “ஓ, சங்கை பிரன்ஹாம் அவர்களே, எதையும் விசுவாசிக்க விசுவாசம் எனக்கு இருக்கிறது.” 93. (ஒலிப்பதிவு முடிவடைகிறது - ஆசி)... உனக்கு விசுவாசம் இருக்குமானால் நான் உன்னைக் கேட்க விரும்புகிறேன். மேலும் உனக்குக் காண்பிக்கிறேன். இன்னும் சரியாகக் கூறுமிடத்து அது - அது உனக்கு விசுவாசமே இல்லை . இப்பொழுது கவனித்து அதின் ஒவ்வொரு வார்த்தையையும் பிடித்துக்கொள். அறையில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு சரவிளக்கிலிருந்து ஒரு கயிறு இருக்கின்றது. மேலும் அந்தக் கயிற்றின் முனையில் ஒரு சிறிய வளையல் உள்ளது. அது... அதன் உள்ளே சிறிய சிகப்பு ஜோடிகளோடு இருக்கின்ற, அது ஒரு வெள்ளைக் காப்பாக அது இருந்தது. அங்கே ஒரு குழந்தை, அனேகமாக அதனுடன் விளையாடிக்கொண்டிருக்கும், உங்களுக்குத் தெரியும். அறையினுள்ளே அது ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும், உங்களில் சிலருக்கு இருக்கும், உங்களுடைய சொந்த குழந்தைகளை அந்தவிதமாக சந்தோஷப்படுத்துவதற்கு, ஏதேனும் ஒன்றை சுற்றிலுமாக முன்னும் பின்னுமாக, அதுபோல அசைத்து அதனோடே விளையாடச் செய்து அவர்களை குதூகலமடையச் செய்யலாம். 94. அந்த சிறு வளையல் கீழே தொங்கிக் கொண்டிருப்பதை நான் பார்த்தேன். அது இருந்தது... அந்த வாலிபப் பெண்ணிடம் நான் கூறினேன்; “அந்த வளையலில் இருந்து நீ எவ்வளவு தூரம் இருக்கின்றாய்?” என்று நான் கேட்டேன். “அனேகமாக - தோராயமாக பதினைந்து அடி” என்று அவள் கூறினாள். 95. “இப்பொழுது இங்கு இருக்கின்ற மற்ற வயது வந்தவர்கள் அனைவரும், நீங்கள் எல்லா ஜனங்களும், அப்படியே உங்கள் முதுகை சரியாக எனக்குத் திருப்புங்கள் என்று நான் கூறினேன். “இப்பொழுது எவரையும் புண்படுத்துவதற்கு அங்கே ஒன்றையும் செய்யப்போவதில்லை என்று நான் கூறினேன். நான் சற்றே அந்தப் பெண்ணுடன் பேசவேண்டும். ஏனென்றால் இப்பொழுது அவள் அந்த கருத்தைப் பிடித்துக்கொள்ள வேண்டும்” என்று கூறினேன். 96. அதன் காரணமாகத்தான் இன்றிரவு உங்களுடன் இந்தக் காரியத்திற்குள் செல்கின்றேன். நமக்கு இன்னும் இரண்டு இரவுகள் இருக்கின்றன. மேலும் ஏதேனும் ஒன்று செய்யப்பட வேண்டும். நீங்கள் பாருங்கள்? இப்பொழுது நீங்கள் புறம்பே சென்று இதைப்பற்றி ஏதாவது தவறாகக் கூறுவதை நான் விரும்பவில்லை. ஏனென்றால் அதற்காக நியாயத்தீர்ப்பில் நீங்கள் பதிலுரைக்க வேண்டியவர்களாக இருக்கிறீர்கள். எனவே "ஏதோவொன்று உடனடியாக செய்யப்படவேண்டும்” என்று நான் கூறினேன். மேலும், இப்பொழுது பெற்றோர்களாகிய நீங்கள் அப்படியே உங்கள் முதுகை திருப்புங்கள்” என்று நான் கூறினேன். 97. மேலும் அயலகத்தார்களில் சிலர் அவளுடனே அமர்ந்து இருந்தனர். அவர்கள் அனைவரும் அவர்கள் முதுகை என் பக்கமாகத் திருப்பி அவர்கள் நாற்காலிகளையும் சுற்றிலுமாக திருப்பினர். அந்த வாலிபப் பெண்ணிடம் நான், “இப்பொழுது எல்லாக் காரியங்களையும் விசுவாசிக்க உன்னிடம் விசுவாசம் உள்ளது என்று நீ என்னிடம் சொல்” என்று கூறினேன். “ஐயா, என்னிடம் இருக்கிறது” என்று அவள் கூறினாள். (ஒலிநாடாவில் வெற்றிடம் -ஆசி) 98. “நீ சாப்பிட்டது முதல் அது எவ்வளவு காலமாக இருக்கிறது?” என்று நான் கேட்டேன். ஏறத்தாழ மூன்று நாட்களாக” என்று அவள் கூறினாள். “நான் என்னுடைய வயிற்றில் தண்ணீரைக் கூட வைக்க முடியாது?” என்று அவள் கூறினாள். குடல்வால் நோய் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியும். அவள் மீது ஜூரமும் இருந்தது. 99. “இப்பொழுது உன் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பாயானால் உனக்கு விசுவாசம் உண்டு என இப்பொழுது எனக்கு நிரூபி... இப்பொழுது நீ சரியாக நேராய் அந்த வளையலைப் பார். அது காற்றின் மத்தியில் அங்கே தொங்கிக் கொண்டிருக்கிறது. நீ அந்த வளையலை அந்த அறையினுள் சுற்றி சுற்றி அசைத்துக்காட்டு என்று நான் கூறினேன். பிறகு நீ அதை அறையினுள் முன்னும் பின்னுமாக அசைக்கச்செய். அதன் பிறகு அதை நிறுத்து. அப்பொழுது உனக்கு விசுவாசம் உண்டு என்று நான் நம்புவேன்” என்று கூறினேன். 100. “ஓ, சகோதரன் பிரன்ஹாம்” என்று கூறினாள். “என்னே , ஏன் அதைப் போன்று ஏதோவொன்றை என்னிடம் கேட்கின்றீர்கள்?” என்றாள். 101. “உனக்கு விசுவாசம் இருக்கின்றதா என்று நான் காணவேண்டும்” என்று நான் கூறினேன். 'நீ விசுவாசிப்பாயானால் சகலமும் கூடும்' என்று இயேசு கூறியிருக்கிறார்” என்று நான் கூறினேன். 102. இப்பொழுது அது அப்படியே தூய விசுவாசமாய் இருக்கிறது. நண்பர்களே, அனேக சமயங்களில், மந்திரவாதிகள் தந்திரங்கள் இன்னும் மற்றவைகளையும், கண்ணாடிகள் மற்றும் காரியங்களை வெடிக்கச் செய்ய இதைப் பயன்படுத்துவார்கள். நீ விசுவாசிப்பாயானால், அது அவ்விதமாக இருக்கும். ஆனால், நானோ உங்கள் எண்ணத்தை விசுவாசத்தின் மீது அஸ்திபாரமிட முயற்சி செய்கின்றேன். எனவே நீங்கள், நான் எதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றேன் என்று அறிந்துகொள்வீர்கள். எனவே நீங்கள் இப்பொழுது வரை அமர்ந்து நீங்கள் பிடித்துக்கொள்ள நான் விரும்புகிறேன். உன்னையே விழித்திருக்கச் செய், எனவே நான் அதனோடு முடிவை அடையும்போது அது என்னவாக இருக்கிறது என்று அதைப்பற்றியெல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். 103. பிறகு, “ஏன், சகோதரன் பிரன்ஹாம், ஒருவருமே அதைச் செய்ய முடியாது” என்று அவள் கூறினாள். “ஓ, ஆம். அதை விசுவாசிக்கின்ற எவராலும் முடியும்” என்று கூறினேன். அவள், “நல்லது, எவராலும் முடியும் என்று நான் விசுவாசிக்கவில்லை” என்று கூறினாள். “சகலத்தையும் நீ விசுவாசிப்பதாக கூறினாய் என நான் நினைத்தேன்” என்று நான் கூறினேன். பாருங்கள். எவ்வாறு அவள் சரியாக அங்கே எப்படி பிடிபட்டாள். “சகலத்தையும் நீ விசுவாசிப்பதாக நீ சொன்னாயே, நீ அதை நிரூபிக்க நான் விரும்புகிறேன்” என்று நான் கூறினேன். “அங்கே எவராலும் அதை செய்யமுடியும் என்று நான் விசுவாசிக்கவில்லை. அது முடியாத காரியம், சகோதரன் பிரன்ஹாம்” என்று அவள் கூறினாள். "நீங்கள் அதைச் செய்ய முடியுமா?” என்று அவள் கேட்டாள். “ஆம். அம்மா” என்று நான் கூறினேன். அவள், “நல்லது அது செய்யப்படுகிறதை நான் பார்க்கலாமா?” என்று அவள் கேட்டாள். “நீ விரும்பினால்” என்று நான் கூறினேன். “நான் விரும்புகிறேன்” என்று அவள் கூறினாள். 104. பின்பு அதன் மீது என் சிந்தையை வைத்துக் கொண்டு, மேலும் என்னை அல்லாமல், அவள் அதையே கவனிக்கும்படி செய்தேன். கூட்டங்களில் அநேக தடவை இருப்பது போன்றே இந்த கூட்டத்தில் உங்களுக்கு இருக்குமாறு கண்ணை உடைய எந்த குழந்தையையும் நான் எடுப்பேன். நீங்கள் அதை இங்கே மேலே கொண்டு வாருங்கள், அதற்காக ஜெபம் கூட செய்யாமல், மேலும் அப்படியே நான் அந்த கண்ணின் உள்ளே, அதைப் போன்று, அதை நேராகப் பார்த்து, அதனுடைய கண்களை நேராக, நான் கொண்டுவர முடியும். ஆனால் நான் என் தலையை திருப்பும் போது... (ஒலிப்பதிவு முடிவடைகிறது - ஆசி). 105. அவளை ஒரு உதாரணத்திற்கே பயன்படுத்தினேன். அவள் திரும்பிச் சென்றாள். அவள் திரும்பவும் வருவதற்கு முன்பாக, இரண்டு அல்லது மூன்று நாட்கள் எடுத்துக்கொண்டு, அவள் அந்த வரிசையினூடாகப் போக வேண்டியதில்லை என்று நினைத்தாள். ஆனால், அந்த நேரத்தில் அவள் வந்தபோது, “சகோதரன் பிரன்ஹாம் திரும்பவுமாக வரிசையில் இருக்கவேண்டும் என்று நீர் கூறினீரே” என்று அவள் கூறினாள். 106. ஜெபித்துக் கொள்வதற்காக அங்கே நூற்றுக்கணக்கான மக்கள் எல்லா இடங்களிலும் குவிந்தனர், நின்று கொண்டிருக்கின்றனர். அதிகாலையில், அங்கே வழியிலிருந்து அமிழ்ந்து நனைந்து உள்ளே ஜெபித்துக்கொள்வதற்காக உள்ளே வருகின்றனர். அதன் பிறகு தேவன் அவளது கண்களை அங்கே சுகமாக்கினபோது, இரண்டு கண்களுமே நன்றாக வந்தது. மேலும் அவள் சாதாரண நிலைக்கு வந்து, களிகூர்ந்து கொண்டு வெளியே சென்றாள். நீங்கள் பார்த்தீர்களா? அதுதானே, தேவனுடைய விசுவாசமானது, உங்களுடைய விசுவாசத்திலிருந்து வேறுபட்டிருக்கின்றது... 107. இப்பொழுது, பின்பு அந்த காப்பிற்கு என் கண்களின் உறுதியான பிடிப்பு இருந்தது. அது நீங்களும் உங்களாலேயே செய்ய இயலும். உங்கள் இருதயத்தில் அதை நீங்கள் சந்தேகிக்காமல் இருந்தால், மேலும் அது சுற்றிலும் அசைய ஆரம்பித்து. அதன் பிறகு அது முன்னும் பின்னுமாக சுற்றிலுமாக, குறுக்காக அசைந்து, அதை நிற்கச்செய்யும். 108. “சகோதரன் பிரன்ஹாம்” என்றாள் அவள். “அது இறந்தவர்களின் ஆவிகளுடன் தொடர்பு கொள்ளும் ஒரு நம்பிக்கை” என்று அவள் கூறினாள். “அதைப்போல ஏதோவொன்றை அனேகமாக நீ கூறலாம் என்று நான் எண்ணினேன்” என்று கூறினேன். என்னே எப்படியாக ஜனங்கள் தேவனை அறிந்திருக்கின்றோம் என்று அறிக்கை செய்து அவரைப் பற்றி மிகச்சிறிதே அறிந்துள்ளனர் என்பதில் புதுமை ஒன்றும் இல்லை. அது சரியா இல்லையா? 109. “நாங்கள் கிறிஸ்துவின் சபையைச் சார்ந்தவர்கள் என்பது உங்களுக்கு தெரியும்” என்று அவள் கூறினாள். என்னை மன்னிக்கவும், நான் அதை சொல்ல வேண்டும் என்று கருதவில்லை. என்னை மன்னிக்கவும். கிறிஸ்துவின் சபை மக்கள் என்று நான் சொல்ல வேண்டும் என்று கருதவில்லை, பாருங்கள்? எவ்வாறேனும், “வேதம் எங்கு பேசுகிறதோ அங்கு நாங்கள் பேசுகிறோம், மேலும் வேதம் எங்கு அமைதலாய் இருக்கிறதோ அங்கு அமைதலாய் இருக்கின்றோம்” என்று கூறுகின்றனர். 110. உங்களுக்கு அந்த முழக்கம் இருக்கிறது என்று நீங்கள் அறிவீர்கள். சில தடவை நான் அதைக் கேள்வி கேட்டிருக்கின்றேன். 111. “எல்லாம் சரி” என்று நான் கூறினேன். "அதைப்போன்று எதையும் வேதத்தில் காண்பிக்க முடியும், என்பதற்கு அங்கே அப்படிப்பட்ட காரியம் ஒன்றும் இல்லை ” என்று அவள் கூறினாள். 112. “நான் - நான் நினைத்தேன். அதைத்தான் நீங்கள் கூறுகின்றீர்கள் என்று, நான் கூறினேன். “நிச்சயமாக அது வேதத்தில் இருக்கிறது” என்று நான் கூறினேன். 113. “நல்லது, நான் ஒருபோதும்... நான் அதை விசுவாசிப்பதில்லை ” என்று அவள் கூறினாள். “எல்லாம் சரி,” “நீ அதை விசுவாசிப்பதில்லையா?” என்று நான் கூறினேன். “இல்லை, வேதத்தில் அது எங்கு இருக்கிறது என்று எனக்கு நீங்கள் காண்பியுங்கள்” என்று அவள் கேட்டாள். 114. “இயேசு, ஒரு நாள் ஒரு மரத்தைக் கடந்து சென்றார். அதில் சில கனிகளை அவர் - காண்பதற்கு விரும்பினார், அங்கே அதில் கனிகள் காணப்படவில்லை. அவர் அதன் மீது ஒரு சாபத்தை வைத்தார். அந்த மரம் வாட ஆரம்பித்தது. மேலும் அவர்கள் மதிய வேளையில் கடந்துபோகும்போது அந்த மரமானது வாடிப் போயிருந்தது. எவ்வளவு சீக்கிரமாக அந்த மரமானது பட்டுப்போயிற்று என்று பேதுரு குறிப்பிட்டுக் கூறினான். இந்த மரமானது பிடுங்கப்பட்டு சமுத்திரத்தில் தள்ளுண்டு போ என்று நீ உன் இருதயத்தில் சொல்லுவாயானால், மேலும் அதை சந்தேகப்படவில்லையென்றால் அது உனக்குக் கீழ்ப்படியும்.” அவர் அதைச் சொன்னாரா? மேலும் உன்னுடைய இருதயத்தில் சந்தேகப்படாமல் “பெயர்க்கப்படுவாயாக” என்று இந்த மலையைப் பார்த்து நீ கூறுவாயானால் உடனே கொஞ்சம் கொஞ்சமாக அது நிறைவேறும்” என்று நான் கூறினேன். அவர் அதைக் கூறினாரா?. நிச்சயமாக அவர் கூறினார். “அது ஒரு பாவத்தின் மலையாய் இருக்கிறது என்று கூறி, அவருடைய அவிசுவாசத்தை நியாயப்படுத்த முயற்சி செய்கின்ற உன்னுடைய அவிசுவாசமுள்ள மேய்ப்பரை நான் அறிவேன்” என்று நான் கூறினேன். நான் - நான், நானும் பள்ளிக்கூடத்திற்குச் சென்றிருக்கிறேன். அவர் ஒலிவமலையில் முழங்காலில் இருந்தார். அது ஒலிவமலையாய் இருந்தது. அது பெயர்க்கப்படுவதாக என்றும் மேலும் அதை சந்தேகப்படாமல் நீ உன் இருதயத்தில் கூறுவாயானால்... “இன்னும் எவ்வளவு அதிகமான விசுவாசம்?” என்று நான் கேட்டேன். கடுகு விதையளவு விசுவாசம் உனக்கு இருந்தால்...” என்று அவர் கூறினார். “இப்பொழுது கடுகு விதையளவு விசுவாசமானது மலையை அசைக்குமானால், அந்த காப்பை அப்படியே அசைப்பதற்கு இன்னும் எவ்வளவு சிறிய விசுவாசமானது உனக்கு இருக்கவேண்டும்?” 115. நான் எதைக் குறிப்பிடுகிறேன் என்று நீங்கள் பார்த்தீர்களா? இப்பொழுது கடுகு விதை என்று அவர் ஏன் கூறினார் என்று நான் அடிக்கடி ஆச்சரியப்பட்டதுண்டு. நான் இந்த சிந்தையை விட்டுவிடவேண்டும். கடுகு விதையானது எல்லா விதைகளிலும் சிறிய விதையாய் இருக்கிறது. அதுசரியே. ஆனால் அங்கே கடுகு விதையோடு ஒன்றையும் கலக்க முடியாது. அது எல்லாமுமே கடுகாய் இருக்கிறது. நீங்கள் அதை முட்டைகோசு அல்லது அதனுடன் கலக்க முடியாது. மேலும் அதை வளர்க்கவும் இயலாது. அது கடுகுதான். உங்களுக்கு அந்த அளவுக்கு விசுவாசம் இருக்குமானால், அந்த எல்லா விசுவாசமும், வேறு ஏதோ ஒன்றுடன் கலந்தது அல்ல, உங்களுக்கு எது விருப்பமோ கேளுங்கள். அது உங்களுக்குக் கொடுக்கப்படும். ஆனால், அது தடுமாற்றத்துடன் இருக்க முடியாது. அது உண்மையான கடுகு விதையாக இருக்கவேண்டும். நான் எதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன் என்று நீங்கள் அறிவீர்களானால், எல்லாம் சரி, மேலும் இன்னும் எவ்வளவு அதிகமாக அதை எடுத்துக்கொள்ள வேண்டும். 116. “ஏன்?” “இங்கே பாருங்கள், நான் உங்களிடம் சிலவற்றைக் கேட்க விரும்புகிறேன்” என்று அவள் கூறினாள். அவள், "தேவன் அதை அசைத்தாரா அல்லது, பிசாசு அதை அசைத்தானா?” என்று கேட்டாள். நான், "அதை யாரும் அசைக்கவில்லை” என்றேன். “பிறகு இந்த உலகில் எப்படித்தான் அது அசையும்” என்று அவள் கேட்டாள். "நான் அதை அசைத்தேன்” என்று நான் கூறினேன். “நல்லது, நீங்கள் அதனிடமிருந்து பதினைந்து அடி அல்லது நல்ல தூரத்தில் இருக்கின்றீர்கள்” என்று அவள் கூறினாள். "இல்லை, அதை அசைத்தது என்னுடைய விசுவாசமே” என்று நான் கூறினேன். பாருங்கள். சந்தேகப்படாமல் நீங்கள் எதையாகிலும் கேட்பீர்களானால்... நான் என்ன கூறுகிறேன் என்று பாருங்கள்? 117. (ஒலிப்பதிவில் கீறல்கள் - ஆசி)... விசுவாசம், ஆனால் நீ - நீ ஒரு - ஒரு மானிடனாய் இருக்கின்றாய். உன் இருதயத்தில் இதை நீ ஆட்சேபிக்கலாம். மேலும் நீ ஏற்றுக்கொண்டால் ஒழிய நான் உன்னைத் தொடமுடியாது. இயேசு அனேக பலத்த செய்கைகளை செய்யமுடியவில்லை, காரணம் ஏன்? ("அவிசுவாசம்” என்று சபையோர் கூறுகின்றனர் -ஆசி) சரியாக. எவ்வாறாக சிறிய மக்கள் அதைப்பற்றி அறிந்திருக்கின்றனர் என்று பாருங்கள் - எவ்வாறாக சிறிய மக்கள் விசுவாசத்தைப் பற்றி அறிந்திருக்கின்றனர்? நண்பர்களே, சிறிய மக்கள் எவ்வாறு அதைப்பற்றி அறிந்திருக்கின்றனர் என்று கண்டுபிடிப்பது அது ஆச்சரியமாயிருக்கிறது. அதைப்பற்றி அவர்கள் மிகவும் அதிகமாகப் பேசி மேலும் இன்னும் மிகவும் குறைவாகவே அதைப்பற்றி அறிந்திருக்கின்றனர். 118. அதன்பிறகு, “நல்லது, பிறகு நீங்கள் எனக்குச் சொல்வதற்கு நினைக்கின்றீர்களா... அங்கே அந்தப்பகுதியானது, என்ன பகுதியானது தேவனோடு செயலாற்றுகிறது?” என்று அவள் கூறினாள். 119. “இப்பொழுது பார், அங்கே ஓர் தூதன் இறங்கி அறையினுள் வந்து நான் பிறப்பதற்கு முன்பாகவே தெய்வீக சுகமளிக்கும் ஒரு வரத்தைப் பெற முன்குறிக்கப்பட்டிருக்கிறேன் என்று வழியில் முன்னமே, முன்னமே என்னிடம் கூறினார். மேலும் ஒரு இரவில் அறையினுள் வந்து தேவன் அந்த வரத்தை அனுப்பினார். அது ஜனங்களுக்காக ஒரு தெய்வீக சுகமளிக்கும் வரமாய் இருந்தது என்று என்னிடம் கூறினார். நான் ஜனங்களை என்னை விசுவாசிக்கும்படி செய்தால் (என்னை விசுவாசித்து) நான் ஜெபிக்கும் போது உத்தமமாக இருந்தால், அந்த ஜெபத்திற்கு முன்பாக எதுவுமே நிற்க முடியாது” என்றார். 120. “ஆகையால், இந்த இயற்கைக்கு மேம்பட்டவருடன் முகமுகமாகப் பேசிக்கொண்டிருந்தேன். இதை நான் என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். மேலும் உன் முழு இருதயத்தோடும் என்னை விசுவாசிக்கும்படி என்னால் செய்யமுடியுமானால், அதுதான் தேவனை அசைத்து, அதன்பிறகு நீ சுகமாகிறாய். உன்னுடைய விசுவாசமே உன்னை இரட்சித்தது.” என்று கூறினேன். நான் எதைக் குறிப்பிடுகின்றேன் என்று நீங்கள் பாருங்கள்? விசுவாசிக்கும்படியான உன் விசுவாசமே உன்னை இரட்சித்தது. நீ கிரியை நடப்பித்தாலோ, சிந்தையில் சிந்தித்தோ, அல்ல ஆனால் என்னவென்று உண்மையாகவே நீ அறிந்துள்ள காணப்படாதவைகளின் நிச்சயமாகவே அது இருக்கின்றது. நான் என்ன குறிப்பிடுகிறேன் என்று நீங்கள் பார்ப்பீர்களா? 121. பின்பு, “சகோதரன் பிரன்ஹாம், நான் உண்மையாகவே அறிகிறேன். அதாவது, அங்கே நான் இதுவரையிலும் அடையமுடியாத ஏதோ ஒன்று மேலே இருக்கிறது” என்று அந்தப் பெண் கூறினாள். என் முழு இருதயத்தோடும் நான் முயற்சி செய்கிறேன், தேவன் என் மீது இரக்கமாயிருப்பாராக” என்று அவள் கூறினாள். “நான் விசுவாசிப்பேனாக” என்று அவள் கூறினாள். 122. பிறகு நான் அவளுடைய கரத்தைப் பற்றிக்கொண்டேன். அங்கே கிழிந்துப்போன அந்த குடல்வாலில் இருந்து ஒரு அதிர்வு இடைவிடாது வந்தது, அவளுக்காக ஜெபித்தேன். அது உடனடியாக அது நின்றது. “சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக! உன் விசுவாசமே இப்பொழுது உன்னை இரட்சித்தது” என்று நான் கூறினேன். 123. ஒரு சில நேரம் கழித்து நான் நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்து, அப்படியே நான் உறங்கச் சென்றேன். சூரியன் மேலே வந்துகொண்டிருந்தது. வீட்டிற்குத் திரும்பி வரும் முன்பாக நான் சற்றே ஒரு சிறிய ஓய்வு எடுக்கவேண்டும், காரணம் என்னவென்றால், சாலையின் மேல் எங்காவது நான் விழுந்து ஒரு சேதமாகிவிடுமே என்று நான் பயப்பட்டேன். நான் அங்கே அமர்ந்து கொண்டிருந்தேன். அவர்கள் நோயாளிகளை எடுத்துச் செல்லும் வாகனத்தை அழைத்தார்கள். அங்கே அது தேவையில்லாதிருந்தது என்று அவர்களிடம் கூறினேன். அந்தக் குடும்பத்தில் ஒருவனாக நானும் விழித்துக்கொண்டிருந்தபோது, ஏன், அந்தப் பெண் படுக்கையை விட்டு, ஒரு அரைக்கால் கேலன் அளவு ஐஸ்கிரீமைச் சாப்பிட்டாள். அந்த - அந்த நாள்முதல் இதுவரை ஒரு கத்தியும் அவள் மேல் ஒருபோதும் படவில்லை . அவள் வீட்டின் தாழ்வாரத்தில் நின்றுகொண்டு பிரியாவிடை கூறிக் கையசைத்தாள். “சகோதரன் பிரன்ஹாம், சென்று வாருங்கள்” என்று கூறினாள். சமீபத்தில், “சத்தியத்தின் தூதனி”-ல் அவளுடைய சாட்சியானது வெளியிடப்பட்டிருந்தது. மில்டவுனில் இருக்கும் திருமதி.ஈடித் ரைட் அல்லது இந்தியானாவின் டிபாவ், அது அவளுடையதாக இருந்தது. அங்கே - அங்கே. 124. எல்லாமே சரி. இப்பொழுது விசுவாசம் என்னவாக இருக்கிறது என்று நீங்கள் பாருங்கள். அது ஏதோவொன்றாக இருக்கிறது... இப்பொழுது பாருங்கள் நண்பர்களே, நீங்கள் அனைவருமே, குறைந்தபட்சம் இதை அறிந்திருப்பீர்கள் என்று நான் அறிவேன். இந்தச் சரீரமானது ஐந்து புலன்களால் கட்டுப்படுத்தப்படுகிறது, அது சரியாய் இருக்கின்றதா? எல்லாம் சரி. அது பெற்றுள்ள ஐந்து புலன்களுமே இந்த மனித சரீரத்தைக் கட்டுப்படுத்தும் எல்லாமுமாக இருக்கின்றது. இப்பொழுது உண்மையாக கூர்ந்து கவனித்து மேலும் இப்பொழுது உங்கள் கவனத்தைக் கொடுங்கள். அந்தப் புலன்கள், ஐந்து புலன்கள் அது சரியா? பார்த்தல், ருசித்தல், உணர்தல், முகர்தல், கேட்டல், அது சரியா? அந்த ஐந்து புலன்கள். முழு மனித சரீரத்தையுமே கட்டுப்படுத்துகிறது. அது உண்மையா? பாருங்கள்? பார்த்தல், ருசித்தல், உணர்தல், முகர்தல், மற்றும் கேட்டல். இப்பொழுது, அங்கே அவைகளில் ஒன்று கூட விசுவாசத்தை பிரகடனப்படுத்தவில்லை . 125. விசுவாசமானது ஆறாவது புலனாக இருக்கிறது, நீங்கள் விரும்புவது போன்றே அதை மன நுண்ணுணர்வு அல்லது அதை என்னவேண்டுமானாலும் விரும்பி அழைப்பட்டதாக சில ஜனங்களால் அறியப்படுகிறது. அனேகர் அதை பெயரிட்டே அழைக்கின்றனர். ஆனால் எனக்கோ அது விசுவாசமாயிருக்கிறது. அது மனித சரீரத்தின் எல்லா ஐந்து புலன்களுக்கும் மேலாக உள்ளே அது இருக்கிறது. நான் என்ன கூறுகிறேன் என்று நீங்கள் காண்கிறீர்களா? (ஒலிப்பதிவு முடிவடைகிறது - ஆசி)... பெரிய... 126. விசுவாசம் ஒன்றே நேரடியான மற்றும் நேர்மறைப் புலனாக இருக்கிறது, மேலும் அது ஆறாவது புலனாக இருக்கிறது. விசுவாசமானது பார்வையைப் பார்க்கிலும் அதிகமானதாக இருக்கிறது. விசுவாசமானது உணர்வைப் பார்க்கிலும் அதிகமானதாக இருக்கிறது. விசுவாசத்தை நீங்கள் உணரமுடியாது. விசுவாசத்தை நீங்கள் ருசிக்க முடியாது. விசுவாசத்தை நீங்கள் முகர முடியாது. விசுவாசத்தை நீங்கள் பார்க்க முடியாது. விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. 127. இங்கே, இந்த வேதாகமத்தைப் பாருங்கள். இப்பொழுது, எனக்கு அந்த வேதாகமம் வேண்டும். இப்பொழுது நான் அதைப்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது அது எனக்கு வேண்டும். விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், நான் காணக்கூடாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. நான் என்ன குறிப்பிடுகிறேன் என்று பாருங்கள். இங்கே என் சட்டைப் பையில், அங்கே வருடக் கணக்கில் நான் எடுத்துச் செல்லும் ஒரு பழைய கத்தியானது இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். 128. இப்பொழுது, நான் அக்கத்தியைப் பார்க்கிறதில்லை. அக்கத்தியை உணரமுடியாது. அக்கத்தியை நான் ருசிக்க முடியாது, அக்கத்தியை முகர முடியாது. ஆனால் அங்கே உள்ளே அந்த கத்தி இருக்கிறது என்று எனக்குத் தெரியும். உங்களுக்கு எப்படித் தெரியும்? ஏனென்றால் அது அங்கே உள்ளே இருக்கிறது என்று நான் விசுவாசிக்கின்றேன். இப்பொழுது அது அங்கே உள்ளே இல்லை என்றால், அது அங்கே இல்லையென்றால், விசுவாசமானது அதை அங்கே உள்ளே வைக்கும். 129. அது உங்களை மூச்சு திணறடிக்கும் என்று எனக்குத் தெரியும். ஆனால் - ஆனால் அது உண்மையாய் இருக்கிறது. நீங்கள் விசுவாசித்தால் சகலமும் கூடும். நண்பர்களே, தேவனை எடுத்துக்கொள்ள நீங்கள் பயப்படுகிறீர்கள். நீங்கள் பயப்படுகிறீர்கள். இப்பொழுது, ஒரு சிறிது நேரத்திற்கு முன் நான், துணிகளை மாற்றவும், உடை உடுத்தவும், உதவும் மேஜையின் மேல் நான் அந்த கத்தியை விட்டுவிடலாம். ஆனால் இப்பொழுது சரியாக அந்தக் கத்தியானது அப்படியே நிச்சயமாக உடை உடுத்த உதவும் மேஜையின் மேல் இருக்குமானால், நான் எனது முழு இருதயத்தோடே விசுவாசிக்கக் கூடுமானால், அது என்னுடைய சட்டைப் பையில் இருக்கும். அது உங்களை மூச்சு திணறடிக்கும். ஆனால் நீங்கள் விசுவாசிப்பீர்களே யானால் தேவன் அதை அங்கே வைக்க வல்லவராயிருக்கின்றார். 130. இங்கே, சிலவற்றை நான் உங்களுக்குக் காண்பிக்க விரும்புகிறேன். இங்கே வாருங்கள். சங்கை கிட்சன் அவர்களே. இதுதான் சகோதரி.மூர்ஸ் அவர்களா? சற்று நேரம் நீங்கள் எழுந்து நிற்க முடியுமா? 131. நண்பர்களே, நான் சிலவற்றை உங்களுக்குக் காண்பிக்க விரும்புகின்றேன். சற்று உடனே எழுந்து நில்லுங்கள். மேலும் உங்களுக்கு சிரமம் இல்லையென்றால், அதை உங்களுக்காக, ஒரு - ஒரு பொதுக் காட்சியாக ஆக்குவது இல்லை சகோதரி, ஆனால் அது தேவனுடைய மகிமைக்காகவே. 132. இப்பொழுது, பாருங்கள் நண்பர்களே, நான் சிலவற்றை உங்களுக்குக் காண்பிக்கின்றேன். அங்கே எனக்கு முன்பாக ஒரு - ஒரு பெண் நின்று கொண்டிருக்கிறாள் என்று நான் விசுவாசிக்கின்றேன். நான் தவறாக இருக்கிறேன் என்று நீங்கள் சொல்லமுடியுமா? (“நீங்கள் இல்லை ...” என்று சகோதரன் கிட்சன் பதிலளிக்கிறார் - ஆசி) ஆனால்...(எந்தப் பெண்ணையும் நீங்கள் கேட்க முடிகிறதா?” - ஆசி) இல்லை. நான் எந்த பெண்ணையும் கேட்க முடியவில்லை. (நீங்கள் எந்தப் பெண்ணையும் உணர முடியவில்லையா?” - ஆசி) இல்லை, ஐயா. அங்கே ஒருவர் இருக்கிறார் என்று எனக்குத் தெரியும் என்று தெரியாதா?” (“நீங்கள் எந்தப் பெண்ணையும் ருசிக்க முடியவில்லையா?” - ஆசி) இல்லை. (“அங்கே ஒரு பெண் இருக்கிறாள் என்று நீங்கள் எப்படிக் கூறமுடியும்?”- ஆசி) காரணம் என்னவென்றால் பார்க்கும் புலனானது, நான் ஒரு பெண்ணைப் பார்ப்பதாக எனக்குக் கூறுகிறது. (“ஹும், நல்லது நீங்கள் உறுதியாகத்தானா?”- ஆசி) அங்கே ஒரு பெண் இருக்கின்றாள் என்று நான் நேர்மறையுடனே இருக்கிறேன்.நான் சரியாக இருக்கிறேன் என்று நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? (“ஆம்” - ஆசி) பார்வையாளர்களே, நான் சரியாய் இருக்கிறேன் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? இப்பொழுது, நான் தவறாக இருக்கலாம். அது சாத்தியமாக இருக்கிறதா? ஆம், நாம் ஒவ்வொருவரும் நம்முடைய கண்களுக்குக் குருடாக இருக்கலாம். அது ஒரு தரிசனமாக இருக்கலாம். நினைவில் கொள்ளுங்கள், சரீரத்தின் அந்த ஐந்து புலன்களும் அவ்வளவு நேரடியாக இல்லை. விசுவாசமானது நேர்மறையாய் இருக்கிறது. 133. இப்பொழுது, அங்கே ஒரு பெண் அங்கே நின்று கொண்டிருப்பதை நான் அறிந்துள்ள போதிலும், ஏனென்றால் பார்வைப் புலனானது அங்கே ஒரு பெண், நின்று கொண்டிருப்பதை எனக்குக் சொல்லுகிறது. நான் என்ன குறிப்படுகிறேன் என்று நீங்கள் பாருங்கள். இப்பொழுது அங்கே, ஒரு பெண், அங்கே நின்று கொண்டிருக்கவில்லை என்று கூறி நீங்கள் என்னுடன் கீழே வாதிட நினைக்கலாம். பின் ஒருமுறை நீங்கள் அதை முயற்சி செய்யுங்கள். நான் எனக்கு முன்பாக நின்றுகொண்டிருக்கும் ஒரு பெண்ணை நான் பார்க்கவில்லை என்று நீங்கள் கூற முயற்சி செய்யுங்கள். நீங்கள் என்னிடம் வாதிடக்கூடும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லை, ஐயா. ஏனென்றால் இந்த பார்க்கும் புலனானது நேரானதாக இருக்கிறது என்று நான் அறிந்திருக்கிறேன். மேலும் நான் அந்தப் பெண்ணை பார்த்துக்கொண்டிருக்கிறேன். மேலும் அவள் அங்கு நின்று கொண்டிருக்கிறாள் என்று நான் அறிந்திருக்கிறேன். இருந்தும் நான் அறிந்துள்ள ஒரே காரியம் அந்த பார்க்கும் புலனாக இருக்கிறது. இப்பொழுது நீங்கள் கவனிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். இப்பொழுது நான் என் கண்களை மூடிக்கொள்ளப் போகிறேன். இப்பொழுது நான் ஒரு பெண்ணின் கரத்தை உணருகிறேன். (ஒலிப்பதிவு முடிவடைகிறது- ஆசி). 134. அது ஒரு பெண் என்று நான் கூறமுடியும். பெண்களின் தொப்பியை அவள் அணிந்துள்ளாள், பெண்களுடைய முடி அவளுக்கு இருக்கிறது, அது பெண்ணின் கரமாக இருக்கிறது. அவள் ஒரு பெண் என்று எனக்குத் தெரியும். ஏனென்றால் நான் அவளை உணருகிறேன். நீங்கள் என்னிடம் வாக்குவாதம் செய்யலாம் என்று நினைக்கிறீர்களா? (“இல்லை ” - ஆசி) ஹு? அவள் ஒரு பெண் தான் என்று அதை நான் அறிந்திருக்கிறேன். அது நேரானதாக இருக்கிறது. அவளுக்கு என் பின்புறமாக நான் திருப்பிக் கொண்டிருக்கிறேன். ஆனால் இன்னும் அவள் ஒரு பெண்ணாகவே இருக்கிறாள் என்று எனக்குத் தெரியும். பார்த்தீர்களா? ஏனென்றால் உணர்வுப் புலனானது அங்கே ஒரு பெண் இருக்கிறாள் என்று கூறுகிறது. நான் என்ன பொருளில் கூறுகிறேன் என்று நீங்கள் பாருங்கள். 135. இப்பொழுது, பார்வையானது அங்கே இப்பொழுது அங்கே ஒருவர் இருக்கிறார் என்று என்னிடம் கூறியது. நான் அவளை உணரமுடியவில்லை . அதுதான் பார்க்கும் புலனாக இருக்கிறது. நான் அவளைப் பார்க்கின்ற காரணத்தால் அவள் அங்கு நின்றுகொண்டிருக்கிறாள் என்று எனக்குத் தெரியும். நான் என் கண்களை மூடுகிறேன். இப்பொழுது அவள் அங்கு நின்றுகொண்டிருக்கிறாள் என்று எனக்குத் தெரியும். காரணம் என்னவென்றால் - நான் அவளைப் பார்க்கின்ற காரணத்தால் அல்ல, ஏனென்றால் நான் அவள் கரத்தை உணர்கின்றேன். அவள் அங்கே நிற்கிறாள் என்று எனக்குத் தெரியும். நான் அவளைப் பார்க்கவில்லை. ஆனால் இருந்தும் நான் அவளை உணருகிறேன். உணருகின்ற புலனானது அங்கே ஒரு பெண்ணானவள் அங்கே நின்று கொண்டு இருக்கிறாள் என்று பிரகடனப்படுத்துகிறது. நான் என்ன பொருளில் கூறுகிறேன் என்று பாருங்கள். 136, இப்பொழுது, விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியாயிருக்கிறது. அந்த அத்தாட்சி (பார்த்தீர்களா?) நேரடியான நேர்மறையாக, எப்படி என் பார்வையானது நேர்மறையாகவும், என் உணர்வுகள் நேர்மறையாகவும் இருப்பதைப் போன்றே அப்படியே இருக்கிறது. அது காணப்படாதவைகளின் அத்தாட்சியாய் இருக்கிறது, அப்படியே நேர்மறையாக இருப்பது போலவே அது இருக்கிறது. நான் என்ன பொருளில் குறிப்பிடுகிறேன் என்று நீங்கள் பாருங்கள். 137. அனேக மக்கள் தாங்களாகவே கிரியை செய்ய முயற்சி செய்து மேலும், “ஓ, நான் - நான் விசுவாசத்தைப் பெற்றுள்ளேன்,” என்று கூறுகின்றனர். ஆனால் நண்பர்களே அதுவோ அங்கே இல்லை. அது அங்கிருக்குமானால் அது பிரதிக்கிரியை செய்யும், பார்த்தீர்களா? நான் என்ன பொருளில் குறிப்பிடுகிறேன் என்று நீங்கள் அறிவீர்கள். 138. இப்பொழுது, பாருங்கள்... சகோதரி மூர்ஸ் உங்களுக்கு நன்றி தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! 139. இப்பொழுது, பாருங்கள். இப்பொழுது நான் அந்தப் பெண்ணைப் பார்க்கிறேன், எனது பார்க்கும் புலனானது அவள் அங்கிருந்தாள் என்று கூறினது. பின்பு பார்க்கும் புலனைக் கொண்டு அவள் அங்கிருந்தாள் என்று நான் அறிந்து கொண்டேன். நான் என் கண்களை மூடினேன். எனக்கு பார்வையில்லை. பின்பு நான் அவளை உணர்ந்தேன். மேலும் உணரும் புலனானது அவள் அங்கிருந்தாள் என்று கூறினது. உணர்வுப் புலனானது பார்க்கும் புலனைப்போன்றே வழிகாட்டியது, ஏனென்றால் அது ஒரு நேரடி அத்தாட்சியாய் இருந்தது. 140. இப்பொழுது விசுவாசமானது காணப்படாதவைகள், உணர முடியாதவைகள், ருசிக்க முடியாதவைகள், முகர முடியாதவைகள் அல்லது கேட்க இயலாதவைகளின் ஒரு நேரடி அத்தாட்சியாய் இருக்கிறது. இப்பொழுது இங்கே பாருங்கள். நான் இப்பொழுது என் கண்களை மூடிக்கொள்ளப் போகிறேன். கவனியுங்கள். 141. அது கிச்சலி பானமாய் இருக்கிறது. ("நீங்கள் எந்த கிச்சலிப் பழத்தையும் பார்க்கவில்லையே” என்று சகோ கிட்சன் கூறுகிறார்”- ஆசி) இல்லை ஐயா. (“நீங்கள் எந்த கிச்சலிப் பழத்தையும் உணரவில்லையே”- ஆசி) இல்லை ஐயா. (“நீங்கள் எந்த கிச்சலிப் பழத்தையும் கேள்விப்படவில்லையே”- ஆசி) இல்லை, ஐயா. (“நீங்கள் எந்த கிச்சலிப் பழத்தையும் முகரவில்லையே- ஆசி) இல்லை , ஐயா. (“அது கிச்சலிப் பழம் தான் என்று எது உங்களை நினைக்கச் செய்தது” - ஆசி) ஏனென்றால் நான் அதை ருசித்தேன். (“நீங்கள் உறுதியாகத்தானே இருக்கிறீர்கள்?” - ஆசி). அது கிச்சலி பானம்தான் என்பதில் நான் உறுதியாகத்தான் இருக்கிறேன். அது எலுமிச்சையாக இருக்காது. அது திராட்சையாகவும் இருக்காது, அது திராட்சை பழமாகவும் இருக்காது. அது கிச்சலி பானம், ஏனென்றால் ருசிக்கும் புலனானது அதைச் செய்தது. நான் - நான் அதை முகரவில்லை, நான் அதைக் கேள்விப்படவில்லை. நான் அதை உணரவில்லை , நான் அதைப் பார்க்கவில்லை , இருந்தும், ருசிக்கும் புலன் அது ஒரு கிச்சலிப்பழ பானம் என்று என்னிடம் கூறியது. நான் சரியாய் இருக்கிறேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? (“நீங்கள் சரியாய் இருக்கிறீர்கள்”-ஆசி) 142. நிச்சயமாக அது இருக்கிறது. ஏன், அது கிச்சலிப்பழ பானமென்று ருசிக்கும் புலனானது அதை நிரூபித்தது. அது தண்ணீராய் இருந்தது என்று எவ்வளவுதான் நீங்கள் சொன்னாலும் இப்பொழுது பாதகம் ஒன்றுமில்லை. அது கிச்சலிப்பழ பானமாய் இருக்கிறது என்று எனக்குத் தெரியும். நான் அதை ருசிபார்த்தேன். பாருங்கள்? நீங்களும் கூட அதை ருசிக்கலாம். மேலும் உங்களுக்கு ருசிக்கும் புலனானது இருக்குமானால், நீங்களும் அதையே அறியலாம். மேலும் உங்களுக்கு விசுவாசமிருக்குமானால் நான் பேசிக்கொண்டிருக்கும் அதே காரியத்தைப் பற்றி நீங்களும் அறிவீர்கள். இப்பொழுது திரும்பவுமாக இங்கே கவனியுங்கள். இப்பொழுது, இங்கே கவனியுங்கள். 143. நறுமணத்தை நான் முகர்ந்தேன். அது நறுமணமாய் இருக்கிறது. சகோதரன் கிட்சன் “நீங்கள் எதையும் பார்க்க முடியாது என்று கூறுகிறார்”- ஆசி) நான் எந்த நறுமணத்தையும் பார்க்கவில்லை. (“நீங்கள் எதையுமே கேள்விப்பட முடியவில்லையா?” -ஆசி) நான் எதையுமே கேள்விப்படவில்லை. (“நீங்கள் எதையுமே ருசிக்க முடியவில்லையா- ஆசி) நான் எதையுமே ருசிக்க முடியவில்லை . (“நீங்கள் எதையும் உணரமுடியவில்லையா?”- ஆசி) நான் அதை உணரவில்லை . (அது நறுமணம் என்று உங்களை நினைக்க வைத்தது எது?”- ஆசி) ஏனெனில் நான் அதை முகர்ந்தேன். (ஆமென்”-ஆசி) அது சரியாய் இருக்கிறது. முகரும் புலனானது என் மூக்கிற்கு முன்பாக அது நறுமணம் என்று கூறியது. (ஒலிப்பதிவில் கீறல்கள்ஆசி)... என்ன? அதை முயற்சி செய்யுங்கள். எல்லாம் சரி. அது நறுமணம் என்று தெரியும். நான் அதைப் பார்க்க இயலவில்லை. நான்? நான் அதைப் பார்த்தேனா? என் கண்களை நான் மூடி இருந்தேன். நான் அதை ருசித்தேனா? இல்லை. நான் அதை என் வாயில் வைக்கவில்லை. நான் அதை உணர்ந்தேனா? ஒருபோதும் என் கரங்கள் அதைப் பற்றவில்லை. வேறு ஒன்றும் செய்யவில்லை. பின்பு எப்படி நான் அதை அறிந்தேன். நான் அதைக் கேள்விப்பட்டேனா? இல்லை. நான் அதை முகர்ந்தேன், மேலும் அது நறுமணம் தான் என்ற ஒரு நேரடி அத்தாட்சியாக அது இருந்தது. நான் அதை அறிந்தேன். (ஒலிப்பதிவு முடிவடைகிறது -ஆசி) 144. இப்பொழுது... (சகோதரன் கிட்சன்... "... எந்த இசையையும் உணரவில்லை ” என்று கூறுகிறார்- ஆசி) “இல்லை ஐயா” (நீங்கள் எந்த இசையையும் ருசிக்கவில்லை- ஆசி) இல்லை ஐயா. ("நல்லது, அது இசை தான் என்று உங்களை எண்ணச் செய்தது எது?”-ஆசி) நான் அதைக் கேட்டேன். மேலும் அது இசைதான் என்று எனக்குத் தெரியும். (“அதைக் குறித்து நிச்சயமுடையவராக நீங்கள் இருக்கிறீர்களா?”- ஆசி) நான் உறுதியுடையவனாக இருக்கிறேன். “விசுவாசிப்பாய் என்ற பாடலை” அந்தப் பெண் இசைத்துக்கொண்டிருக்கிறாள். நான் சரியாக இருக்கிறேன் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? (“நீங்கள் சரியாகத்தான் இருக்கிறீர்கள்”-ஆசி) அதிலிருந்து வாதிடுவதற்கு முயற்சி செய்யுங்கள். நான் அதைப் பார்க்கவில்லை. நான் ருசிக்கவில்லை. நான் அதை உணரவில்லை. நான் அதை முகரவில்லை. ஆனால் நான் அதைக் கேட்டேன். நான் உறுதியுடையவனாகத்தான் இருந்தேனா? நான் சரியாகத்தான் இருக்கிறேன் என்று நான் அறிந்துள்ளேனா? ஏன்? 145. இப்பொழுது அங்கே சரீரத்தின் ஐம்புலன்களும் இருக்கிறது. இப்பொழுது அவைகள் உறுதியானவைகளாக இருக்கின்றன. அவைகள் இருக்கவில்லையா? அது எப்பொழுது சம்பவிக்கும் என்று நீங்கள் அறிந்திருக்கின்றீர்கள். உங்களுக்குத் தெரியும். நீங்கள் இப்பொழுது ஒரு பார்வையாளர்களை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் என்னைப் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்று உங்களுக்கு தெரியும். 146. நல்லது, பிறகு நண்பர்களே விசுவாசம்... இங்கே அது இருக்கிறது. விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியாய் இருக்கிறது. காணப்படா தவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. அது உறுதியானதாய் இருக்கிறது. நீங்கள் அதை அறிவீர்கள். இதைப்பற்றி வேறு எவராவது அதிகமான யாதொன்றையும் அங்கே உங்களுக்குச் சொல்லவேண்டிய அவசியமில்லை. அது அப்படியே மிகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டது போலவே அது அந்த சரீரத்தின் மற்ற ஐம்புலன்களைப் போலவே இருக்கிறது. நான் என்ன பொருளில் குறிப்பிடுகிறேன் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? இப்பொழுது நான் என்ன பொருளில் குறிப்பிட்டேன் என்று "எத்தனை பேருக்கு ஒரு பொதுவான புரிந்துகொள்ளுதல் இருக்கிறது? நாம் உங்கள் கரங்களைப் பார்ப்போமா. பாருங்கள், பாருங்கள்? 147. அது நீங்கள் என்னவென்று முயன்று; நீங்களே உண்டு பண்ணிக்கொள்ளும். விசுவாசம் அல்ல, இப்பொழுது உதாரணத்திற்கு, நான் இசையைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்று நான் முயன்று உண்டுபண்ணிக் கொள்ளும் விசுவாசம் அல்ல. நான்- நான் அதைச் செய்ய இயலாது. நான் நறுமணத்தை முகருகிறேன் என்று விசுவாசத்தை நானே உண்டுபண்ணிக் கொள்ளலாம். அது அப்படி அங்கு இருக்காது. நான் முற்றிலுமாக அதைச் செய்யவேண்டும். நான் என்ன குறிப்பிடுகிறேன் என்று நீங்கள் பாருங்கள். 148. மேலும், விசுவாசமானது உறுதியானதாய் இருக்கிறது. அது ஒரு நேர்மறை கிரியையாக இருக்கிறது. நீங்கள் அதை அறிந்திருக்கிறீர்கள். ஓ, என்னே, நான் குறிப்பிடுவது என்ன என்றும் நீங்கள் அதைக் காணமுடியும் என்றும் நான் நம்புகிறேன். 149. பாருங்கள் அது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. நீங்கள் அதைப் பார்க்கவில்லை. நீங்கள் அதை ருசிக்க வில்லை. எந்த சிறந்ததையும் நான் உணரவில்லை என்று சிலர் கூறுவதுண்டு. 150. நல்லது, விஷயம் என்னவாக இருக்கிறது. நீங்கள் ஏன் எந்த சிறந்ததையும் உணரவில்லை? உங்களுக்கு உங்களுடைய விசுவாசம் இருக்குமானால் உங்களுடைய விசுவாசத்தின்படியே உங்களுக்கு உண்டாகி இருக்கும். அது சரியாய் இருக்கிறதா? பாருங்கள். 151. நீங்கள் எப்படி உணருகின்றீர்கள் என்பது முக்கியமல்ல. நீங்கள் என்ன பார்க்கின்றீர்கள் என்பது முக்கியமல்ல. எவ்வாறாயினும் நீங்கள் சுகமடைந்திருக் கின்றீர்கள். நான் என்ன குறிப்பிடுகிறேன் என்று பாருங்கள். அது ஒரு.. நீங்கள் அதை அறிவீர்கள். உங்களுடைய இருதயத்திலிருந்து அதை ஒன்றும் எடுக்க இயலாது. நீங்கள் அதை அறிந்திருக்கிறீர்கள். அது அப்படியே சரியாக அங்கே நேர்மறைக் கிரியையாக இருக்கின்றது. ஓ, என்னே! 152. உங்களால் மாத்திரம் அதைப் பார்க்க முடியுமானால், நண்பர்களே! ஏதோ ஒன்று சம்பவிக்கும். உங்களால் மாத்திரம் நான் எதைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறேன் என்று அறிய முடியுமானால், ஏதோ ஒன்று சரியாக இப்பொழுது பிரதிக்கிரியை செய்யும் பாருங்கள். அது ஒரு நிச்சயமானதாய் இருக்கிறது. அது மற்ற ஐந்து புலன்களும் அப்படியே நிச்சயமானதாக இருப்பது போலவே, அது சரியாக அங்கே இருக்கிறது. இவைகள் ஒரு இயற்கையான மனிதனுடையவைகள். விசுவாசமானது தேவனுடையதாய் இருக்கிறது. இயற்கையான மனிதன் தவறாக இருக்கமுடியும். ஆனால் தேவனோ தவறாக இருக்க முடியாது. ஓ, என்னே!. 153. ஏன், அது நம்மை சத்தமிடுவதற்கு கொண்டு செல்ல வைக்கிறது. அதைப்பற்றி சிந்தியுங்கள். மேலும் அவர்களுக்கு விசுவாசம் இருக்கிறது என்று ஜனங்கள் என்னிடம் கூறுகின்றனர், மேலும் தெய்வீக சுகமாகுதலை அவர்களால் விசுவாசிக்க இயலாது என்று அவர்கள் கூறுகின்றனர்? நண்பர்களே, தெய்வீக சுகமாகுதலில் விசுவாசம் இல்லை , என்றால் நீங்கள் இழந்தவர்களாவீர்கள், அது சரியாய் இருக்கிறது. தேவன் இந்த சரீரத்தை சரிப்படுத்தி அவருக்குள் மகிமைப்படுத்தவதற்கு உங்களுக்குப் போதுமான விசுவாசம் இல்லாமல் இருக்குமானால், நீங்கள் எப்படி இருக்கப் போகின்றீர்கள், இந்த பழைய அழியக்கூடியதை அதிலிருந்து எடுத்து அழியாமைக்கு அது மேலே எடுக்கப்படுவதற்கும் விசுவாசிப்பதற்கும், இன்னும் எவ்வளவு அதிகமான விசுவாசத்தை நீங்கள் உடையவர்களாக இருக்க வேண்டியவர்களாயிருக்க வேண்டும். அது ஒரு நேரடியான தெய்வீக சுகமாகுதல். ஓ, என்னே! நியாயத்தீர்ப்பு நாளில், உயிர்த்தெழுதலில் சில பயங்கரமான ஏமாற்றங்கள் அங்கே இருக்கப்போகின்றது. அது சரியாய் இருக்கிறது. 154. விசுவாசமானது... ஏனோக்கைப் போல மறுரூபமாக மாற்றப்படும் வரையிலும் அப்படிப்பட்ட ஒரு இடத்தை நாம் அடைய வேண்டியவர்களாக இருக்க வேண்டும். அது சரியாய் இருக்கிறது. விசுவாசமும், சாட்சியும் அது தேவனைப் பிரியப்படுத்தியது. ஏனோக்கு அப்படி அல்லவா... நம்மைத் தொடர்ந்து வரும் அடுத்த வேதவசனம் விசுவாசத்தினாலே ஏனோக்கு தேவனை பிரியப்படுத்தினான் என்ற சாட்சி அவனுக்கு இருந்தது என்று கூறுகிறது அது சரிதானா? மேலும் “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாக இருக்கமுடியாது” என்று வேதாகமம் கூறுகிறது. ஆகையால் நீங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிற அதேவிதமான விசுவாசத்தை உடையவர்களாக நீங்கள் இருக்கவேண்டும். (ஒலிப்பதிவு முடிவடைகிறது- ஆசி) 155. அனேக அற்புதங்கள் சரியாக இதனோடே செய்யப்பட்டாலும், ஒரு சுகமாக்கும் வரமானது, ஒரு அற்புதங்களின் வரம் அல்லவே. ஆனால் அந்த ஜனங்கள் சுகமடைய அது ஒரு சுகமாக்கும் வரமாக இருக்கிறது. அவர்கள் ஜெபிப்பதற்காக வெளியில் சென்று, அவர்கள் திரும்பி வருகின்றனர். மேலும் என்னே! அவர்கள் சுகமடைந்தனர். நண்பர்களே, நகரத்தைவிட்டு நான் போகும்வரை காத்திருங்கள். நான் சென்று ஒரு நீண்ட காலத்திற்குப் பின்பு உங்களுடைய சபைகளுக்கு ஜனங்கள் வந்துகொண்டும் நல்லது அந்தப் புற்றுநோய், அது போய்விட்டது”, என்றும் "அந்த - அந்த எனக்கிருந்த செவிட்டுத் தன்மை , ஏன், இப்பொழுது எனக்கு, எனக்கு கேட்கிறது.” “என்னுடைய வேதனை, ஏன், அது அப்படியே என்னை விட்டுப் போய்விட்டது." என்றும் கூறிக்கொண்டிருப்பதையும் நீங்கள் கேட்பீர்கள். 156. அது அப்படியே அந்த எளிமையில்... அதுவரை நீங்களே கிரியை செய்ய அது ஒன்றுமே இல்லை. அது உணர்ச்சியைக் கிளறிவிடுவதல்ல. ஜனங்கள் வரிசையில் வருகையில் அப்படியே தங்களை குலுக்கிக் கொண்டும், "ஓ, தேவனே அல்லேலூயா! ஆமென். தேவனுக்கு மகிமை” என்று கூறுவதையும் நான் கவனித்திருக்கின்றேன். ) 157. அதைச் செய்ய வேண்டாம். அங்கே நீங்கள் விசுவாசத்துடன் நீங்கள் தலையிட்டிருக்கின்றீர்கள். நீங்கள் தேவனுடன் தலையிட்டிருக்கின்றீர்கள். பயபக்தியோடு மேலே வந்து அப்படியே உங்கள் கரங்களை உயர்த்தி விசுவாசியுங்கள். அவ்வளவுதான். விசுவாசம், அதுவரைக்கும் நீங்களே கிரியை செய்ய வேண்டியதில்லை. விசுவாசமானது அது ஏற்கனவே உங்கள் இருதயத்தில் இருக்கும் ஏதோ ஒன்று. நீங்கள் அப்படியே வந்து மேலும் விசுவாசியுங்கள். நான் என்ன குறிப்படுகிறேன் என்று நீங்கள் பாருங்கள். 158. ஓ, என்னே நண்பர்களே நான் உங்களை நேசிக்கிறேன். நான் உங்களை நேசிக்கவில்லையென்றால், நான் அதிக நேரமாக நான் உங்களிடம் பேசமாட்டேன். ஆனால் இது இல்லாமலேயே நீங்கள் மிக நன்றாகப் பார்த்து நீங்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் பாருங்கள். நீங்கள் - நீங்கள் விளங்கிக் கொண்டே ஆகவேண்டும். 159. இப்பொழுது பாருங்கள், இப்பொழுது என்னுடைய பாடத்திற்கு உடனே சீக்கிரமாக இவ்வாறாக நாம் துரிதப்படமுடியும். ஆபேலுடைய வரங்களைக் குறித்துத் தேவன் சாட்சி கூறினார். தம்முடைய வரங்களைக்குறித்து எப்பொழுதுமே தேவன் சாட்சிகள் கொடுக்கிறார், அது சரிதானே?. 160. இப்பொழுது, நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இஸ்ரவேல் புத்திரர்கள் நூற்றிருபது வருஷம் எகிப்தில் அடிமைகளாக இருந்தபோது, அங்கே யோசேப்பினால் நடத்திச் செல்லப்பட்டபோது, அவர்கள் கீழே சென்ற போது.. உடனே அங்கே ஒரு யோ - அல்லது யோசேப்பை அறிந்திராத ஒரு பார்வோன் எழும்பினான். அதன்பின்பு ஜனங்கள் அடிமைத்தனத்துக்குள்ளாகச் சென்றனர். மேலும் அவர்கள் வைக்கோல் வீடுகளையும் மற்றும் செங்கல்களையும் மற்றும் காரியங்களையும், வைக்கோல் மற்றும் தாளடிகளைக்கொண்டு செய்தனர். அதன்பிறகு ஒரு விடுவிப்பவனுக்காக தேவனிடம் கூக்குரலிட ஆரம்பித்தனர். அது சரிதானா? அவர்கள் கூக்குரலிட்டனர். மேலும் கூக்குரலிட்டனர். மேலும் தேவன் ஒரு விடுவிப்பவனை, மோசேயை முன்னதாக நியமித்திருந்தார். (அது சரிதானா?). 161. மோசே பருவ வயது வந்தபோது வெளியில் சென்று, இரண்டு எகிப்தியர்கள் ஒரு எபிரேயனை தவறாக நடத்துவதைக் கண்டான். அவன் எகிப்தியர்களைக் கொன்று அவர்களைப் புதைத்தான். அடுத்த நாள் ஒருவரோடு ஒருவர் சண்டையிடும் எபிரேயர்களை அவன் சந்தித்தபோது, “ஏன்” “நீ அந்த எகிப்தியனுக்கு செய்தது போல எங்களையும் கொன்று போடுவாயோ?” என்று அவர்கள் கூறினார்கள். 162. இப்பொழுது, பாருங்கள் அமைதியான ஜனங்களாக இருங்கள். மோசே அந்த விடுவிப்பவனாக எண்ணப்படுபவன். ஜனங்களுக்கு வரமாக இருக்கிறவன், அவர்கள் அவனை விளங்கிக்கொள்ளவில்லை. நான் என்ன குறிப்படுகின்றேன் என்று நீங்கள் பாருங்கள். மோசேயை அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை. மேலும், நிச்சயமாக, அவர்களை விடுவிப்பதற்கான வெகுமதி அவன்தான் என்று அவர்கள் புரிந்துகொள்ளக்கூடும் என்று மோசே நினைத்தான். ஆனால் அவர்களோ விளங்கிக் கொள்ளவில்லை. 163. இப்பொழுது, நண்பர்களே, என்னைத் தவறாக எடுத்துக்கொள்ளா திருங்கள். நான் ஒரு நித்தியத்திற்குக் கட்டுப்பட்ட சில நாளில் நியாயத்தீர்ப்பின் முன்பு நிற்கப்போகிற ஒரு நபர் என்பதை அறிந்தவனாக நான் இதைப் என் இருதயத்தில் பயபக்தியோடு கூறட்டும். 164. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வரத்தை தவறவிடுகின்றனர். பாருங்கள்? அவர்களால் அதை விளங்கிக்கொள்ள முடியவில்லை. மேலும் அவர்கள் பார்த்து, “ஓ, அவர் ஒரு மனிதன் மட்டுமே” என்று கூறுவார்கள். 165. அது உண்மையாயிருக்கிறது. ஜனங்களை விடுவித்தது தேவனா அல்லது மோசேயா? அது மோசேக்குள்ளாக இருந்த தேவன். பாருங்கள்? அவர்கள் விடுவிப்பவனுக்காக கூக்குரலிட்டனர். தேவன் அவர்களை விடுவிக்க ஒரு விடுவிப்பவனை அனுப்பிய போது அவர்கள் அதைப் பார்க்கத் தவறினர். காரணம் என்னவென்றால் அது ஒரு மனிதனைக் கொண்டு... என்பதாக இருந்தது. ஆனால் அது ஒரு மனிதனாக இருக்கவில்லை . அது மனிதனுக்குள் இருந்த தேவன். (ஒலிப்பதிவு முடிவடைகிறது-ஆசி) 166. "... எனக்குள்ளாக வாசம் செய்யும். அவர் ஒருவரே அந்தக் கிரியைகளைச் செய்கிறார்” நீங்கள் பாருங்கள். ஆனால் அவரோ உலகத்திற்கு தேவனுடைய வெகுமதியாக இருந்தார். தேவன் அவரை உங்களுக்காகவும் எனக்காகவும் தந்தார். அதைக்குறித்து நீங்கள் மகிழ்ச்சியாக இல்லையா? பாருங்கள் தேவன் அவரைத் தந்தார். 167. நல்லது. இப்பொழுது, தேவன் அவரைத் தந்தார் என்று விசுவாசிக்கின்ற ஜனங்கள், அவர்கள் இரட்சிக்கப்படமுடியும் ஆனால் அதை விசுவாசிக்காதவர்கள், இரட்சிக்கப்பட முடியாது. அது சரிதானே? 168. மேலும் அவரால் அன்றி பரலோக இராஜ்ஜியத்தில் பிரவேசிக்க வேறு வழி இல்லவே இல்லை. அது சரியாய் இருக்கிறதா? நல்லது. இப்பொழுது, நீங்கள் அதை விசுவாசித்தால், நீங்கள் இரட்சிக்கப்பட முடியும். ஆனால், விசுவாசிக்கவில்லை யென்றால், நீங்கள் இரட்சிக்கப்பட முடியாது. ஏனென்றால் அவர் தேவனுடைய வெகுமதியாய் இருக்கின்றார். 169, பாருங்கள், வேதவசனம் கூறுகிறது. “எந்த மனிதனும்... கிறிஸ்துவுடன் தேவன் இருந்தார் என்று நாம் அறிந்திருக்கின்றோம், தேவன் அவரோடு இருந்தாலன்றி எந்த மனிதனும் அவர் செய்கின்ற கிரியைகளைச் செய்யமாட்டான்” அது சரிதானே!. 170. பின்பு அது என்னவாக இருந்தது? அது அவருடைய ஒரே பேறான குமாரன் என தேவன் சாட்சி கொடுப்பதாக இருந்தது, அது சரிதானே? தேவன் அதைக்குறித்து சாட்சி கொடுத்தார். “இவர் என்னுடைய குமாரன்” என்று கூறினார். நீங்கள் என்னை விசுவாசிக்கவில்லையென்றாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள், என்று அவர் கூறினார். அது சரியாய் இருக்கிறதா? “மனிதன் தன்னைக் குறித்தே சாட்சி கொடுக்கிறான்”, வேதவசனம் என்ன கூறுகிறது என்று நீங்கள் அறிவீர்களா? “ஆனால் அவன் கூறுவது மெய்யல்ல என்று அவர் சாட்சி கூறுவாரானால் -பின்பு நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை. ஆனால் நான் கூறுவது மெய் என்று நான் சாட்சி கொடுத்தால், என் பிதா அதைப்பற்றி சாட்சி கூறுவார்.” 171. மேலும் நான் உங்களுக்கு தெய்வீக சுகத்தின் வரத்தைப் பற்றிக்கூறும் போது தேவன் அதைப் பற்றி சாட்சி கொடுக்கவில்லையென்றால் விட்டுவிட்டு செல்லுங்கள், அது தவறாய் இருக்கிறது. ஆனால் தேவன் அதைப்பற்றி சாட்சி கொடுத்தால் அது உங்களுக்கு தேவனுடைய வரமாயிருக்கிறது. அது சரியாய் இருக்கிறது. நான் என்ன குறிப்பிடுகிறேன் என்று பாருங்கள். 172. நண்பர்களே! இதைப் போன்றதை, இந்தவிதமாக வெளியில் கொண்டு வரவேண்டும் என்பதை, நான் வெறுக்கிறேன், ஆனால் அந்த வரிகளுக்கு இடையில் இருப்பதை நீங்கள் விளங்கிக்கொள்வீர்கள் என்று நான் நம்பிக்கொண்டிருக்கிறேன். இப்பொழுது கவனியுங்கள். பாருங்கள் அது தேவனுடைய வரமாயிருக்கிறது. பிறகு இயேசுவானவர், அவர் தூரம் போன போது... அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். இயேசுவிடம் வந்த அனேக மக்கள் ஒருபோதும் சுகமடையவில்லை . அவர் அனேகருக்காக ஜெபித்தார். அவர்களுக்கோ அதன் பலன் ஒருபோதும் இருக்கவில்லை, காரணம் என்னவென்றால் அவர்கள் அதை விசுவாசிக்கவில்லை. அவர் தேவனுடைய குமாரனாக இருந்தார் என்பதை அவர்கள் விசுவாசிக்கவில்லை. “ஏன், அவர் தம்மை தேவனாக்கிக் கொள்கிறார். பூமியின் மேல் அவர் பாவங்களை மன்னிக்கிறார், அது தேவதூஷணம்” என்று அவர்கள் கூறினார்கள். உங்களால் பார்க்க முடியவில்லையா? 173. எலிசாவைக் குறித்தும் அதை அவர்கள் கூறினார்கள். மோசேயைப் பற்றியும் அவர்கள் அதே காரியத்தைக் கூறினார்கள். “ஏன், இங்கே வெளியே கொண்டு வரப்பட்டு வனாந்தரத்தில் நாங்கள் செத்து வீழ்வதைவிட நாங்கள் எகிப்திலேயே இறந்திருக்கலாம்” என்றார்கள். 174. தேவனுடைய செய்தியாளன் எப்பொழுதுமே நிராகரிக்கப்படுவதைப் பாருங்கள். நான் எதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன் என்று நீங்கள் அறிவீர்கள்.. நீங்கள் அறியவில்லையா? நீங்கள் அறிவீர்கள் என்று நான் நம்புகிறேன், நண்பர்களே. தேவன் உங்கள் இருதயங்களை ஆசீர்வதிப்பாராக!. நான் - நான், நீங்கள் அதைப் பார்க்க வேண்டும் என விரும்புகிறேன், நண்பர்களே! 175. இப்பொழுது, பின்பு அவர்களுக்கு ஒரு இரட்சகர் தேவை என்பதில் இருந்தனர். தேவன் கிறிஸ்துவை ஒரு இரட்சகராக உலகத்திற்காக அனுப்பினார். 176. இயேசு தூரமாக சென்ற பிறகு, அப்பொழுது, தேவனுடைய பிரியமான ஜனங்களில் அனேகர் வியாதியும், வேதனையும் அடைந்தனர். தேவன் தெய்வீக சுகமளிக்கும் வரத்தை பேதுருவுக்கு அளித்தார். இப்பொழுது அது. அந்த ஜனங்கள் சுகம் அடைந்தனர். ஏனென்றால் தேவன் ஒரு தீர்க்கதரிசியாக எலிசாவின் மூலமாகவும், ஒரு விடுவிப்பவராக மோசேயின் மூலமாகவும், ஒரு குமாரனாக கிறிஸ்துவின் மூலமாகவும் நிரூபித்ததைப் போன்றே தெய்வீக சுகமளிக்கும் வரத்தை பேதுருவின் மூலமாகவும் நிரூபித்தார். பேதுருவின் மூலம் ஒரு சுகமளிப்பவராக அவர் நிரூபித்தார். அவர் அதைச் செய்தாரா? மேலும் ஜனங்கள் ஒரு யோசனையைப் பெற்றார்கள். அவர்களும் கூட அப்படிப்பட்ட ஒரு பெருங்கூட்ட ஜனத்தைப் பெற்றிருந்து, அதாவது அவர்கள் ஒவ்வொருக்காவும் பேதுரு ஜெபிக்க முடியாது, இந்த அப்போஸ்தலர் தங்களுக்கு தேவனுடைய வெகுமதி என்றும் அவர்கள் அறிந்திருந்தனர். மேலும் அவர் ஒருபோதும் அவர்களுடைய கையைக் குலுக்கி “தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக” என்று கூறவில்லை. “அவர்கள் ஜனங்களை கட்டிடங்களுக்கு வெளியில் கொண்டு வந்து அவர்கள் மீது அவருடைய நிழல் மட்டும் கடந்து போனால் அவர்கள் சுகமடைவார்கள் என்று அவர்களைத் தெருவில் படுக்கவைத்தனர். அது சரிதானா? ஏன்? ஏனென்றால் பேதுரு, தேவனிடமிருந்து ஜனங்களுக்கு அனுப்பப்பட்ட தேவனுடைய வெகுமதி என்று அவர்கள் அறிந்திருந்தனர். ஓ, நீங்கள் அதைக் காண்பீர்கள் என நான் நம்புகிறேன் நண்பர்களே, பாருங்கள். நீங்கள் பாருங்கள், அது தேவனுடைய வெகுமதியாய் இருந்தது. இப்போது என்ன, சுகமடையச் செய்தது எது அது பேதுருதானா என்று நான் உங்களைக் கேட்க விரும்புகிறேன். (ஒலிப்பதிவு முடிவடைகிறது-ஆசி). 177. உலகப்பிரகாரமான காரியங்களில் தேவன் இல்லை . மனிதனுக்குள் தேவன் இருக்கிறார். அந்த பரிசுத்த ஆவியானவர் ஒருபோதும் சங்கங்கள் மேல் விழுவதில்லை , அது மனிதர்கள் மேல் விழுகிறது. மேலும், “என் விசுவாசத்தை அவர்கள் சார்ந்தவர்களாக இல்லை” என்று இன்றைக்கு அனேக ஜனங்கள் கூறுகிறார்கள். நல்லது, நீங்கள் கிறிஸ்துவில் விசுவாசமாக இருப்பீர்களானால், அது எல்லாமே ஒன்றுதான். தேவன் அதைக்குறித்து கவலை கொள்வதில்லை... சங்கத்தில் அவருக்கு ஒன்றுமில்லை. மேலும் அது அப்படியாக ஒரு பெரிய ஸ்தாபிக்கப்பட்ட உலகத்தில் அது ஜனங்கள் தாங்கள் கூடிவரும் ஓர் இடமே. அது - அதன் காரணமாகத்தான் நான் ஒரு அரங்கத்திலேயே அதை வைத்துக்கொள்கிறேன். 178. அது ஒரு - ஒரு ஒருத்துவ சபையாக இருக்குமானால், அந்த திருத்துவக்காரர்கள் அங்கு வரமாட்டார்கள். அது ஒரு திருத்துவ சபையாக இருக்குமானால், அந்த ஒருத்துவக்காரர்கள் வரமாட்டார்கள். அது ஒரு மெத்தொடிஸ்டு சபையாக இருக்குமானால், அந்த பாப்டிஸ்டுகள் அங்கே வரமாட்டார்கள், அது ஒரு பாப்டிஸ்டு சபையாக இருக்குமானால் மெத்தோடிஸ்டுகள் வரமாட்டார்கள். ஒரே சரீரம்... “ஜெபித்துக் கொள்வதற்கு வருவதற்காகவா, நாம் இப்பொழுது ஞானஸ்நானம் கொடுத்தோம்?” என ஒரு நபர் என்னைக் கேட்டார். 179. இரக்கம், நாம் எப்பொழுதும் கொண்டிருந்ததைப் போன்ற ஒரு பிசாசாய் அது இருக்கிறது. அதுசரியே. இல்லை. ஒரே ஆவியினாலே நாம் எல்லோரும் ஒரே சரீரத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம். (அது சரியே). நீங்கள் யாராக இருக்கின்றீர்கள் நீங்கள் எங்கிருந்து வருகின்றீர்கள் என்று அக்கறையில்லை. அது சரியே. எனவே நீங்கள் எந்த ஸ்தாபனமாக இருக்கின்றீர்கள் என்ற, எந்த வித்தியாசத்தையும் அது உண்டாக்குவதில்லை. நீங்கள் பாப்டிஸ்டு சபையைச் சார்ந்தவராகவோ, மெதோடிஸ்டு சபையையோ அல்லது பெந்தெகொஸ்தே சபையாகவோ அல்லது அது என்னவாயிருப்பினும் அவைகளைச் சார்ந்தவர்களாகவோ இருக்க வேண்டியதில்லை. நீங்கள் தேவனில் விசுவாசத்தை உடையவராக இருக்க வேண்டும். அது சரியே. 180. இப்பொழுது, மேலும் வெளிப்படையாக நீங்கள் எந்த சபையையும் சார்ந்தவராக இருக்க வேண்டியதில்லை. ஆனால் நீங்கள் சுகமடைந்து மேலும் மறுபடியும் பாவத்துக்குப் போவீர்களானால், அது திரும்பவும் உங்கள் மேல் வந்து முதலாவது அது இருந்த இடத்தை விட, மோசமானதாக இருக்கும். பிறகு நீங்கள் எங்காவது சபைக்குச் சென்று மேலும் தேவனை சேவியுங்கள். பிசாசின் மகிமைக்காக தேவன் உங்களை சுகமாக்குவதில்லை. தம்முடைய மகிமைக்காகவே அவர் உங்களை சுகமாக்குகிறார். 181. இப்பொழுது, பாருங்கள், ஜனங்கள் எவ்வாறு தவறுகின்றனர். மோசே உணர்ந்திருப்பான், அவன் எப்படி உணர்ந்திருப்பான் என்று நான் கற்பனை செய்யமுடியும். அவன் நேராக வெளியில் வந்து அந்த ஜனங்களிடம் கூறுவதை அவன் அப்படியே வெறுத்தான். ஏனென்றால் அது தன்னைத்தானே உயர்த்திக் கொள்வதாக இருக்கும் என்று அவன் நினைத்தான். “இப்பொழுது, இந்த மனிதனைப் பாருங்கள்” என்று ஜனங்கள் கூறலாம் என்று அவன் நினைத்தான். - 182. இன்றைக்கு உலகத்தில் ஒரு ஏராளமானது நமக்கிருக்கிறது. “தேவன் இதைச் செய்தார் மேலும் அதைச் செய்தார்” என்று ஊடாக வந்து ஏராளமான ஜனங்கள் நம்மிடம் உண்டு. ஆனால் அதைப் பற்றித் தேவன் சாட்சி கொடுப்பதில்லை. ஆனால் தேவன் சாட்சி கொடுப்பாரானால் அவர் அவருடைய வாரத்திற்கு மதிப்பளிக்கிறார். அது சரிதானே? 183. ஆம், ஐயா. தேவன் ஆபேலின் வரத்தை கனப்படுத்தினார். அவர் மோசேயின் வரத்தை கனப்படுத்தினார். ஜனங்கள் புரிந்துக்கொள்வார்கள் என்று மோசே நினைத்தான், ஆனால், அவர்களோ அவனை புரிந்து கொள்ளவில்லை. 184. மேலும், இன்றைக்கு, நிச்சயமாய், இப்பொழுது நான் எதைக்குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறேனோ, அதை அறிந்து கொண்டு உங்களைப்போல நெருக்கமாய், ஒரு மனுஷன் இறங்கி வரவே முடியாது. எல்லாம் சரி, ஆனால் அது பெரும்பான்மையினரின் தலைக்கு மேலாகச் சென்றுவிடுகிறது. நண்பர்களே, நான் உங்களை நேசிக்கிறேன், நீங்கள் நலம் அடைவதை நான் பார்க்க விரும்புகிறேன். 185. இப்பொழுது, அவர்கள் ஒரு விடுதலை கொடுப்பவனுக்காக அழைத்த போது தேவன் ஒரு விடுதலை கொடுப்பவனை அனுப்பினார். அவர்கள் அவனைக் காணத்தவறினர். மோசே இஸ்ரவேலருக்கான தேவனுடைய வெகுமதியாய் இருந்தான். நீங்கள் அதை நம்புகின்றீர்களா? 186. கீழே, தீர்க்கதரிசியாகிய எலியா, அவர்களுக்கு தேவனுடைய வெகுமதிகளாக இருந்தான். அவர்களில் அனேகர் கள்ளத் தீர்க்கதரிசிகளாக எழும்பினர். எலியாவின் நாட்களிலேயே அங்கே கள்ளத்தீர்க்கதரிசிகள் எழும்பினார்கள், ஆனால் தேவனோ எலியாவின் தீர்க்கதரிசனத்தை உறுதிப் படுத்தினார். அது தேவனுடையதாக இருக்குமானால் தேவன் அதை அங்கே உறுதி செய்வார். எலியா அவன் இஸ்ரவேலருக்கான தேவனுடைய வெகுமதியாய் இருந்தான். நீங்கள் அதை நம்புகின்றீர்களா? அவன் ஆகாபினுடைய போதகராயிருந்தான். அவன் யெசபேலுடைய போதகராயிருந்தான். அவள், அவனை அவளுடைய போதகர் என்பதை ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் அந்த மனுஷன், அவள் எங்கே ஜீவிக்கிறாள் என்பதை அவளுக்குச் சொன்னான். அதுசரியே. அவன் அவளுடைய போதகன். அவள் அவனை வெறுத்தாள். ஆனால், அவன் தானே அவள், அவளுடைய பாவங்களை அறிந்து கொள்ளும்படியான தேவனுடைய வழங்கப்பட்ட வெகுமதியாயிருந்தான். அவள் அவனைக் காணத்தவறினாள். நான் எதைக் குறித்துப் பேசுகிறேன் என்பதை அறிந்திருக்கிறீர்களா? 187. பின்பு இயேசுவும் வந்தார். மேலும் இயேசு... கவனியுங்கள். இயேசு இஸ்ரவேலருக்கும், உலகத்துக்கும் தேவனுடைய வெகுமதியாய் இருந்தார். அது சரிதானா? இயேசு தேவனுடைய வெகுமதியாய் இருந்தார். “தம்முடைய ஒரே பேறான குமாரனைத் தந்துத் தேவன் இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்” நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? (ஒலிப்பதிவு முடிவடைகிறது - ஆசி) 188. மேலும் அது அந்த அப்போஸ்தலர்கள் அல்ல. மோசே தான் அந்த - அந்த விடுதலை கொடுப்பவன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஏனென்றால் அது மோசேயாக இருந்தான், அவனுடைய அறிவும் மேலும் அவனுடைய மதிநுட்பமா? ஏன், அவன் மெதுவாகப் பேசக்கூடிய ஒரு மனிதனாக இருந்தான் என்று அவன் கூறியிருந்தான். அது மோசேக்குள்ளாக இருக்கும் தேவன், ஜனங்களுக்கு ஒரு வெகுமதி, அது கிறிஸ்துவுக்குள்ளாக தேவன், "அது நானல்ல, எனக்குள்ளாக வாசமாயிருக்கும் என்னுடைய பிதாவாக இருக்கிறார்” என்று அவர் கூறினார். 189. அதன் காரணமாகத்தான், மார்த்தாள் கூறினாள், “கர்த்தாவே... (கடந்த இரவின் பிரசங்கம்) நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று எனக்குத் தெரியும் என்றாள்.” அவள் அதை விசுவாசித்தாள். மேலும் அங்கே அந்த ஜனங்கள், அவர் மேல் விசுவாசம் வைத்தனர். 190. பேதுருவை, அவன் நடந்து கொண்டிருந்த போது, பாருங்கள். ஏன், அவன் ஒரு அழியக்கூடிய மனிதனாக இருந்தான். அவன் உங்களையும், என்னையும் போலவே அப்படியே பாவம் நிறைந்த மாமிசத்தில் பிறந்திருந்தான். அது சரியே, ஆனால் ஜனங்களுக்கோ ஒரு சுகமாக்குபவர் தேவையாய் இருந்தார். எனவே அவர்கள் அனுப்பினர் - தேவன் ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்வதற்கு பேதுருவை அனுப்பினார். அன்புக்கு யோவான் இருந்தான். யோவானுக்கு, இருந்த அன்பு பேதுருவின் இருதயத்தில் இருக்கவில்லை. யோவான் தேவனுடைய அன்பின் பிரதிநிதியாய் இருந்தான், நீங்கள் காண்கிறீர்களா? 191. இங்கே பாருங்கள், அவர் பேதுரு யாக்கோபு மற்றும் யோவான் இவர்களை நம்பிக்கை, விசுவாசம் மற்றும் அன்புக்காக. அவர் இவர்களை எடுத்துக் கொண்டபோது... நீங்கள் பார்க்க முடியவில்லையா? அந்த வரமுள்ள ஜனங்கள் அவர்கள் மூவர், அந்த நம்பிக்கை , விசுவாசம் மற்றும் அன்பு. 192. நம்பிக்கையானது யாக்கோபுக்குள் இருந்தது, அவன் தான் சபையை ஒழுங்கில் அமைத்த ஒருவனாக இருந்தான். விசுவாசமானது பேதுருவுக்குள் இருந்தது. மற்றும் அன்பானது யோவானுக்குள் இருந்தது. நம்பிக்கை விசுவாசம் மற்றும் அன்பு இவைகள் பூமியின் மேல் தேவனுடைய பிரதிநிதிகளாக இருந்தன. 193. பேதுருவின் நிழலில் வைக்கப்பட்ட அந்த ஜனங்கள் சுகமடைந்தனர். ஓ, நண்பர்களே! ஓ, என்னே!, நான் பெருத்த கூச்சலிடுவதாக நினைக்க வேண்டாம். நான் உணர்ச்சி வசம் அடைவதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் நான் அடையவில்லை. நான் பேசிக்கொண்டிருக்கிற காரியத்தை நீங்கள் காணத்தக்கதாக என்னுடைய முக்கிய குறிப்பை போதுமானவரை நீங்கள் நெருங்கத்தக்கதாக நான் முயன்று கொண்டிருக்கிறேன். 194. இப்பொழுது, பெந்தெகொஸ்தே மக்கள் கடந்த முப்பது அல்லது நாற்பது வருடங்களாக ஒரு சுகமாக்கும் வரத்திற்காக ஜெபித்துக்கொண்டிருக்கிறார்கள். 195. நாமோ இதுவரை பெற்றிருப்பதிலேயே சிறந்த மருத்துவ விஞ்ஞானத்தை உடைய இந்த நாட்களிலே ஜீவித்துக்கொண்டிருக்கிறோம். பெற்றிருப்பதிலேயே சிறந்த மருத்துவமனைகளை உடையவர்களாயிருக்கிறோம். பெற்றிருப்பதிலேயே சிறந்த மருத்துவர்களை நாம் உடையவர்களாயிருக்கிறோம். நாம் எப்போதும் வழக்கத்தில் இல்லாத சிறந்த மருந்துக்களை நாம் பெற்றிருக்கிறோம். கூடவே நாம் எப்போதும் பெறாத அதிகமான நோய்களையும் பெற்றிருக்கிறோம். 196. அங்கே ஆயிரக்கணக்கான மேலும் இலட்சக்கணக்கான விலைமதிக்க முடியாத தேவனுடைய பரிசுத்தவான்கள் இன்றிரவு வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறனர். மேலும் தேவன் தெய்வீக சுகமளிக்கும் வரத்தை சபைக்குத் திரும்ப அளிக்க வேண்டும் என்று அவர்கள் கதறிக்கொண்டும் மேலும் கதறிக்கொண்டும் வருடக்கணக்காக கதறிக்கொண்டும் இருக்கின்றனர். மேலும் அந்த சுற்றுப்பாதையை, முப்பத்தி ஏழு ஆண்டுகளுக்கு முன் தேவன் நகர்த்திய போது, அதை முன் நியமித்து, அதை அனுப்பியதை ஜனங்களில் அனேகர் நூற்றுக்கணக்கில், அதை அடையாளம் கண்டுகொள்ளாமலேயே கடந்துபோய் விட்டனர், நண்பர்களே!. 197. இப்பொழுது, தாண்டிச் செல்ல அது கொண்டுவரப்பட்டுள்ளது. நான் இதைச் சொல்வதை வெறுக்கிறேன். தேவனே இரக்கமாயிரும். பாருங்கள், நண்பர்களே, மற்ற நாடுகளினூடாக மேலே பீனிக்ஸிலும் மேலே ஹூஸ்டனிலும் மேலே சான் ஆன்டோனியாவிலும், கீழே ஆர்க்கன் சாஸிலும் தேசமுழுவதுமாக எல்லாவித நோய்களும் வியாதிகளையும் உடையவர்கள் அங்கிருந்து, அதனூடாக வந்த ஆயிரக்கணக்கானோர் யாவரும் சுகம் பெற்றனர். ஓக்லேண்ட், உனது நாளை அறிந்துகொள். சில நாட்களில், தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கூண்டிற்கு முன்பாக நான் உங்களை சந்திப்பேன். நான் உங்களுக்கு சர்வ வல்ல தேவனுடைய சத்தியத்தை சரியென நிரூபித்தேன் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். நீங்கள் அதற்காகக் கதறினீர்கள். என்னே? நீங்கள் அதை விசுவாசித்த விதமாகவே அப்படியே அதை மதித்திருந்தால் தேவன் அவருடைய வரங்களை நிரூபித்திருப்பார். அது சரியாய் இருக்கிறது. ஆபேலுக்கு அவர் அதைச் செய்தார். எலியாவுக்கு அவர் அதைச் செய்தார். மோசேக்கு அதைச் செய்தார். பேதுருவுக்கு அதைச் செய்தார். பவுலுக்கு அதைச் செய்தார். எல்லோருக்கும் அதைச் செய்தார். மேலும் அவர் அதை இன்றைக்கும் செய்கிறார். 198. பெந்தெகொஸ்தேயில் முதலாவதாக விழுந்த போது பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானமானது முதலாவதாக விழத்தொடங்கினபோது, “அது மதபேதம்” என்று மக்கள் கூறினார்கள். ஆனால் தேவனோ அவர் அப்படித்தான் என்பதைப் உறுதிப்படுத்தினார். அதனால்தான் நான் இன்றிரவு உங்களோடு இருக்கிறேன், ஏனென்றால் அது தேவனுடைய கரம் என்பதை நான் அறிந்திருக்கிறேன். அதனோடு அவர்களில் அனேகர் இசங்களுக்குள்ளாக அதனுடன் சென்று விட்டனர். ஆனாலும் அங்கே ஒரு உண்மையான பெந்தெகொஸ்தேயினர் இருக்கின்றனர். தேவன் அதை உறுதிப்படுத்தியிருக்கிறார். அது உண்மையாய் இருக்கிறது. மேலும் அதே காரியத்தை அவர் இன்றிரவு வேறொரு விதத்தில் செய்திருக்கிறார். (ஒலிப்பதிவு முடிவடைகிறதுஆசி). 199. நான் ஒரு மருந்து கடையினுள் சென்றேன். நான் உள்ளே சென்ற போது ஒரு வித வழக்கதிற்கு மாறாக சிலர் என்னைப் பார்த்ததை நான் கவனித்தேன். நான் அந்தக் கடையினுள்ளே சென்று நான் திரும்பி வெளியே வந்துவிட்டேன். என்னிடம் ஒரு சீசாவின் மூடி இருந்தது. என்னால் அவரைப் பற்றி மறக்கவே முடியாது. நான் அணியும் சீருடை இன்னும் என்னிடம் உண்டு. 200. அவர் அவருடைய... அந்த மனிதன் தன்னுடைய கரத்தை என் தோள்மீது வைத்து என்னைப் பார்த்து, “ஐயா” நீங்கள் ஒரு அதிகாரியாக இருந்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன் என்று கூறினார். “நான் ஒரு கேள்வியை உங்களிடம் கேட்கலாமா என நினைக்கிறேன் என்று கூறினார். நான் ஒரு விதமான பைத்தியம் பிடித்தவன் என்று நீங்கள் நினைக்கலாம்” என்றார். “ஐயா என்ன விஷயம்” என்று நான் கூறினேன். 201. "நான், கெண்டக்கியில் பாதுகாவில் வசிக்கிறேன்” என்று அவர் கூறினார். "ஏறத்தாழ இரண்டு வருடங்களாக எனது உடல்நிலையானது வீழ்ச்சி அடைந்துள்ளது” என்று அவர் கூறி, “கடந்த வாரம் ஒரு விநோதமான கனவு எனக்கு உண்டாயிருந்தது” என்று அவர் கூறினார். “நான் இந்தியானாவில் ஜெபர்ஸன்வில்லுக்கு வந்து எனக்காக ஜெபிக்கும்படியாக பிரன்ஹாம் என்ற பெயரை உடைய யாரோ ஒருவரைப் பார்க்க வேண்டும் என்று நான் கனவு கண்டேன்” என்று அவர் கூறி, “அங்கே யாராவது பிரன்ஹாம் என்று வசிக்கின்றனரா அல்லது இல்லையா என்று உங்களுக்குத் தெரியுமா”? என்றார். 202. என்னே, நான் எப்படி உணர்ந்தேன் என்று உங்களுக்கு தெரியாது. “ஓ தேவன் உறுதிப்படுத்திக்கொண்டிருக்கிறார் என்று நான் நினைத்தேன்.” 203. “ஆம், ஐயா” என்று நான் கூறி, " இங்கே பிரன்ஹாம்கள் வசிப்பது எனக்குத் தெரியும்” என்று நான் கூறினேன். 204. “வியாதியஸ்தருக்காக ஜெபிக்கின்றவர்கள் யாராவது அங்கே இருக்கிறார்களா? உங்களுக்கு தெரியுமா?” என்று அவர் கூறினார். “நான் தான் அந்த ஒருவர்” என்று நான் கூறினேன். 205. அவர் அப்படியே என்னை அதுபோல் பார்த்தார். கண்ணீர் அவருடைய கன்னத்திலிருந்து கீழே வடிய ஆரம்பித்தது. கரத்தைக் கொண்டு அவர் அப்படியே என்னை எடுத்தார். நானும் அவருடைய கரத்தைக் கொண்டு எடுத்தேன். என் தொப்பியைக் கழற்றினேன், என்னுடைய தொப்பியைக் கீழே வைத்து, என்னுடைய தொப்பியில், துப்பாக்கியை வைத்து, தெருவின் ஓரமாக முழங்கால்படியிட்டு அவருக்காக உடனே அங்கே அந்தத் தெருவிலேயே ஜெபிக்கத் தொடங்கினேன். 206. நான் மேலே எழுந்த போது அங்கே தாய்மார்கள் சிறிய குழந்தைகளைப் பிடித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தனர். புருஷர்கள் தங்கள் கழற்றிய தொப்பிகளுடன் அதைப்போல நின்று கொண்டு ஜெபத்திற்காக காத்திருந்தனர். 207. ஜெபர்ஸன்வில்லில் அங்கே அனேக காரியங்கள் செய்யப்பட்டது. மேலும் என்ன நடந்து கொண்டிருந்தது என்று அவர்கள் அறிந்திருந்தனர். மேலும் நாங்கள் மேலே எழுந்தபொழுது அங்கே அவர்கள் அனைவருமே நின்று கொண்டு அவர்கள் தலைகளைத் தாழ்த்தி ஜெபத்தைக் கவனித்துக்கொண்டிருந்தனர். 208. நான் மேலே எழுந்தேன். அந்த சகோதரன், அவர் தமது கரத்தை என்னைச் சுற்றிலும் போட்டு என்னை அது போல தட்டிக்கொடுக்க ஆரம்பித்தார். இந்த நாளிலிருந்து இதுவரை நான் ஒருபோதும் அவரைப் பார்க்கவே இல்லை. தேவன் அவரை சுகமாக்கினார். 209. நான் கீழே டெக்ஸாஸ் ஹூஸ்டனில் சங்கை.கிட்சன் கூட்டங்களில் நின்று கொண்டிருந்தேன். ஒரு காலையில் அங்கே நின்று கொண்டிருந்தேன். ஓ, என்னே, நான் எவ்விதமாய் நினைத்து ஜெபித்துக் கொண்டிருந்தேன். அங்கே நாங்கள் பகல் ஆராதனையை வைத்திருந்தோம். அங்கே அப்படியே நூற்றுக்கணக்கான ஜனங்கள் ஜெபவரிசையில் வந்து சுகம் பெற்றனர். 210. திடீரென்று அங்கே ஒரு பெண் உள்ளே ஓடிவந்தாள். ஓ, அந்த கட்டிடமானது ஏறத்தாழ இந்த அரங்கத்தின் இங்கு இருக்கும் பிரதான தளத்தைப் போலவே இருந்தது. அந்த பெண் பின்னோக்கி ஓடினாள். அவளுடைய கரங்களில் ஒரு சிறு பையனை வைத்திருந்தாள். அவள் கீழே அமர்ந்தாள். அவள் உண்மையில் பதட்டமடைந்தவளாக இருந்தாள். மேலும் அந்த ஜெபவரிசையானது ஏறத்தாழ நான்கும் ஒரே வரிசையாக இதுபோன்று வந்தது. 211. அவள் மேலே எழுந்தாள். “ஒரு நிமிடம் மட்டும், ஒரு நிமிடம் மட்டும்” என்று அவள் கூறினாள். ஒவ்வொருவரும் நின்று விட்டனர். 212. “நான் இந்த ஜெபவரிசையை நிறுத்த விரும்பவில்லை, ஆனால் நான் உங்களிடம் கூற விரும்புவது...” என்று அவள் கூறினாள். 213. அவள் உண்மையிலேயே அச்ச உணர்வோடும் மற்றும் நடுக்கத்தோடும் ஒருவிதமான உணர்சி மிகுந்தவளாகவும் இருந்தாள். 214. “நான் ஹூஸ்டனில் மேற்குப் பக்கத்தில் மேலே வசிக்கிறேன்.” என்று அவள் கூறினாள். இப்பொழுது, ஹூஸ்டன் நல்ல அளவுள்ள அழகான பட்டணமாக இருக்கிறது. அது முழுவதுமாக பல மைல்களைக் கொண்டுள்ளது. நாங்கள் கிழக்குப் பக்கத்தில் இருந்தோம். “இந்தக் காலையில் எனது அயலகத்தாள், இந்தச் சிறு குழந்தையின் தாய்”, என்று கூறி “அவளது தகப்பனார் ஓர் பழைய மெத்தொடிஸ்டு பிரசங்கியாய் இருந்தார்” என்றாள் “அவர் மரித்து இருபது வருடங்கள் ஆகியிருக்கும், அவர் மரிப்பதற்கு முன்பாக வழக்கமாக சுற்றுப்புறத்தில் சென்று சில நாளில், அவர் யூதர்களுக்காக செய்தது போல், புறஜாதிகளின் காலம் முடியும் முன்பாக, தேவன் அந்த வரத்தைத் திரும்ப சபைக்குக் கொடுப்பார்” என்று கூறி பிரசங்கிப்பார் என்றாள். 215. “அவருடைய குழந்தையாக உள்ள, மகள் இது அவளுடைய குழந்தையாக இருக்கிறது” என்று கூறினாள். “அவள் ஒருவிதமான பெலவீனமாக இருக்கிறாள்” என்றாள். 216, “இந்தக் காலையில் அவள் தனது இல்லத்தை சுத்தம் செய்த பிறகு, நீண்ட கோலுடன் இணைக்கப்பட்ட தரையைத் துடைத்து தண்ணீர் உறிஞ்சும் தரை துடைப்பானை மேலே வைத்துவிட்டுப் படுக்கையின் பாதத்தின் குறுக்காக கீழே படுத்துக்கொண்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்” என்றாள். “திடீரென்று அவளுக்கு ஒரு சொப்பனம் உண்டாயிருந்தது. ஒரு பெரும் கரிய மேகம் எழும்புவதை அவள் பார்த்தாள். அந்த மேகத்திலிருந்து கீழே வந்து பின்பாக அசைய ஆரம்பித்தது” என்றாள். “அங்கே அவளுடைய மரித்த தகப்பன் வந்தார்” என்றாள். “எழும்பு குழந்தையை எடுத்துக்கொண்டு ஹூஸ்டன் சுவிசேஷ கூடாரத்திற்குப் போ. அந்த தெய்வீக சுகமாக்கும் வரமானது அங்கே இருக்கும் என்று அவர் கூறினார்” என்று கூறினாள். 217. நல்லது, அவள் அப்படியே அது ஒரு கனவு மட்டுமே என்று நினைத்தாள். ஹூஸ்டன் சுவிசேஷ கூடாரத்தைக் குறித்து ஒருபோதும் அவள் கேள்விப்படவில்லை. எனவே அவள் அப்படியே அங்கே ஒரு சிறிது நேரம் படுத்து அவள் மறுபடியும் தூங்குவதற்குச் சென்றுவிட்டாள். மேலும் அவள் இரண்டாவது முறை கனவு கண்டாள். அந்த பெரும் கரிய மேகம் வந்தது. அவளுடைய அன்பான தகப்பன் அந்த மேகத்திலிருந்து இறங்கி நடந்து வந்தார். “நல்லது, அது புதுமையாய் இருக்கிறது, "அப்பாவை இரண்டாவது முறையாக கனவில் கண்டேன்” என்றாள். “குழந்தையை எடு” என்று அவர் கூறினார், என்றாள். நல்லது, அவள் எழுந்து அவளுடைய பானத்தைப் பருகி, அந்த வீட்டைக் கொஞ்சம் சற்று கலக்கமுற்று சுற்றினாள். அவள் திரும்பவும் படுப்பதற்குப் போன போது, மூன்றாவது முறையாக அதைக் கனவு கண்டாள். அந்த பெரும் கரியமேகம் வந்தது. மேலும் அவள்... (ஒலிப்பதிவு முடிவடைகிறது-ஆசி) 218. அப்படியே அந்த சொப்பனத்தில் இருந்ததை, அங்கே இருக்கிறதா என்று பார்ப்பதற்கு அவர்கள் ஆவண அலுவலக அதிகாரியை அழைத்தனர். இப்பொழுது நான் எல்லா சொப்பனங்களையும் நம்புவதில்லை. “உங்கள் வாலிபர்கள் தரிசனங்களைப் பார்ப்பார்கள், உங்கள் மூப்பர்கள் சொப்பனங்களைக் காண்பார்கள்” என்று அவர் கூறினார். அதன் பின்பு அவள் - அவள் ஆவண அலுவலகம் அழைக்கப்பட்டாள், மேலும் “ஆம் அங்கே பாதையின் மறுபக்கத்தில் அந்த மேற்குப் பகுதியில் அறுபத்தி ஏழாவது தெருவில் ஒரு ஹூஸ்டன் சுவிசேஷ கூடாரம் இருக்கின்றது” என்று அவர் கூறினார். “கிழக்கு அறுபத்தி ஏழாவது தெரு”, என்று அவர் கூறினார். 219. அந்தப் பெண், அந்தத் தாய் மிகவும் பெலவீனமாக அவளால் இயலவில்லை. இப்பொழுதும் அந்த குழந்தைக்கு குழந்தைகள் சம்பந்தப்பட்ட முடக்கு வாதம் இருந்தது. மேலும் அவளால் அந்தக் குழந்தையைக் கொண்டு வர இயலவில்லை . 220. ஆனால், அவளுக்கு அந்த அயலகத்தார் இருந்தனர், அவள் அந்த இடத்தை அடையும் வரை அந்த அயலகத்தார் பேருந்துகளிலும், வாகனங்களிலும் மாறிக்கொண்டே இருந்தனர். சற்று ஏறக்குறைய, சபையிலிருந்து இரண்டு அடுக்குமாடி கட்டிடம், தள்ளி ஒரு வாகனத்தில் அப்படியே இறங்கினாள். அங்கே ஓர் அதிகாரி நின்றுகொண்டிருந்தார். “உங்களுக்கு அந்த ஹூஸ்டன் சுவிசேஷ கூடாரம் எங்கிருக்கிறது என்று தெரியுமா?” என்று அவரிடம் அவள் கேட்டாள். 221. “ஆம், அம்மா” சரியாக மேலே அங்கே மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருக்கும் அங்கே அந்தத் தெருவில் உள்ளது” என்று கூறி, “ஒரு சுகமளிக்கும் ஆராதனையை அவர்கள் கொண்டிருந்தனர்” என்றார். 222. நல்லது, அவள் அங்கு சென்றபோது, அந்த ஏழை காரியமானது (அந்த பாதிக்கப்பட்ட குழந்தையை தீர்க்கதரிசி இங்கு குறிப்படுகிறார் - தமிழாக்கியோன்) மிகவும் பெலவீனமாக இருந்தது. அவள், அவள் எப்படி உணர்ந்திருப்பாள் என்று நீங்கள் கற்பனை செய்து பாருங்கள், அங்கே உடனே உள்ளே நடந்து அதைப் பார்த்தாள். அவள் என்னிடம் கூறினாள். “அந்த குழந்தையை என்னிடம் கொண்டு வா” என நான் கூறினேன். 223. ஓ, என்னே , என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்குத் தெரியாதா? நிச்சயமாக. அந்த ஜனங்களும், அந்த பரலோகத்தின் தூதர்களும் கூட அதைப்பற்றி அறிந்து இருப்பார்கள் என்று நான் நினைத்தேன். தேவன் அதைக் குறித்து உறுதிப்படுத்துவார். அவருடைய கிரியைகள் அதைப் பிரகடனப்படுத்தும், ஜனங்கள் அதைப்பற்றி என்ன நினைக்கின்றனர் என்று கவலையில்லை. அது சரியாய் இருக்கிறது.. அது உண்மையாய் இருக்கிறது நண்பர்களே. தேவன் உங்கள் இருதயத்தை ஆசீர்வதிப்பாராக!. 224. இங்கே ஆர்கன்சாஸிலிருக்கும் கேம்டெனில் சகோதரன் ஆதம்ஸோடு இருந்தேன். இன்றிரவில் ஆதம்ஸ் சகோதரர்களில் ஒருவர் இங்கு இருக்கின்றாரா என ஊகிக்கிறேன்? மேலும் அவரது இடத்தில், அவர் என்னை வெளியே இழுத்துக் கொண்டிருந்தார். ஆராதனைக்கு வருகை தந்த ஆயிரக்கணக்கானோர் எங்களுக்கு இருந்தனர். மேலும் ஒரு நாள் ஆராதனையிலிருந்து என்னை அவர்கள் இழுத்துக்கொண்டிருந்தனர். மேலும் யாரோ ஒருவர் “இரக்கமாயிரும், இரக்கமாயிரும். ஓ, நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள் சங்கை அவர்களே?” என்று சத்தமிட்டுக் கொண்டிருந்ததை நான் கேட்டுக் கொண்டே இருந்தேன். 225. நான் சுற்றித் திரும்பினேன், “நீங்கள் அதை நிறுத்த முடியாது” என்று சகோதரன் ஆதம்ஸ் கூறினார். அது ஒரு கருப்பு மனிதன், என்பதை நீங்கள் அறிவீர்கள். 226. இருந்தும் ஆர்க்கன்ஸாசிலும் நீங்கள் ஒரு கருப்பு மனிதனோடு கைக்குலுக்குவீர்களானால் கூட அவர்கள் உங்களை சிறையில் போட்டு வடுவார்கள். எனவே அங்கிருக்கும் அவர்களுக்கு, அப்படிப்பட்ட சட்டம் அங்கே அவர்களுக்கு இருக்கிறது. நீங்கள் அவருடன் பேசலாம், ஆனால் உங்கள் கரங்களை அவர்மேல் போடக்கூடாது. 227. இப்பொழுது, அது சரியல்ல. அது இல்லை . நான் எப்படி இருக்கின்றேனோ அதே மாதிரியே அவனும் ஒரு மனிதன்தான், அல்லது நீங்கள் இருக்கிறது போலவே அல்லது வேறு எவரும் இருப்பது போலவேதான், அது மிகவும் சரியாய் இருக்கிறது. நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அதைக் குறித்து என் ஆத்தும் சுமையை இறக்குகின்றேன். அது சரியாய் இருக்கிறது. நிச்சயம். நான் ஆபிரகாம் லிங்கனுக்காக இருக்கிறேன், மேலும் அது எல்லாமே சரியாய் இருக்கிறது. மேலும் பாருங்கள்... 228. “ஓ சங்கை அவர்களே” என்று சத்தமிட்டுக் கொண்டு அங்கே ஒரு ஏழை கருப்பு மனிதன் நின்று கொண்டிருந்தான். 229. மேலும், சகோதரன் பிரன்ஹாம் “வாருங்கள்” என்று சகோதரன் ஆதம்ஸ் கூறினார். “என்னே, கூட்டத்தைப் பாருங்கள்” என்றார். “அவர்கள் உங்களை நசுக்கி விடுவார்கள்”. மேலும் அவர்கள் என்னைக் கூட்டத்திலிருந்து இழுத்து விடுவார்கள். அவர்கள் கடுமையாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் இல்லை. ஆனால் அவர்கள் உங்களை எடுக்க முயற்சி செய்வார்கள். ஏனெனில், நண்பர்களே சிலவேளைகளில் உங்களைச் சுற்றிக் கொள்வார்கள். அவர்கள் உங்களை ஏறக்குறைய காலால் மிதித்துக் கொல்லத்தக்கதான நிலையில் உங்களை இழுப்பார்கள். நான் அதை விரும்புகிறேன். தேவன் அவர்கள் இருதயங்களை ஆசீர்வதிப்பாராக!. 230. நான் அங்கே சரியாக நின்று மேலும் அவர்கள் ஒவ்வொருவரையும் தொட்டு, மேலும் மூச்சானது என்னுடைய சரீரத்திலிருந்து வெளியே போகும்வரை அவர்களுக்காக நான் ஜெபிக்க விரும்புகிறேன். 231. கடந்த இரவு நான் கட்டிடத்தை விட்டுச் சென்றபோது, வெளியே வாகனத்தினுள் என்னை ஏறக்குறைய படுக்கவே வைத்துவிட்டார்கள். என்னுடைய இருதயமும் மற்ற ஒவ்வொன்றும், அப்படியே நடுங்கியது. மேலும் குதித்தது அதைப்போன்று. 232. அந்தப் பிசாசுகள் அவைகள் வெளியே வந்து அறைக்குள்ளாக இருக்கும் போது அவைகளைப் பிடிப்பது சிரமமான காரியம் என்பதை நீங்கள் உணரமாட்டீர்கள். மேலும் நீங்கள் உத்திரவாதமுள்ளவர்களாக இருக்கின்றீர்கள். கட்டிடத்திற்குள் ஏதாவது சம்பவிக்கக் கூடுமானால் என்ன? ஏன், அவர்கள் உங்களை சிறைச்சாலையில் வைத்து பூட்டிவிடலாம், மேலும் நன்மைக்காக கூட்டத்தை அவர்கள் தடுக்கலாம். அப்படியா இருக்கிறது, நீங்கள் என்ன குறிப்பிடுகின்றீர்கள் என்று பாருங்கள். அதற்கான உத்தரவாதத்தை நீங்கள் அறிய மாட்டீர்கள். மேலும் இங்கே அதன்பிறகு, மேலும் எவ்வாறாயினும், ஆறுமாதங்கள் சென்ற பிறகு மிகவும் களைப்பாயிருந்தது. 233. பிறகு, “ஒரு நிமிடம் பொறுத்திருங்கள்” என்று நான் - நான் கூறினேன். 234. மேலும், நரைத்தத் தலையை உடைய ஏழையான அவன் அப்படியே ஒரு அழுதுக்கொண்டிருந்தான். அவன் தன் கையில் தொப்பியை வைத்திருந்தான் “சங்கை அவர்களே, சங்கை அவர்களே” என்று அவன் கூறிக்கொண்டே இருந்தான். 235. “தேனே, நீங்கள் அவரிடம் போக முடியாது. நீங்கள் அவரிடம் போகமுடியாது” என்று அவனுடைய மனைவி கூறினாள். 236. “ஒரு நிமிடம் பொறுத்திருங்கள். சற்று ஒரு நிமிடம்” என்று நான் கூறினேன். எனவே நான் சுற்றிப்பார்த்து, நான் அவனைப்பார்த்தேன். “ஐயா என்ன விஷயம்?” என்று நான் கூறினேன். 237. மேலும், சகோதரன் ஆதம்ஸ் மற்றும் வேறு மனிதர்கள் என்னைப் பின்பாக அவன் இருக்கும் இடத்திற்கு எடுத்துச் சென்றனர். மேலும் “என்ன விஷயம்” என்று நான் கூறினேன். “சங்கை அவர்களே, சங்கை அவர்களே” என்று அவன் கூறினான். 238. அதுபோல அவன் என்னைப் பிடித்துக்கொண்டான், பாருங்கள். “சங்கை அவர்களே” என்றான். அவனுடைய கரத்தை என்மீது போட்டுக்கொண்டான். “ஆம்” என்று நான் கூறினேன். 239. “சற்று ஒரு நிமிடம், சங்கை அவர்களே” என்று அவன் கூறினான். “நான் இங்கு வருவதற்கு ஒரு நீண்ட வழிகளாக வந்துள்ளேன்” என்று அவன் கூறினான். “கடந்த இரவுக்கு முன்பாக” என்று அவன் கூறினான். “என்னுடைய வயதான தாயார் ஏறத்தாழ இருபது வருடங்களுக்கு முன்பே செத்துப்போய்விட்டார்கள்,” என்றான். மேலும் “அவள் ஒரு கிறிஸ்தவ மனுஷியாய் இருந்தாள்” என்றான். “பன்னிரெண்டு வருஷத்துக்கு அதிகமாகவே நான் குருடனாக இருந்து வந்துள்ளேன்” மேலும் “கடந்த இரவு, அல்லது கடந்த இரவுக்கு முன், நான் கனவுகண்டேன்... (ஒலிநாடாவில் வெற்றிடம் -ஆசி) அந்த தேவன் தம்முடைய தெய்வீக சுகமாக்கும் வரத்தை அனுப்பினார், மேலும் அது ஆர்கன்ஸாஸ் கேம்டெனில் நடந்தது, ஆகவே நான் உங்களைப் போக விடாதபடிக்கு செய்கிறேன்” என்று கூறினான். “சங்கை அவர்களே தயவு செய்து என்னை கடந்து சென்றுவிட வேண்டாம்” என்று கூறினான். 240. நான் அவனைக் கடந்து சென்றுவிட முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அவன் யாராக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை, அது தேவனுடையது. அவர்கள் எவ்வளவாக உங்களை சிறைச்சாலையில் போட்டாலும் நான் கவலைப்படமாட்டேன். 241. பிறகு, அந்த வயதான ஏழை மனிதனின் அருகில் நின்றுகொண்டு, அவனுடைய கரங்ளைப் பற்றிப்பிடித்துக்கொண்டேன், அவனுடைய கண்கள் ஒரு வெடிச்சத்தினால் கடுமையாக தாக்கப்பட்டு வெளிவந்திருந்தது. அவனது கரங்களைப் பற்றிக்கொண்டு மேலும் அவனுக்காக ஜெபித்தேன். அவனது மனைவி அழுதுகொண்டிருந்தாள், அந்தக் கண்ணீரானது கீழாக உருண்டு அவளது உடைக்கு மேல், அணிந்து கொள்ளும் ஆடையில் விழுந்தது. அவள் அங்கு நின்று கொண்டிருந்தாள். 242. ஜெபத்தின் மூலமாக நான் சென்ற பிறகு அவன் அப்படியே - அவனுடைய கண்கள், அவன் மிகவும் ஆச்சரியமாகப் பார்த்தான். அவன் சுற்றிலுமாகப் பார்க்கவும் அவனுடைய கண்களை மூடித்திறக்கவும் ஆரம்பித்தான், "அன்பே, அங்கே சரியாக அந்த ஒரு மோட்டார் வண்டி நின்று கொண்டு இருக்கவில்லையா?” என்று அவன் கூறினான். மேலும் நம்முடைய வாகனத்திற்குள்ளாகத் தானே நாம் அமர்ந்திருந்தோம். அவனுடைய கண்களில் இருந்து, அவனது கண்களில் கண்ணீரானது உருண்டு கீழே விழுந்தது. அவன் தன்னுடைய கரங்களை உயர்த்தி களிகூர ஆரம்பித்தான். 243. ஓ, சகோதரனே, தேவன் தம்முடைய வரங்களை சரியென நிரூபிப்பார். வானமும் பூமியும் ஒழிந்துபோகும். ஆனால் தேவனே அசைவாடப் போகின்றார். அங்கே அதைப் பெற்றுக்கொள்வதற்கு சிலர் இருக்கப்போகிறார்கள். (ஆம், ஐயா) தேவன் உனக்காக என்ன செய்தார் என்று நீ வந்து மேலும் மரியாதை செலுத்துவாயானால் அது சரியாய் இருக்கிறது. தேவன் தமது வரங்களை சரியென நிரூபிப்பார். அது உடனே தொடங்குவதற்கு இப்பொழுதே சமயமாய் உள்ளது. 244. கவனியுங்கள், சமீபத்தில் நான் அங்கு, இல்லினாய்ஸில் இருந்தேன், மேலும் கவனியுங்கள். கருப்பு நிறமுடையவர்களைப் பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது, இது என் மனதில் வந்தது. அது அங்கே இருந்தது. நான் ஒரு பெரிய அரங்கத்தில் இருந்தேன். அங்கே நான் பேசிக்கொண்டிருந்ததை உங்களில் அனேகர் அறிவீர்கள். மேலும் அங்கே சுற்றிலும் நோக்கிக்கொண்டும் மேலும் வித்தியாசமான காரியங்களைப் பார்த்துக்கொண்டும் ஒரு சிறிய வெள்ளை மயிர் வளையத்தை உடைய ஒரு வயதான கருப்பு மனிதனை நான் பார்த்தேன். அவர் இதுபோன்று பார்த்துக்கொண்டு நெடுகிலும் வந்தார். மேலும் ஒரு - ஒரு குறிப்பிட்ட காரியத்திற்கு அவர் வந்து சிறிது நேரத்திற்குப் பிறகு, அவர் நின்று விட்டார். அவருடைய தொப்பியைக் கழற்றினார். அவர் அதை அவருக்குப் பின்னால் வைத்துவிட்டார். அவருடைய தலையை அவர் தாழ்த்தினார். மேலும் அவர் ஒரு ஜெபத்தைக் கூறிக்கொண்டிருப்பதை நான் பார்த்தேன். 245. மேலும், அவர் ஜெபம் செய்து முடித்த பிறகு நான் அவரிடம் நடந்து சென்று, “ஐயா” என்று நான் கூறினேன். "நான் ஒரு ஊழியக்காரனாய் இருக்கிறேன்” என்று நான் கூறினேன். “நீங்கள் ஜெபித்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அந்த பெட்டியைக் குறித்து மிகவும் திடுக்கிடச் செய்தது என்னவாக இருந்தது.?” என்று நான் கேட்டேன். 246. அவர் என்னைப்பார்த்தார். அவருடைய ஏழை வயதான சுருக்கமான கெட்டியான கன்னங்கள் மேலும் அவருடைய கன்னங்களில் பக்கமாகக் கண்ணீர்கள் உருண்டு விழுந்தது, “சங்கை.போதகரே” என்று அவர் கூறினார். “அப்படியே அங்கே மேலே பாருங்கள்” என்று அவர் கூறினார். 247. “நான் எழுந்து மேலும் அங்கே மேலே பார்த்தேன். அது பார்ப்பதற்கு ஒரு சிறிய பழைய ஆடைபோன்று அங்கு கிடந்தது. “நான் ஒரு ஆடையை மாத்திரமே பார்க்கிறேன்” என்று நான் கூறினேன். மேலும் அதைத்தான் அனேக மக்கள் அப்படிப் பார்க்கிறார்கள், அந்த இயற்கையின் அடையாளங்களை, “நான் அந்த ஆடையை மாத்திரம் பார்க்கிறேன்” என்று கூறினேன். 248. "நீங்கள் அந்தவிதமான ஒரு வட்டத்தை அதனுள் கவனித்தீர்களா, போதகர் அவர்களே?” என்று அவன் கூறினான். 249. “ஆம், ஐயா” என்று நான் கூறினேன். 250. “சரியாக இங்கே என் பக்கத்தில் உணருகிறேன்?” என்று அவன் கூறினான். “அங்கே அடிமை வாரின் அடையாளங்கள் இருக்கிறது” என்றான். அதுதான் ஆபிரகாம் லிங்கனின் இரத்தமாக இருக்கிறது என்றான். அந்த ஆபிரகாம் லிங்கனுடைய அந்த இரத்தம் தான் என்னிடமிருந்து அந்த அடிமை வாரை அகற்றிப்போட்டது. ஏன் நான் என்னுடைய தொப்பியைக் கழற்றி மேலும் ஒரு ஜெபத்தைச் சொல்லக்கூடாதா? என்றான். 251. இன்றிரவு என்று நான், நினைத்துப் பார்க்கிறேன், ஒரு கருப்பு மனிதன், விடுதலைக்காகவும் மேலும் அவனுடைய உரிமைக்காகவும் ஆபிரகாம் லிங்கனுடைய இரத்தத்திற்காக தன்னுடைய தொப்பியைக் கழற்றி எடுக்க கூடுமேயானால், அந்த இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திற்காக கிறிஸ்தவர்களாகிய நீங்கள் என்ன செய்யவேண்டும், என பாருங்கள்? ஓ, நண்பர்களே, ஓக்லேண்டிலும் மற்றும் லூசியானா அல்லது லாஸ் ஏஞ்சல்ஸிலும் கூட அதிகமான விசுவாசம் இருக்க வேண்டும் என நான் எதிர்பார்த்தேன். 252. சமீபத்தில் அரிசோனாவில் ஸ்பானிய மக்கள், சிறிது காலத்திற்கு முன்பு அந்த மக்கள் அதைப் பெற்றுக் கொண்டனர் என்று நான் உங்களுக்கு சொல்லுகிறேன். அவர்கள் அந்த யோசனையை சரியாகவும் சீக்கிரமாகவும் பெற்றுக்கொண்டனர். அது அவர்களுக்காக தேவனுடைய வரம் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அவர்கள் உடனே மேடையின்மேல் வந்தனர். அவர்கள் அன்பான வயதான ஸ்பானிய தாய்மார்கள். அவர்கள் என்னிடத்தில் வருவதற்கு முன்பே மயக்கமுற்றும் மேலும் விழுந்தும் வரிசையை விட்டு இழுக்கப்பட்டதையும் நான் பார்த்தேன். அவர்கள் அதை விசுவாசித்தனர். 253. அவர்களில் ஒருத்தி வந்து, அவளுக்கும் கூட ஒரு கனவு இருந்தது... அவளால் ஆங்கிலம் பேச முடியவில்லை. மேலும் அந்த இயற்கைக்கு மேம்பட்டது நின்று கொண்டிருந்ததை அவள் கண்டாள். (இங்கே அந்தக் கடிதத்தை நீங்கள் வைத்திருக்கிறீர்களா?, நீங்கள் வைத்துள்ளீர்களா?) அனேகர்... ஏன்? தேவன் அவருடைய வரத்தை சரியென நிரூபிப்பார். அது சரியாய் இருக்கின்றதா? ஓ, நண்பர்களே, நான் எதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும். நான் எதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன் என்று உங்களுக்கு விளங்குகிறதா? விசுவாசம், அதை விசுவாசியுங்கள். வாருங்கள், அது அந்த மனிதன் அல்ல, அது அந்த மனிதனுக்குள் இருக்கும் தேவன். நான் என்ன அர்த்தத்தில் கூறுகிறேன் என்று நீங்கள் அறிவீர்கள். 254. (ஒலிப்பதிவு முடிவடைகிறது-ஆசி) . தயவு செய்தது, ஓ தேவனே, அப்போஸ்தலர்களுடைய நாட்களில் அவர்கள் செய்து போலவே இன்றிரவிலும் அப்படியே மக்கள் வருவார்களாக. இதுதான் அவர்களுக்கான அப்போஸ்தல நேரம் என்று உணர்ந்துகொண்டு அவர்கள் வருவார்களாக. அவர்கள் என்ன கேட்டார்களோ இப்பொழுது அது நிகழ்ந்து கொண்டு இருக்கின்றது. இது தான் அந்த மணி வேளையாய் இருக்கிறது. அந்த பரிசுத்த ஆவியானவர் சுகமாகுதலின் உருவத்தோடு அவர்களுடைய சரீரங்களில் பிரசன்னமாகியிருக்கிறார், அன்பின் தேவனே, இதையருளும். இன்றிரவு அனேக ஜனங்கள் சுகமடைவார்களாக. இரக்கமாயிரும், பிதாவே. 255. மேலும் இன்றிரவில் வந்துள்ள ஒவ்வொருவரும், உம்முடைய தாழ்மையுள்ள வேலைக்காரன், சீமோன் பேதுருவை அவர்கள் கடந்து சென்றபோது, அவர்கள் செய்தவிதமாக வருவார்களாக. அவர்கள் அவனுடைய நிழலில் கிடத்தப்பட்டார்கள். அவர்களுடைய ஒவ்வொரு இம்மியும் ஆரோக்கியமடைந்தது. காரணமென்னவென்றால், தேவன் அந்த மனிதனுக்குள் இருக்கிறார் என்பதை அவர்கள் அடையாளம் கண்டுகொண்டனர். மோசேக்குள்ளாக அடையாளம் கண்டு கொண்ட விதமாகவே, அவர்கள் தேவனை அடையாளம் கண்டுகொள்வார்களாக. தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்து, உலகத்தை தம்மோடு ஒப்புரவாக்கினார். இன்றிரவிலும் தேவன் தம்முடைய ஜனங்களுக்குள் இருப்பதை அவர்கள் அடையாளம் கண்டுகொள்வார்களாக. அன்பின் பிதாவே, இதை அருளும். இப்பொழுதும் இரக்கமாயிருந்து அவர்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதியும். 256. அன்பின் தேவனே, வீட்டிற்கு வருவதற்கு எனக்காக அழுதுகொண்டும், கெஞ்சிக்கொண்டும், அதாவது அப்படியாக இன்றிரவில் ஆராதனைகளில் இருக்கின்ற என்னுடைய வீட்டிலுள்ள சிறு சபைக்காக இந்த வேளையில் நான் ஜெபிக்கிறேன். ஓ, தேவனே, தேசத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் உள்ளே கூடிவந்து கொண்டு... என்னுடைய சிறிய தாயில்லாத சிறுவனை கவனித்துக்கொள்ளும், நீர் செய்யமாட்டீரா, அன்பின் தேவனே! 257. ஓ, நானோ இங்கே வெளியில் உண்மையாக உழைத்துக்கொண்டும் என்னுடைய சிறந்ததை முயற்சித்துக்கொண்டும், அன்பின் தேவனே என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு சொல்லப்பட்டதற்குக் கீழ்ப்படிகின்றேன். எத்தகைய ஒரு பலியாக அது இருக்கிறது. ஜனங்களுக்காக நீர் எத்தகைய 'அருமையானதை செய்திருக்கின்றீர் என்று பிதாவே, ஜனங்கள் பார்ப்பார்களாக. இந்த நாளை அவர்கள் அடையாளம் கண்டுகொண்டு அவர்கள் தங்கள் நோய்களிலிருந்து நலம் பெறட்டும். மேலும் இந்த பட்டணத்தின் மூலமாக சாட்சி பகரட்டும். இதை உம்முடைய நேசகுமாரன் இயேசு கிறிஸ்துவின் அழகான நாமத்துக்காக கேட்கின்றோம். ஆமென். 258. நண்பர்களே, அவர்கள் பக்கத்திலிருந்து பக்கத்துக்கு அப்படியே விழுகின்றனர். ஓ, இதை எவ்விதத்தில் நான் விரும்புகிறேன். நீங்கள் செய்யலாம், நாங்கள் - எனக்குத் தெரியும். நீங்கள் செய்வீர்கள். தேவன் உங்கள் இருதயங்களை ஆசீர்வதிப்பார். நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் என்று விசுவாசிப்பதற்கு எனக்கு இப்பொழுதுதான் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. 259. குழுவினர் இசைக்கருவிகள் இன்னும் மற்ற அனைத்தையும் இசைக்கையில் இப்பொழுது நான் அனைவரும் பாடுவோமா, “விசுவாசிப்பாய்” இப்பொழுது ஒவ்வொருவரும். உங்கள் குரல்களை அதிகமாக உயர்த்தி, இப்பொழுது வாருங்கள். விசுவாசிப்பாய். விசுவாசிப்பாய், யாவும் கைகூடிடும். 260. (நான் இங்கே சரியாக நிற்க முடியும். அது எல்லாமே சரிதான், ஒலிபெருக்கியின் பின், உள்ளே, அந்த நிழலின் கீழ் நான் பின்புறத்தில் இருக்கின்றேன்...? ..இங்கே இதனூடாக, நான் சற்று சரியாக இருந்து கொள்கிறேன்.) விசுவாசிப்பாய் யாவும் கைகூடிடும் விசு. 261. இப்பொழுது சற்று நேரம். இன்றிரவில் தேவன் நம் மத்தியில் இருக்கின்றார் என்று நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? விடுதலைக்காக கதறிய மக்களாகிய உங்களுக்கு அவரே விடுதலையையை அனுப்பினார் என்று நீங்கள் விசுவாசிக் கின்றீர்களா? பிறகு நம்முடைய கரங்களை நம்முடைய இருதயத்தின் மேல் வைத்து நாம் பாடுவோம். 262. கர்த்தாவே, நான் விசுவாசிக்கிறேன், கர்த்தாவே, நான் விசுவாசிக்கிறேன், யாவும் கைகூடிடும், கர்த்தாவே நான் விசுவாசிக்கிறேன், கர்த்தாவே நான் விசுவாசிக்கிறேன், ஓ, கர்த்தாவே நான் விசுவாசிக்கிறேன் யாவும்... 263. (ஒலிப்பதிவு முடிவடைகிறது-ஆசி) ... வேளை வந்தது. நீர் சீக்கிரமாக வருகிறீர் என்று நாங்கள் விசுவாசிக்கின்றோம். உம்முடைய பரிசுத்த பிள்ளையை மகிமைப்படுத்தும்படி நீர் உம்முடைய வரத்தை அனுப்பினீர். சுகமாக்கும்படியாக அவருடைய பிரதிநிதியாகிய சபையைக் கொண்டு அவர் தம்முடைய பரிசுத்த கரத்தை நீட்டியிருக்கிறார் இன்றிரவு இங்கே இருக்கும் ஜனங்களுக்கு உதவி செய்யும். இசையானது இனிமையுடன், மென்மையாக இசைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற வேளையில், அந்த ஜனங்கள் விசுவாசிப்பார்களாக. பிதாவே, நான் ஏதாகிலும் தவறுதலாக கூறியிருப்பேனேயானால் என்னை மன்னியும். 264. இந்த காலத்தைத்தான் நீர் நிரூபித்துக் கொடுத்தீர் என்று இந்த ஜனமானது புரிந்து கொள்ளுமாறு நான் ஜெபிக்கிறேன். ஏனெனில் என்னுடைய வாஞ்சையின்படி உம்முடைய ஊழியக்காரன் வரவில்லை என்று அவர்கள் அறிவார்களாக. நான் வருவது அது உம்முடைய சித்தமாக இருந்தது பிதாவே. அவர்கள் ஒவ்வொரு சந்தேகிக்கும் சிந்தையையும், இன்றிரவு ஒவ்வொரு சந்தேக நினைவையும் இங்கு வந்து தள்ளி வைத்துவிட்டு சுகமாக்கப்படுவார்களாக. நாங்கள் இதற்காகவும், அவருடைய மகிமைக்காக இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 265. இப்பொழுது நீங்கள் ஒவ்வொரு சந்தேக சிந்தையையும் தள்ளி வைப்பீர்களா? உங்களுடைய சந்தேக யோசனையைப் பற்றிய சகலத்தையும் மறந்து முடிவுக்கு கொண்டு வந்துவிட்டீர்களா? நீங்கள் சுகமாகப் போகின்றீர்கள் என்றே இன்றிரவில் வந்திருக்கின்றீர்களா? நீங்கள் அதை விசுவாசிக்கின்றீர்களா? “ஆமென்” என்று கூறுங்கள். அந்த அனைத்தும்... தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! நண்பர்களே, இப்போது அவர்கள் ஒரு படத்தை எடுக்கப்போகிறார்கள் இந்த படங்களுக்கு என்ன சம்பவிக்கப் போகிறது என நான் உங்களுக்குக் கூறுகிறேன். அவைகளை என் அறையில் தொங்க விடப்போகிறேன். ஒவ்வொரு இரவும் நான் வீட்டிற்குச் செல்லும்போது, அவர்களுக்காக நான் ஜெபிப்பேன். நான் இந்த படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது எத்தனை பேர் உங்களுக்காக நான் ஜெபிக்க வேண்டுமென்று விரும்புகிறீர்கள். தேவன் உங்கள் இருதயங்களை ஆசீர்வதிப்பாராக! 266. இப்பொழுது, உறுதியாய் இருந்து நாளை இரவு ஆராதனையைத் தவறவிடாதீர்கள், மேலும் இரவு, என்னுடைய வாழ்க்கைக் கதையை அடுத்த நாள் இரவில் நீங்கள் கேட்கும்படி நான் விரும்புகிறேன். இப்பொழுது கொஞ்ச நேரத்திற்கு நாம் பயபக்தியாய் நின்று கொண்டிருக்கும் வேளையில் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! அவர்கள் படம் எடுக்கப்போகிறார்கள். இப்பொழுது புகைப்படம் எடுப்பவர் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறுவார். (புகைப்படம் எடுப்பவர் பேசுகிறார், “இப்பொழுது பொதுமக்களாகிய நீங்கள் தயவு செய்து உட்காருவீர்களானால்-ஆசி) அரங்கத்தின் உள் உயர் பகுதியில் பார்வையாளர் அமரும் இடத்தில் நிற்பீர்களானால், அது கொஞ்சம் மிக சிறந்ததாக இருக்கும், கொஞ்சம் சிறந்ததாக்கிக் கொள்ளுங்கள்... அது சரியாய் இல்லையா? புகைப்படக் கலைஞனே, அவர்கள் நின்று கொண்டு இருப்பார்களானால் மிக அழகான படமாக அது உருவாகுமா? குறிப்பாக அரங்கத்தின் உள் உயர்பகுதியில் பார்வையாளர் அமரும் இடம், அது சரிதானா? ஒரு சிறந்த படத்தைக் காண்பிக்கும்... எல்லாம் சரி, அரங்கத்தின் உள் பகுதியில் பார்வையாளர்கள் அமரும் இடத்தில், நிற்பதற்கு அவர்கள் அரங்கத்தின் உள் உயர் பகுதியில் பார்வையாளர்கள் அமரும் இடத்தில் சுற்றிலுமாக நிற்க விரும்புகிறார்கள். அது அருமையாய் இருக்கிறது..?.. அந்த சமூகத்தில்...?.. 267. (அந்த ஜெபவரிசை தொடர்கிறது, ஆனால் சகோதரன் பிரன்ஹாம் ஒலிபெருக்கியிலிருந்து விலகி அடியெடுத்து வைக்கிறார். மேலும் அதை எல்லாம் முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை, மேலும் தொடர்ந்து வரும் பாடப்பகுதி - முழுமை அடையாமலிருக்கிறது. - ஆசி) 268. விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியைப் பார்க்கிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான். அதினாலே அவன் நீதிமானென்று சாட்சி பெற்றான். தேவன் தம்முடைய வரத்தை சாட்சி கொடுக்கிறார், பரம பிதாவே இப்பொழுதும் உம்முடைய சாட்சிக்காக நான் உமக்கு நன்றி கூறுகிறேன். எங்கள் அன்பின் இயேசுவின் மூலமாக நீர் செய்ததைக் குறித்து சாட்சி கொடுத்தீர். அந்த இரவில் அறைக்குள் என்னுடனே பேசின அந்த தூதன் உம்முடைய ஊழியக்காரன் அருகே நின்று இந்த நேரத்தில் வார்த்தையை, பின் தொடருகிற அனேக அடையாளங்கள் மற்றும் அற்புதங்களோடு உறுதிப்படுத்துவாராக. அந்த சத்துருவானவனை உணர்ந்துள்ள நாங்கள்...?. மேலும் அனேக ஜனங்கள் இன்றிரவு சுகமடைவார்களாக. அவர்களுடைய விசுவாசமானது அந்த சாட்சியை விசுவாசிப்பதற்கு இந்த வேளையில் உயர்த்தப்படுவதாக. எல்லாவிதமான வியாதிகளையுடையவர்களும் சுகமைவார்களாக. ஒவ்வொரு ஆவியையும் உம்முடைய ஊழியக்காரனுக்குக் கீழ்ப்படியச் செய்யும். தேவனுடைய மகிமைக்காக நாங்கள் இதை இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம், ஆமென். 269. இப்பொழுது...?.. அவளை சுகமாகச் செய்வதுதான் தேவனுடைய சித்தம்...?... சற்று முன்பாக அந்த..?. வேதனைப்படுத்திக் கொண்டிருந்து..?.. சகோதரி. நான் இயேசுவின் மூலம் உம்மை கெஞ்சிக் கேட்கிறேன். 270. சர்வ வல்லமையுள்ள தேவனே, கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் எங்களுடைய சகோதரியை நீர் ஆசீர்வதிக்குமாறு நான் ஜெபிக்கின்றேன். இந்த நிலையில் அவள்..?. அதை உணரட்டும்...?... ஜனங்கள். உமது வரத்தை நீர் சாட்சியாகக் கூறட்டும், இயேசுவின் நாமத்தில் அவளை விட்டு வெளியே வா, நீ பிசாசே. 271. இப்பொழுது எப்படி உன்னால் முடியும்..?.. தேவன் உனக்குக் கூறினார் என்று நீ விசுவாசி..?. சகோதரி உன் முழு இருதயத்தோடும் நீ விசுவாசி. அன்பின் தேவனே, சுகமடையாமல் இருப்பது, அது அவளுக்கு கூடாததாக இருக்கிறது. அவளுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிப்பதாக அவள் கூறினாள். ஜனங்கள் என்னை விசுவாசிக்குமாறு நான் செய்வேனேயானால், அதாவது இந்த நோக்கத்திற்காகவே நீர் என்னை அனுப்பினீர். ஜெபத்தில் உண்மையாக இருந்தால், ஜெபத்திற்கு முன்பாக எந்த வியாதியும் நிற்க முடியாது என்று நீர் என்னிடம் சொல்லியிருக்கின்றீர். ஓ, தேவனே, பதினொன்றுக்கும் அதிகமான மாநிலங்களில் உம்முடைய வரத்தைப் பற்றி நான் சாட்சி கொடுத்திருக்கிறேன். இப்பொழுது, பிதாவே, நான் ஜெபிக்கிறேன், அதை நீர் அருளும்..?. விசுவாசம் உள்ளவர்களோடு எங்களுடைய சகோதரியானவள், அவள் எண்ணப்படுவாளாக, அவளை விட்டு வெளியே வா, நீர்..?. (ஒலிப்பதிவு முடிவடைகிறது-ஆசி)...?... 272. பரம பிதாவே, இந்த அன்பின் பரிசுத்தவான்களோடு வெளிநாடுகளில் எவ்விதம் நீர் கிரியை செய்தீர் என்பதை நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்..?.. எப்படியாக நீர் அந்த..?. தேவனை விசுவாசிப்பதற்கு தன்னத்தானே தாழ்த்தினார். எங்களுடைய அன்பு சகோதரர், அவர் அருகாமையில் நிற்கையில் நீர் ஆசீர்வதிக்குமாறு நான் ஜெபிக்கிறேன்.?. அவர் தேவையில் இருக்கிறார்..?. தயவு செய்து, ஓ, தேவனே அவர் மீது இரக்கமாயிரும். இயேசுவின் நாமத்தில் அவனை விட்டு வெளியே வா, நீ பிசாசே..?.. இப்பொழுது நீ உன் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறாயா?..?.. 273. வா..?. அது தான் சத்தியமாக இருக்கிறது. நீ சுகமடைய விரும்புகிறாயா, நீ விரும்பவில்லையா? சகோதரன் பிரன்ஹாமுடைய ஜெபத்தை தேவன் கேட்கிறார் என்று நீ விசுவாசிக்கின்றாயா? எல்லாம் சரி. 274. பரமபிதாவே, இந்த அன்பான சிறு பெண் இங்கிருக்கையில்..?. சிறிய நீல நிறக் கண்கள் மேல்நோக்கி பார்த்துக்கொண்டிருகின்றது..?. மேலும் சிரித்துக் கொண்டு..?. அவள் எதற்காகக் கேட்டாளோ, அதை அவள் பெற்றுக்கொள்ளப் போகிறாள் என்று விசுவாசிக்க விசுவாசம் இருக்கிறது. மேலும் இந்த அதிர்வு ..?.. அவள் மேல் இரக்கமாயிருப்பீராக, பிதாவே. இயேசுவின் நாமத்தில் நீ பிசாசே, அவளை விட்டு வெளியே வா. 275. .?.. என் இதயம்...?. எங்கள் பரம்பிதாவே இரக்கமாயிரும் இன்றிரவில் ஒரு அன்பான சிறு பெண் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாள். மேலும் செய்வதற்கு நீர் இங்கு இருக்கிறீர்... (ஒலிப்பதிவு முடிவடைகிறது-ஆசி) நீ விசுவாசி...?... 276. பரம பிதாவே, கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரி, அவள் மீது இரக்கமாயிரும்..?. நீர் சகலத்தையும் அறிந்திருக்கின்றீர்...?.. ஓ...?. சர்வ வல்லமையுள்ள தேவன், உணர்வதற்கு. கர்த்தாவே, மேலும் அவள் சாட்சி கொடுக்கிறான் அவளுடைய..?. நீ பிசாசே..?. அவளை விட்டுவிடு..?.. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென். 277. அன்பின் தேவனே...?.. நான் விசுவாசிக்கிறேன், அவர்கள் என்ன?... இன்றிரவு வேதனைப்பட்டுக்கொண்டிருக்கும் எனது அன்பு சகோதரன், பிதாவே, அவனுடைய ஜீவனை எடுக்க சாத்தான் முயன்று கொண்டிருக்கிறான். அவனுக்காக நான் ஜெபிக்கின்றேன். அன்பின் தேவனே, அவனை ஆசீர்வதியும்..?. அவனை விட்டு வெளியே வா, நீ பிசாசே, இயேசுவின் நாமத்தில்...?.. மேலே மாடியின் உள் உயர் பகுதியில் பார்வையாளர் அமரும் இடத்தில், நீங்கள் உங்கள் தலைகளைத் தாழ்த்தினவர்களாக, தயவு செய்து, அது அவனை விட்டுச் சென்று மேலும் பிறகு உடனே திரும்பி மறுபடியும் அவன் மேல் போய்விடுகிறது. மேலும் அங்கே சிலர் தங்களுடைய தலையை உயர்த்தி இருக்கின்றனர் என்று நான் அறிந்துள்ளேன். அதை செய்யாதீர்கள்..?.. 278. இப்பொழுது, ஒரு சற்று நேரம்...?.. உங்கள் தலைகளைத் தாழ்த்தி உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். 279. பரமபிதாவே, நீர் வாக்குத்தத்தம் செய்திருக்கின்றீர்...?.. ஜனங்கள் சுகமாக்கும்படியாக. அந்த மகத்தான தூதன், தேவனுடைய சுகமாக்கும் தூதனானவர் இந்த வேளையில் பிரசங்க பீடத்தண்டை நின்று கொண்டிருப்பதை நான் உணருகின்றேன். ஆகையால் உங்களுக்குள் இருக்கும் எல்லா விசுவாசத்தோடும்...? ஏனென்றால் என்னுடைய சகோதரனானவர்...?.. எப்படி இந்த பிசாசு, அவன் வந்து ஒரு சரியான காலத்திற்கு முன்பே அவனைக் கல்லறைக்கு அனுப்பமுடியும். அவனை விட்டு வெளியே வா ...?.. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்...?. என்னுடைய கரத்தில் எல்லா அதிர்வுகளும் நின்று விட்டது..?..போ, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக!.?. (அந்த வார்த்தைகள் விளங்கிக் கொள்வதற்கு கடினமாக இருக்கிறது -ஆசி)...?... 280. அது அங்கிருக்குமேயானால் அது அதிர்வடைந்து கொண்டிருக்கும்...? (ஒலிநாடாவில் வெற்றிடம்-ஆசி) என் சகோதரனே, சென்று, விசுவாசி...?... எல்லாக் காரியங்களும் இப்பொழுது இருக்கின்றது?.?. என்னால் பார்க்க முடிகிறது...?... வேதம் வெளிப்படையாகக் கூறி இருக்கிறது...?.. நீ விசுவாசிப்பாயானால், நீ விசுவாசிப்பாயானால் எல்லாக் காரியங்களும் கூடும்.?. ஆயிரத்து தொள்ளாயிரம் வருடங்கள் கடந்து விட்டது, அவர் உன்னதத்திற்கு ஏறி, மனுஷருக்கு வரங்களை அவர் கொடுத்தார், இப்பொழுது இன்னும் அவர் தம்முடைய வரங்களைக் குறித்து சாட்சி கொடுத்துக் கொண்டு இருக்கிறார். ஆகையால் கீழ்ப்படிதலில் அது அதிகாரமளிக்கப்பட்டுள்ளது...?.. நான் இந்த பிசாசைக் கடிந்து கொள்கிறேன், இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அவனை விட்டு வெளியே வா...?... 281. ஒருவேளை நான் ஒரு ஓய்வை அந்த பார்வையாளர்களுக்குக் கொடுக்கிறேன். உங்கள் தலைகளை மேலே உயர்த்துங்கள். உங்களில் சிலர் பார்க்க விரும்புவீர்களேயானால்... என்ன அதிர்வுகளாக இருந்தது என்று நான் விளக்கியதை எத்தனை பேர் கேட்டீர்கள்...?... உங்கள் கரங்களை உயர்த்துங்கள். அந்த வரம் எவ்வாறு வந்தது என்றும், என் கரத்தின் மீதுள்ள அந்த அதிர்வுகள் பற்றியும் இங்கிருக்கிற எத்தனை பேர் புரிந்து கொண்டீர்கள், நான் உங்களுடைய கரங்களை காணட்டும். அது என்னவாக இருந்தது என்று நீங்கள் அனைவருமே பார்த்திருக்கின்றீர்களா..?. (அந்த வார்த்தைகள் விளங்கிக்கொள்வதற்குக் கடினமாயிருக்கிறது- ஆசி) 282. அப்படியாக இந்த மனிதன்...?.. பாருங்கள் அந்த..?.. நான் நினைத்தேன் நான் இருந்தேன்..?.. இங்கே இந்த அதிர்வு. பாருங்கள்? ஆனால் அது இருக்கிறது..?.. இப்பொழுது ஒவ்வொருவரும் உங்கள் தலைகளைத் தாழ்த்தி மேலும் ஜெபியுங்கள்...?... இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். இது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு செல்லமுடியும், ஆகவே உங்கள் தலைகளை தாழ்த்தி வைப்பதை நிச்சயித்துக் கொள்ளுங்கள். 283. பரம பிதாவே, இரக்கமாயிரும், தேவனே, எங்களுடைய நேச சகோதரிக்கு இன்றிரவு சுகமடைவதற்கு, பிதாவே அவளுக்கு ஒரு உரிமை இருக்கிறது. அவளுக்கு, அவளுடைய தேவன் - கொடுத்துள்ள, சுகமாக இருக்கும் சிலாக்கியத்தை, நசரேயனாகிய இரட்சகர் இயேசுவின் மூலமாக உரிமை கோர அவள் வந்திருக்கின்றாள். ஆகையால், பிதாவே உமது ஊழியக்காரனுக்கு விசுவாசத்தைத் தாரும். இப்பொழுது அப்படியே உயர் ஏற ஆற்றலுடையவனாக நான் இருப்பேனாக. மேலே அதற்குள்ளே..?. அந்த விசுவாசம்...?. மேலும் இப்பொழுது இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் உன்னைக் கடிந்துக் கொள்கிறேன். பிசாசே, இவளை விட்டு விலகு...? 284. தயவு செய்து உங்கள் தலைகளை உயர்த்தாதீர்கள் நண்பர்களே. இப்பொழுது, அது இந்தப் பெண்ணை தடுத்துக் கொண்டிருக்கிறது. இது பெண்களின் தொந்தரவுக்குப் பதிலாக அதே நிஜமான, இருக்க வேண்டிய ஒரு புற்றுநோய் ஏனென்றால் அது மிக மிகத் தூண்டப்பட்டுள்ளது. இப்பொழுது உங்கள் தலைகளைத் தாழ்த்துங்கள்..?... நீங்கள் விசுவாசியுங்கள். உங்களுடைய முழு...?.. இயேசு கிறிஸ்துவின் மூலமாக நான் இதைச் செய்ய முடியும் என்று உங்கள் முழு இருதயத்தோடே நீங்கள் விசுவாசியுங்கள், நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் எளிமையாக விசுவாசிக்க வேண்டியதே. நண்பர்களே! அங்கே ஏதோ ஓரிடத்தில் தலைகள் உயர்த்தப்பட்டிருக்கிறது. நண்பர்களே, உங்கள் தலைகளைத் தாழ்த்துங்கள்....... அன்புள்ள பரம பிதாவே, இரக்கமாயிரும் எங்கள் (ஒலிப்பதிவு முடிவடைகிறது - ஆசி). 285. சகோதரன் பிரன்ஹாம், ஒலிநாடாவின் மீது ஏதாவது நிகழ்ந்திருக்கக் கூடுமானால்..?. ஒலி நாடாவின் மீது ஏதாவது நடந்து..?.. அது போன்று, இப்பொழுது உங்களுக்கு ஒன்று இருந்திருக்குமேயானால் என்னவாக இருந்திருக்கலாம்...?.. நீங்கள் பாருங்கள். சில வேளைகளில் நான் அப்படியாக ஆச்சரியமடைவதுண்டு. நான் உங்களுடைய வீடுகளுக்குச் செல்ல விரும்புகிறேன். ஆனால் நான்...?.. சிலவேளைகளில் பின்பாக அங்கே சில நபர் மரித்துக்கொண்டும் ஒரு விமானத்தை வாடகைக்கு அமர்த்தி என்னை வருமாறு...?. திடீரென்று ஒரு பெண் என்னை அழைத்துக்கொண்டு... மிசவுரியிலிருந்து தொடர்ந்து தொலைபேசியிலும், தொலை பேசியின் அருகாமையில் கீழே முழங்கால் படியிட்டு தொலைபேசி மூலமாக அழுது கொண்டும், ஜெபிப்பதற்காக என்னை கெஞ்சிக்கொண்டும்...?.. தொலைபேசி மூலமாக அதைப்போன்று, தொலைபேசியில் கேட்கின்ற மற்றும் பேசுகின்ற பாகத்தை அவளுக்காக கீழே வைக்காமல்...?... ஒரு விமானத்தை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு பின்பாக மிசவுரிக்கு, அங்கே மரித்துக்கொண்டிருக்கும் ஒரு சிறு குழந்தைக்காக திடீரென வரவேண்டும்...?... (ஒலி நாடாவில் கீறல்கள்-ஆசி) 286. என்னே , அது பரிதாபமாக இருக்கிறது. ஆனால் ஒரு நபர் என்ன செய்ய முடியும் - என்ன செய்ய முடியும்? அது உங்களை, உங்களுடைய சிந்தையை சிந்திப்பதை இழக்கச் செய்யலாம்...?. ஒவ்வொரு இடத்திலிருமிருந்தும் காரியங்கள் இவ்வாறாக வந்து கொண்டிருக்கிறது. 287. நான் என் மனைவியிடம் பேசிக்கொண்டிருந்த போது, அது மக்களின் முக்கிய பிரச்சினைகள் மற்றும் ஒவ்வொரு காரியமுமாய் இருக்கிறது என்று கூறினார்கள். ஓ என்னே! பதினைந்தாயிரம் கடிதங்கள் மக்களிடமிருந்து பத்து நாட்கள் காலத்தில் எனக்கு வந்திருக்கிறது.....(ஒலி நாடாவில் கீறல்கள்-ஆசி) 288. இப்பொழுது, இச்சிறுமி பார்வையற்றவளாய் இருக்கின்றாள். அவளுடைய கரத்தில் அதிர்வுகள் இல்லை . அவள் முடமாகவும் இருக்கின்றாள். மேலும் இருப்பினும் அது எந்த அதிர்வுவையும் ஏற்படுத்தவில்லை . சாதாரண ஒரு வியாதிக் கிருமியே. இப்பொழுது நான் அப்படியே விசுவாசிக்க வேண்டும்...?. (ஒலி நாடாவில் கீறல்கள்-ஆசி) தேவன் அவளை சுகமாக்குவார் என்று நான் விசுவாசிக்கிறேன்...?... நீ அதை விசுவாசிக்கின்றாயா? இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், நான் சொல்கிறேன்...?.. நான் விரும்பவில்லை ...?...நீ..?... தேவன் நம்மோடு பேசுவார்...?... இரவுகளில் சில காரியங்களின் சாட்சிகளைக் கொடுக்கலாம் என்று சபையிடம் நான் சொல்ல வேண்டும். 289. இப்பொழுது, உங்கள் தலைகளைத் தாழ்த்தி வைத்துக்கொள்ளுங்கள். மேலும் என் முழு இருதயத்தோடும் நான் தேவனிடம் கேட்பேன்... நான் ஒரு சுகமளிப்பவன் அல்ல. அது தேவனாய் இருக்கிறது. 290. சிறு பெண்ணே , நீ இயேசுவை நேசிக்கின்றாய், அவ்வாறு நீ இல்லையா, அன்பே? நல்லது. உனக்குப் பார்வை மீண்டும் உண்டாக்கும்படியாகவும் உன்னை நடக்க வைக்கவும் நான் இயேசுவைக் கேட்கப் போகிறேன்...?. அன்பின் இயேசுவே, அந்த..?... குமாரன், இந்தச் சிறு குழந்தையின் மீது உம்முடைய தெய்வீக ஆசிர்வாதங்களை அனுப்பும், மேலும் இப்பொழுதும் குருடாயிருக்கிற அவளது கண்கள், அவைகள் திரும்பவும் பார்க்கட்டும். இப்பொழுதும் முடமாக இருக்கிற இந்த சரீரமானது திரும்பவும் சுகமடைவதாக. உம்முடைய நேச குமாரன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நீர் அதை அருளும்படி நான் ஜெபிக்கின்றேன், பிதாவே. முடிகிறதா..?.. அந்த வெளிச்சங்களைப் பார்...?... அதைப்பார்? இப்பொழுது, அங்கே வெளியே பார்... இப்பொழுது மேல்நோக்கி பார்...?... அங்கே மேலே பார்? அதைப்பார்? இங்கே மேல் இருக்கும் நிழலைப் பார்? 291. எல்லாம் சரி. உங்கள் தலைகளை நீங்கள் உயர்த்தலாம் (ஒலிப்பதிவில் கீறல்கள் - ஆசி).... ஒரு பக்கமோ அல்லது இருபக்கமோ வளைந்த பரப்பைக் கொண்ட கண்ணாடிகள் மற்றும் எல்லாமே பரிபூரணமாக அப்படியே மேலே உள்ளடக்கியதோடு போல...?.. ஆனால் அங்கே போதுமான சுருக்கம் இருக்கிறது. எல்லாமே மரிக்கும் போது அது சுருக்கமடைகிறது. அது சரியாக இருக்கிறது? அறையினுள்ளே வெளிச்சங்களையும் அவளது முகத்திற்கு முன்பாக இருக்கும் எனது கரத்தையும் அவள் பார்க்க முடிகிற வரையிலும் அங்கே அந்தக் குழந்தையின் கண்களில் போதுமான சுருக்கம் இருக்கிறது.... இந்த வழியாகப் பார். (ஒலிநாடா பதிவு கீறல்களாகவும் தெளிவற்றும் உள்ளது-ஆசி) 292. “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்று நாம் அனைவரும் சொல்லுவோமாக...?.. ஓ, என்னே!..?... இப்பொழுது. நாம் அவளது சாட்சியை பத்திரிகையில் போடப்போகிறோம். அவள் பார்க்கப்போகிறாள். அவ்வாறு நீங்களும் பார்க்க முடியும். அவளது பெயர் என்ன சகோதரி? ரோன்னா மே பிராமிஸ், பத்திரிகையில் அதைப் பாருங்கள்..?.. 293. உங்களுடைய புற்று நோய்கள்...?. எல்லாம் சரி. இப்பொழுது எத்தனை பேர் விசுவாசிக்கின்றனர்? தேவன் உங்கள் இருதயங்களை ஆசீர்வதிப்பாராக!.?. 294. இப்பொழுது இங்கு ஒரு செவிடும் - ஊமையுமாக இருக்கிறது. அங்கே ஒரு அதிர்வு கிடைத்திருக்கிறது..?... அவளுடைய கையினுள் எல்லாம் சரி. உங்கள் தலைகளை வணங்குங்கள். ஒவ்வொருவரும். இப்பொழுது இங்கே ஒரு அதிர்வு இருக்கிறது. அது எந்த விதத்தில் என்று இதை நான் கூற முடியும்...?.. (ஒலிநாடாவில் வெற்றிடம்- ஆசி) .... உங்களுடைய அடையாளத்தை அதன் மேல் வையும்...?.. விசுவாசமுள்ளவர்களாக இருப்பதற்கு. அப்படியே அதை விசுவாசிப்பதற்கு என் சொந்த விசுவாசம். இப்பொழுது எல்லா இடங்களிலுமே உங்கள் தலைகள் தாழ்த்தப்பட்ட நான் விரும்புகிறேன். 295. இந்தப் பார்வையாளர்களில் எத்தனை பேர் இயேசுகிறிஸ்துவின் மூலம் நான் அதை செய்ய முடியும் என்று விசுவாசிக்கின்றீர்கள். உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா? எல்லாம் சரி. எல்லாம் சரி. விசுவாசிப்பதற்கு அந்த அனேகர் அங்கே இருப்பீர்களானால் தேவனுடைய மகிமையை நீங்கள் காண்பீர்கள். எல்லா இடங்களிலும் உங்கள் தலைகள் வணங்கி இருக்கட்டும். 296. (ஒலிநாடாவில் வெற்றிடம்- ஆசி) 297. நீங்கள் எங்களிடம் கூறவேண்டியதில்லை . நண்பனே அது அறியப்பட்டே இருக்கிறது. அங்கே தேவனிடம் இரகசியம் இல்லை . மேலும் அவர் தமது இரகசியங்களை தம்முடைய ஊழியக்காரர்களுக்கு வெளிப்படுத்துவார். செய்யப்பட்ட காரியங்களையும், வழக்கங்கள் மற்றும் காரியங்களையும் நீங்கள் பார்த்திருக் கின்றீர்கள். கொஞ்ச நேரத்திற்கு முன்பாக ஒரு பழக்கத்தை உடையவராக இருந்த ஒரு நபர் அங்கே மரித்துப் போய் விட்டார். நான் அந்த நபரைப் பார்த்த போது, நான் அதை வெளியே அழைக்க விரும்பவில்லை. பால்வினை நோய் அல்லது பழக்கங்கள். நான் அதைச் செய்வதில்லை. நீங்கள் புரிந்துக்கொள்ளுங்கள் நான், என்னை செய்ய நீங்கள் விரும்பினால் அன்றி. நீங்கள் என்னிடம் கேட்டு அறிய விரும்பினால்... நிச்சயமாக நீங்கள் செய்த உடனே, நான் அந்த அதிர்வை உணர்ந்தேன்...?... அவளுடைய காதுகளில் உள்ளே அடைப்பு. 298. இப்பொழுது, நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் தலையைத் தாழ்த்துங்கள். மெய்யான அன்போடும் மேலும் அமைதலோடும் மேலும் அப்படியே பயபக்தியோடும் இருப்பீர்களாக, மேலும் நீங்கள் தேவனுடைய மகிமையைக் காண்பீர்கள். 299. பரம பிதாவே, ஓ, இந்தப் பட்டணத்திற்குள்ளாக உடனே ஓடி வந்து மேலும் உடனே வெளியேற வேண்டும். மேலும் அது மேம்போக்காகப் பார்க்கையில்...?.. அவர்கள் விசுவாசிக்க ஆரம்பிக்கும் ஒரு இடத்திற்கு, குறிப்பிட்ட நேரத்தில் ஜனங்களை நாங்கள் கொண்டுவந்து மேலும் காரியங்களைச் செய்யவேண்டும். பிறகு மறுபடியும் நாங்கள் பிரிய வேண்டும். இந்த விதமாக மறுபடியும் எங்களைத் திரும்ப அனுப்புவது தகுதியாய் இருக்க நீர் பார்க்குமாறு நான் ஜெபிக்கிறேன். 300. இப்பொழுது, இங்கே எனக்கு முன்பாக நின்று கொண்டிருக்கும், இந்த மனிதன் நின்றுகொண்டிருக்கிறார், மேலும் சாத்தனானவன் அவன் காதுகளை அடைத்து ஒரு வாகனத்திற்கு முன்பாகவோ அல்லது சில நேரங்களில் ஏதோ ஒன்றுக்கு முன்போ நடந்து செல்ல வைத்து, அவன் கால்களில் கொன்று போட்டு, ஓ, இந்த ஏழை சகோதரனுக்கு தீங்கைச் செய்ய முயற்சித்தான். ஆனால் அவனை சுகமாக்குவதற்கு நாங்கள் இங்கிருக்கின்றோம். பிதாவே, 301. இப்பொழுது, நான் உம்முடைய தேவனுடைய தூதனின் சந்திப்பை பற்றி இன்றிரவு ஜனங்களிடம் நான் பேச வேண்டும். இந்த விசுவாச வரிசையானது தொடங்குவதற்கு முன்பாக இப்பொழுது நீர் அவர்களுடைய கண்களுக்கு முன்பாக இதைப் உறுதிப்படுத்துவீராக... — Preceding unsigned comment added by Dkdavid80 (talkcontribs) 18:30, 8 April 2020 (UTC)