Submission declined on 23 January 2024 by PharyngealImplosive7 (talk). The submission appears to be written in Tamil. This is the English language Wikipedia; we can only accept articles written in the English language. Please provide a high-quality English language translation of your submission. Otherwise, you may write it in the Tamil Wikipedia.
Where to get help
How to improve a draft
You can also browse Wikipedia:Featured articles and Wikipedia:Good articles to find examples of Wikipedia's best writing on topics similar to your proposed article. Improving your odds of a speedy review To improve your odds of a faster review, tag your draft with relevant WikiProject tags using the button below. This will let reviewers know a new draft has been submitted in their area of interest. For instance, if you wrote about a female astronomer, you would want to add the Biography, Astronomy, and Women scientists tags. Editor resources
|
டாக்டர் வா.செ.செல்வம் | |
---|---|
தென்னை மருத்துவர் வா.செ.செ ல்வம் | |
Born | வாத மாணிக்கம் செல்லையா செல்வம் 11 மே 1952 வடக்கன்கரை, கன்னியாகுமாரி |
Other names | தென்னை மருத்துவர் |
Spouse(s) | பத்மாவதி (RTD) , அரசு நர்சிர்ங் சூப்பரண்டன்ட், தஞ்சை மருத்துவ கல்லூரி, தஞ்சாவூர் |
Children | செ.ஜெய் ஜி பால் M.Sc (Agri) - Govt Seed Officer Dr.செ.மனோஜி செல்வா M.B.B.S, M.D - தஞ்சை மருத்துவ கல்லூரி, தஞ்சாவூர் |
டாக்டர் வா.செ.செல்வம் edit
டாக்டர் வா.செ.செல்வம் அவர்கர்ள் தமிழகத்தின் தலைசிறந்த தென்னை விஞ்ஞானி என்று
தென்னை விவசாயிகளால் போற்றப்படுபவர்
பெயர்: டாக்டர் வா செ செல்வம் (வாத மாணிக்கம் செல்லையா செல்வம்)
பிறப்பு: மே11,1952 வடக்கன்கரை, கன்னியாகுமாரி மாவட்டம், தமிழ்நாடு.இந்தியா.
வாழ்விடம் : மணக்கரம்பை,அம்மன் பேட்டை,வேதியபுரம்,திருவையாறு, தஞ்சாவூர்
தொழில் : தென்னை மருத்துவர்(Doctor of coconut's trees)
அனுபவம்: தென்னை ஆராய்ச்சியில் 55 வருடம்.
அறியப்படுவது: தென்னை விஞ்ஞானி, தொழிலதிபர்,மனிதநேய ஆர்வலர்
வாழ்க்கை: edit
இவர் கன்னியாகுமரி மாவட்டம் வடக்கன்கரை கிராமத்தில் பிறந்தவர் இவர் தன் தந்தையாரின் தொழில் நிமித்தம் தஞ்சாவூரில் வாழ்ந்தார் .தென்னை மரங்கள் நோய்கள் தாக்கி இறப்பதைக் கண்டு தன் தந்தை கண்ணீர் சிந்துவதை பார்த்து தென்னை மரங்களுக்கு வரும் நோய்களுக்கான மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினார்
அதில் வெற்றியும் பெற்று தன் தந்தை கண் முன் நோய்கள் தாக்கிய தென்னை மரத்திற்கு வைத்தியம் செய்து பிழைக்க வைத்தார் மனிதர்களுக்கு அறுவை சிகிச்சை செய்வது போல் தென்னை மரங்களுக்கும் அறுவை சிகிச்சையின் மூலம் குணப்படுத்தினார்.
அதை கண்ட அவரின் தந்தை மிகவும் மகிழ்ந்து தன் மகன் தென்னைக்கு ஒரு டாக்டராக வருவான் என்று பாராட்டினார்.
தனித்திறன்கள்: edit
வேளாண்மை பட்டப்படிப்பில் பணப்பயிர் தென்னை சம்பந்தமான போதிய பாடமும் இல்லை தென்னை சாகுபடி சம்பந்தமாக டிப்ளமோ படிப்பு கூட இல்லை. பல்கலைக்கழகங்களில் விடுபட்டு போன தென்னை சாகுபடி பற்றி ஆராய்ச்சி செய்தால் விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் நிரந்த நிம்மதி கிடைக்கும் என கருதி தென்னை ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
தினசரி செய்தித்தாள்களான தினமணியில் தன்னுடைய தென்னை ஆராய்ச்சிகள் கண்டுபிடிப்பு தென்னை வளர்ப்போம் தலைப்பில் 60 தொடர்கட்டுரைகள் எழுதினார். D D தூர்தர்ஷன் TVயில் சுமார் 15 வருடமும் மற்றும் எல்லா தனியார் தொலைக்காட்சி சேனல்களிலும் விவசாயிகளின் தெ ன்னை சாகுபடி சந்தேகங்களுக்கு பதில் சொல்லுவார்.
தென்னையில் தேனீக்கள் செய்யும் அயல் மகரந்த சேர்க்கையில் ஒழுங்குபடுத்தப்படாமல் இருப்பதைக் கண்டு அதை ஒழுங்குப்படுத்தி செய்தால் என்ன என்று முயற்சி செய்து அயல் மகரந்த சேர்க்கையை ஒழுங்குப்படுத்தி தென்னையின் காய்ப்பு திறனை அதிகப்படுத்தி அதில் வெற்றியும் கண்டார். திருவையாறு 2,3 ரகத்தை கண்டுபிடித்து விவசாயிகளுக்கு தந்தார்.
சாதனைகள்: edit
முழுவதும் ஆர்கானிக் வகைகள்.
- Thirivaiyaru coconut doctor special mix (கல்பவிருக்க்ஷா),
- V S Mix,
- COCOS உர மருந்து
ஆகிய மூன்றும் இவரின் தன்னிகரில்லாத அறிய கண்டுபிடிப்பாகும். தென்னையில் இவரின் அறிய கண்டுபிடிப்பான திருவையாறு கோக்கனட் டாக்டர் ஸ்பெஷல் மிக்ஸை நுண்ணுயூட்டசத்து உரமாக பயன்படுத்தி தென்னையின் காப்புத்திறனை பல மடங்காக உயர்த்தி காட்டினார்.
தென்னை வளர்ச்சியை தடை செய்யும் கருப்பு கூன் வண்டுக்கு இவரின் அறிய கண்டுபிடிப்பான V S Mix ன் மிக மிக சிறந்த செயல்பாட்டினால் வண்டு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டதால் தென்னை வளர்ச்சிக்கு தடை இல்லாமல் செய்தது. பூ பிஞ்சு உதிர்ந்து காய்ப்பு குறைவாகவும் சிகப்பு கூன் வண்டால் மிகவும் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் டாக்டர். வா. செ. செல்வம் அவர்களின் கண்டுபிடிப்பான Cocos உரமருந்தால் தென்னை மரங்கள் வண்டு தொந்தரவு இல்லாமல் பூ பிஞ்சு உதிராமல் குலை குலையாக காய்ந்து தள்ள ஆரம்பித்தன இதற்கு விவசாயிகளின் மத்தியில் மிகவும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
Cocos கண்டுபிடிப்பு தாவரங்கள் இத்துறை வழியாக உணவு உருஞ்சுகிறது என்பதை விவசாயிகளுக்கு புரியவைத்தார்.
அண்ணாமலை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் டாக்டர். வா. செ. செல்வம் அவர்களின் கண்டுபிடிப்புகளை ஆராய்ச்சிக்கு எடுத்து பயன்படுத்தி தென்னை நன்கு வளர்கிறது, வியாதிகள் குணப்படுத்துகிறது, மகசூல் பெறுகிறது சிறந்த ஆர்கானிக் கண்டுபிடிப்பு என்று சான்று வழங்கியுள்ளார்கள்.
தமிழ்நாட்டின் பல மாவட்டட்ங்களிலும் 55 வருடங்களில் தென்னை வளர்போர் சங்கம், தென்னை விவசாயிகள் சங்கம் நடத்திய ஆயிரம் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு தென்னை சாகுபடி குறித்துத் விளக்கம் அளித்துத் பேசியுள்ளார்
சுற்றுவட்டார விவசாயிகளுக்கு சுமார் 1700 க்கும் மேற்பட்டட் ஒரு நாள் பயிற்சி முகாம் நடத்தி தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர வழிவகை செய்துள்ளார்
தமிழ்நாட்டில் தென்னை சாகுப்படி 15 கோடியாக உயர்ந்துள்ளது
தென்னை சாகுப்படி பற்றி அதிக அறிவை பெற சிலோன், சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, Thailand/தாய்லாந்து, யாழ்பாணம், இலங்கை, கோவா மற்றும் பல வெளி நாடுகளுக்கு சென்றுள்ளார்.
யாழ்பாணத்தில் சிறப்பான வரவேற்பு தந்தார்கள். அங்குள்ள விவசாயிகளுக்கு பயிற்சி தர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யாழ்பாண சக்தி TV யால் பேட்டி கண்டு ஒளிபரப்பினார்கள்.
தென்னை பூ கொத்தில் ஆண், பெண் அலிப்பூக்கள் இருக்கும். ஆண்பூக்கள் இரண்டு வாரத்தில் மலர்ந்து உதிர்ந்துவிடும், பெண்பூக்கள் 4,5 வாரத்திற்கு பிறகு சேர்க்கைக்கு தயாராகும். வேறு மரத்தின் ஆண்பூக்களில் மகரந்தம் பெண்பூக்களில் தேனீக்களால் சேர்ந்து மகரந்த சேர்க்கை உண்டாகிறது.
தந்தை மரத்தின் நல்லி, வெம்மட்டை, வியாதிகள் மற்றும் உள்ள குணாதிசயங்கள் அடுத்த சந்ததிக்கும் உண்டாகும்.
பாக்குமாதிரி, மாங்காய் மாதிரி தேங்காய் காய்க்கும், நெட்டையாகவும், குட்டையாகவும் வளரும். காய் எண்ணிக்கை குறைந்து இருக்கும்.
தேனீக்கள் செய்வதை தான் செய்தால் என்ன என்று தோன்ற தாய், தந்தை மரம் தோன்ற செய்து கையால் மகரந்த சேர்க்கை செய்து (Manual pollination) பார்த்து, அந்த விதை மூலம் உருவானது திருவையாறு 3 ரகம்.
பறவையை பார்த்து தான் விமானம் படைத்தான், குரங்குகள் செய்யும் சேட்டை, சண்டைகளை பார்த்து சிலம்பம் வடிவமைத்தார்கள், பறவைகள், மயில்கள், மழை மேகம் வரும் போது ஆடுவதை பார்த்து நாட்டியம் வடிவமைத்தார்கள். இயற்கையை வைத்துதான் பல கண்டுபிடிப்புகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
அலோபதி டாக்டராக இருந்த ஹானிமோன், அந்த மருத்துவத்தால் குணப்படுத்தமுடியாத விச காய்ச்சல் நிம்மோனியா மற்றும் பல வியாதிகள் குழந்தைகள் இறப்பதை கண்டு வருந்தினார். வேறு வித மருத்துவ முறையை கண்டறிந்து தீராத வியாதிகளை குணப்படுத்தி வெற்றிக்கண்டார். அதுதான் ஹோமியோபதி அன்று அவரை அரசாங்கம் ஆதரிக்கவில்லை. தற்போது ஹோமியோபதி பட்டபடிப்பு கல்லூரிகள் உள்ளது. தென்னை சாகுபடிக்கும் வாழ்வு வரும்.
சமூக சேவைகள்: edit
- ரெட் கிராஸ் சேவையில் 50 வருடங்கள்
- ரோட்டரி கிளப்.
- பாரதி இயக்கம்,
- முத்தமிழ் மன்றம்,
மூத்த குடிமக்கள் நல சங்கம் மாவட்ட தலைவர்,
தென்னை சாகுபடி கருத்தரங்குகளில் விளக்கம் தருவதும் வேளாண்மை கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பண்ணை பயிற்சி அளித்து மாணவ மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமும் அளிப்பார்.
பாராட்டுகள்: edit
டாக்டர் வா.செ. செல்வம் அவர்களின் தென்னை சாகுபடி மதிநுட்ப அறிவை பாராட்டி தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் உயர்திரு டாக்டர். அவ்வை நடராஜன் அவர்கள் 18.2.1995 அன்று வேளாண்மை விஞ்ஞானி விருது வழங்கி கௌரவித்தார்.
- வேளாண்மை வேந்தர்,
- வேளாண்மை விஞ்ஞானி,
உட்பட 200க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.
International Peace University Germany Doctor Of Agriculture Research. கொடுத்து
அங்கீகாரம் வழங்கி உள்ளார்கள்.
முன்னாள் ஜனாதிபதி டாக்டர்.அப்துல் கலாம் அவர்கள் டாக்டர் வா.செ. செல்வம் அவர்களின் தென்னை ஆராய்ச்சி நூல்களை படித்து பாராட்டியுள்ளார்.
தென்னை ஆராய்ச்சி நூல்கள்: edit
- செல்வம் தரும் தென்னை.
- வளம் தரும் தென்னை
- தென்னை தெரிந்து கொள்ள வேண்டியவை.
- கலர் உவர் நிலத்தில் தென்னை சாகுபடி.
- அழிவில்லாத தென்னை ஆராய்ச்சி.
- தென்னை தெரிய வேண்டிய சாகுபடிமுறை
தென்னை ரகம் : edit
திருவையாறு 1-ரகம் - விட்டுதேவைக்குரியது 60 காய்கள் காய்க்கும்
திருவையாறு 2-ரகம் -இளநீர், தேங்காய் க்கு ஏற்றது
திருவையாறு 3-ரகம் - இளநீர், தேங்காய், எண்ணெய், புண்ணாக்கு எல்லாத்துக்கும் சிறந்தது, ஏற்றுமதிக்கு சிறந்தரகம்
சமுக வலைதளம் (Social Media) : edit