Talk:Myladi, Tamil Nadu

FAMOUS CHURCH IN MYLAUDY, வரலாற்று நோக்கில் மயிலாடி ஆலயம் edit

CHURCH HISTORY edit

கன்னியாகுமரி மாவட்ட சீர்திருத்தச் சபையின் (Protestant) முதல் நற்செய்தியாளர் (Missionary) ஜெர்மன் நாட்டைச் சார்ந்த அருள்திரு.உல்லியம் தொபியாஸ் றிங்கல்தௌபே அவர்கள். முதல் கிறிஸ்தவர் மயிலாடியைச் சார்ந்த மகராசன் வேதமாணிக்கம் தேசிகர். இவர்கள் இருபேறும் மாறுபட்ட பெருமைகளை உடையவர்களாக இருந்த போதிலும் நோக்கம் ஓன்றாகவே காணப்பட்டது. இறைவன் இவர்கள் இருவரையும் இரண்டு மாறுபட்ட பின்னணிகளிலிருந்து ஓரே நோக்கத்திற்காகத் தெரிந்தெடுத்து அழைத்தார். இவ்விருவரும் இணைந்து இறை தொண்டாற்றிய பணித்தளமே மயிலாடி.

“1805 ஜுலை மாதம் வேதமாணிக்கம் தேசிகர் கோலப் ஐயரின் உதவியால் தரங்கம்பாடியில் தங்கியிருந்த றிங்கல்தௌபே போதகரைச் சந்தித்தார். வேதமாணிக்கம் தேசிகரது அழைப்பினை ஏற்றுக்கொண்டு 1806 பிப்ரவரி முதல் நாள் தரங்கம்பாடியிலிருந்து புறப்பட்டு ஏப்ரல் 25 ஆம் நாள் வெள்ளிக் கிழமை 6.00 மணியளவில் மயிலாடி வந்தடைந்தார். முதல் ஞாயிறு ஆராதனை வேதமாணிக்கம் தேசிகரின் வீட்டில் நடைப்பெற்றது.”
 Church History of Travancore - C.M Agoor

மயிலாடியில் ஆலயம் கட்ட றிங்கல்தௌபே முயற்சி செய்கையில் திவான் வேலுத்தம்பி எதிர்ப்புத் தெரிவித்தாலும் கர்னல் மெக்காலே உதவினார்.1807 மார்ச் மாதம் மயிலாடியில் நாற்பது விசுவாசிகளுக்கு றிங்கல்தௌபே ஞானஸ்நானம் கொடுத்தார். பின்னர் நடந்த வேலுத்தம்பி கலகத்தின் போது றிங்கல்தௌபே பாளையங்கோட்டை சென்று ஊழியம் செய்து வந்தார். கலகம் தீர்ந்த பின் மயிலாடி திரும்பினார்.

மீண்டும் 1809 மார்ச் மாதத்தில் றிங்கல்தௌபே கொல்லம் சென்று கர்னல் மெக்காலேவைச் சந்தித்து செய்த முயற்சியின் பயனாக ஏப்ரல் மாதம் அரசு அனுமதி கிடைத்தது. றிங்கல்தௌபே அனுமதிசான்றிதழை வேதமாணிக்கம் தேசிகரிடம் காண்பித்து ஆலயம் கட்ட இடம் பார்க்கும்படிக் கூறினார்.வேதமாணிக்கம் தேசிகர் பூவும் காயும் நிறைந்த நமது எள்ளுப்பயிர் விளையும் இடத்தைத் தர முன்வந்தார்.

அறுவடைக்குப்பின் ஆலயம் கட்டலாம் என்ற றிங்கல்தௌபேயின் கருத்தை வேதமாணிக்கம் தேசிகர் ஏற்றுக்கொள்ள மறுத்தார். ஆலயம் கட்டும் இடத்தை இலவசமாகப் பெறhது சிறிய விலை கொடுத்து றிங்கல்தௌபே வாங்கினார். தற்போது ஆலயம் இருக்கும் இடமும் அதைச் சுற்றிய நிலமும் வேதமாணிக்கம் தேசிகருக்கும், ஆலயத்தின் தென்பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த களஞ்சியமும் அதற்கடுத்துள்ள கிறிஸ்தவர்களின் குடியிருப்புக்களும் முதல் திருமுழுக்குப் பெற்றவருள் ஓருவரான ஞானமுத்து அவர்களுக்கு உரிமையானவை.

1809 மே மாதம் அருள்திரு றிங்கல்தௌபே தென்திருவிதாங்கூரின் முதல் சீர்திருத்தச் சபை ஆலயத்திற்கு மயிலாடியில் அடிக்கல் நாட்டினார். ஆலயப்பணி நடந்து கொண்டிருக்கும்போது பல வகைகளில் தடுக்க நினைத்த தாசில்தாருக்குப் பல பொருட்களைக் கொடுத்து வேதமாணிக்கம் தேசிகர் நயப்படுத்தினார். மயிலாடி மக்கள் பகலில் அன்றாடப் பணி முடிந்த பின்னர் இரவில் ஆலயம் கட்டடத்திற்காக உழைத்தனர். ஆலய வேலைகள் விரைவாக நடத்தப்பட்ட படியால் நான்கு மாதத்திற்குள் வேலை முடிவடைந்து செப்டம்பர் மாதம் திருத்திறப்பு (பிரதிஷ்டை) செய்யப்பட்டது. அன்று நடைப்பெற்ற நற்கருணை ஆராதனையிலும் திருத்திறப்பு செய்த றிங்கல்தௌபே போதகரால் சிலருக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது.

அன்றைய ஆலயத்தின் நீளம் 40அடி. அகலம் 12அடி. இவ்வாலயம் தற்போதைய ஆலயம் இருக்குமிடத்திலேயே இருந்தது

றிங்கல்தௌபே ஆலயத்தின் அருகில் தென்பக்கம் தாம் தங்குவதற்கு ஓரு சிறிய வீட்டையும் கட்டினார். பத்து அடி நீளமும் ஆறு அடி அகலமும் கொண்ட இச்சிறுவீடு வசதியில்லாமல் இருந்ததானால் இருபத்தி ஆறு அடி நீளமும் பதிமூன்று அடி அகலமும் உள்ள வீட்டைப் போதகர் பின்னாளில் கட்டினார். குளியலறை மட்டும் 13x4 அடி அளவிலானது. அகழ்வாய்வின் மூலம் இவ்வீடிருந்த இடத்தைக் கண்டு பிடித்தவர் அருள்திரு.ஜான். A.ஜேக்கப் அவர்கள்.

போதகரின் வீடிருந்த இடத்திலேயே கன்வென்ஷன் மேடை கட்டப்பட்டு ஞாபகச் சின்னமாக விளங்குகிறது. இம்மேடை அதிஉயர் மறைத்திரு. I.R.H ஞானதாசன் அவர்களால் 1962,ஆகஸ்டு 17 ஆம் நாள் அடிக்கல் நாட்டப்பட்டு 1963 ஏப்ரல் 25 ஆம் நாள் அவர்களாலேயே திருத்திறப்பும் செய்யப்பட்டது. இம்மேடையின் வடபாகத்தில் றிங்கல்தௌபே போதகர் பயன்படுத்திய குளியலறைக்கல் பதிக்கப்பட்டுள்ளது. இம்மேடை றிங்கல்தௌபே போதகர் வீடிருந்த இடத்தை நாளும் நினைவுபடுத்துகிறது. அதே ஆண்டில் ஆலயத்தின் கிழக்கே சுமார் 700 அடி தொலைவில் தென்திருவிதாங்கூரின் முதல் ஆங்கிலப் பாடசாலையை நிறுவினார். தென் திருவிதாங்கூரின் இலண்டன் மிஷன் சங்கத் தலைமையிடமும் மயிலாடியிலேயே இருந்தது. இவை இரண்டும் 1818 ஆம் ஆண்டிற்குப் பிறகு மீட் (Mead) ஐயரால் நாகர்கோவிலுக்கு மாற்றப்பட்டன.

ஆண்டுகள் பலசென்றபின் கிறிஸ்தவ மக்களின் எண்ணிக்கை அதிகமானதால் முதல் முதலாகக் கட்டப்பட்ட ஆலயத்தில் இடநெருக்கடி ஏற்பட்டது. பின்னர் ஆலயத்தின் பின்பகுதி சிறிது விரிவுபடுத்தப்பட்டது. பல ஆண்டுகள் கழித்து மீண்டும் இடநெருக்கடி ஏற்பட்டதன் காரணமாக அவ்வாலையம் முற்றிலும் இடிக்கப்பட்டு அதே இடத்தில் புதிய ஆலயம் கட்டப்பட்டது. ஆண்டுகள் பலசென்றபின் மீண்டும் இடநெருக்கடி ஏற்பட்டதன் காரணமாக அருள்திரு.E.ஞானதாசன் அவர்கள் (இவர் முன்னாள் பிரதமப் பேராயர் அதிஉயர் மறைத்திரு I.R.H.ஞானதாசன் அவர்களின் தந்தையார்) சபை போதகராக ஊழியம் செய்யும்போது ஆலயத்தின் பின் பகுதி சிலுவை வடிவில் விரிவாக்கப்பட்டது. 1932 டிசம்பர் 17 ஆம் நாள் அருள்திரு.ஜான். A.ஜேக்கப் அவர்கள். அவர்களால் திருத்திறப்பு செய்யப்பட்ட அவ்வாலயத்தின் படத்தை றிங்கல்தௌபே – வேதமாணிக்கம் நினைவு கன்வென்ஷன் வெள்ளி விழா மலரில் (1965) காணலாம்.

முப்பத்திமூன்று ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் போதிய இடவசதியின்மையால் அவ்வாலயத்தை நடுவில் வைத்துக்கொண்டு புதிய ஆலயம் கட்டத் தீர்மானித்தனர்.

1966 மே மாதம் 13 ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் காலம் சென்ற பிரதமப் பேராயர் அதிஉயர் மறைத்திரு I.R.H.ஞானதாசன் அவர்கள் சிலுவை வடிவ புதிய ஆலயத்துக்கான அடிக்கல் நாட்டினார். இப்புதிய வடிவ ஆலயம் 120 அடி நீளமும் 45 அடி அகலமும், சிலுவை வடிவின் ஓவ்வொரு கைப்பக்கமும் 3 அடி நீளமும் 19 அடி அகலமும் உடையது. கால் நு}ற்றhண்;டாகப் பல்வேறு அன்பர்களின் ஆதரவால் கட்டி முடிக்கப்பட்ட இவ்வாலயம் 1991 செப்டம்பர் 27 ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் பேராயர் உயர்அருள்திரு G.கிறிஸ்துதாஸ்,M.A., B.D., அவர்களால் திருதிறப்பு செய்யப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட சீர்த்திருத்த்ச்சபை கிறிஸ்தவர்களுக்கு மட்டும்மன்றி தென் கேரளக் கிறிஸ்தவர்களுக்கும் இந்நாள் ஓரு நன்னாள்.-

கிறிஸ்துவை நமக்குத் தந்தவர் - றிங்கல்தௌபே edit

அருள்நாதர் இயேசுகிறிஸ்துவைப் பற்றி உலகமெங்கம் பரப்புவதற்காக அப்போஸ்தலர்களுக்கும், அவர்களைத் தொடர்ந்து நற்செய்தியாளர்களும் தங்களது வாழ்வை அர்பணித்துக் கொண்டு பல சபைகளைத் தோற்றுவித்தனர் அவர்களுள் ஓருவர் நமது மறைமாவட்டத்திற்கு (தென் திருவிதாங்கூர்) முதன் முதலாக வந்த மணிப்புறா என்ற பொருளையுடைய பெயர் கொண்ட அருள்திரு. உல்லியம் தொபியாஸ் றிங்கல்தௌபே என்பவராவார். அவரது வரலாற்றுச் சுருக்கம் இங்கே தரப்படுகிறது.

பிறப்பும் இளமையும் edit

தென் திருவிதாங்கூரில் அப்போஸ்தலன் என அழைக்கப்படும் இவர், 1770 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8 ஆம் நாள் ஜெர்மன் தேசத்தில் புருசியா மகாணத்திலுள்ள சிலிசியா நாட்டில் பிரக் நகரத்திற்கு அருகிலுள்ள சீடல்உயிட்சு என்ற கிராமத்தில் பிறந்தார். தந்தையார் பெயர் கோற்றலேப் றிங்கல்தெபே, தம்பியின் பெயர் எர்னஸ்ட், தங்கை பெயர் அன்னாசென். வார்சா பட்டணத்தில் ஓன்பது ஆண்டு காலம் தமது இளமைக் கல்வியைக் கற்றார்.

நற்செய்திப் பணிக்கு அழைப்பு edit

தமது 18 ஆம் வயதில் நண்பர்களின் உரையாடல் மூலம் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு நற்செய்தியாளராகச் (Missionary) செல்ல விரும்பினார். எனவே, டென்மார்க் நாட்டிலுள்ள ஹாலே எனும் பல்கலைக்கழகத்தில் இறையியல் படித்தார். ‘கீரீன்லாந்து மிஷன் சரித்திரம்’ என்ற நூல் அவரது உள்ளத்தை தொட்டது. நியூட்டனது வாழ்க்கை வரலாற்றைப படித்தப்பின் கடவுளுக்ககாக எத்தியாகத்தையும் செய்ய 1792 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆயத்தமானார். றிங்கல்தௌபேயின் பக்தி பலரைக் கவர்ந்தது.

திருமறைத் தேர்வில் தேர்ச்சி பெற்று 1796 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 24 ஆம் நாள் சுகிமிட் என்பவரால் வெர்ணிசிரோட் என்னும் இடத்திலுள்ள தேவாலயத்தில் வைத்து லுத்தரன் சபைப் போதகராக அபிஷேகம் பெற்றார். அன்று அவர் செய்த முதல் பிரசங்கம் “யோவானின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன், ஆம் ஆண்டவரே உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர் என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார்”. (யோவான் 21-15) என்பதாகும்.

முதல் பயணம் - கல்கத்தா edit

கிறிஸ்தவக் கல்விச் சங்கத்தார் முலம் போதகரவர்கள் 1797 ஆம் ஆண்டு ஜுலை மாதம் ‘பிரண்ட்சிப்’ என்ற கப்பலில் புறப்பட்டு அக்டோபர் மாதம் கல்கத்தாவில் வந்திரங்கினார். அங்கு அவர் போர்த்துக்கீசிய நாட்டவருக்கும், பிற ஐரோப்பியர்களுக்கும் ஊழியம் செய்ய வேண்டியிருந்தது .ஆனால் போதகர் றிங்கல்தௌபேயின் விருப்பம் கிறிஸ்துவை அறியாத மக்களுக்கு நற்ச்செய்தியை அறிவிக்க வேண்டும் என்பதே. பின்னர் ராஜ்மகால் மலைப்பிரதேசத்திற்கு ஊழியம் செய்யச் சென்றார்.பணமில்லாமை, நோய், தங்க இடம் கிடைக்காமை போன்ற காரணங்களால் ஊக்கம் இழந்து 1799 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்குத் திரும்பினார். கடவுள் மயிலாடியை இவரது பணிதளமாகத் தேர்ந்தெடுத்தால் தான் கல்கத்தாவில் போதகர் அதிக நாட்கள் தங்கவில்லைபோலும்.

இரண்டாம் பயணம் - தரங்கம்பாடி edit

ஐந்து ஆண்டு இடைவெளிக்குப்பின 1804 ஆம் ஆண்டு 10 ஆம் நாள் டென்மார்க் நாட்டிலுள்ள கோபன்கேசன் என்னும் துறைமுகத்தில் இருந்து ‘கிறெளன் பிரின்சசு மேரியா’ என்ற கப்பலில் புறப்பட்டு டிசம்பர் மாதம் 4 ஆம் நாள் தரங்கம்பாடி வந்தடைந்தார். ஓராண்டு காலம் இங்கு தங்கி ஜாண் சாஸ்திரியிடம் தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டார்.

மகராசன் வேதமாணிக்கம் தேசிகரின் அழைப்பு edit

தென் திருவிதாங்கூரின் முதல் கிறிஸ்தவர் என அழைக்கப்படும் மகராசன் வேதமாணிக்கம் அவர்கள் கோலப் ஐயரால் ஞானஸ்நானம் பெற்று, தரங்கம்பாடியில் இருந்த போதகர் றிங்கல்தௌபேயை தமது ஊரான மயிலாடிக்கு ஊழியம் செய்ய அழைத்தார்.

அழைப்பை ஏற்றுக்கொண்டு 1806 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் நாள் புறப்பட்டார். வரும் வழியில் தூத்துக்குடியில் உள்ள டச்சுக்காரரின் ஆலயத்தில் முதன் முதலில் தமிழில் பிரசங்கம் செய்தார். பிரசங்க வசனம், “நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர் தாமே நம்முடைய ஆவியுடனே சாட்சி கொடுக்கிறார்” (ரோமர் 8:16)

மயிலாடியில் றிங்கல்தௌபே edit

1806 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் நாள் வெள்ளிகிழமை அன்று மாலை 6 மணி வேளையில் போதகர் மயிலாடியை வந்தடைந்தார். 27 ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை வேதமணிக்கம் தேசிகரின் வீட்டில் ஆராதனை நடத்தினார். மயிலாடியில் ஆலயம் கட்ட றிங்கல்தௌபே விருப்பம் கொண்டதற்கு திவான் வேலுத்தம்பி எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், கர்ணல் மெக்காலே இதற்கு உதவி புரித்தார். 1807 ல் ஆம் ஆண்டு மார்ச் மாதம் மயிலாடியில் 40 பேர் ஞானஸ்நானம் பெற்றனர். வேலுத்தம்பியின் கலகத்தால் மயிலாடி கிறிஸ்தவர்களுக்கு பல பிரச்சனைகள் தலை தூக்க ஆரம்பித்தன. கலகத்தின் போது வேதமாணிக்கம் தேசிகர் மருந்துவாழ் மலையிலும், பர்வதா மலையிலும் மறைந்திருந்தார். றிங்கல்தௌபே பாளையங்கோட்டையில் ஊழியம் செய்து வந்தார். கலகம் முடிந்தவுடன் ஆலயம் கட்ட அனுமதி வாங்குவதற்காக அலைந்தார்.

முதல் ஆலயமும் பாடசாலையும் edit

ஆலயம் கட்ட அனமதி கிடைத்தவுடன் மயிலாடியில் 1809 ஆம் ஆண்டு மே மாதத்தில் தென் திருவிதாங்கூரின் முதல் சீர்திருத்த சபை (Protestant) ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார். நான்கு மாதத்திற்குள் ஆலயம் கட்டப் பட்டு செப்டம்பர் மாதம் றிங்கல்தௌபே ஆலயத்தை பிரதிஷ்டை செய்தார். ஆலயத்தின் நீளம் 40 அடி, அகலம் 12 அடி, றிங்கல்தௌபே ஆலயத்தின் அருகில் தெற்குப் பக்கம் தாம் தங்குவதற்கு ஓரு சிறிய வீட்டையும் கட்டினார். இவ்விடம் தற்போது ஞாபக சின்னமாக விளங்குகிறது

அதே ஆண்டு ஆலயத்தின் கிழக்கே சுமார் 700 அடி தூரத்தில் ஆங்கிலப் பாடசாலையை நிறுவினார். இதுவே தென் திருவிதாங்கூரின் முதல் ஆங்கிலப் பாடசாலையாகும். இப்பாடசாலையாகும். இப்பாடசாலையின் ஓரு பகுதியில் மருத்துவமனையும் ஏற்படுத்தினார். அதுமட்டுமன்றி தென் திருவிதாங்கூருக்கு உரிய லண்டன் மிஷன் சங்கத் தலைமையிடம் மயிலாடியில் தான் இருந்தது. ஆங்கில பாடசாலை, சங்கத் தலைமையிடம் போன்றவை 1818 ஆம் ஆண்டிற்குப் பின் மீட் ஐயரால் நாகர்கோலுக்கு மாற்றப்பட்டன.

நிறுவிய பிற சபைகளும் பாடசாலைகளும் edit

1810 ஆம் ஆண்டின் பல்வேறு மாதங்களில் பிச்சைகுடியிருப்பு (ஜேம்ஸ் டவுன்), தாமரைகுளம், புத்தளம், ஆத்திக்காடு (சீயோன்புரம்), கோயில்விளை, ஈத்தாமொழி ஆகிய இடங்களில் சபைகளையும், இதனுடன் பாடசாலைகளையும் நிறுவினார்.1813 ஆம் ஆண்டு அனந்தநாடார் குடியிருப்பில் ஓரு சபையை நிறுவினார். ஆனால் இங்கு பாடசாலை நிறுவவில்லை . அனைத்தும் சபைகளையும் ஐயரவர்களையும் அடிக்கடி நேரில் சென்று மேற்பார்வை செய்து வந்தார்.

மயிலாடியில் மக்கள் பெற்ற பயன் edit

மயிலாடி மக்களுக்குப் பயன்தரும் வகையில் ஆலயத்தின் தெற்குப் பக்கம் ஓரு கிணறும், சற்று தூரத்தில் ஒரு குளமும் வெட்டித் தண்ணீர் பிரச்சனையைத் தீர்த்து வைத்தார். குளத்தின் அருகாமையில் சில வயல்களையும் வெட்டிச் சீர்திருத்தினார். ஏழைகளுக்குத் தமது ஆடையைக் கொடுத்தார், நோயுற்றவர்களுக்கு இலவசமாக மருந்து கொடுத்தார், பல அடிமைகளுக்கு தமது சொந்தப் பணத்தைக் கொடுத்து விடுதலை வாங்கிக் கொடுத்தார். கிறிஸ்து பிறப்புப் பண்டிகையின்போது அனைத்து சபையிலுள்ள மக்களுக்கும் மயிலாடியில் வைத்து உணவு கொடுத்தார்.மக்கள் மேல் கடுமையாகச்சுமத்தப்பட்டிருந்த பல வரிகளை நிறுத்த உதவினார்.

றிங்கல்தௌபே செய்த அற்புதங்கள் edit

போதகரவர்கள் 1806 ஆம் ஆண்டு முதல் 1809 ஆம் ஆண்டு வரை மயிலாடியிலிருந்து பாளையங்கோட்டைக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். அவ்வாறு சென்று வரும்போது தாக மிகுதியால் கோழிக்கோட்டுப்பொத்தை என்ற இடத்தில் உள்ள பாறையில் தேங்கியிருந்த தண்ணீரை முழங்கால் ஊன்றி ஜெபம் பண்ணிவிட்டு கைகளால் அள்ளிக் குடித்தார். பின்பு அது ஒரு நீருற்றhக அன்று முதல் மாறியது.

போதகர் 1810 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25 Nம் நாள் அம்மாண்டி விளையில் மக்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்த போது, தம் அருகில் வந்த ஒரு குழந்தையை எடுத்து வைத்துக்கொண்டு கீழே விட்டார். உடனே அக்குழந்தை நடந்து சென்றது. அங்கிருந்தவர்கள் கால் ஊனமுடைய குழந்தை ஐயரவர்களிடம் இருந்து கீழேயிறங்கியவுடன் நடந்து செல்கின்றது என ஆச்சரியப்பட்டனர். அக்குழந்தையின் கால் ஊனமுடையது என பின்னர்தான் போதகருக்குத் தெரிந்தது.

கொடிய பஞ்சம் 1813 ஆம் ஆண்டு ஏற்பட்டது. பல மாதங்களாகப் பஞ்சம் நீடித்தது. மயிலாடியில் உள்ள தமது வீட்டினுள் சென்று ஊக்கமாக ஜெபித்துவிட்டு வெளியே வந்து வானத்தைப் பார்த்தார். உடனே மழை பெய்தது. அனைவரும் போதகரின் ஜெப வல்லமையை நேரில் கண்டு வியந்தனர்

றிங்கல்தௌபே அடைந்த துன்பங்கள் edit

நமது அறியாமை எனும் இருளை அகற்றுவதற்காக றிங்கல்தௌபே பற்பல துன்பங்களை அடைந்தார். மூன்று ஆண்டு காலமாக மயிலாடியில் ஆலயம் கட்ட அனுமதி வாங்கக் கஷ்டப்பட்டார். உடல் உபாதைகளால் அதிகமாகத் துன்பப் பட்டார். நோய்கள் அடிக்கடி வந்ததால் உடம்பில் வலிமை இழந்து காணப்பட்டார். சிறந்த சத்தான ஆகாரமின்றி, நல்ல வசதிகள் இன்றி, நல்ல ஆடைகள் இன்றி எளிய வீட்டில் வாழ்ந்து, சாதாரண வைக்கோல் தொப்பியைத் தலையில் அணிந்து நடந்து திரிந்து நற்செய்தியைப் பரப்பினார்.

சொந்த நாட்டுக்குப் புறப்படுதல் edit

1816 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் நாள் அனைத்து சபை மக்களையும் மயிலாடிக்கு அழைத்து வந்து தமது சொந்த நாட்டிற்குச் செல்லும் விருப்பத்தைத் தெரிவித்து, பொறுப்பை வேதமாணிக்கம் தேசிகரிடம் கொடுத்து விட்டு பெப்ரவரி மாதம் 5 ஆம் நாள் கொல்லத்தில[ருந்து சென்னைக்குக் கப்பலேறினார். கப்பல் மணக்குடி வந்தவுடன் தமது வீட்டுச் சுவரில் எழுதியிருந்த கடன் பாக்கியைப பற்றிய நினைவு வரவே மாலுமியிடம் மன்றhடி கப்பலை நிறுத்தி விட்டு ஓடோடி மயிலாடியில் வந்து கணக்குகளை அழித்தார். மீண்டும் மயிலாடி மக்களிடம் விடைபெற்றுவிட்டுக் கப்பலேறி சென்னை சென்றhர்.

கடைசிப் பயணம் edit

போதகர் சென்னையிலிருந்து இலங்கையை அடைந்து தமது தங்கைக்குக் கடிதம் எழுதினார். பின்பு இலங்கையிலிருந்து மலாக்காவைச் சென்றடைந்தார். மலாக்காவிலிருந்து தமது தங்கைக்கும், இலண்டன் மிசன் சங்கத்தின் பொருளாளர் JOSEPH காட்காசலுக்கும் கடிதம் எழுதினார். பின்பு அங்கிருந்து 1816 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் நாள் படடேவியாவிற்குப் புறப்பட்டுச் சென்றhர். செல்லும் வழியில் கப்பலில் வைத்து இறந்து கடலில் அடக்கம் பண்ணப்பட்டார். இதற்கு ஆதாரமாக கப்பலின் தினசரி நாளாகமத்தில் ‘ஒரு பிரயாணி மரித்தான்’ என எழுதப்பட்டிருந்தது.

பலரும் இவரது இறப்பைப் பற்றி பல முறைகளில் கூறியிருப்பினும் இதுவே உண்மையாக இருக்கும் என நம்பப்படுகின்றது. எப்படியிருப்பினும் பக்தன் ஏனோக்கின் மரணத்தைப் போல றிங்கல்தௌபேயின் மரணமும் காணப்பட்டது.

றிங்கல்தௌபேயும் வேதமாணிக்கம் தேசிக்கரும் edit

முதலாமவர் முதல் நற்செய்தியாளர், இரண்டாமவர் முதல் கிறிஸ்தவர். இவர்கள் இருவரும் மாறுப்பட்ட பெருமைகளை உடையவர்களாக இருந்த போதிலும் நோக்கம் ஓன்றhகவே காணப்பட்டது. கடவுள் இவர்களை இரண்டு மாறுப்பட்ட இடங்களில் இருந்து ஒரே நோக்கத்திற்காகத் தெரிந்து கொண்டு அழைத்தார். கடவுள் இதற்காகத் தெரிந்து கொண்ட இடம் மயிலாடி.

முதன் முதலாக 1805 ஆம் ஆண்டு ஜPலை மாதம் வேதமாணிக்கம் தேசிகர் றிங்கல்தௌபே தமது சொந்த நாட்டிற்குப் புறப்படும்போது தமது அதிகாரங்கள் அனைத்தையும் வேதமாணிக்கம் தேசிகரிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றhர்.

றிங்கல்தௌபேயின் தோற்றப் பொலிவு edit

றிங்கல்தௌபேயின் தோற்றம் மிகவும் கவர்ச்சிகரமானது. முகத் தோற்றம் வசீகரமானது. இவர் 5 அடி 9 அங்குலம் உயரமுடையவர். பொன்னிறமான தலை முடியை உடையவர். கண்கள் நீல நிறத்தை உடையனவாகவும், கூர்ந்து பார்க்கும் நோக்கினையும் உடையவர்.

றிங்கல்தௌபேயின் கடிதங்கள் edit

றிங்கல்தௌபே எழுதிய பல கடிதத்தங்களில் தமது தங்கைக்கு எழுதிய 9 கடிதங்களும், தம்பிக்கு எழுதிய மூன்று கடிதங்களும், இலண்டன் மிசன் சங்கத்திற்கு எழுதிய நான்கு கடிதங்களுமே நமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. இக்கடிதங்களின் வாயிலாக அவரது பயணங்களையும், ஊழியங்களையும், கிறிஸ்தவர்களின் நிலமையும், அவரது ஈரலில் உள்ள நோயையும் பற்றி அறியமுடிகின்றது.

இக்கடிதங்களில் தங்கைக்கு எழுதிய அனைத்தும் சோகரசம் ததும்பியவைகளாகக் காணப்படுகின்றன. தமது கடிதத்தில் சோகம் இழையோடினாலும் தாம் ஓரு நற்செய்தியாளராக வந்ததற்காக மகிழ்சி அடைந்தாரே தவிர வருத்தப்படவில்லை. தம்மை பரதேசி, ஒன்றுக்கும் உதவாதவன், கிழவன் என்று கடிதங்களில் குறிப்பிடுக்கின்றhர். தமது தம்பி எர்னஸ்ட்டை தன்னுடன் ஊழியஞ்செய்ய தரங்கம்பாடிக்கு அழைத்தமையையும்,தவிர வர இணங்காததையும் கடிதங்கள் வாயிலாக அறிய முடிகின்றது.

றிங்கல்தௌபே தம்மை முற்றிலும் அர்ப்பணித்து மயிலாடியிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் ஊழியம் செய்ததின் மூலமாக இன்று கன்னியாகுமரிப் பேராயம் ஒரு பயனுள்ள பேராயமாக ஒளிவீசி வருகின்றது.

Tags:FOR MORE DETAILS,

        CSI MYLAUDY : http://www.csimylaudy.com/